சட்டமன்ற தேர்தல்: ராசிபுரத்தின் ‘வேந்தர்’ ஆவாரா அமைச்சர் மதிவேந்தன்?
தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப். 23ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் இறுதிக்கட்ட பரப்புரையில் தீவிரமாக இறங்கியுள்ளன. இந்நிலையில், திமுக சார்பில் அமைச்சர் மதிவேந்தன் மீண்டும் ராசிபுரம் (தனி) சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். அமைச்சராக அவர் இந்த தொகுதியில் செய்த வளர்ச்சிப்பணிகள், தேர்தல் நிலவரம் குறித்து களத்தில் விசாரித்தோம்.
மதிவேந்தன்
ராசிபுரம் தொகுதியில், 1971க்குப் பிறகு நடந்த 12 தேர்தல்களில் அதிமுக 8 முறை வென்றுள்ளது. இந்த தொகுதி இலைக்கட்சியின் வலுவான கோட்டை. கடந்த 2021 தேர்தலில் அதிமுகவின் டாக்டர் சரோஜாவை எதிர்த்து, திமுக சார்பில் முதன்முதலாக களமிறங்கிய மதிவேந்தன், 1952 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, அதிமுக கோட்டையைத் தகர்த்தார்.
நாமக்கல் மாவட்டத்தில் திமுகவின் முன்னோடிகளில் ஒருவரான டாக்டர் மாயவனின் மகன் என்ற நுழைவுச் சீட்டு இருந்தாலும், கடந்...









