![உலகக்கோப்பை ஏர் ரைஃபிள் போட்டியில் தங்கம் வென்றார் தமிழக வீராங்கனை!](https://i2.wp.com/puthiyaagarathi.com/wp-content/uploads/2019/08/ilavenil-final.png?resize=402%2C284&ssl=1)
உலகக்கோப்பை ஏர் ரைஃபிள் போட்டியில் தங்கம் வென்றார் தமிழக வீராங்கனை!
பிரேசிலில் நடந்த
துப்பாக்கி சுடுதல்
(ஏர் ரைஃபிள்) போட்டியில்
தங்கப்பதக்கம் வென்று
சாதனை படைத்துள்ளார்
கடலூரைச் சேர்ந்த
இளம் வீராங்கனை
இளவேனில் வாலறிவன்.
அவருக்கு உலகம்
முழுவதும் பாராட்டுகளும்,
வாழ்த்துகளும் குவிந்து
வருகின்றன.
பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவில், தற்போது மூத்தோர்களுக்கான உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் (ஏர் ரைஃபிள்) போட்டி நடந்து வருகிறது. உலகம் முழுவதும் 72 நாடுகளைச் சேர்ந்த 541 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
நேற்று (ஆகஸ்ட் 28, 2019) நடந்த இறுதிப்போட்டியில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வீராங்கனை இளவேனில் வாலறிவன், 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் 251.7 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். இரண்டாம் இடத்தை, பிரிட்டனை சேர்ந்த வீராங்கனை சியோனட் மின்டோஸ் பெற்றார். அவர் 250.6 புள்ளிகள் எடுத்தார்.