Friday, April 17மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Author: புதிய அகராதி

சட்டமன்ற தேர்தல்: ராசிபுரத்தின் ‘வேந்தர்’ ஆவாரா அமைச்சர் மதிவேந்தன்?

சட்டமன்ற தேர்தல்: ராசிபுரத்தின் ‘வேந்தர்’ ஆவாரா அமைச்சர் மதிவேந்தன்?

அரசியல், நாமக்கல், முக்கிய செய்திகள்
தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப். 23ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் இறுதிக்கட்ட பரப்புரையில் தீவிரமாக இறங்கியுள்ளன. இந்நிலையில், திமுக சார்பில் அமைச்சர் மதிவேந்தன் மீண்டும் ராசிபுரம் (தனி) சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். அமைச்சராக அவர் இந்த தொகுதியில் செய்த வளர்ச்சிப்பணிகள், தேர்தல் நிலவரம் குறித்து களத்தில் விசாரித்தோம். மதிவேந்தன் ராசிபுரம் தொகுதியில், 1971க்குப் பிறகு நடந்த 12 தேர்தல்களில் அதிமுக 8 முறை வென்றுள்ளது. இந்த தொகுதி இலைக்கட்சியின் வலுவான கோட்டை. கடந்த 2021 தேர்தலில் அதிமுகவின் டாக்டர் சரோஜாவை எதிர்த்து, திமுக சார்பில் முதன்முதலாக களமிறங்கிய மதிவேந்தன், 1952 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, அதிமுக கோட்டையைத் தகர்த்தார். நாமக்கல் மாவட்டத்தில் திமுகவின் முன்னோடிகளில் ஒருவரான டாக்டர் மாயவனின் மகன் என்ற நுழைவுச் சீட்டு இருந்தாலும், கடந்...
தேர்தல் 2026: சேலத்தில் கோட்டையைப் பிடிக்குமா திமுக?

தேர்தல் 2026: சேலத்தில் கோட்டையைப் பிடிக்குமா திமுக?

அரசியல், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் மார்ச் 30ம் தேதி தொடங்குகிறது. தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டை வெற்றிகரமாக முடித்து, முதல்கட்டமாக 23 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டிருக்கிறார் அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி. இன்னும் ஓரிரு நாளில் திமுக கூட்டணியும், முழு வேட்பாளர் பட்டியலை வெளியிட உள்ளது. திமுக, அதிமுக, நாதக, தவெக என வெளிப்பார்வைக்கு நான்கு முனைப் போட்டியெனக் கூறப்பட்டாலும், உண்மையில் திமுக, அதிமுக இடையேதான் நேரடிப் போட்டி நிலவுகிறது. ஆளுங்கட்சி அந்தஸ்து, அபரிமிதமான பணபலம், வலுவான கூட்டணி உள்ளிட்ட காரணிகளால் ஒட்டுமொத்த அளவில் திமுகவுக்கு சற்று சாதகமான சூழல் உள்ளது. அதேநேரம், கொங்கு மண்டலத்தில் இந்த முறையும் ஆளும் திமுகவுக்கு இலைக்கட்சி சிம்மசொப்பனமாக இருக்கும் என்றே கள நிலவரம் கூறுகிறது. குறிப்பாக, சேலம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 11 தொகுதிகள...
போட்டுக்கொடுத்த மேயர்… மாட்டிக்கொண்ட அமைச்சர்…!

போட்டுக்கொடுத்த மேயர்… மாட்டிக்கொண்ட அமைச்சர்…!

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
திமுக கூட்டணியை இறுதி செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வரும் நிலையில், வேட்பாளர்களை தேர்வு செய்வதில் ஆளுங்கட்சி கவனம் செலுத்தி வருகிறது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட அண்ணா அறிவாலயத்திடம் டிக்கெட் கேட்டு 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விருப்ப மனு அளித்துள்ளனர். இதையடுத்து, விருப்ப மனு அளித்தவர்களிடம் தொகுதிவாரியாக நேர்காணல் நடந்து வருகிறது. திமுக நேர்காணல் எப்படி நடக்கிறது என்பது குறித்து அறிந்து கொள்ள அண்ணா அறிவாலயம் வட்டாரத்தில் ஒரு விசிட் அடித்தோம். கூட்டணி கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு, கட்சி நிர்வாகிகள் கூட்டம், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு பதிலடி, திராவிட மாடல் ஆட்சியின் சாதனை தொடர்பான விளம்பர ஷூட்டிங் என பல்வேறு 'டைட்' ஷெட்யூல்களுக்கு இடையிலும், வேட்பாளர்களைத் தேர்வு செய்வதிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் படு சுறுசுறுப்பாக இயங்கி வருவதா...
ஏப்ரல் 23ல் தமிழக சட்டமன்ற தேர்தல்; வேட்புமனு தாக்கல் 30ம் தேதி தொடக்கம்

ஏப்ரல் 23ல் தமிழக சட்டமன்ற தேர்தல்; வேட்புமனு தாக்கல் 30ம் தேதி தொடக்கம்

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழகத்தில், வரும் ஏப்ரல் 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 30ம் தேதி தொடங்குகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் அறிவிப்பை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் ஞானேஷ்குமார், மார்ச் 15ம் தேதி மாலையில் வெளியிட்டார். தமிழகத்தில் நடப்பு சட்டமன்றத்தின் ஆயுள் காலம் மே 10ம் தேதியும், புதுச்சேரி சட்டமன்றத்தின் ஆயுள் ஜூன் 15ம் தேதியும் முடிவுக்கு வருகின்றன. இதையடுத்து இரு மாநிலங்களுக்கும் சட்டமன்ற தேர்தல் நடத்துவதற்கான ஆயத்தப்பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் தமிழகம், புதுச்சேரி மட்டுமின்றி அசாம், கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பையும் ஆணையம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் நடக்கிறது. இத...
திண்ணை: அமைச்சருக்கு எதிராக படை திரட்டும் கோஷ்டிகள்

திண்ணை: அமைச்சருக்கு எதிராக படை திரட்டும் கோஷ்டிகள்

திண்ணை, முக்கிய செய்திகள்
''இந்த வருஷம் வெயில் புரட்டி எடுக்கும்னு பேசிக்கிறாங்களே அப்படியா?,'' என்று ஏற்கனவே வீட்டுத் திண்ணையில் வந்து அமர்ந்திருந்த பேனாக்காரரைப் பார்த்துக் கேட்டபடியே பக்கத்தில் வந்து அமர்ந்தார் பொய்யாமொழியார். ''வானிலை அறிக்கையை விடுங்க… தமிழ்நாட்டு தேர்தல் களம் வரலாறு காணாத வகையில இந்தமுறை ரொம்பவே கனல் தெறிக்கப் போகுது பாருங்க,'' என்று நேரடியாகவே சங்கதிக்கு வந்தார் பேனாக்காரர். இதற்கிடையே அங்கு வந்து சேர்ந்த நக்கல் நல்லசாமி, ''தமிழ்நாடு அரசியல் களம் இருக்கட்டும். மாங்கனி மாவட்ட கள நிலவரத்தைச் சொல்லுங்க,'' என்றார். ''சமீபத்துல மாங்கனி மாவட்டத்தில் கடாரம் கொண்டான் அமைச்சரின் உள்ளடி வேலைகள் குறித்து ஒரு பத்திரிகையில் செய்தி வந்தது. சில நாள்களுக்கு முன்பு மாநகராட்சியில் நடந்த கூட்டத்துல எதிர்க்கட்சி கவுன்சிலர் அந்த பத்திரிகையை கையில் ஏந்தியபடி அமைச்சரின் ஆதரவு கவுன்சிலர்கள் குறித்து ஏதோ பே...
பட்ஜெட் எதிரொலி: ரத்தக்களறியான இந்திய பங்குச்சந்தை

பட்ஜெட் எதிரொலி: ரத்தக்களறியான இந்திய பங்குச்சந்தை

முக்கிய செய்திகள், வர்த்தகம்
பியூச்சர் மற்றும் ஆப்ஷன் டிரேடிங் மீதான எஸ்டிடி வரி உயர்வு காரணமாக, பட்ஜெட் நாளான நேற்று இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்தன. இந்திய அரசின் 2026 - 2027ஆம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட் உரையை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஞாயிற்றுக்கிழமை (பிப். 1) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு உற்சாகம் தரும் அறிவிப்புகள் வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பட்ஜெட் உரையில் அதற்கான அறிகுறிகள் இல்லாததால் ஏமாற்றம் அடைந்தனர். பியூச்சர் மற்றும் ஆப்ஷன் வர்த்தகத்தின் மீது எஸ்டிடி வரி உயர்வு, திரும்பப் பெறுதல்களுக்கான வரி விதிப்பு, லாப முன்பதிவு, உலோகப் பங்குகளின் வீழ்ச்சி காரணமாக இந்தியப் பங்குச்சந்தைகள் ரத்தக் களறியானது. பட்ஜெட் தாக்கலுக்கு முன்பு, சென்செக்ஸ் மற்றும் நிப்டி 0.5 சதவீதம் வரை உயர்ந்தது. ஆனால், பட்ஜெட் தாக்கலான பிறகு சந்தையின் போக்கில் பெரும்...
அமைச்சர் ராஜேந்திரன்: தரை தட்டும் கப்பலா? கரையேறும் மாலுமியா?

அமைச்சர் ராஜேந்திரன்: தரை தட்டும் கப்பலா? கரையேறும் மாலுமியா?

அரசியல், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ராஜேந்திரன், அமைச்சர் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரனின் பிரித்தாளும் அரசியல் தந்திரம், வரும் சட்டமன்ற தேர்தலில் அவரையே பூமராங் ஆக திருப்பித் தாக்கும் என்கிறார்கள் திமுகவின் மூத்த உடன்பிறப்புகள். சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளர், வழக்கறிஞர் ராஜேந்திரன் (66). குரு நானக் கல்லூரியில் இளங்கலை மாணவராக படித்துக் கொண்டிருந்தபோது நடந்த மாணவர் அமைப்புத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று, கலைஞரின் கவனத்தை ஈர்த்தார். காரணம், அந்த நேரத்தில் வேறு எந்தக் கல்லூரியிலும் திமுகவின் மாணவர் அமைப்பு வெற்றி பெறவில்லை. மாணவர் அணி அமைப்பாளர், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர், இளைஞரணி மாநில துணை செயலாளர் என்று படிப்படியாக உயர்ந்த ராஜேந்திரன், திமுகவின் தனிப்பெரும் அமைப்பான தொமுசவின் மாநிலத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். மறைந்த வீரபாண்டியார், ஆக்டிவ் பாலிடிக்ஸில் இருந்தபோது, அவருக்கு எதிராக மு.க.ஸ்டாலினால் வளர...
ரசிகனை கிறங்கடிக்கும் நெல்லுச் சோறும் நேத்து வெச்ச மீன் கொழம்பும்!

ரசிகனை கிறங்கடிக்கும் நெல்லுச் சோறும் நேத்து வெச்ச மீன் கொழம்பும்!

சினிமா, முக்கிய செய்திகள்
இசையமைப்பாளர், கவிஞர், பாடகர், நடிகர் ஆகிய நான்கு முக்கிய அம்சங்களும் துல்லியமான பங்களிப்பை வழங்கும்போது ஒரு சினிமா பாடல் முழுமையான வெற்றி பெற்று விடுகிறது. அப்படி சரியான கலவையில் அமைந்த பாடல்களுள் ஒன்றுதான், 'நித்தம் நித்தம் நெல்லுச் சோறு… நெய் மணக்கும் கத்தரிக்கா…' பாடலும். ரஜினியின் திரைப் பயண வரலாற்றை, 'முள்ளும் மலரும் (1978)' படத்தை ஒதுக்கி விட்டு, எழுதிவிட முடியாது. இயக்குநராக மகேந்திரனுக்கும் அதுதான் மைல் கல் படம். 'கெட்டப் பையன் சார் இந்தக் காளி…' என்று ரணகளப்படுத்தி இருக்கும் ரஜினியின் நடிப்பைத் தாண்டி, இந்தப் படத்தில் சிலாகிக்க நிறைய அம்சங்கள் நிரம்ப இருக்கின்றன. கதை, நேர்க்கோட்டில் சொல்லப்பட்ட திரைக்கதை, பாத்திரப் படைப்புகளைக் கடந்து, இதன் பாடல்களும், பின்னணி இசையும் இன்று வரை ரசிகர்களிடம் கவனம் பெற்று வருகிறது. இசைஞானி இளையராஜா, இந்தப் படத்தை தோளில் சுமந்து சென்றிருப்ப...
தக் லைப்: புதிய மொந்தையில் பழைய கள்!

தக் லைப்: புதிய மொந்தையில் பழைய கள்!

சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
நாயகன் படத்திற்குப் பிறகு, 37 ஆண்டுகள் கழித்து இயக்குநர் மணி ரத்னமும், கமலும் இணைகிறார்கள் என்றபோதே தக் லைப் படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு எகிறியது. இந்நிலையில், ஜூன் 5ம் தேதி வெளியாகி இருக்கிறது தக் லைப். சட்டத்திற்கும், காவல்துறைக்கும்அஞ்சாமல் தான்தோன்றித்தனமானசெயல்களில் ஈடுபடுவோரேதக் / பொறுக்கிகள் / தாதாக்கள்.அப்படிப்பட்ட ஒரு தக்கின்வாழ்க்கையில் நடக்கும்சம்பவங்கள்தான்இந்தப் படத்தின் கதை. 1994ல், பழைய தில்லியில்கதை தொடங்குகிறது.தூத்துக்குடி மாவட்டம்காயல்பட்டினத்தை பூர்வீகமாககொண்ட ரங்கராய சக்திவேலும் (கமல்),அவருடைய அண்ணன் மாணிக்கமும் (நாசர்)பழைய தில்லியில் ரியல் எஸ்டேட்மாபியாக்களாக வலம் வருகிறார்கள். இவர்களுக்கும், மற்றொருகேங்ஸ்டரான சதானந்த் (மகேஷ் மஞ்ச்ரேகர்)தலைமையிலான கோஷ்டிக்கும்,ஓர் அடுக்குமாடி குடியிருப்பில்வைத்து பேச்சுவார்த்தை நடக்கிறது.சக்திவேல் கோஷ்டியை ச...
‘ஆங்கிரி பேர்ட்’ பெண் கவுன்சிலர்; நிலைகுலைந்த அதிமுக தலைவர்; களேபரமான மாநகராட்சி!

‘ஆங்கிரி பேர்ட்’ பெண் கவுன்சிலர்; நிலைகுலைந்த அதிமுக தலைவர்; களேபரமான மாநகராட்சி!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
'நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு?' என சினிமாக்களில் டைட்டில் கார்டுக்கு முன்பாக வரும் முகேஷின் கதை போலாகி விட்டது, சேலம் மாநகராட்சி. அண்மைக் காலமாக அரங்கேறி வரும் கவுன்சிலர்கள் மோதல், மாமன்ற அரங்கை களேபரமாக்கி வருவது பல தரப்பிலும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாநகராட்சியில்,கடந்த மே 29ம் தேதி மாமன்றஇயல்பு கூட்டம் நடந்தது.அன்றைய தினம் காலையில்அரசு நிகழ்ச்சி இருந்ததால்தாமதமாகவே கூட்டம் தொடங்கியது.அடுத்த ஒரு மணி நேரத்தில்அதுவரை நிகழாத சம்பவம்மாமன்ற அரங்கத்தில் அரங்கேறியது. அதிமுக கவுன்சிலரும்,எதிர்க்கட்சித் தலைவருமான யாதவமூர்த்தி,'சாலை சீரமைப்பு பணிகளுக்காக30 கோடி ரூபாயில் டெண்டர்கோரப்பட்டு இருந்தது. அமைச்சரின்ஆதரவாளரான காமராஜூக்குடெண்டர் ஒதுக்குவதற்கு ஏதுவாகடெண்டரை ரத்து செய்தது ஏன்?,'என்று கேள்வி எழுப்பினார். அவர் இப்படி பேசி முடிப்பதற்குள்ளாகவேஆளுங்கட்சி கவுன்சிலர்கள் பொங...