Tuesday, March 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

முக்கிய செய்திகள்

இந்த உசுரே உனக்காகத்தான்… படைச்சானே சாமிதான்…! காதலுடன் தமிழர் வாழ்வியல் பேசும் சிட்டான் குருவி!!

இந்த உசுரே உனக்காகத்தான்… படைச்சானே சாமிதான்…! காதலுடன் தமிழர் வாழ்வியல் பேசும் சிட்டான் குருவி!!

சினிமா, சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
இயக்குநர் பாரதிராஜாவின் இயக்கத்தில் தென்றலோடும் தெம்மாங்கு பாடல்களோடும் மண்மணம் கமழ வெளியான படம்தான், 'புது நெல்லு புது நாத்து'. 1991ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் தேதி இந்தப் படம் வெளியானது. சுகன்யா, ராகுல், நெப்போலியன், பொன்வண்ணன், ராம் அர்ஜூன், ருத்ரா உள்ளிட்ட முதன்மைப் பாத்திரத்தில் நடித்தவர்கள் அனைவரும் இந்தப் படத்திற்கு புதிய நாற்றுகள்தான். பாரதிராஜவின் ஆஸ்தான இசையமைப்பாளரான இளையராஜாதான் இந்தப் படத்திற்கும் இசை. கங்கை அமரன், முத்துலிங்கம் ஆகியோருடன் இணைந்து இளையராஜாவும் இந்தப் படத்திற்காக சில பாடல்களை எழுதி இருக்கிறார். படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களும் ஹிட் அடித்தன. அதிலும், கங்கைஅமரன் எழுதிய, 'சிட்டான் சிட்டான் குருவி உனக்குத்தானே...' என்ற பாடல், அந்தக் காலக்கட்டத்தில் திருவிழாக்கள், கல்யாண வீடுகள், விருந்து விழாக்கள் என ஒலிக்காத இடமே இல்லை. பேருந்து பயணத்தின் 'பிளே
மக்களே போல்வர் கயவர்…! ஊடகங்களும் அத்தகையவர்களே!!

மக்களே போல்வர் கயவர்…! ஊடகங்களும் அத்தகையவர்களே!!

அரசியல், சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
மக்களவைத் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு இன்னும் பத்து நாள்களில் வர உள்ள நிலையில், செய்தி நிறுவனங்கள், ஊடகங்கள், தேர்தல் கள ஆய்வு நிறுவனங்கள் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில், புதிய தலைமுறை செய்தி தொலைக்காட்சி நிறுவனம், பெடரல் இணைய ஊடகம் மற்றும் ஏபிடி நிறுவனமும் இணைந்து நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை அண்மையில் வெளியிட்டது. மக்களவைத் தேர்தல்-2024ல் தமிழகத்தில், திமுக 38.35 சதவீத வாக்குகளைப் பெறும் என்றும், அதிமுக 17.26 சதவீத வாக்குகளைப் பெறும் என்றும் தெரிவிக்கிறது, புதிய தலைமுறை கருத்துக்கணிப்பு. நாம் தமிழர் கட்சி 7.26 சதவீத வாக்குகளைப் பெற்று நான்காம் இடத்தைப் பிடிக்கும் என்றும் அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால், தொண்டர்கள் மற்றும் கட்டமைப்பு ரீதியாக வலிமையாக உள்ள அதிமுகவைக் கா
‘பணவீக்கம்’ மோடி அரசின் மிகப்பெரும் தோல்வி – ஆய்வில் தகவல்

‘பணவீக்கம்’ மோடி அரசின் மிகப்பெரும் தோல்வி – ஆய்வில் தகவல்

இந்தியா, முக்கிய செய்திகள்
இந்தியா டுடே, தேசத்தின் மனநிலை குறித்து அண்மையில் ஓர் ஆய்வை நடத்தியது. நாடு முழுவதும் 35801 பேரிடம் கருத்துகளைக் கேட்டறிந்தது. வேலைவாய்ப்பு, பொருளாதார நிலை, தனிநபர் வருவாய் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வு, 2023, டிச. 15 முதல் 2024, ஜன. 28க்கு இடைப்பட்ட காலக்கட்டத்தில் நடந்தது. இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை பிரச்னை மிக மோசமான நிலையில் உள்ளதாகவும், இப்போது அதிதீவிரமான பிரச்னையே இதுதான் என்று 71 சதவீதம் பேர் கொட்டித் தீர்த்துள்ளனர். படிப்புக்கேற்ற தரமான வேலைவாய்ப்புகள் கிடைக்காததால், வேலையின் தரமும் குறைந்துள்ளது என்றும் புலம்புகின்றனர். அரசாங்க வேலைக்காக ஒரு பெரும் குழு, போட்டித் தேர்வுகளுக்காக தயாராகி வருவதாகவும் சொல்கின்றனர். ராணுவத்திற்கு ஆளெடுக்கும் அக்னிவீர் திட்டம், இளைஞர்களை பெரிய அளவில் கவரவில்லை என்பதோடு, குறுகிய கால ஒப்பந்தம் என்பதால் இளைஞர்களிடையே அதிருப்தியை ஏற்ப
தங்கப்பத்திரம் வெளியீடு பிப். 12ம் தேதி தொடங்குகிறது; மலிவு விலையில் தங்கம் வாங்கலாம்…

தங்கப்பத்திரம் வெளியீடு பிப். 12ம் தேதி தொடங்குகிறது; மலிவு விலையில் தங்கம் வாங்கலாம்…

முக்கிய செய்திகள், வர்த்தகம்
இந்தியப் பாரம்பரியத்தில் தங்கத்திற்கு எப்போதும் தனித்த இடம் உண்டு. சேமிப்பு என்றாலே வெகுமக்களின் சிந்தனையில் முதலிடம் பிடிப்பது தங்கத்தில் முதலீடு செய்வதுதான். அதற்கு அடுத்து வங்கிகளில் டெபாசிட், நிலம், இன்சூரன்ஸ், பங்குகளில் முதலீடு செய்கின்றனர். தங்கத்தில் முதலீடு என்றாலே நகைகளாக வாங்குவதுதான் என்ற மனவோட்டத்தில் மக்கள் இருக்கின்றனர். நகை அல்லது நாணயங்களாக வாங்கும்போது அவசரத் தேவைக்காக உடனடியாக அடகு வைத்தோ அல்லது அன்றைய சந்தை மதிப்பிற்கு விற்றோ எளிதில் பணமாக்கிக் கொள்ள முடியும். அதேநேரம், செய்கூலி, சேதாரம் கணக்கில் கணிசமான இழப்பையும் சந்திக்க நேரிடுகிறது. ஆனால், தங்கப்பத்திரங்களில் முதலீடு செய்வது அப்படியானது அல்ல. இங்கு எல்லாமே காகித வடிவம்தான். அதாவது, டிஜிட்டல் வர்த்தகம்தான். ஆபரணங்களில் முதலீடு செய்வதைக் காட்டிலும் தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்யும்போது, கணிச
மருத்துவ படிப்பில் சேரணுமா? நீட் தேர்வுக்கு மார்ச் 9ம் தேதிக்குள் விண்ணப்பிங்க…

மருத்துவ படிப்பில் சேரணுமா? நீட் தேர்வுக்கு மார்ச் 9ம் தேதிக்குள் விண்ணப்பிங்க…

கல்வி, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
இளங்கலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு, மே மாதம் 5ம் தேதி நடக்கிறது. இத்தேர்வுக்காக, வரும் மார்ச் 9ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ்., பிடிஎஸ்., மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகள், கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு நீட் எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் வெற்றி பெறுவது கட்டாயம். இந்திய ராணுவக் கல்லூரிகளில் பி.எஸ்சி., நர்சிங் படிக்கவும், நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. தேசிய தேர்வு முகமை எனப்படும் என்.டி.ஏ., ஆண்டுக்கு ஒருமுறை நீட் தேர்வை நடத்துகிறது. ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் உள்பட 13 மொழிகளில் இத்தேர்வு நடக்கிறது. நீட் தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு பிப். 9ம் தேதி தொடங்கியது. மார்ச் 9ம் தேதி வரை
‘ஊழல்’ பதிவாளரை காப்பாற்றும் துணைவேந்தர்! ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு!!

‘ஊழல்’ பதிவாளரை காப்பாற்றும் துணைவேந்தர்! ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு!!

கல்வி, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலம் பெரியார் பல்கலை 'நிரந்தர' பொறுப்பு பதிவாளர் தங்கவேலை, பணியிடைநீக்கம் செய்ய அரசு உத்தரவிட்டப் பிறகும், துணைவேந்தர் ஜெகநாதன் உத்தரவை மதிக்காமல் முரண்டு பிடித்து வருவது உயர்கல்வித்துறை வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலத்தை அடுத்த கருப்பூரில், 1997ம் ஆண்டு பெரியார் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. சாதிய அடுக்குகளை எதிர்த்து காலம் முழுவதும் போராடி வந்த பெரியாரின் பெயரில் அமைந்த இந்தப் பல்கலையில் சாதிய வன்மம் புரையோடிக் கிடக்கிறது. வீரபாண்டியார் உயிரோடு இருந்தவரை வன்னியர்கள் ஆதிக்கமும், 2011 - 2021 காலக்கட்டத்தில் அதிமுக ஆட்சியில் கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் ஆதிக்கமும் பல்கலையில் தலை விரித்தாடுகிறது. துணைவேந்தர் சுவாமிநாதன் பதவிக்காலத்தில், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் நியமனத்தில் 60 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்ததாக புகார்கள் எழுந்தன. பே
இளையராஜாவின் மகள் பவதாரணி திடீர் மரணம்!

இளையராஜாவின் மகள் பவதாரணி திடீர் மரணம்!

சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
இளையராஜாவின் மகளும், பிரபல திரையிசை பின்னணி பாடகியுமான பவதாரணி இன்று (ஜன. 25) மாலை உடல்நலக்குறைவால் திடீரென்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 47. இசைஞானியும், ராஜ்யசபா எம்.பி.,யுமான இளையராஜாவின் ஒரே மகள் பவதாரிணி. இசைக்குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் சிறு வயதிலேயே இசைத்துறைக்குள் காலடி வைத்துவிட்ட பவதாரணி, பின்னணி பாடகி, இசையமைப்பாளர், கவிஞர் என பன்முகத்திறமை கொண்டவராக விளங்கினார். இவருடைய உடன்பிறந்தவர்களான கார்த்திக் ராஜா, யுவன்சங்கர் ராஜா ஆகியோரும் பிரபல இசையமைப்பாளர்களாகத் திகழ்ந்து வருகின்றனர். பிரபுதேவா நடித்த ராசய்யா படத்தில்தான் இவர் முதன்முதலில் பின்னணி பாடகியாக அறிமுகம் ஆனார். பாரதி படத்தில் இவர் பாடிய, மயில்போல பொண்ணு ஒண்ணு... என்ற பாடலுக்காக சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது பெற்றார். இதற்கிடையே, அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வ
பங்குச்சந்தை: உயர்வுடன் முடிந்த சென்செக்ஸ்; புதிய உச்சம் தொட காத்திருக்கும் நிப்டி!

பங்குச்சந்தை: உயர்வுடன் முடிந்த சென்செக்ஸ்; புதிய உச்சம் தொட காத்திருக்கும் நிப்டி!

முக்கிய செய்திகள், வர்த்தகம்
இந்திய பங்குச்சந்தைகள் கடந்த வாரம் ஓரளவு உயர்வுடன் முடிவடைந்துள்ளது. வாரத்தின் இறுதி வர்த்தக நாளான வெள்ளிக்கிழமை (ஜன. 12), மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 847.28 (1.18%) புள்ளிகள் உயர்ந்து 72568 புள்ளிகளுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது. தேசிய பங்குசந்தையான நிப்டி 247.35 புள்ளிகள் உயர்ந்து (1.14%) 21894 புள்ளிகளில் முடிவடைந்தது. வரும் வாரத்தில், நிப்டி 22000 புள்ளிகளை கடந்து வரலாற்று உச்சத்தை எட்டும் என சந்தை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். கடைசி மூன்று அமர்வுகள் ஏற்றத்துடன் இருந்ததால் முதலீட்டாளர்கள் உற்சாக மனநிலையில் இருக்கிறார்கள். அதேநேரம், அடுத்தடுத்து வெளியாக உள்ள மூன்றாவது காலாண்டு முடிவுகளைப் பொறுத்து, சந்தையில் அதிகளவில் ஏற்ற, இறக்கங்களும் இருக்கலாம் எனவும் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். ஜன. 8 - ஜன. 12 வரையிலான வாரத்தில், தேசிய பங்குச்சந்தையில் ஐடி துறை சார்ந்த பங
திண்ணை: ஆளுங்கட்சி ‘கடாரம் கொண்டான்’ – சேலம் மாநகராட்சி அதிகாரி மோதல்?

திண்ணை: ஆளுங்கட்சி ‘கடாரம் கொண்டான்’ – சேலம் மாநகராட்சி அதிகாரி மோதல்?

சேலம், முக்கிய செய்திகள்
''அரசியல் சதுரங்கத்தில் சில நேரம், நல்ல அதிகாரிகளின் தலைகள் உருட்டப்படுவது சகஜம்தான்,'' என்றபடியே நக்கல் நல்லசாமியின் வீட்டுத் திண்ணையில் வந்தமர்ந்தார் நம்ம பேனாக்காரர்.   ''என்ன பேனாக்காரரே... வந்ததும் வராததுமா புதிர் போடுறீரு...?'' என கேட்டபடியே, சூடான தேநீரை எடுத்து வந்தார் நக்கல் நல்லசாமி. ''அது ஒண்ணுமில்ல... ரெண்டு மூணு நாளைக்கு முன்னாடி, மாங்கனி மாவட்டத்துல ஆளுங்கட்சியைச் சேர்ந்த மூத்த நிர்வாகியான 'நேதாஜி' பெயர் கொண்ட ஒருத்தரு, மாவட்டத்தைக் கட்டி ஆளும் கருமேக அதிகாரியும், மாநகராட்சியின் முக்கிய அதிகாரியான 'இயக்குநர் சிகரம்' பெயர் கொண்ட அதிகாரியும் இலைக்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். அவருடைய குரல் பதிவுதான், சமூக ஊடகங்களில் வைரல் ஆகிட்டு இருக்கு.   அவரை இப்படி பேசச்சொல்லி தூண்டி விட்டதும் கூட ஆளுங்கட்சியின்
பாஸ்போர்ட் மட்டும் போதும்… இந்தியர்கள் இனி 62 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம்!

பாஸ்போர்ட் மட்டும் போதும்… இந்தியர்கள் இனி 62 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம்!

இந்தியா, முக்கிய செய்திகள்
இந்திய பாஸ்போர்ட் மூலம் இனி மலேஷியா, இலங்கை, இந்தோனேஷியா உள்ளிட்ட 62 நாடுகளுக்கு விசா இல்லாமலேயே இந்தியர்கள் பயணிக்க முடியும்.  உலகின் மிகவும் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் ஸ்பெயின் நாடுகள் இடம் பிடித்துள்ளன. சர்வதேச வான் போக்குவரத்து சங்கம் (ஐஏடிஏ) அளித்த தகவலின்படி, உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் குறித்த பட்டியலை ஹென்லே பாஸ்போர்ட் குறியீட்டு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் ஸ்பெயின் நாடுகளின் பாஸ்போர்ட் முதலிடம் பிடித்துள்ளது. இந்த நாடுகளின் குடிமக்கள் அவர்களின் பாஸ்போர்ட் மூலம் 194 நாடுகளுக்கு விசா இல்லாமலேயே செல்ல முடியும். இவற்றில் ஜப்பான், சிங்கப்பூர் நாடுகள் கடந்த ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. நடப்பு ஆண்டுக்