Tuesday, March 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

கல்வி

மருத்துவ படிப்பில் சேரணுமா? நீட் தேர்வுக்கு மார்ச் 9ம் தேதிக்குள் விண்ணப்பிங்க…

மருத்துவ படிப்பில் சேரணுமா? நீட் தேர்வுக்கு மார்ச் 9ம் தேதிக்குள் விண்ணப்பிங்க…

கல்வி, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
இளங்கலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு, மே மாதம் 5ம் தேதி நடக்கிறது. இத்தேர்வுக்காக, வரும் மார்ச் 9ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ்., பிடிஎஸ்., மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகள், கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு நீட் எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் வெற்றி பெறுவது கட்டாயம். இந்திய ராணுவக் கல்லூரிகளில் பி.எஸ்சி., நர்சிங் படிக்கவும், நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. தேசிய தேர்வு முகமை எனப்படும் என்.டி.ஏ., ஆண்டுக்கு ஒருமுறை நீட் தேர்வை நடத்துகிறது. ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் உள்பட 13 மொழிகளில் இத்தேர்வு நடக்கிறது. நீட் தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு பிப். 9ம் தேதி தொடங்கியது. மார்ச் 9ம் தேதி வரை
‘ஊழல்’ பதிவாளரை காப்பாற்றும் துணைவேந்தர்! ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு!!

‘ஊழல்’ பதிவாளரை காப்பாற்றும் துணைவேந்தர்! ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு!!

கல்வி, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலம் பெரியார் பல்கலை 'நிரந்தர' பொறுப்பு பதிவாளர் தங்கவேலை, பணியிடைநீக்கம் செய்ய அரசு உத்தரவிட்டப் பிறகும், துணைவேந்தர் ஜெகநாதன் உத்தரவை மதிக்காமல் முரண்டு பிடித்து வருவது உயர்கல்வித்துறை வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலத்தை அடுத்த கருப்பூரில், 1997ம் ஆண்டு பெரியார் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. சாதிய அடுக்குகளை எதிர்த்து காலம் முழுவதும் போராடி வந்த பெரியாரின் பெயரில் அமைந்த இந்தப் பல்கலையில் சாதிய வன்மம் புரையோடிக் கிடக்கிறது. வீரபாண்டியார் உயிரோடு இருந்தவரை வன்னியர்கள் ஆதிக்கமும், 2011 - 2021 காலக்கட்டத்தில் அதிமுக ஆட்சியில் கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் ஆதிக்கமும் பல்கலையில் தலை விரித்தாடுகிறது. துணைவேந்தர் சுவாமிநாதன் பதவிக்காலத்தில், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் நியமனத்தில் 60 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்ததாக புகார்கள் எழுந்தன. பே
விபத்தில் பெற்றோரை இழந்த அரசுப்பள்ளி குழந்தைகளுக்கு 75 ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை!

விபத்தில் பெற்றோரை இழந்த அரசுப்பள்ளி குழந்தைகளுக்கு 75 ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை!

கல்வி, தகவல்
விபத்தில் தாய் அல்லது தந்தையை இழந்த அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளின் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு 75 ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்குகிறது.   பொருளாதார வசதியின்றி ஒரு குழந்தை படிப்பை நிறுத்தி விடக்கூடாது என்பதற்காகவும், முழுமையான பள்ளிக்கல்வியை நிறைவு செய்ய வேண்டும் என்ற நோக்கிலும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கல்வி உதவித்தொகை திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இவற்றில், தமிழக அரசு, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உச்சபட்சமாக 75 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை நீண்ட காலமாக செயல்படுத்தி வருகிறது.   இத்திட்டத்தின் சிறப்பு அம்சங்கள்:   கேள்வி: 75 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை கிடைக்க என்னென்ன தகுதிகள்?   பதில்: வருவாய் ஈட்டி வந்த தந்தை அல்லது தாய் ஆகியோரில் ஒருவரோ அல்லது இருவருமோ விபத்தில் உயிரிழந்து இருந்தாலோ அல்லது அவர்களால் இனி
இளநிலை துணை மருத்துவ படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்!

இளநிலை துணை மருத்துவ படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்!

கல்வி, தகவல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பிஎஸ்சி நர்சிங் உள்ளிட்ட இளநிலை துணை மருத்துவப் படிப்புகளில் சேர மாணவ, மாணவிகள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு மருத்துவக்கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட நேரடி மருத்துவப் படிப்புகள் மட்டுமின்றி அத்துறையைச் சார்ந்த ஏராளமான தொழில்சார் துணை மருத்துவப் படிப்புகளும் இருக்கின்றன. சான்றாக, பிஎஸ்சி செவிலியர், ரேடியோதெரபிஸ்ட், இமேஜிங் டெக்னீஷியன் உள்ளிட்ட படிப்புகளைச் சொல்லலாம். எந்த விதமான நுழைவுத்தேர்வுகளுமின்றி, முற்றிலும் பிளஸ்2 மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில் மட்டுமே இதுபோன்ற துணை மருத்துவப் படிப்புகளில் சேர்க்கை நடத்தப்படுகிறது. இந்நிலையில், இளநிலை பிரிவில் துணை மருத்துவப் படிப்புகளில் சேர மாணவ, மாணவிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, தமிழகத்தில் நடப்பு 2021 - 202
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் ஆக. 23ல் மாணவர் சேர்க்கை தொடக்கம்!

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் ஆக. 23ல் மாணவர் சேர்க்கை தொடக்கம்!

கல்வி, தகவல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், வரும் 23ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வை தொடங்குமாறு கல்லூரிக்கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 143 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இக்கல்லூரிகளில் சேர ஏற்கனவே விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளன. இந்நிலையில், நடப்புக் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக் கலந்தாய்வை வரும் 23ம் தேதி முதல் தொடங்க கல்லூரிக்கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.   செப். 3ம் தேதிக்குள் மாணவர் சேர்க்கையை நடத்தி முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கொரோனா தொற்றின் தாக்கத்தைப் பொறுத்து அந்தந்தக் கல்லூரி முதல்வர்கள் ஆன்லைன் அல்லது நேரடி கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்திக்கொள்ள வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு உள்ளன.   பிளஸ்2 மதிப்பெண் சான்றிதழ், இதர சான்றிதழ்களை சரிபார்த்த பின்னரே சேர்க
பிஹெச்.டி., ‘வைவா’ தேர்வுக்கு ஓராண்டு அவகாசம் நீட்டிப்பு!

பிஹெச்.டி., ‘வைவா’ தேர்வுக்கு ஓராண்டு அவகாசம் நீட்டிப்பு!

கல்வி, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பி.ஹெச்டி., எம்.பில்., படித்து வரும் மாணவர்களுக்கு 'வைவா-வோஸ்' எனப்படும் வாய்மொழித் தேர்வில் கலந்து கொள்ள மேலும் ஓராண்டு காலம் அவகாசத்தை நீட்டித்து உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக உயர்கல்வித்துறை செயலர் அபூர்வா, அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது:   கொரோனா நோய்த்தொற்று அபாயம் காரணமாக, பல்கலைக்கழகங்களில் பிஹெச்.டி., எம்.பில்., ஆராய்ச்சிப் படிப்பு மேற்கொண்டு வரும் மாணவர்களுக்கு வாய்மொழித் தேர்வு நடத்தி முடிப்பதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஆராய்ச்சிப் படிப்பு மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்கள் வாய்மொழித் தேர்வுக்கு பதிவு செய்திருந்த காலம் ஏற்கனவே முடிந்திருந்தால், அந்த நாளில் இருந்து மேலும் ஓராண்டு காலம் வாய்மொழித்தேர்வை முடிக்க அவகாசம் நீட்டிக்கப்படுகிறது.   ஆராய்ச்சி மாணவ
சேலம்: பிளஸ்-2 விடைத்தாள் மதிப்பீடு இன்று தொடக்கம்! 200 மையங்களில் நடக்கிறது!

சேலம்: பிளஸ்-2 விடைத்தாள் மதிப்பீடு இன்று தொடக்கம்! 200 மையங்களில் நடக்கிறது!

கல்வி, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழகத்தில், பிளஸ்-2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று (புதன்கிழமை, மே 27) தொடங்குகிறது. கொரோனா தொற்றின் தாக்கம் அதிகமுள்ளதால், சென்னை நீங்கலாக மற்ற மாவட்டங்களில் மொத்தம் 200 மையங்களில் இப்பணிகள் நடக்கிறது. விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஜூன் 23ம் தேதி நிறைவு பெறுகின்றன.   தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது. அதன்பிறகு, கொரோனா தொற்று அபாயத்தால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் விடைத்தாள் திருத்தல், எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு பணிகள் முடங்கின. தற்போது ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டுள்ள நிலையில், பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணிகளை பள்ளிக்கல்வித்துறை இன்று தொடங்குகிறது.   விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளில் மொத்தம் 40 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். இன்று முதன்மைத்
மாணவனின் சொந்த கருத்திற்கும் மதிப்பெண் உண்டு! பிளஸ்-2 தமிழ் வினாத்தாள் வடிவமைப்பில் மாற்றம்!

மாணவனின் சொந்த கருத்திற்கும் மதிப்பெண் உண்டு! பிளஸ்-2 தமிழ் வினாத்தாள் வடிவமைப்பில் மாற்றம்!

கல்வி, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பிளஸ்-2 பொதுத்தேர்வில், மாணவர்கள் பாடப்புத்தகத்தின் துணையின்றி தானாகவே சிந்தித்து எழுதும் வகையில் வினாத்தாள் வடிவமைக்கப்பட்டு இருந்தது, கல்வியாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறையில் நடப்புக் கல்வி ஆண்டில் (2019-2020) பிளஸ்-2 வகுப்பிற்கு புதிய பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதற்காக, முன்னாள் பள்ளிக்கல்வித்துறை செயலர் உதயசந்திரன் தலைமையில் புதிய பாடங்களை எழுதுவதற்கு ஒரு குழு அமைக்கப்பட்டது. இக்குழு, மெதுவாக கற்கும் மாணவர்கள் முதல் அதிபுத்திசாலி மாணவர்கள் வரை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு ஏற்றபடி புதிய பாடங்களை வடிவமைத்தது.   இந்த மாற்றமானது, மார்ச் 2ம் தேதி நடந்து முடிந்த பிளஸ்-2 பொதுத்தேர்வு தமிழ் வினாத்தாள் வடிவமைப்பிலும் எதிரொலித்தது. அதாவது, எல்லா வினாக்களுக்கும் பாடப்புத்தகத்தின் துணை கொண்டு விடை அளிக்க வேண்டிய தேவை இருக
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் 23 நாள்தான் அவகாசம்!

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் 23 நாள்தான் அவகாசம்!

கல்வி, தகவல், முக்கிய செய்திகள்
அடுத்த ஆண்டு நடக்கவுள்ள தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு எனப்படும் 'நீட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க, இன்னும் 23 நாள்கள் மட்டுமே அவகாசம் உள்ளது.   இளநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வில் வெற்றி பெற வேண்டியது கட்டாயம். வருகிற 2020ம் ஆண்டு மே 3ம் தேதி நடைபெற உள்ள நீட் தேர்வுக்கு விண்ணப்பம் பதிவு செய்யும் நடைமுறைகள் டிசம்பர் 2, 2019ம் தேதி தொடங்கியது. விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, பதிவேற்றம் செய்ய கடைசி நாள், டிசம்பர் 31ம் தேதி ஆகும். நீட் தேர்வுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே பதிவு செய்ய வேண்டும். அஞ்சல் வழியில் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது. இதற்கென தொடங்கப்பட்டுள்ள தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தில் விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள் தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ளன. மாதிரி விண்ணப்பமும் வழங்கப்பட்டுள்ளது.   இத்தேர்வுக்கு விண்ண
டிகிரி படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு 10000 ரூபாய் உதவித்தொகை!

டிகிரி படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு 10000 ரூபாய் உதவித்தொகை!

கல்வி, தகவல், முக்கிய செய்திகள்
(தகவல்)   'பிச்சை புகினும் கற்கை நன்றே' என்பதுதான் அவ்வை வாக்கு. பொருளாதார நெருக்கடிகள் கல்வி பயிலும் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு எந்த விதத்திலும் தடைக்கல்லாக இருந்து விடக்கூடாது என்பதற்காகவே, மத்திய அரசு உதவித்தொகை திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. மத்திய அரசின் பல உதவித்தொகைத் திட்டங்கள் மாணவர்களுக்கு தெரிவதில்லை அல்லது கல்வி நிலையங்கள் அதுபற்றி பெரிதாக அக்கறை காட்டுவதில்லை.   அது என்ன திட்டம்? பிளஸ்-2 முடித்துவிட்டு, நடப்புக் கல்வி ஆண்டில் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு மத்திய அரசு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம்.   தகுதிகள் என்னென்ன?:   1. பிளஸ்-2வில் 80 சதவீதம் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்   2. பிளஸ்-2வை பள்ளியில் சேர்ந்து பயின்றிருக்க வேண்டும். தனித்தேர்வராகவோ, தொலைநிலைக் கல்வித் திட்டத்தின் மூலமோ படித்திர