Sunday, December 10மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

அரசியல்

குத்தகை வாக்காளர்கள்! திராவிட மாடலின் ‘நேர்மையான’ திருட்டு!!

குத்தகை வாக்காளர்கள்! திராவிட மாடலின் ‘நேர்மையான’ திருட்டு!!

அரசியல், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் களம், இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இன்று (பிப். 25, 2023) மாலையுடன் பரப்புரை ஓய்கிறது. பிப். 27ம் தேதி, வாக்குப்பதிவு நடக்கிறது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அதிமுக சார்பில் தென்னரசு, நாம் தமிழர் சார்பில் மேனகா, தேமுதிக சார்பில் ஆனந்த் உள்பட மொத்தம் 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். எனினும், திமுக, அதிமுக இடையேதான் வழக்கம்போல் நேரடி போட்டி நிலவுகிறது.   மாற்று அரசியலை முன்னெடுக்கும் பாமக தலைவர் ராமதாஸ், நாம் தமிழர் சீமான் போன்றோர், இடைத்தேர்தலே அவசியமற்றது எனத் தொடர்ந்து சொல்லி வருகின்றனர்.   ஈரோடு கிழக்கில் காங்கிரஸ் போட்டியிட்டாலும் களத்தில் முண்டா தட்டுவது என்னவோ திமுகதான். கடந்த 21 மாத திமுக ஆட்சிக்கு உரைகல்லாக இந்த இடைத்தேர்தலை ஆளும்தரப்பு கருதுகிறது. அதனால் ம
இந்திராவின் காலில் விழுந்தாரா கருணாநிதி? பரவும் காணொலியின் பின்னணி என்ன?

இந்திராவின் காலில் விழுந்தாரா கருணாநிதி? பரவும் காணொலியின் பின்னணி என்ன?

அரசியல், தமிழ்நாடு
தேர்தல் காலம் என்றாலே ஆளுங்கட்சியும், பிரதான எதிர்க்கட்சியும் பரஸ்பரம் புகார் புஸ்தகம் வாசிப்பது என்பது தேர்தல் ஜனநாயகத்தில் சகஜம்தான். ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலையொட்டி, இப்போது சமூக ஊடகங்களில் ஒரு காணொலி காட்சி திட்டமிட்டு பரப்பி வருகின்றனர்.   'அம்மையார் இந்திரா காலில் விழும் கருணாநிதி. என்ன உங்க சுயமரியாதை?' என்று தலைப்பிட்டு ஒரு காணொலி பரவி வருகிறது. அந்தக் காணொலியில், வயதான ஒரு பெண்மணிக்கு மறைந்த திமுக தலைவர் கருணாநிதி மாலை அணிவிக்கிறார். பிறகு அந்தப் பெண்மணியின் காலைத் தொட்டு வணங்குகிறார். அவர் அருகில் மறைந்த பேராசிரியர் அன்பழகன் மற்றும் திமுக முன்னணியினர் இருக்கின்றனர். காணொலி, மொத்தம் 7 வினாடிகள் ஓடுகிறது. அந்தப் பதிவில் இருக்கும் பெண்மணி யாரென்றே தெளிவாகத் தெரியாதபோது, அவர் இந்திராகாந்திதான் என்ற முன்முடிவுடன் காணொலி பகிரப்பட்டு வருவது அபத்த
ஒரே நாடு ஒரே மொழி… ஆனால், இரண்டு கோமாளிகள்! பாராளுமன்றத்தில் பேசக்கூடாத சொற்களின் பட்டியல்!

ஒரே நாடு ஒரே மொழி… ஆனால், இரண்டு கோமாளிகள்! பாராளுமன்றத்தில் பேசக்கூடாத சொற்களின் பட்டியல்!

அரசியல், இந்தியா, முக்கிய செய்திகள்
பாராளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத சொற்களின் பட்டியலை மக்களவைச் செயலகம் வெளியிட்டுள்ளது.   மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், மக்களவை, மாநிலங்களவையில் பயன்படுத்தக் கூடாது சொற்களின் பட்டியலை மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது. ஆங்கிலம், ஹிந்தி மொழிச் சொற்கள் அதிகளவில் இடம் பிடித்துள்ளன.   தடை செய்யப்பட்டுள்ள சொற்கள்:   வெட்கக்கேடு திட்டினார் துரோகம் செய்தார் ஊழல் ஒட்டுக்கேட்பு ஊழல் கொரோனா பரப்புபவர் வாய்ஜாலம் காட்டுபவர் நாடகம் கபட நாடகம் திறமையற்றவர் அராஜகவாதி சகுனி சர்வாதிகாரம் சர்வாதிகாரி அழிவு சக்தி காலிஸ்தானி இரட்டை வேடம் பயனற்றது ரத்தக்களரி குரூரமானவர் ஏமாற்றினார் குழந்தைத்தனம் கோழை கிரிமினல் முதலைக்கண்ணீர் அவமானம் கழுதை கண்துடைப்பு ரவுடித்தனம்
வீரம் என்றால் என்ன தெரியுமா? போலி ஜனநாயகத்திற்கா உங்கள் வாக்கு? #3

வீரம் என்றால் என்ன தெரியுமா? போலி ஜனநாயகத்திற்கா உங்கள் வாக்கு? #3

அரசியல், சிறப்பு கட்டுரைகள், சேலம், முக்கிய செய்திகள்
விடிந்தால், தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. யாருக்கு வாக்களிக்க வேண்டும்? என்பதை இந்நேரத்தில் வாக்காளர்கள் முடிவு செய்திருக்கக் கூடும். எனினும், தேர்தல் ஜனநாயகத்தின் பெருமதிப்பிற்குரிய வாக்காளர்களிடம் கொஞ்சம் உரையாட விரும்பியே இந்த பதிவை எழுதுகிறேன்.   களத்தில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு நிறம் உண்டு. எத்தனை நிறங்கள் இருந்தாலும், அடிப்படையில் அவை ஒரே வண்ணத்தின் நிறப்பிரிகைகள்தான்.   அதாவது, 99 விழுக்காடு கட்சிகள் முதலாளிய வர்க்கத்தினருக்கு ஆதரவானவை. உழைக்கும் வர்க்கத்திற்காக பேசக்கூடியவை எப்போதும் பொதுவுடைமைக் கட்சிகளே.   தமிழகத்தைப் பொருத்தவரை பொதுவுடைமைக் கட்சிகளும் கூட்டணி விசுவாசம் என்ற பெயரில் தன் சுயத்தை எப்போதோ தொலைத்துவிட்டு, முதலாளிய பாதையை நோக்கிச் சென்று கொண்டிரு
மாப்பிள்ளை அவருதான்… ஆனா அவர் போட்டிருக்கிற டிரஸ் என்னுது! இது நாமக்கல் திமுக பாலிடிக்ஸ்!

மாப்பிள்ளை அவருதான்… ஆனா அவர் போட்டிருக்கிற டிரஸ் என்னுது! இது நாமக்கல் திமுக பாலிடிக்ஸ்!

அரசியல், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
சுற்றுலாத்துறை அமைச்சராக மதிவேந்தன் செயல்பட்டு வந்தாலும், நாமக்கல் மாவட்டத்தைப் பொருத்தவரை சகலமும் நான்தான் என காலரை தூக்கிவிட்டு பவர் பாலிடிக்ஸ் நடத்தி வருகிறார் மாவட்ட பொறுப்பாளரான கேஆர்என். ராஜேஷ்குமார்.   நாமக்கல்லைச் சேர்ந்தவர் மருத்துவர் மாயவன். திமுகவின் மூத்த நிர்வாகிகளுள் ஒருவர். இவருடைய மகன் மதிவேந்தன் (36). நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளராக இருக்கிறார். எம்பிபிஎஸ்., எம்.டி., படித்துள்ள மதிவேந்தன், 2021 சட்டமன்ற தேர்தலில் ராசிபுரம் தனித்தொகுதியில் முன்னாள் அமைச்சர் சரோஜாவை எதிர்த்துப் போட்டியிட்டு 2000க்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் போராடி வெற்றி பெற்றார்.   யாருமே எதிர்பாராத வகையில் மதிவேந்தனை சுற்றுலாத்துறை அமைச்சராக்கி அழகு பார்த்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். தமிழக அமைச்சரவையில் இவர்தான் மிகவும் ஜூனியர். அருந
இதிலேயுமா கோல்மால்? வாக்காளர்களுக்கு கிழிந்த புடவை, இரும்பு கொலுசு விநியோகம்! வெண்ணந்தூர் உள்ளாட்சி தேர்தல் கலாட்டா! திமுக அப்செட்!!

இதிலேயுமா கோல்மால்? வாக்காளர்களுக்கு கிழிந்த புடவை, இரும்பு கொலுசு விநியோகம்! வெண்ணந்தூர் உள்ளாட்சி தேர்தல் கலாட்டா! திமுக அப்செட்!!

அரசியல், நாமக்கல், முக்கிய செய்திகள்
வெண்ணந்தூரில் நாளை நடக்க உள்ள மாவட்ட கவுன்சிலர் தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு ரொக்கம், வேட்டி, சேலை என வாரி இறைத்த திமுக, இறுதிக்கட்டத்தில் வெள்ளி கொலுசு என்ற பெயரில் இரும்பு கம்பியால் ஆன கொலுசுகளை கொடுத்தது, வாக்காளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.   நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 6வது வார்டில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான இடைத்தேர்தல் சனிக்கிழமை (அக். 9) நடக்கிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி, மாலை 6 மணி வரை நடக்கிறது. 107 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. ஆறாவது வார்டில் மொத்தம் 54 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். வெண்ணந்தூர் ஒன்றியம் நீண்ட காலமாகவே அதிமுகவின் கோட்டையாக இருந்து வந்துள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது கூட திமுகவுக்கு அதிமுகவைக் காட்டிலும் 1700 வாக்குகள் குறைவாகவே கிடைத்துள்ளன.   தே
ஆளுங்கட்சி 1000; அதிமுக 500 ரூபாயும் வேட்டி சேலையும்! சூடு பறக்கும் வெண்ணந்தூர் உள்ளாட்சி தேர்தல் களம்!!

ஆளுங்கட்சி 1000; அதிமுக 500 ரூபாயும் வேட்டி சேலையும்! சூடு பறக்கும் வெண்ணந்தூர் உள்ளாட்சி தேர்தல் களம்!!

அரசியல், நாமக்கல், முக்கிய செய்திகள்
நாமக்கல் அருகே, வெண்ணந்தூர் 6வது வார்டு மாவட்ட கவுன்சிலர் தேர்தலையொட்டி, திமுக, அதிமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் போட்டிப்போட்டு பண பட்டுவாடாவில் ஈடுபட்டது, அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட மற்றும் விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு முதல்கட்டமாக அக். 6ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு சனிக்கிழைமை (அக். 9) தேர்தல் நடக்கிறது.   நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியத்தில் 6வது வார்டில் இருந்து மாவட்ட கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுகவின் பி.ஆர்.சுந்தரம், கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது பதவியை ராஜிநாமா செய்துவிட்டார். அதையடுத்து அந்தப் பதவிக்கு நாளை வாக்குப்பதிவு நடக்கிறது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக கூட்டணியாகவும், பாமக, தேமுதிக, அமமுக,
‘நச்’ கேள்விகள்; ‘பன்ச்’ பதில்கள்!; டெல்லியில் தெறிக்கவிட்ட மு.க.ஸ்டாலின்!

‘நச்’ கேள்விகள்; ‘பன்ச்’ பதில்கள்!; டெல்லியில் தெறிக்கவிட்ட மு.க.ஸ்டாலின்!

அரசியல், இந்தியா, முக்கிய செய்திகள்
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்று 42 நாள்கள் ஆன நிலையில், பிரதமர் நரேந்திரமோடியை மரியாதை நிமித்தமாக டெல்லியில் வியாழனன்று (ஜூன் 17) நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறார். மாநிலத்தின் முதல்வராக பொறுப்பேற்கக் கூடியவர்கள் பெரும்பாலும் முப்பது நாள்களுக்குள்ளாகவே பிரதமருடனான சம்பிரதாயமான சந்திப்பை முடித்து விடுவார்கள். ஆனால் கொரோனா பெருந்தொற்றால் தமிழகமே ஆக்சிஜன் கிடைக்காமல் மூச்சுத்திணறிய வேளையில் பொறுப்பேற்றதால் இந்த சந்திப்புக்கு 42 நாள்கள் ஆகியிருக்கின்றன.   டெல்லி சென்ற ஸ்டாலினுக்கு திமுக எம்பிக்கள் அளித்த உற்சாக வரவேற்பு லோக்கல் மீடியாக்களையும், வடக்கத்திய அரசியல் தலைவர்களையும் கவனிக்க வைத்திருக்கிறது.   பிரதமரிடம் அதிமுக முன்னாள் முதல்வர் மற்றும் முக்கிய அமைச்சர்கள் மீதான ஊழல்கள் பற்றியும் ஸ்டாலின் புகார் புஸ்தகம் வாசிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனா
சட்டப்பேரவை தேர்தல்: மாங்கனி மாவட்டத்தில் திமுக மண்ணை கவ்வியது ஏன்?

சட்டப்பேரவை தேர்தல்: மாங்கனி மாவட்டத்தில் திமுக மண்ணை கவ்வியது ஏன்?

அரசியல், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பத்து ஆண்டுகளுக்குப் பிறகு திமுக, கோட்டையில் கொடி நாட்டினாலும், மாங்கனி மாவட்டமான சேலத்தில் மட்டும் தொடர்ச்சியாக மூன்று சட்டப்பேரவைத் தேர்தல்களில் திமுக கோட்டை விட்டிருப்பது உடன்பிறப்புகளிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.   அதேநேரம், சேலம் மாவட்டத்தில் உள்ள பெரும்பான்மை தொகுதிகளைக் கைப்பற்றி, மீண்டும் இந்த மண்ணை அதிமுகவின் கோட்டை என நிரூபித்திருக்கிறார் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. உள்ளடி வேலைகள், கோஷ்டி பூசல்களால் திமுகவால் இங்கு ஒரு தொகுதிக்கு மேல் கைப்பற்ற முடியாத சோகம் தொடர்கிறது. கடந்த 2011ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக - தேமுதிக கூட்டணி, சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளையும் கைப்பற்றியது. 2016 தேர்தலில் அதிமுக தனித்து 10 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த நிலையில், சேலம் வடக்கில் மட்டும் சூரியன் உதித்து இருந்தது.
சட்டமன்ற தேர்தல் – 2021: சேலம் மாவட்டத்தில் வாகை சூடுவது யார்? வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்…!

சட்டமன்ற தேர்தல் – 2021: சேலம் மாவட்டத்தில் வாகை சூடுவது யார்? வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்…!

அரசியல், சேலம், தேர்தல் 2021, முக்கிய செய்திகள்
சேலம் மாவட்டத்தில் கெங்கவல்லி, ஆத்தூர், ஏற்காடு, ஓமலூர், மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி, சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு, வீரபாண்டி ஆகிய 11 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.   மாவட்டம் முழுவதும் 15 லட்சத்து 246 ஆண் வாக்காளர்கள், 15 லட்சத்து 15 ஆயிரத்து 19 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் 204 பேர் என மொத்தம் 30 லட்சத்து 15 ஆயிரத்து 469 வாக்காளர்கள் உள்ளனர்.   கடந்த ஏப். 6ம் தேதி நடந்த தேர்தலில் 23 லட்சத்து 86 ஆயிரத்து 950 பேர் வாக்களித்துள்ளனர். அதாவது, 11 தொகுதிகளிலும் சராசரியாக 79.16 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. தேர்தலுக்காக மொத்தம் 4280 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. நாம் மேற்கொண்ட தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு முடிவுக்கும், வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புக்கும் பெரிய அளவில் வித்தியாசம