
அன்னை தெரேசா பெயரில்1000 கோடி ரூபாய் வசூல்!கதிகலங்கிய கூட்டுறவு வங்கிகள்!
சேலத்தில், அன்னை தெரேசா டிரஸ்ட் பெயரில் மக்களிடம் சட்ட விரோதமாக 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்த முன்னாள் பா.ஜ.க., பெண் நிர்வாகி உள்ளிட்ட 17 பேரை காவல்துறையினர் கொத்தாக கைது செய்துள்ளனர்.
சேலம் அம்மாபேட்டையில்உள்ள சிவகாமி திருமண மண்டபத்தில்,புனித அன்னை தெரேசா மனிதநேயஅறக்கட்டளை என்ற தொண்டுநிறுவனம் கடந்த இரண்டு ஆண்டுக்கும்மேலாக இயங்கி வருகிறது.இந்த அமைப்பின் மூலம்பெண்களுக்கு தையல்,பாக்கு தட்டு தயாரித்தல்உள்ளிட்ட கைத்தொழில்பயிற்சிகள் இலவசமாகவழங்கப்பட்டு வருகிறது.
கடந்த ஜன. 23ம் தேதி,இந்த மண்டபத்திற்குள்பொதுமக்கள் கூட்டம் கூட்டமாகமுண்டியடித்துச் சென்றனர்.மண்டபம் அமைந்துள்ள சாலையில்போக்குவரத்து நெரிசல் ஏற்படும்அளவுக்கு கூட்டம் திரண்டது.
அறக்கட்டளை நிர்வாகிகள்,பொதுமக்களிடம் முதலீடுகளைப்பெற்று வருவதாகவும்,அதை இரண்டே மாதத்தில்இரட்டிப்பாக திருப்பித் தருவதாகவும்கவர்ச்சிகரமான திட்டத்தை...