Sunday, January 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

சென்னை

பல்கலை மாணவி பலாத்காரம்: அனைவரும் வெட்கப்பட வேண்டும்!; உயர்நீதிமன்றம் ‘நறுக்’

பல்கலை மாணவி பலாத்காரம்: அனைவரும் வெட்கப்பட வேண்டும்!; உயர்நீதிமன்றம் ‘நறுக்’

சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
அரசியல் விளம்பரத்திற்காக செய்யப்படும் போராட்டங்களுக்கு அனுமதி வழங்க உத்தரவிட முடியாது எனக்கூறி, பாமக வழக்கறிஞர் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை (ஜன. 2, 2025) உத்தரவிட்டுள்ளது. சென்னை அண்ணா பல்கலை.யில்பி.இ., படித்து வரும் மாணவி ஒருவர்,அண்மையில் பாலியல்பலாத்காரம் செய்யப்பட்டார்.பல்கலை வளாகத்தில்ஒதுக்குப்புறமான இடத்தில்இரவு நடந்த இந்தகொடூர சம்பவம், நாடுமுழுவதும் பரபரப்பைஏற்படுத்தி உள்ளது. மாணவியை நாசப்படுத்தியதாகசென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்தஞானசேகரன் என்ற இளைஞரைகாவல்துறையினர் கைது செய்துள்ளனர்.காவல்நிலையத்தில் வைத்துவிசாரித்தபோது, வழக்கம்போல் அவர்கழிப்பறையில் வழுக்கி விழுந்ததில்இடது கை, காலில் எலும்புமுறிவு ஏற்பட்டுள்ளது.அவருக்கு அரசு மருத்துவமனையில்சிகிச்சை அளிக்கப்பட்டு வரும்அதேவேளையில், காவல்துறைவிசாரணையும் தீவிரமாகநடந்து வருகிறது. மேல...
பெண்கள் எப்படி வாழ வேண்டும் என்று வழிநடத்தும் உரிமை யாருக்கும் இல்லை; உயர்நீதிமன்றம் உத்தரவு!

பெண்கள் எப்படி வாழ வேண்டும் என்று வழிநடத்தும் உரிமை யாருக்கும் இல்லை; உயர்நீதிமன்றம் உத்தரவு!

சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பெண்கள் என்ன உடை அணிய வேண்டும்? எப்படி வாழ வேண்டும் என்று வழி நடத்துவதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அண்ணா பல்கலையில்பி.இ., இரண்டாம் ஆண்டு படித்துவரும் ஒரு மாணவியைகோட்டூர்புரத்தைச் சேர்ந்தஞானசேகரன் என்பவர்,கடந்த 23.12.2024ம் தேதி இரவுபல்கலை வளாகத்தில் வைத்துபாலியல் பலாத்காரம் செய்தார். இந்த சம்பவம் தொடர்பாகஞானசேகரனை காவல்துறையினர்கைது செய்தனர். இந்நிலையில்,பாதிக்கப்பட்ட மாணவியின்புகார் குறித்த எப்ஐஆர் அறிக்கை,ஊடகங்களில் கசிந்த விவகாரம்பெரும் அதிர்வலைகளைஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் வரலட்சுமி, பாஜக வழக்கறிஞர் ஏற்காடு மோகன்தாஸ் ஆகியோர் தனித்தனியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகளை வெள்ளிக்கிழமை...
பொறியியல் மாணவி பாலியல் வழக்கு: குற்றத்தில் அரசு ஊழியரே ஈடுபட்டாலும் மாவுக்கட்டு போடுங்கள்! உயர்நீதிமன்றம் அதிரடி!!

பொறியியல் மாணவி பாலியல் வழக்கு: குற்றத்தில் அரசு ஊழியரே ஈடுபட்டாலும் மாவுக்கட்டு போடுங்கள்! உயர்நீதிமன்றம் அதிரடி!!

சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பாலியல் குற்றம், ஊழல் வழக்குகளில் கைது செய்யப்படுவோர் அரசு ஊழியராக இருந்தாலும், காவல்துறையினராக இருந்தாலும் பாகுபாடின்றி மாவுக்கட்டு போடுங்கள் என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். சென்னையில் உள்ளஅண்ணா பல்கலைக்கழகத்தில்மாணவி ஒருவர் பொறியியல்பட்டப்படிப்பு படித்து வருகிறார்.கடந்த 23.12.2024ஆம் தேதி இரவு,அந்த மாணவி தனது காதலனுடன்பல்கலை வளாகத்தில் மறைவானஇடத்தில் நின்று பேசிக்கொண்டுஇருந்தார். அப்போது அங்கு வந்தமர்ம நபர் ஒருவர்,காதலனை மிரட்டி விரட்டியடித்துவிட்டு,தன்னை பாலியல் பலாத்காரம்செய்ததாகவும், அதை அவர்செல்போனில் வீடியோவாகபதிவு செய்ததாகவும்சம்பவத்தன்று இரவுகோட்டூர்புரம் காவல்நிலையத்தில்அந்த மாணவி புகார் அளித்தார்.அந்தப் புகாரில், தன்னிடம்அத்துமீறிய மர்ம நபர்,'இன்னொரு சார் இருக்கிறார்.அவர் அழைக்கும்போது நீசெல்ல வேண்டும்,' என்றுமிரட்டியதாகவும் தெரிவித்து இருந்தா...
5 லட்சம் ரூபாய்க்கு அரசு வேலை!; ஆசை வலை விரித்து மோசடி செய்த அரசுப்பள்ளி பெண் ஆசிரியர்கள் இருவர் கைது!!

5 லட்சம் ரூபாய்க்கு அரசு வேலை!; ஆசை வலை விரித்து மோசடி செய்த அரசுப்பள்ளி பெண் ஆசிரியர்கள் இருவர் கைது!!

குற்றம், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழ் வளர்ச்சித்துறையில், வேலை வாங்கிக் கொடுப்பதாக ஆசை வலை விரித்து, காவலரின் மனைவியிடமே 5 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக சென்னையைச் சேர்ந்த அரசுப்பள்ளி பெண் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.   சென்னை புது வண்ணாரப்பேட்டை காவலர் குடியிருப்பைச் சேர்ந்தவர் ரேணியல். காவலராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி அனிதா கார்மெல் (43). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரயில் மூலம் சொந்த ஊருக்குச் சென்றுள்ளார்.   அப்போது, அதே ரயிலில் பயணம் செய்த திருப்பாச்சூரைச் சேர்ந்த அரசுப்பள்ளித் தலைமை ஆசிரியர் மேகலா (59) என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது. அப்போது மேகலா, ''அரசுத் துறைகளில் பல உயர் அதிகாரிகளுடன் எனக்கு நெருக்கமான நட்பு உள்ளது. யாருக்காவது அரசு வேலை வேண்டுமானால் சொல்லுங்கள். இப்போது கூட தமிழ் வளர்ச்சித்துறையில் காலிப்பணியிடம் இருக்கிறது. யாராவது வ...
சர்வோதய சங்கங்களில் பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல்; நெசவாளர்களை சுரண்டும் கும்பல்! ஆதாரங்களுடன் அம்பலம்!!

சர்வோதய சங்கங்களில் பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல்; நெசவாளர்களை சுரண்டும் கும்பல்! ஆதாரங்களுடன் அம்பலம்!!

குற்றம், கோயம்பத்தூர், சென்னை, தூத்துக்குடி, தேனி, முக்கிய செய்திகள், வேலூர்
தமிழகத்தில், சர்வோதய சங்கங்களில் கைத்தறி நெசவாளர்கள் பெயரில் போலி உறுப்பினர்களைச் சேர்த்து, பல ஆயிரம் கோடி ரூபாய் சுருட்டப்பட்டுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. உண்மையான கைத்தறி நெசவாளர்களுக்குக் கிடைக்க வேண்டிய கூலி, போனஸ் தொகையை காலங்காலமாக ஒரு கும்பல் கூட்டு சேர்ந்து சுரண்டி வந்துள்ளன.   மத்திய அரசின் கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் (கேவிஐசி) கீழ், தமிழ்நாட்டில் மொத்தம் 70 சர்வோதய சங்கங்கள் இயங்கி வருகின்றன. இந்த துறை, மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் கட்டுப்பாட்டில் உள்ளது. கையால் நூற்ற நூலை, கையாலும் காலாலும் நெய்யப்படும் துணிதான் கதர். அப்படியான கதர் துணி நெசவாளர்கள் மற்றும் கிராம கைவினைஞர்களால் உற்பத்தி செய்யப்படும் பொருள்களை சந்தைப்படுத்த சர்வோதய சங்கங்கள் தொடங்கப்பட்டன. மொத்தமுள்ள சங்கங்களில் நாலைந்து தவிர ஏனைய சர்வோதய சங்கங்கள் கதர் துணிமண...
நம்ம ஊர் நாயகி: சீதா தேவிகளால் தழைக்கிறது மனிதநேயம்!

நம்ம ஊர் நாயகி: சீதா தேவிகளால் தழைக்கிறது மனிதநேயம்!

சென்னை, சேவை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
வாழ்வில் ஏற்படும் கொடுந்துயரங்களும், எதிர்பாராத இடர்களும்தான் சாதாரண மனிதர்களைக் கூட அசாதாரண செயல்களைச் செய்யக்கூடிய நாயகர்களாக உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. கொரோனா என்னும் பேரிடர், இந்த உலகுக்கு மற்றுமொரு நாயகியை பரிசளித்திருக்கிறது. கொரோனா ஊரடங்கின்போது வேலை, வருவாய் இழந்து வயிற்றுக்கும் உயிருக்குமாய் தத்தளித்துக் கொண்டிருந்த சாமானியர்களுக்கு தன்னார்வலர்கள் பலர் உணவளித்தல், மருத்துவ உதவிகள், உணவுப்பொருள் வழங்கல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளைச் செய்து வந்தனர். உலகில் இன்னும் மானுடம் மரித்துப் போய்விடவில்லை என்பதற்கு அத்தகைய தன்னார்வலர்களே தக்க சான்று. அவர்களைப் பற்றிய தகவல்களை நமது 'புதிய அகராதி'யில் 'நம்ம ஊர் நாயகன் / நாயகி' என்ற தலைப்பில் தொடராக எழுதி வருகிறோம். அந்த வரிசையில் இப்போது, சீதா தேவி.   சென்னை கொடுங்கையூர் மூலக்கடையைச் சேர்ந...
நடிகர் விவேக் திடீர் மரணம்; ‘மரங்கள் உள்ளவரை சுவாசத்தில் கலந்திருப்பார்!’

நடிகர் விவேக் திடீர் மரணம்; ‘மரங்கள் உள்ளவரை சுவாசத்தில் கலந்திருப்பார்!’

சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
விவேக்: 1961 - 2021 'சின்ன கலைவாணர்' என்று அழைக்கப்படும் பிரபல நகைச்சுவை நடிகர் விவேக், மாரடைப்பால் சனிக்கிழமை (ஏப். 17) அதிகாலையில் உயிரிழந்தார். அவருக்கு வயது 59: நடிகர் விவேக், வெள்ளிக்கிழமை (ஏப். 16) வீட்டில் இருந்தபோது திடீரென்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அவர் மயங்கி விழுந்தார். அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், அவரை உடனடியாக மீட்டு வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சுய நினைவின்றி கிடந்த விவேக்கிற்கு அவசர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. பரிசோதனையில், அவருக்கு ரத்த நாளத்தில் 100 சதவீதம் எல்ஏடி அடைப்பு ஏற்பட்டு இருப்பது தெரிய வந்தது. உடனடியாக ஆஞ்சியோ பிளாஸ்டி மூலம் சரி செய்தனர். இந்த சிகிச்சை சுமார் 1 மணி நேரம் நடந்துள்ளது. இதையடுத்து எக்மோ...
தமிழக மக்களுக்காக என் உயிரே போனாலும் சந்தோஷம்தான்! ரஜினி பரபரப்பு பேட்டி!!

தமிழக மக்களுக்காக என் உயிரே போனாலும் சந்தோஷம்தான்! ரஜினி பரபரப்பு பேட்டி!!

சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
நடிகர் ரஜினிகாந்த், கடந்த 2017ல் தனது அரசியல் பிரவேசம் குறித்து திடமாக அறிவித்த பின்னரும் கூட, தன் படங்களுக்கான புரமோஷன் உத்தியாகவே பல தரப்பில் இருந்தும் விமர்சனங்கள் கிளம்பின. இந்த நிலையில் கடந்த அக்டோபரில் அவருடைய உடல்நலம் குறித்த தகவல்கள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவின. அதுகுறித்து கருத்து தெரிவித்த ரஜினி, ''சமூக ஊடகங்களில் என் உடல்நலம் குறித்து வெளிவந்திருக்கும் தகவல்கள் உண்மைதான். ஆனால் அது அதிகாரப்பூர்வமாக நான் அறிவிக்கவில்லை,'' என்றார்.   இதனால் அவர் ஏற்கனவே அறிவித்தபடி அரசியல் கட்சி தொடங்குவாரா? என்ற அய்யம் பல மட்டங்களிலும் எழுந்தது.   இந்நிலையில், நவ. 30ம் தேதி ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ராகவேந்திரா மண்டபத்தில் திடீர் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அப்போது ரஜினி, ஓரிரு நாளில் அரசியல் நிலைப்பாடு குறித்து முடிவை அறிவிப்...
எங்கள் உயிர்களை தியாகம் செய்தாவது 8 வழிச்சாலை திட்டத்தை ஓட ஓட விரட்டி அடிப்போம்! சேலம் கூட்டத்தில் விவசாயிகள் சபதம்!!

எங்கள் உயிர்களை தியாகம் செய்தாவது 8 வழிச்சாலை திட்டத்தை ஓட ஓட விரட்டி அடிப்போம்! சேலம் கூட்டத்தில் விவசாயிகள் சபதம்!!

காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, சென்னை, சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, முக்கிய செய்திகள்
எட்டுவழிச்சாலைத் திட்டம் வந்தால் இந்த மண்ணும், மனிதர்களும் அழிந்துபோவார்கள் என்பதால், இன்னும் எத்தனை உயிர்களை தியாகம் செய்தாவது இந்த திட்டத்தை ஓட ஓட விரட்டி அடிப்போம் என்று விவசாயிகள் சபதம் எடுத்துள்ளனர். பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ், சேலம் - சென்னை இடையே எட்டுவழிச்சாலைத்திட்டம் எனப்படும் பசுமைவழி விரைவுச்சாலைத் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதற்குத் தேவையான நிலத்தைக் கையகப்படுத்திக் கொடுக்கும் பொறுப்பு, மாநில அரசுக்கானது. மொத்தம் 277.3 கி.மீ. தூரம் அமைக்கப்பட உள்ள இந்த சாலைக்காக 2343 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது. இத்திட்டம் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் வழியாக அமைக்கப்படுகிறது. இதற்காக கையகப்படுத்தப்படும் நிலத்தின் பெரும்பகுதி, சிறு, குறு விவசாயிகளுக்குச் சொந்தமான விளை நிலங்கள் ஆகும். இ...
எட்டுவழிச்சாலை ரத்து: உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு; விவசாயிகள் வெற்றி கொண்டாட்டம்!

எட்டுவழிச்சாலை ரத்து: உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு; விவசாயிகள் வெற்றி கொண்டாட்டம்!

அரசியல், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, சென்னை, சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, திருவண்ணாமலை, முக்கிய செய்திகள்
சேலம் - சென்னை எட்டு வழிச்சாலைத் திட்டம் குறித்த அராசணையை ரத்து செய்து உயர்நீதிமன்றம் திங்கள் கிழமையன்று (ஏப்ரல் 8, 2019) பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. இதையடுத்து சேலம் உள்ளிட்ட ஐந்து மாவட்ட விவசாயிகளும் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியைக் கொண்டாடினர். சேலம் முதல் சென்னை வரையில் பசுமைவழி விரைவுச்சாலை என்ற பெயரில் எட்டுவழிச்சாலைத் திட்டத்தை நிறைவேற்ற நடுவண் பாஜக மற்றும் தமிழக அதிமுக அரசுகள் மும்முரமாக செயல்பட்டு வந்தன. பத்தாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டத்தால், சேலம் - சென்னை இடையிலான பயண நேரம் 70 கி.மீ. தூரம் குறையும் வகையில் மொத்தம் 277.3 கி.மீ. தூரத்திற்கு பாதை அமைக்கப்படும் என்று வரைவுத்திட்டத்தில் சொல்லப்பட்டது.   இதற்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் 2343 ஹெக்டேர் நிலம் தேவை என்பதும்...