Sunday, January 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

இந்தியா

லெஸ்பியன் ஜோடி சேர்ந்து வாழலாம்! ஆந்திரா உயர்நீதிமன்றம் தீர்ப்பு

லெஸ்பியன் ஜோடி சேர்ந்து வாழலாம்! ஆந்திரா உயர்நீதிமன்றம் தீர்ப்பு

இந்தியா, முக்கிய செய்திகள்
ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த பெண் ஓரினச்சேர்க்கை (லெஸ்பியன்) ஜோடி ஒன்றாகச் சேர்ந்து வாழ உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து, கடந்த செவ்வாய்க்கிழமை (டிச. 17) உத்தரவிட்டுள்ளது. ஆந்திர மாநிலம்விஜயவாடாவைச் சேர்ந்தவர்மல்லிகா (25 வயது, பெயர்மாற்றப்பட்டுள்ளது). இவரும்காதம்பரி (27, பெயர் மாற்றப்பட்டுள்ளது)என்பவரும் ஓரினச்சேர்க்கை ஆர்வலர்கள். இவர்கள் இருவரும்விஜயவாடாவில் உள்ளமல்லிகாவின் பெற்றோர்வீட்டில் கடந்த ஓராண்டாக'ஒன்றாக' சேர்ந்து வாழ்ந்தனர்.கடந்த செப்டம்பர் மாதம்காதம்பரியை அவருடையபெற்றோர் வலுக்கட்டாயமாகதங்கள் வீட்டிற்குஅழைத்துச் சென்றுவிட்டனர். இதனால் அதிர்ச்சிஅடைந்த மல்லிகா,தனது தோழி காதம்பரியைக்காணவில்லை என்றுவிஜயவாடா காவல்நிலையில்புகார் அளித்தார். அதன்பேரில்,விசாரணையில் இறங்கிய காவல்துறை,பெற்றோர் வீட்டில் காதம்பரிஇருப்பதை அறிந்து,அவரை மீட்டனர்.ஆனால் அவரோ,தான் 18 வயது பூர்த்திஅ...
2024ல் இந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது என்ன? யாரை?

2024ல் இந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது என்ன? யாரை?

இந்தியா, முக்கிய செய்திகள்
ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் கூகுள் தேடு பொறியில் உலக நாடுகள் அதிகம் தேடிய நிகழ்வுகள், பிரபலங்கள், விவகாரங்கள் குறித்து பட்டியல் வெளியிட்டு வருகிறது. எந்தெந்த சொற்களை அதிகமாக பயனர்கள் தேடினர் என்ற விவரங்களையும் ஆவணப்படுத்துகிறது கூகுள். நாம் இப்போது,நடப்பு 2024ஆம் ஆண்டின்இறுதிப் பகுதியில் இருக்கிறோம்.இந்த ஆண்டில் இந்தியர்கள்ஐபிஎல் கிரிக்கெட் முதல்ரத்தன் டாடா வரைகூகுள் தேடு பொறியில்அதிகமாக தேடித்தேடிபடித்திருக்கிறார்கள் என்பதுதெரிய வந்துள்ளது.இந்தியாவைப் பொறுத்தவரைகிரிக்கெட், அரசியல், பிரபலங்களைப் பற்றிதெரிந்து கொள்வதுதான் கூகுளில்ஆதிக்கம் செலுத்தி இருக்கின்றன. கூகுள் நிறுவனம் வெளியிட்ட தரவுகளின்படி, ஐபிஎல் கிரிக்கெட், டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் மற்றும் பாரதிய ஜனதா கட்சி ஆகியவை 2024ஆம் ஆண்டில், இந்தியாவில் அதிகம் பேரால் தேடப்பட்ட முக்கிய வார்த்தைகளில் அடங்கும். இது, கிரிக்கெட் மற்றும்...
அடேங்கப்பா…! கல்யாணச் சந்தையில் புழங்கும் 6 லட்சம் கோடி ரூபாய்!

அடேங்கப்பா…! கல்யாணச் சந்தையில் புழங்கும் 6 லட்சம் கோடி ரூபாய்!

இந்தியா, முக்கிய செய்திகள், வர்த்தகம்
''கல்யாணம் பண்ணிப்பார்; வீட்டைக் கட்டிப்பார்!'' ஆகிய இரண்டுமே அனுபவித்து, ஆய்ந்து சொன்ன மொழிகள். இவ்விரண்டு திட்டங்களிலும் பொருளாதாரம் முக்கிய பங்காற்றுகிறது. மட்டுமின்றி, உறவுகளை ஒன்றிணைப்பதும் முக்கியமாகிறது. எப்போது, எது கைகூடும்? எது உடையும்? எப்போது இத்திட்டங்கள் நிறைவேறும்? என்று கடைசித் தருணம் வரை திக்… திக்… நிமிடங்களாகவே கடந்து போக வேண்டியதிருக்கிறது. இரண்டுமே உணர்வுப்பூர்வமானது. என்றாலும்கூட, கல்யாண வைபவம் என்பது வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே நிகழக்கூடியது என்பதால் மனதிற்கு நெருக்கமானதாகிறது. ஒரு காலத்தில் மணமகள் அல்லது மணமகன் வீட்டிலேயே தென்னங்கீற்றுப் பந்தல் போட்டு, திருமண விழாக்களும், விருந்து உபசரிப்பும் களைகட்டின. நாகரிக மாற்றத்தால் இப்போது அவரவர் சக்திக்கு ஏற்ப மண்டபம் பிடிக்கின்றனர். மண்டபத்தை உறுதி செய்த பிறகு அழைப்பிதழ் அச்சடிப்பதில் இருந்து தொடங்குகிறது கல்யாண வ...
யாருக்கு உங்கள் வாக்கு? நில்… கவனி… செல்!

யாருக்கு உங்கள் வாக்கு? நில்… கவனி… செல்!

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள்
உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழா என்றாலே அது இந்தியாவின் பொதுத்தேர்தல்கள்தான். 543 மக்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் 7 கட்டங்களாக நடக்கின்றன. முதல்கட்டத் தேர்தல் தமிழகம், புதுவையில் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஏப். 19ஆம் தேதி நடக்கிறது. இந்திய சமூக வாழ்வியலில், திருமண உறவு புனிதமாகப் போற்றப்படுகிறது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக தொடரும் திருமண பந்தத்தைக்கூட நீதிமன்றங்கள் மூலம் முடிவுக்குக் கொண்டு வந்து முடிகிறது. அதற்கான சட்டப்பரிகாரம் நம்மிடத்தில் உள்ளது. ஆனால் 140 கோடி மக்களின் தலையெழுத்தை நிர்ணயிக்கக்கூடிய மக்களவை உறுப்பினர்களை நாம் பெரும்பான்மை அடிப்படையில் தேர்ந்தெடுத்துவிட்டால் அதன்பின், 5 ஆண்டுகளுக்கு அவர்களை திரும்ப அழைக்கவே முடியாது. இதற்கு யாதொரு சட்டப்பரிகாரமும் இல்லை. வாக்களித்து தேர்ந்தெடுக்கும் உரிமை அளிக்கப்பட்டுள்ள தேசத்தில் அவர்களை நீக்குவதற்கான அ...
‘பணவீக்கம்’ மோடி அரசின் மிகப்பெரும் தோல்வி – ஆய்வில் தகவல்

‘பணவீக்கம்’ மோடி அரசின் மிகப்பெரும் தோல்வி – ஆய்வில் தகவல்

இந்தியா, முக்கிய செய்திகள்
இந்தியா டுடே, தேசத்தின் மனநிலை குறித்து அண்மையில் ஓர் ஆய்வை நடத்தியது. நாடு முழுவதும் 35801 பேரிடம் கருத்துகளைக் கேட்டறிந்தது. வேலைவாய்ப்பு, பொருளாதார நிலை, தனிநபர் வருவாய் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வு, 2023, டிச. 15 முதல் 2024, ஜன. 28க்கு இடைப்பட்ட காலக்கட்டத்தில் நடந்தது. இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை பிரச்னை மிக மோசமான நிலையில் உள்ளதாகவும், இப்போது அதிதீவிரமான பிரச்னையே இதுதான் என்று 71 சதவீதம் பேர் கொட்டித் தீர்த்துள்ளனர். படிப்புக்கேற்ற தரமான வேலைவாய்ப்புகள் கிடைக்காததால், வேலையின் தரமும் குறைந்துள்ளது என்றும் புலம்புகின்றனர். அரசாங்க வேலைக்காக ஒரு பெரும் குழு, போட்டித் தேர்வுகளுக்காக தயாராகி வருவதாகவும் சொல்கின்றனர். ராணுவத்திற்கு ஆளெடுக்கும் அக்னிவீர் திட்டம், இளைஞர்களை பெரிய அளவில் கவரவில்லை என்பதோடு, குறுகிய கால ஒப்பந்தம் என்பதால் இளைஞர்களிடையே அதிருப்தியை ஏற்படு...
பாஸ்போர்ட் மட்டும் போதும்… இந்தியர்கள் இனி 62 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம்!

பாஸ்போர்ட் மட்டும் போதும்… இந்தியர்கள் இனி 62 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம்!

இந்தியா, முக்கிய செய்திகள்
இந்திய பாஸ்போர்ட் மூலம் இனி மலேஷியா, இலங்கை, இந்தோனேஷியா உள்ளிட்ட 62 நாடுகளுக்கு விசா இல்லாமலேயே இந்தியர்கள் பயணிக்க முடியும்.  உலகின் மிகவும் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் ஸ்பெயின் நாடுகள் இடம் பிடித்துள்ளன. சர்வதேச வான் போக்குவரத்து சங்கம் (ஐஏடிஏ) அளித்த தகவலின்படி, உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் குறித்த பட்டியலை ஹென்லே பாஸ்போர்ட் குறியீட்டு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் ஸ்பெயின் நாடுகளின் பாஸ்போர்ட் முதலிடம் பிடித்துள்ளது. இந்த நாடுகளின் குடிமக்கள் அவர்களின் பாஸ்போர்ட் மூலம் 194 நாடுகளுக்கு விசா இல்லாமலேயே செல்ல முடியும். இவற்றில் ஜப்பான், சிங்கப்பூர் நாடுகள் கடந்த ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. நடப்பு ஆண்டுக்...
ஐபிஎல் கிரிக்கெட்: பிரியாணிதான் உண்மையான சாம்பியன்; ஸ்விக்கி வேடிக்கையான ட்வீட்!

ஐபிஎல் கிரிக்கெட்: பிரியாணிதான் உண்மையான சாம்பியன்; ஸ்விக்கி வேடிக்கையான ட்வீட்!

இந்தியா, முக்கிய செய்திகள்
ஐபிஎல் கிரிக்கெட் சீசனில் ஸ்விக்கி நிறுவனத்துக்கு அதிகளவில் ஆர்டர் கொடுக்கப்பட்ட உணவு வகைகளில் பிரியாணிதான் முதலிடம் பிடித்துள்ளது. அந்த நிறுவனமே கண்டு வியக்கும் அளவுக்கு 12 மில்லியன் பிரியாணி ஆர்டர்கள் குவிந்துவிட்டதாக கூறுகிறது. அந்த வகையில், இந்த ஐபிஎல் சீசனில் கோப்பையை வென்றது உண்மையில் பிரியாணிதான் என்றும் அந்த நிறுவனம் பகடியாக கூறியுள்ளது. உணவு டெலிவரி வர்த்தகத்தில் முன்னணியில் உள்ள ஸ்விக்கி நிறுவனம், ஐபிஎல் கிரிக்கெட் இறுதி ஆட்டம் நடந்த நாளன்று இந்தியர்கள் என்னென்ன ஆர்டர் செய்தார்கள் என்பது குறித்து சில சுவாரஸ்யமான தரவுகளை வெளியிட்டுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் மீது இந்தியர்களிடையே எப்போதும் பேரார்வம் உண்டு. ஒவ்வொரு ஐபிஎல் சீசனையும் அவர்கள் கொண்டாட்டமாக பார்க்கின்றனர். எந்த அணி வெல்லும், யார் யார் எத்தனை ரன் குவிப்பார்கள், ஆரஞ்ச் நிற தொப்பியை கைப்பற்ற...
ஒரே நாடு ஒரே மொழி… ஆனால், இரண்டு கோமாளிகள்! பாராளுமன்றத்தில் பேசக்கூடாத சொற்களின் பட்டியல்!

ஒரே நாடு ஒரே மொழி… ஆனால், இரண்டு கோமாளிகள்! பாராளுமன்றத்தில் பேசக்கூடாத சொற்களின் பட்டியல்!

அரசியல், இந்தியா, முக்கிய செய்திகள்
பாராளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத சொற்களின் பட்டியலை மக்களவைச் செயலகம் வெளியிட்டுள்ளது.   மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், மக்களவை, மாநிலங்களவையில் பயன்படுத்தக் கூடாது சொற்களின் பட்டியலை மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது. ஆங்கிலம், ஹிந்தி மொழிச் சொற்கள் அதிகளவில் இடம் பிடித்துள்ளன.   தடை செய்யப்பட்டுள்ள சொற்கள்:   வெட்கக்கேடு திட்டினார் துரோகம் செய்தார் ஊழல் ஒட்டுக்கேட்பு ஊழல் கொரோனா பரப்புபவர் வாய்ஜாலம் காட்டுபவர் நாடகம் கபட நாடகம் திறமையற்றவர் அராஜகவாதி சகுனி சர்வாதிகாரம் சர்வாதிகாரி அழிவு சக்தி காலிஸ்தானி இரட்டை வேடம் பயனற்றது ரத்தக்களரி குரூரமானவர் ஏமாற்றினார் குழந்தைத்தனம் கோழை கிரிமினல் முதலைக்கண்ணீர் அவமானம் கழுதை கண்துடைப்பு ரவுடித்தனம் போ...
கடும் எதிர்ப்புக்கு இடையே எல்ஐசி ஐபிஓ பெரும் வெற்றி! வெளியீட்டு அளவை விட 3 மடங்கு விண்ணப்பங்கள் குவிந்தன!!

கடும் எதிர்ப்புக்கு இடையே எல்ஐசி ஐபிஓ பெரும் வெற்றி! வெளியீட்டு அளவை விட 3 மடங்கு விண்ணப்பங்கள் குவிந்தன!!

இந்தியா, முக்கிய செய்திகள், வர்த்தகம்
கடும் எதிர்ப்புக்கு இடையே, பங்குச்சந்தையில் களமிறங்கிய எல்ஐசியின் பொதுப்பங்கு வெளியீடு (ஐபிஓ) பெரும் வெற்றி அடைந்துள்ளது. பொதுப்பங்கு வெளியீட்டு அளவைக் காட்டிலும் சுமார் மூன்று மடங்கு வரை கூடுதலாக பங்குகள் கேட்டு விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.   இந்திய அரசு தொடர்ந்து பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்த்து வரும் நிலையில், இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவன (எல்ஐசி) பங்குகளையும் தனியாருக்கு விற்க முடிவெடுத்தது. இதற்கு ஊழியர்கள் சங்கங்கள், இடதுசாரிகளிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. எனினும், கொள்கை முடிவில் இருந்து இந்திய அரசு பின்வாங்கவில்லை. எல்ஐசி பொதுப்பங்கு வெளியீட்டின் மூலம் ஒரு லட்சம் கோடி ரூபாய் திரட்ட இந்திய அரசு உத்தேசித்துள்ளது. இந்த நிறுவனத்தின் பொதுப்பங்கு வெளியீடு (ஐபிஓ), என்எஸ்இ மற்றும் பிஎஸ்இ சந்தைகளில் மே 4ம் தேதி தொடங்கியது.   ரஷ...
கடந்த 2 மாதத்தில் 15 லட்சம் கோடி ரூபாய் இழப்பு! பங்கு முதலீட்டாளர்கள் சோகம்!

கடந்த 2 மாதத்தில் 15 லட்சம் கோடி ரூபாய் இழப்பு! பங்கு முதலீட்டாளர்கள் சோகம்!

இந்தியா, முக்கிய செய்திகள், வர்த்தகம்
  ஓமிக்ரான், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வெளியேறியது, மத்திய வங்கிகளின் வட்டி விகிதம் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகளில் கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் 15.30 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.   குறிப்பாக, அமெரிக்காவின் ஃபெடரல் வங்கியின் வட்டி விகிதங்கள் உயர்த்தப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவியதால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்கத் தொடங்கினர். அதன் தாக்கம், இந்திய பங்குச்சந்தையில் பெரிய அளவில் எதிரொலித்தது.   தேசிய பங்குச்சந்தையான நிப்டி, வரலாற்றில் முதன்முறையாக கடந்த அக். 19ம் தேதி 18604 புள்ளிகள் வரை எகிறியது. அடுத்த ஒரே மாதத்தில் 10 சதவீதம் வீழ்ச்சி அடைந்து, தற்போது 16782 புள்ளிகள் ஆக சரிவடைந்துள்ளது.   கடந்த வாரம் 17516 புள்ளிகளாக அதாவது, 3.5 சதவீதம் வரை உயர்ந்த நிப...