Friday, April 17மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

அரசியல்

சட்டமன்ற தேர்தல்: ராசிபுரத்தின் ‘வேந்தர்’ ஆவாரா அமைச்சர் மதிவேந்தன்?

சட்டமன்ற தேர்தல்: ராசிபுரத்தின் ‘வேந்தர்’ ஆவாரா அமைச்சர் மதிவேந்தன்?

அரசியல், நாமக்கல், முக்கிய செய்திகள்
தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப். 23ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் இறுதிக்கட்ட பரப்புரையில் தீவிரமாக இறங்கியுள்ளன. இந்நிலையில், திமுக சார்பில் அமைச்சர் மதிவேந்தன் மீண்டும் ராசிபுரம் (தனி) சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். அமைச்சராக அவர் இந்த தொகுதியில் செய்த வளர்ச்சிப்பணிகள், தேர்தல் நிலவரம் குறித்து களத்தில் விசாரித்தோம். மதிவேந்தன் ராசிபுரம் தொகுதியில், 1971க்குப் பிறகு நடந்த 12 தேர்தல்களில் அதிமுக 8 முறை வென்றுள்ளது. இந்த தொகுதி இலைக்கட்சியின் வலுவான கோட்டை. கடந்த 2021 தேர்தலில் அதிமுகவின் டாக்டர் சரோஜாவை எதிர்த்து, திமுக சார்பில் முதன்முதலாக களமிறங்கிய மதிவேந்தன், 1952 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, அதிமுக கோட்டையைத் தகர்த்தார். நாமக்கல் மாவட்டத்தில் திமுகவின் முன்னோடிகளில் ஒருவரான டாக்டர் மாயவனின் மகன் என்ற நுழைவுச் சீட்டு இருந்தாலும், கடந்...
தேர்தல் 2026: சேலத்தில் கோட்டையைப் பிடிக்குமா திமுக?

தேர்தல் 2026: சேலத்தில் கோட்டையைப் பிடிக்குமா திமுக?

அரசியல், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் மார்ச் 30ம் தேதி தொடங்குகிறது. தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டை வெற்றிகரமாக முடித்து, முதல்கட்டமாக 23 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டிருக்கிறார் அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி. இன்னும் ஓரிரு நாளில் திமுக கூட்டணியும், முழு வேட்பாளர் பட்டியலை வெளியிட உள்ளது. திமுக, அதிமுக, நாதக, தவெக என வெளிப்பார்வைக்கு நான்கு முனைப் போட்டியெனக் கூறப்பட்டாலும், உண்மையில் திமுக, அதிமுக இடையேதான் நேரடிப் போட்டி நிலவுகிறது. ஆளுங்கட்சி அந்தஸ்து, அபரிமிதமான பணபலம், வலுவான கூட்டணி உள்ளிட்ட காரணிகளால் ஒட்டுமொத்த அளவில் திமுகவுக்கு சற்று சாதகமான சூழல் உள்ளது. அதேநேரம், கொங்கு மண்டலத்தில் இந்த முறையும் ஆளும் திமுகவுக்கு இலைக்கட்சி சிம்மசொப்பனமாக இருக்கும் என்றே கள நிலவரம் கூறுகிறது. குறிப்பாக, சேலம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 11 தொகுதிகள...
போட்டுக்கொடுத்த மேயர்… மாட்டிக்கொண்ட அமைச்சர்…!

போட்டுக்கொடுத்த மேயர்… மாட்டிக்கொண்ட அமைச்சர்…!

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
திமுக கூட்டணியை இறுதி செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வரும் நிலையில், வேட்பாளர்களை தேர்வு செய்வதில் ஆளுங்கட்சி கவனம் செலுத்தி வருகிறது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட அண்ணா அறிவாலயத்திடம் டிக்கெட் கேட்டு 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விருப்ப மனு அளித்துள்ளனர். இதையடுத்து, விருப்ப மனு அளித்தவர்களிடம் தொகுதிவாரியாக நேர்காணல் நடந்து வருகிறது. திமுக நேர்காணல் எப்படி நடக்கிறது என்பது குறித்து அறிந்து கொள்ள அண்ணா அறிவாலயம் வட்டாரத்தில் ஒரு விசிட் அடித்தோம். கூட்டணி கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு, கட்சி நிர்வாகிகள் கூட்டம், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு பதிலடி, திராவிட மாடல் ஆட்சியின் சாதனை தொடர்பான விளம்பர ஷூட்டிங் என பல்வேறு 'டைட்' ஷெட்யூல்களுக்கு இடையிலும், வேட்பாளர்களைத் தேர்வு செய்வதிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் படு சுறுசுறுப்பாக இயங்கி வருவதா...
ஏப்ரல் 23ல் தமிழக சட்டமன்ற தேர்தல்; வேட்புமனு தாக்கல் 30ம் தேதி தொடக்கம்

ஏப்ரல் 23ல் தமிழக சட்டமன்ற தேர்தல்; வேட்புமனு தாக்கல் 30ம் தேதி தொடக்கம்

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழகத்தில், வரும் ஏப்ரல் 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 30ம் தேதி தொடங்குகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் அறிவிப்பை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் ஞானேஷ்குமார், மார்ச் 15ம் தேதி மாலையில் வெளியிட்டார். தமிழகத்தில் நடப்பு சட்டமன்றத்தின் ஆயுள் காலம் மே 10ம் தேதியும், புதுச்சேரி சட்டமன்றத்தின் ஆயுள் ஜூன் 15ம் தேதியும் முடிவுக்கு வருகின்றன. இதையடுத்து இரு மாநிலங்களுக்கும் சட்டமன்ற தேர்தல் நடத்துவதற்கான ஆயத்தப்பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் தமிழகம், புதுச்சேரி மட்டுமின்றி அசாம், கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பையும் ஆணையம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் நடக்கிறது. இத...
அமைச்சர் ராஜேந்திரன்: தரை தட்டும் கப்பலா? கரையேறும் மாலுமியா?

அமைச்சர் ராஜேந்திரன்: தரை தட்டும் கப்பலா? கரையேறும் மாலுமியா?

அரசியல், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ராஜேந்திரன், அமைச்சர் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரனின் பிரித்தாளும் அரசியல் தந்திரம், வரும் சட்டமன்ற தேர்தலில் அவரையே பூமராங் ஆக திருப்பித் தாக்கும் என்கிறார்கள் திமுகவின் மூத்த உடன்பிறப்புகள். சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளர், வழக்கறிஞர் ராஜேந்திரன் (66). குரு நானக் கல்லூரியில் இளங்கலை மாணவராக படித்துக் கொண்டிருந்தபோது நடந்த மாணவர் அமைப்புத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று, கலைஞரின் கவனத்தை ஈர்த்தார். காரணம், அந்த நேரத்தில் வேறு எந்தக் கல்லூரியிலும் திமுகவின் மாணவர் அமைப்பு வெற்றி பெறவில்லை. மாணவர் அணி அமைப்பாளர், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர், இளைஞரணி மாநில துணை செயலாளர் என்று படிப்படியாக உயர்ந்த ராஜேந்திரன், திமுகவின் தனிப்பெரும் அமைப்பான தொமுசவின் மாநிலத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். மறைந்த வீரபாண்டியார், ஆக்டிவ் பாலிடிக்ஸில் இருந்தபோது, அவருக்கு எதிராக மு.க.ஸ்டாலினால் வளர...
சேலம்: அமைச்சருக்கு எதிராக அணிதிரளும் கவுன்சிலர்கள்!

சேலம்: அமைச்சருக்கு எதிராக அணிதிரளும் கவுன்சிலர்கள்!

அரசியல், சேலம், முக்கிய செய்திகள்
சேலம் மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் கடந்த மாதம், ஆளுங்கட்சி கவுன்சிலர்களே மேயரை புகார்களால் புரட்டி எடுத்த சம்பவத்தின் பின்னணியில் மாவட்ட அமைச்சருக்கு எதிரான அதிருப்திதான் காரணம் என்ற பரபரப்பு தகவல்கள் கிளம்பி உள்ளன. சேலம் மாநகராட்சி 43வது வார்டுகவுன்சிலர் குணா என்கிற குணசேகரன்.வழக்கறிஞரான இவரை, 'சார்' என்றஅடைமொழியுடன் கட்சியினர் குறிப்பிடுவர்.தற்போது சுற்றுலாத்துறை அமைச்சராகஉள்ள வழக்கறிஞர் ராஜேந்திரனைஎதிர்த்து அரசியல் செய்யக்கூடியவர்.இருமுறை மண்டலக்குழுத்தலைவராக இருந்தவர்.இப்போதும், திமுக தலைவர்மு.க.ஸ்டாலினின் 'குட்புக்'கில்இருப்பவர். குணசேகரன் இவர், வழக்கமாக மாமன்றகூட்டத்தில் வருவதும் தெரியாது;செல்வதும் தெரியாது.சைலண்ட் மோடிலேயேஇருக்கக்கூடிய குணசேகரன்,கடந்த பிப். 25ம் தேதி நடந்தமாமன்ற கூட்டத்தில் திடீரென்றுபொங்கி எழுந்துவிட்டார். மேயர் முதல் காண்டிராக்டர்கள்வரை ஒரு பிட...
சேலம் அதிமுக மாவட்ட செயலாளர் நீக்கம் ஏன்? பரபரப்பு பின்னணி!

சேலம் அதிமுக மாவட்ட செயலாளர் நீக்கம் ஏன்? பரபரப்பு பின்னணி!

அரசியல், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலம் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் பதவியில் இருந்து முன்னாள் எம்எல்ஏ ஜி.வெங்கடாசலம், திடீரென்று நீக்கப்பட்டதன் பின்னணியில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிமுகவில், சேலம் மாநகர்மாவட்டச் செயலாளராகஇருந்தவர் ஜி.வெங்கடாசலம்.8 ஆண்டுக்கும் மேலாக இந்தப்பதவியில் இருந்து வந்தார்.எடப்பாடியின் தீவிர விசுவாசியாகஅறியப்பட்ட இவர்,கடந்த ஜன. 28ம் தேதி,திடீரென்று மா.செ. பதவியில்இருந்து கட்டம் கட்டப்பட்டார்.அத்துடன், கொள்கை பரப்புதுணைச் செயலாளர் என்ற'டம்மி' பதவியில் நியமிக்கப்பட்டார். ஜி.வெங்கடாசலம் சூட்டோடு சூடாக,அனைத்துலக எம்ஜிஆர் மன்றதுணைச்செயலாளர் எம்.கே.செல்வராஜ்,சேலம் சூரமங்கலம் பகுதி செயலாளர்ஏ.கே.எஸ்.எம்.பாலு ஆகியஇருவரையும் சேலம் மாநகர்மாவட்ட பொறுப்பாளர்களாகநியமித்திருக்கிறார்எடப்பாடி பழனிசாமி. மா.செ. பதவியில் இருந்துவெங்கடாசலம் நீக்கப்பட்டதன்பின்னணி குறித்து இலைக்கட்சியின்மூத்த ந...
விசிகவில் இருந்து நிரந்தரமாக வெளியேறினார் ஆதவ் அர்ஜூனா!

விசிகவில் இருந்து நிரந்தரமாக வெளியேறினார் ஆதவ் அர்ஜூனா!

அரசியல், தமிழ்நாடு
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து நிரந்தரமான விலகுவதாக அக்கட்சியின் முன்னாள் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். லாட்டரி சாம்ராஜ்யத்தின்சாம்ராட்டாக விளங்கி வரும்மார்ட்டினின் மருமகன்தான்இந்த ஆதவ் அர்ஜூனா.'வாய்ஸ் ஆப் காமன்ஸ்' என்றநிறுவனத்தைத் தொடங்கி,கட்சி மாநாடுகளை ஒருங்கிணைக்கும்பணிகளையும், தேர்தல் நேரத்தில்அரசியல் கட்சிகளுக்குபிரஷாந்த் கிஷோர் போலவியூக வகுப்பாளராகவும்செயல்பட்டு வந்தார். கடந்த 2021 சட்டப்பேரவைத்தேர்தலின்போது விடுதலைச்சிறுத்தைகள் கட்சிக்கு வியூகவகுப்பாளராக பணியாற்றினார்.இதன்மூலமாக விசிக தலைவர்திருமாவளவனுக்கு நெருக்கமான அவர்,நடப்பு ஆண்டு பிப்ரவரி மாதம்விசிகவில் இணைந்தார். கட்சியில் சேர்ந்த 20 நாளில்,அவரை துணைப் பொதுச்செயலாளராக்கினார்திருமாவளவன். அப்போதே,கட்சியின் மூத்த நிர்வாகிகளிடையேஆதவ் மீது எரிச்சல் ஏற்பட்டது. கட்சியில்...
தொழிற்சங்க தேர்தல்: புதிய கூட்டணிக்கு அச்சாரமிட்ட கம்யூனிஸ்ட்; கரன்சி மழையை பொழிந்த திமுக!

தொழிற்சங்க தேர்தல்: புதிய கூட்டணிக்கு அச்சாரமிட்ட கம்யூனிஸ்ட்; கரன்சி மழையை பொழிந்த திமுக!

அரசியல், சேலம், முக்கிய செய்திகள்
சேலம் உருக்காலையில் நடந்ததொழிற்சங்க அங்கீகாரத் தேர்தலில்,மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின்சிஐடியூ தொழிற்சங்கம், அதிமுக, பா.ம.க.,ஆதரவுடன் களமிறங்கிய விவகாரம்,வரும் சட்டப்பேரவைத் தேர்தலில்அதிமுக கூட்டணிக்கு மார்க்சிஸ்ட் கம்யூ.,தாவப்போவதாக பரபரப்புபேச்சு கிளம்பியுள்ளது. பிரசித்தி பெற்ற சேலம் உருக்காலையில்591 நிரந்தர தொழிலாளர்களும்,1000 ஒப்பந்த தொழிலாளர்களும்பணியாற்றுகின்றனர்.ஆண்டுக்கு 1600 கோடி ரூபாய்க்கு மேல்வர்த்தகம் செய்து வருகிறது. இந்த உருக்காலையில் உள்ளதொழிற்சங்கங்களுக்கான அங்கீகாரத் தேர்தல்,கடந்த நவ. 22ம் தேதி நடந்தது.இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறைநடத்தப்படும் இந்தத் தேர்தலில்வெற்றி பெறும் தொழிற்சங்கமே,உருக்காலை நிர்வாகத்துடனானஊதிய ஒப்பந்தம், போனஸ்,தொழிலாளர் நலன்கள் குறித்தபேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதுடன்,அதிகாரப்பூர்வ ஒப்பந்தங்களில்கையெழுத்திட முடியும். காலை 6 மணிக்குத் தொடங்க...
நாமக்கல்: திமுக நகர்மன்ற தலைவருக்கு கொலை மிரட்டல்; உச்சத்தில் உள்கட்சி பூசல்!

நாமக்கல்: திமுக நகர்மன்ற தலைவருக்கு கொலை மிரட்டல்; உச்சத்தில் உள்கட்சி பூசல்!

அரசியல், நாமக்கல், முக்கிய செய்திகள்
  குமாரபாளையம் நகர திமுக செயலாளருக்கு சொந்தக் கட்சியினரே 'நாகரிகமாக' கொலை மிரட்டல் விடுத்து, அறிவாலயத்திற்கு அனுப்பியுள்ள மர்ம கடிதம், நாமக்கல் மாவட்ட அரசியல் களத்தில் உஷ்ணத்தை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வடக்கு நகர திமுக செயலாளராகவும், நகர மன்றத் தலைவராகவும் இருப்பவர் விஜய்கண்ணன். இவர் மீது திமுக மேலிடத்திற்கு அண்மையில் ஒரு பரபரப்பு புகார் கடிதத்தை கழக உடன்பிறப்புகள், பெயர் குறிப்பிடாமல் அனுப்பி வைத்துள்ளனர். அந்தக் கடிதத்தில், ''விஜய்கண்ணன், திருச்சியில் அமைச்சர் கே.என்.நேருவை சந்தித்து ஏற்கனவே இருந்த நகர பொறுப்பாளர் செல்வத்தை தூக்கச் செய்துவிட்டு, அந்தப் பதவியைக் கைப்பற்றிக் கொண்டார். பதவிக்கு வந்த பிறகு மூத்த நிர்வாகிகளை மதிக்காமல் தான்தோன்றித்தனமாக செயல்பட்டு வருகிறார். தன்னை மட்டும் ஃபோகஸ் செய்து கொள்கிறார். கட்சியினரின் தனிப்பட...