Tuesday, March 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

மருத்துவம்

ரெம்டெசிவர், சி.டி. ஸ்கேன் தேவையில்லை! மருத்துவர் பிரியா சம்பத்குமார் தகவல்!!

ரெம்டெசிவர், சி.டி. ஸ்கேன் தேவையில்லை! மருத்துவர் பிரியா சம்பத்குமார் தகவல்!!

தமிழ்நாடு, மருத்துவம், முக்கிய செய்திகள்
கொரோனா இரண்டாவது அலை கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், தொற்றுநோய் ஆராய்ச்சியாளர் பிரியா சம்பத்குமார் தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த தகவல்களில் இருந்து... தொற்றின் வேகம் முதல் அலையைவிட இரண்டாவது அலையில் அதிகமாக இருப்பது ஏன்?   உருமாற்றம் அடைந்துள்ள கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவுகிறது. அதேபோல வீட்டில் இருக்கும் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு தொற்று பரவும்போது அதிக நெருக்கம் காரணமாக அதிகப்படியான வைரஸ், நுரையீரலை சென்றடைகிறது. இதனால் நோயின் வீரியமும் அதிகமாக ஆகிறது.   முதல் அலையில் குடும்பத்தினுள் கொரோனா வைரஸ் பரவும் விகிதம் 30 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது அது 100 சதவீதமாக மாறியிருக்கிறது. ஆகையால், குடும்பத்தினுள் யாருக்காவது கொரோனா அறிகுறி இருந்தால் அவரை முதலில் தனிமைப்படுத்த வேண்டும். பிறர் முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
அதிகரிக்கும் மலட்டுத்தன்மை; கேள்விக்குறியாகும் குழந்தை பாக்கியம்! ஷாக் ரிப்போர்ட்…!!

அதிகரிக்கும் மலட்டுத்தன்மை; கேள்விக்குறியாகும் குழந்தை பாக்கியம்! ஷாக் ரிப்போர்ட்…!!

அலோபதி, சிறப்பு கட்டுரைகள், மருத்துவம், முக்கிய செய்திகள்
ஜூலை 25, 1978. இந்த நாள், உலக வரலாற்றை புரட்டிப்போட்டதுடன், மருத்துவ உலகில் அதீத மகிழ்ச்சியையும், மதவாதிகளிடையே அதிர்ச்சியையும் ஒருசேர அதிகரித்த நாள். ஆம். அன்றுதான், இங்கிலாந்தில் உலகின் முதல் சோதனைக்குழாய் குழந்தையான லூயிஸ் ஜாய் பிரவுன் பிறந்த தினம். ''சொத்து சுகம் எவ்வளவு இருந்தாலும் துள்ளி விளையாட ஒரு குழந்தை இல்லையே'' என ஏங்குவோர் பலர். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகளுக்கு வரப்பிரசாதமாய் கிடைத்ததுதான் செயற்கை கருத்தரித்தல் தொழில்நுட்பம். மருத்துவ உலகினர் இதை மகத்தான பரிசளிப்பு என்றாலும், ஆணும், பெண்ணும் இணை சேராமலே குழந்தை பெற்றுக் கொள்வது என்பது இயற்கைக்கு முரணானது என்ற பேச்சும் எழாமல் இல்லை. ஆனாலும், உலகமயமாக்கலால் மாறி வரும் கலாசாரம், உணவுப்பழக்கம், மது, புகைப்பழக்கம், வாழ்வியல் முறை போன்றவைகளால் ஆண், பெண்களிடையே மலட்டுத்தன்ம
நீங்கள் மொபைல் போனை அதிகமாக பயன்படுத்துபவரா? நோமோபோபியா குறைபாடு வரலாம்…!!

நீங்கள் மொபைல் போனை அதிகமாக பயன்படுத்துபவரா? நோமோபோபியா குறைபாடு வரலாம்…!!

சிறப்பு கட்டுரைகள், மருத்துவம், முக்கிய செய்திகள்
எது உங்களை இன்று வசியப்படுத்தி வைத்திருக்கிறதோ, அதுவே உங்களை வீழ்த்தும் ஆயுதமாகவும் மாறலாம். அதில் உங்களிடம் உள்ள கைபேசிகளும் (மொபைல் போன்) விதிவிலக்கு அல்ல. நான், உங்களை அச்சமூட்டுவதற்காக இப்படி சொல்லவில்லை. ஆனால், உலகளவில் அதிகரித்து வரும் தொழில்நுட்ப அடிமைகளைப் பற்றியே சொல்ல விழைகிறேன்.   தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால் கைபேசிகளின் வழியே, உலகத்தை உங்களின் உள்ளங்கையில் கொண்டு வந்து விட்டது. ஆனால், அதுவே உங்களை சக மனிதர்களிடம் இருந்து பல மைல் தொலைவுக்கு அப்பால் கொண்டு சென்றுவிட்டதையும் நீங்கள் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். தூண்டப்படும் விளம்பரங்கள், பெருகி வரும் நுகர்வு கலாச்சாரம், பணப்புழக்கம் ஆகியவற்றால் ஒவ்வொருவர் வீட்டிலும் இன்றைக்கு குறைந்தபட்சம் நான்கு  மொபைல் ஸ்மார்ட் போன்களாவது இருக்கின்றன. இதன் விளைவு, குடும்ப உறுப்பினர்களேகூட வாட்ஸ்அப் வழியே உரையாடிக் கொள்ளும் அவல
இது ஆண்கள் சமாச்சாரம் மட்டுமில்ல! ஆனால் வயது வந்தோர்க்கு மட்டுமானது!!

இது ஆண்கள் சமாச்சாரம் மட்டுமில்ல! ஆனால் வயது வந்தோர்க்கு மட்டுமானது!!

மருத்துவம், முக்கிய செய்திகள்
இந்தியா போன்ற புராதன நம்பிக்கைகளில் ஊறிப்போன நாடுகளில் காதல், திருமணம், குழந்தைப்பேறு, கலவி குறித்த சங்கதிகள் யாவுமே அளவுக்கு அதிகமாகவே புனிதமாக்கி வைக்கப்பட்டு இருக்கின்றன. இந்த புனிமாக்கும் போக்கு, ஒருவேளை சமூகத்தில் குற்றங்கள் பெருகி விடும் என்ற அச்சத்தினாலோ அல்லது அறியாமையினலோகூட இருக்கலாம். சொல்லப்போனால் அத்தகைய உணர்வுகள் புனிதங்களே அல்ல.   ஆனால் ஆண், பெண் உடலியலில் ஏற்படும் இயல்பான மாற்றங்களை பதின்பருவ சிறுவர், சிறுமிகளுக்கு கற்பிக்காமலே வந்திருப்பது ஆகப்பெரும் சமூகக் குற்றமாகத்தான் பார்க்கிறேன். அப்படியான ஒரு சங்கதி பற்றிதான் இப்போது பார்க்கப் போகிறோம்.   நடிகர் தனுஷின் முதல் படமான 'துள்ளுவதோ இளமை'யில், ஒரு காட்சியில் 'தலைவாசல்' விஜய், ''இந்த பசங்க பாத்ரூமுக்குள் போய் அப்படி ரொம்ப நேரமா என்னதான் பண்ணுவானுங்களோ...?'' என்று சலிப்புடன் கூறுவார். எல்லோருமே பதின்பருவக
கர்ப்பப்பையில் கட்டி…! ”ஆபத்தை அறியாத பெண்கள்”

கர்ப்பப்பையில் கட்டி…! ”ஆபத்தை அறியாத பெண்கள்”

அலோபதி, சேலம், தமிழ்நாடு, பெண்கள் நலம், மருத்துவம், முக்கிய செய்திகள், விழுப்புரம்
(நலமறிய ஆவல்) பெண்களின் கர்ப்பப்பையில் கட்டி வளருதல் என்பது, அவர்களுக்கு ஏற்படும் முக்கிய உடல்நலப் பிரச்னைகளில் ஒன்று. இப்பிரச்னை சற்று விநோதமானதும்கூட. காரணம், கர்ப்பப்பையில் கட்டி வளர்ந்திருக்கிறது என்பதே பெண்கள் பலருக்கும் தெரியாது என்கிறார்கள் மருத்துவர்கள். சேலம் இரண்டாவது அக்ரஹாரத்தில் உள்ள திரு மருத்துவமனையில் ஒரு பெண்ணின் கர்ப்பப்பையில் இருந்து, சுமார் 4 கிலோ கட்டியை, லேப்ராஸ்கோப் அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றி இருக்கிறார்கள் மருத்துவர்கள். மூத்த மருத்துவர் திருவருட்செல்வன், மகப்பேறு மருத்துவர் சரவணக்குமார், மயக்கவியல் மருத்துவர் சாய்குமார் குழுவினர் இந்த சிகிச்சையை திறம்பட செய்துள்ளனர். கர்ப்பப்பை கட்டி எதனால் ஏற்படுகிறது? காரணங்கள் என்ன? புற்றுநோயாக மாறுமா? உள்ளிட்ட கேள்விகளை மகப்பேறு மருத்துவர் சரவணக்குமாரிடம் முன்வைத்தோம். இனி, அவர்... காரணங்கள்: ஈஸ்
பெண்களை அச்சுறுத்தும் சினைப்பை நீர்க்கொப்பளம்! ”குழந்தைப்பேறும்  பாதிக்கலாம்”

பெண்களை அச்சுறுத்தும் சினைப்பை நீர்க்கொப்பளம்! ”குழந்தைப்பேறும் பாதிக்கலாம்”

அலோபதி, சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, பெண்கள் நலம், மகளிர், மருத்துவம், முக்கிய செய்திகள்
''கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கிறாள், அந்த இளம்பெண். வயது 18. திடீரென்று அவளது முகத்தில் அதிகளவில் பருக்கள் தோன்றவே, தோழிகள் கிண்டல் செய்தனர். போதாக்குறைக்கு மெல்லிதாக அரும்பு மீசையும் முளைக்க, தொடர் கேலி, கிண்டலுக்கு ஆளானாள். அந்தப்பெண் ஒரு நாள் என்னைச் சந்தித்தாள். உடல் பருமன், மெல்லிய மீசை, முகத்தில் பருக்கள் இதையெல்லாம் வைத்து அவளுக்கு என்ன பிரச்னை இருக்கும் என்ற யூகத்திற்கு வந்துவிட்டாலும், 'மாதவிலக்கு சுழற்சி சரியாக இருக்கிறதா?' என்றும் கேட்டேன். அதற்கு அவள், சில நேரம் இரண்டு மாதங்களுக்கு மேல்கூட மாதவிடாய் தள்ளிப்போகிறது. அப்போது ரத்தப்போக்கு அதிகமாக இருக்கிறது என்றாள். அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனை செய்து பார்த்ததில், நான் யூகித்ததுபோலவே அவளுக்கு சினைப்பையில் நீர்க்கொப்பளங்கள் இருப்பது தெரியவந்தது. ஆங்கிலத்தில், 'பாலி சிஸ்டிக் ஒவேரியன் டிசீஸ் (Polycystic ovarian disea
”புகைப்பிடித்தால் மட்டுமல்ல தூங்காவிட்டாலும் மரணம் வரும்!”

”புகைப்பிடித்தால் மட்டுமல்ல தூங்காவிட்டாலும் மரணம் வரும்!”

அலோபதி, சேலம், தமிழ்நாடு, மருத்துவம், முக்கிய செய்திகள்
உலக அளவில், இந்தியாவில்தான் இருதய நோயாளிகள் அதிகம் என்கிறது ஓர் ஆய்வு. அதாவது, 2015ம் ஆண்டின் கணக்கீட்டின்படி, நம் நாட்டில் 62 மில்லியன் இருதய நோயாளிகள் இருப்பது தெரியவந்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் 45 வயதுக்கும் குறைவானவர்கள் மாரடைப்பால் இறப்பது அதிகரித்து உள்ளதாக ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. போதாக்குறைக்கு உலக சுகாதார நிறுவனமும், 2030ம் ஆண்டுவாக்கில் உலகம் முழுவதும் வருடத்திற்கு 23 மில்லியன் பேர் இருதய நோய்களால் இறக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளது. ''நமக்கெல்லாம் இருதய நோய்க்கான காரணம் என்னவென்று தெளிவாக தெரியும். அதை தடுப்பதற்கான வேலைகளில்தான் கவனம் செலுத்துவதில்லை. இரவு நேரத்தில் சரியாக தூங்காவிட்டால்கூட இருதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பது நம்மில் பலருக்கு தெரிவதில்லை,'' என்கிறார், மருத்துவர் ஜோதி ஆனந்த். சேலம் அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை தீவிர
‘துறுதுறு’ குழந்தைகள் ‘திருதிரு’ பெற்றோர்கள்!; ஏடிஹெச்டி செய்யும் மாயம்!!

‘துறுதுறு’ குழந்தைகள் ‘திருதிரு’ பெற்றோர்கள்!; ஏடிஹெச்டி செய்யும் மாயம்!!

அலோபதி, குழந்தைகள் நலம், சிறப்பு கட்டுரைகள், சேலம், மருத்துவம், முக்கிய செய்திகள்
''அடடடடா....உங்க மகன், ஒரு நிமிஷம்கூட கிளாஸ்ல உட்கார மாட்டேன்கிறான், மேடம். அவனுக்கு வகுப்பறை விதிகளைக் கொஞ்சம் சொல்லிக்கொடுங்க...'' ''நாங்களும் எவ்வளவோ கோச்சிங் கொடுத்துட்டோம். அவனால அடிப்படை கணக்குப்பாடம் கூட சரியாக செய்ய முடியறதில்ல...'' இதுபோல இன்னும் நிறைய. இப்படி எல்லாம் உங்கள் பிள்ளைகள் மீது புகார்கள் வந்திருந்தால், நிச்சயம் உங்கள் குழந்தைக்கு, 'அட்டென்ஷன் டெஃபிஸிட் ஹைப்பர்ஆக்டிவிட்டி டிஸ்ஆர்டர் (Attention Deficit Hyperactivity Disorder)' பிரச்னை இருக்கலாம், என்கிறது மருத்துவ உலகம். இது நோய் அல்ல; குறைபாடு. சுருக்கமாக ஆங்கிலத்தில், 'ADHD'. தமிழில், 'கவனக்குறைவு மற்றும் மிகுசெயல்பாடு கோளாறு'. குழந்தைகள், வளரிளம் பருவத்தினருக்கு ஏற்படும் உளவியல் கோளாறுகள், கற்றலில் ஏற்படும் சிக்கல்களைக் களைவது குறித்து, சேலம் இரண்டாவது அக்ரஹாரத்தில் உள்ள 'டாக்டர் ராமு லைஃப்கேர் மருத்து
திடீர் மயக்கம், தலை பாரம், ஞாபக மறதி, கண் கட்டுதல் இருக்கிறதா? உடனடியாக டாக்டரை பாருங்க!

திடீர் மயக்கம், தலை பாரம், ஞாபக மறதி, கண் கட்டுதல் இருக்கிறதா? உடனடியாக டாக்டரை பாருங்க!

அலோபதி, சேலம், பெண்கள் நலம், மருத்துவம், முக்கிய செய்திகள்
இன்றைக்கும் போதிய விழிப்புணர்வு இல்லாததால், வலிப்பு நோயால் துடிக்கும் ஒருவருக்கு, சாவிக்கொத்து அல்லது ஏதேனும் இரும்பைக் கையில் திணிக்கும் போக்கே நீடிக்கிறது. ஆனால், வலிப்புக்கும் இரும்புக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என்கிறது மருத்துவ உலகம். அதேநேரம், ஆரம்ப நிலையில் கண்டறிந்து சிகிச்சை எடுத்துக்கொண்டால் வலிப்பு நோயை முற்றிலும் கட்டுப்படுத்தி விடலாம் என மருத்துவர்கள் நம்பிக்கை அளிக்கின்றனர். எனினும், சரியான நேரத்தில் முறையான சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் எச்சரிக்கின்றனர். வலிப்பு நோய் எதனால் வருகிறது? அறிகுறிகள், சிகிச்சை முறைகள் குறித்து சேலம் இரண்டாம் அக்ரஹாரத்தில் உள்ள திரு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் மூளை நரம்பியல் (நியூராலஜிஸ்ட்) துறை மருத்துவர் க.திருவருட்செல்வன் விரிவாக விளக்கம் அளித்தார். அவரிடம் பேசியதில் இருந்து... வலி
புற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே!

புற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே!

அரியலூர், இந்தியா, ஈரோடு, உலகம், கடலூர், கன்னியாகுமரி, கரூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, கோயம்பத்தூர், சிறப்பு கட்டுரைகள், சிவகங்கை, சென்னை, சேலம், தஞ்சாவூர், தமிழ்நாடு, தர்மபுரி, திண்டுக்கல், திருச்சி, திருநெல்வேலி, திருப்பூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி, தேனி, நாகப்பட்டினம், நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, புதுச்சேரி, பெரம்பலூர், மதுரை, மருத்துவம், முக்கிய செய்திகள், ராமநாதபுரம், விருதுநகர், விழுப்புரம், வேலூர்
முற்றிய நிலையில் உள்ள புற்றுநோய்க்கு இதுவரை அலோபதி மருத்துவத்தில் தீர்வு கண்டபாடில்லை. மரணம் நிச்சயம். இப்படித்தான் மருத்துவ உலகம் சொல்லி வருகின்றன. புற்றுநோய் குறித்து இதுவரை ஆகி வந்த மரபுகளை எல்லாம் ஷிமோகாவில் உள்ள ஆயுர்வேத வைத்தியர் முறியடித்திருக்கிறார். நாம் சொல்லப்போகும் இந்த தகவல் சிலர் / பலர் அறிந்திருக்கலாம். நோயால் பாதிக்கப்பட்டு, பயனடைந்தவர்கள் சொல்லும்போது அதை ஊருக்கும் சொல்வதுதானே நலம்.   ''அம்மாவுக்கு லிம்போமா (LYMPHOMA) எனும் ஒரு வகை ரத்தப்புற்று நோய் இருக்கிறது. அதுவும் நாலாவது ஸ்டேஜ். அபாய கட்டத்தில் இருப்பதாகவும், குணப்படுத்துவதற்கு 30 சதவீதம்தான் வாய்ப்பு இருப்பதாகவும் மருத்துவர்கள் சொன்னார்கள். சொன்னவர்கள் ஒன்றும் சாதாரண மருத்துவர்கள் அல்ல. புற்றுநோய்க்கென சிகிச்சை அளிக்கும் உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனை மருத்துவர்கள் அவர்கள். நம்பிக்கையிழந்து, வீட்டி