Friday, April 17மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

தமிழ்நாடு

சட்டமன்ற தேர்தல்: ராசிபுரத்தின் ‘வேந்தர்’ ஆவாரா அமைச்சர் மதிவேந்தன்?

சட்டமன்ற தேர்தல்: ராசிபுரத்தின் ‘வேந்தர்’ ஆவாரா அமைச்சர் மதிவேந்தன்?

அரசியல், நாமக்கல், முக்கிய செய்திகள்
தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப். 23ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் இறுதிக்கட்ட பரப்புரையில் தீவிரமாக இறங்கியுள்ளன. இந்நிலையில், திமுக சார்பில் அமைச்சர் மதிவேந்தன் மீண்டும் ராசிபுரம் (தனி) சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். அமைச்சராக அவர் இந்த தொகுதியில் செய்த வளர்ச்சிப்பணிகள், தேர்தல் நிலவரம் குறித்து களத்தில் விசாரித்தோம். மதிவேந்தன் ராசிபுரம் தொகுதியில், 1971க்குப் பிறகு நடந்த 12 தேர்தல்களில் அதிமுக 8 முறை வென்றுள்ளது. இந்த தொகுதி இலைக்கட்சியின் வலுவான கோட்டை. கடந்த 2021 தேர்தலில் அதிமுகவின் டாக்டர் சரோஜாவை எதிர்த்து, திமுக சார்பில் முதன்முதலாக களமிறங்கிய மதிவேந்தன், 1952 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, அதிமுக கோட்டையைத் தகர்த்தார். நாமக்கல் மாவட்டத்தில் திமுகவின் முன்னோடிகளில் ஒருவரான டாக்டர் மாயவனின் மகன் என்ற நுழைவுச் சீட்டு இருந்தாலும், கடந்...
தேர்தல் 2026: சேலத்தில் கோட்டையைப் பிடிக்குமா திமுக?

தேர்தல் 2026: சேலத்தில் கோட்டையைப் பிடிக்குமா திமுக?

அரசியல், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் மார்ச் 30ம் தேதி தொடங்குகிறது. தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டை வெற்றிகரமாக முடித்து, முதல்கட்டமாக 23 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டிருக்கிறார் அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி. இன்னும் ஓரிரு நாளில் திமுக கூட்டணியும், முழு வேட்பாளர் பட்டியலை வெளியிட உள்ளது. திமுக, அதிமுக, நாதக, தவெக என வெளிப்பார்வைக்கு நான்கு முனைப் போட்டியெனக் கூறப்பட்டாலும், உண்மையில் திமுக, அதிமுக இடையேதான் நேரடிப் போட்டி நிலவுகிறது. ஆளுங்கட்சி அந்தஸ்து, அபரிமிதமான பணபலம், வலுவான கூட்டணி உள்ளிட்ட காரணிகளால் ஒட்டுமொத்த அளவில் திமுகவுக்கு சற்று சாதகமான சூழல் உள்ளது. அதேநேரம், கொங்கு மண்டலத்தில் இந்த முறையும் ஆளும் திமுகவுக்கு இலைக்கட்சி சிம்மசொப்பனமாக இருக்கும் என்றே கள நிலவரம் கூறுகிறது. குறிப்பாக, சேலம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 11 தொகுதிகள...
போட்டுக்கொடுத்த மேயர்… மாட்டிக்கொண்ட அமைச்சர்…!

போட்டுக்கொடுத்த மேயர்… மாட்டிக்கொண்ட அமைச்சர்…!

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
திமுக கூட்டணியை இறுதி செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வரும் நிலையில், வேட்பாளர்களை தேர்வு செய்வதில் ஆளுங்கட்சி கவனம் செலுத்தி வருகிறது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட அண்ணா அறிவாலயத்திடம் டிக்கெட் கேட்டு 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விருப்ப மனு அளித்துள்ளனர். இதையடுத்து, விருப்ப மனு அளித்தவர்களிடம் தொகுதிவாரியாக நேர்காணல் நடந்து வருகிறது. திமுக நேர்காணல் எப்படி நடக்கிறது என்பது குறித்து அறிந்து கொள்ள அண்ணா அறிவாலயம் வட்டாரத்தில் ஒரு விசிட் அடித்தோம். கூட்டணி கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு, கட்சி நிர்வாகிகள் கூட்டம், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு பதிலடி, திராவிட மாடல் ஆட்சியின் சாதனை தொடர்பான விளம்பர ஷூட்டிங் என பல்வேறு 'டைட்' ஷெட்யூல்களுக்கு இடையிலும், வேட்பாளர்களைத் தேர்வு செய்வதிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் படு சுறுசுறுப்பாக இயங்கி வருவதா...
ஏப்ரல் 23ல் தமிழக சட்டமன்ற தேர்தல்; வேட்புமனு தாக்கல் 30ம் தேதி தொடக்கம்

ஏப்ரல் 23ல் தமிழக சட்டமன்ற தேர்தல்; வேட்புமனு தாக்கல் 30ம் தேதி தொடக்கம்

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழகத்தில், வரும் ஏப்ரல் 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 30ம் தேதி தொடங்குகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் அறிவிப்பை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் ஞானேஷ்குமார், மார்ச் 15ம் தேதி மாலையில் வெளியிட்டார். தமிழகத்தில் நடப்பு சட்டமன்றத்தின் ஆயுள் காலம் மே 10ம் தேதியும், புதுச்சேரி சட்டமன்றத்தின் ஆயுள் ஜூன் 15ம் தேதியும் முடிவுக்கு வருகின்றன. இதையடுத்து இரு மாநிலங்களுக்கும் சட்டமன்ற தேர்தல் நடத்துவதற்கான ஆயத்தப்பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் தமிழகம், புதுச்சேரி மட்டுமின்றி அசாம், கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பையும் ஆணையம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் நடக்கிறது. இத...
அமைச்சர் ராஜேந்திரன்: தரை தட்டும் கப்பலா? கரையேறும் மாலுமியா?

அமைச்சர் ராஜேந்திரன்: தரை தட்டும் கப்பலா? கரையேறும் மாலுமியா?

அரசியல், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ராஜேந்திரன், அமைச்சர் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரனின் பிரித்தாளும் அரசியல் தந்திரம், வரும் சட்டமன்ற தேர்தலில் அவரையே பூமராங் ஆக திருப்பித் தாக்கும் என்கிறார்கள் திமுகவின் மூத்த உடன்பிறப்புகள். சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளர், வழக்கறிஞர் ராஜேந்திரன் (66). குரு நானக் கல்லூரியில் இளங்கலை மாணவராக படித்துக் கொண்டிருந்தபோது நடந்த மாணவர் அமைப்புத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று, கலைஞரின் கவனத்தை ஈர்த்தார். காரணம், அந்த நேரத்தில் வேறு எந்தக் கல்லூரியிலும் திமுகவின் மாணவர் அமைப்பு வெற்றி பெறவில்லை. மாணவர் அணி அமைப்பாளர், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர், இளைஞரணி மாநில துணை செயலாளர் என்று படிப்படியாக உயர்ந்த ராஜேந்திரன், திமுகவின் தனிப்பெரும் அமைப்பான தொமுசவின் மாநிலத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். மறைந்த வீரபாண்டியார், ஆக்டிவ் பாலிடிக்ஸில் இருந்தபோது, அவருக்கு எதிராக மு.க.ஸ்டாலினால் வளர...
தக் லைப்: புதிய மொந்தையில் பழைய கள்!

தக் லைப்: புதிய மொந்தையில் பழைய கள்!

சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
நாயகன் படத்திற்குப் பிறகு, 37 ஆண்டுகள் கழித்து இயக்குநர் மணி ரத்னமும், கமலும் இணைகிறார்கள் என்றபோதே தக் லைப் படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு எகிறியது. இந்நிலையில், ஜூன் 5ம் தேதி வெளியாகி இருக்கிறது தக் லைப். சட்டத்திற்கும், காவல்துறைக்கும்அஞ்சாமல் தான்தோன்றித்தனமானசெயல்களில் ஈடுபடுவோரேதக் / பொறுக்கிகள் / தாதாக்கள்.அப்படிப்பட்ட ஒரு தக்கின்வாழ்க்கையில் நடக்கும்சம்பவங்கள்தான்இந்தப் படத்தின் கதை. 1994ல், பழைய தில்லியில்கதை தொடங்குகிறது.தூத்துக்குடி மாவட்டம்காயல்பட்டினத்தை பூர்வீகமாககொண்ட ரங்கராய சக்திவேலும் (கமல்),அவருடைய அண்ணன் மாணிக்கமும் (நாசர்)பழைய தில்லியில் ரியல் எஸ்டேட்மாபியாக்களாக வலம் வருகிறார்கள். இவர்களுக்கும், மற்றொருகேங்ஸ்டரான சதானந்த் (மகேஷ் மஞ்ச்ரேகர்)தலைமையிலான கோஷ்டிக்கும்,ஓர் அடுக்குமாடி குடியிருப்பில்வைத்து பேச்சுவார்த்தை நடக்கிறது.சக்திவேல் கோஷ்டியை ச...
‘ஆங்கிரி பேர்ட்’ பெண் கவுன்சிலர்; நிலைகுலைந்த அதிமுக தலைவர்; களேபரமான மாநகராட்சி!

‘ஆங்கிரி பேர்ட்’ பெண் கவுன்சிலர்; நிலைகுலைந்த அதிமுக தலைவர்; களேபரமான மாநகராட்சி!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
'நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு?' என சினிமாக்களில் டைட்டில் கார்டுக்கு முன்பாக வரும் முகேஷின் கதை போலாகி விட்டது, சேலம் மாநகராட்சி. அண்மைக் காலமாக அரங்கேறி வரும் கவுன்சிலர்கள் மோதல், மாமன்ற அரங்கை களேபரமாக்கி வருவது பல தரப்பிலும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாநகராட்சியில்,கடந்த மே 29ம் தேதி மாமன்றஇயல்பு கூட்டம் நடந்தது.அன்றைய தினம் காலையில்அரசு நிகழ்ச்சி இருந்ததால்தாமதமாகவே கூட்டம் தொடங்கியது.அடுத்த ஒரு மணி நேரத்தில்அதுவரை நிகழாத சம்பவம்மாமன்ற அரங்கத்தில் அரங்கேறியது. அதிமுக கவுன்சிலரும்,எதிர்க்கட்சித் தலைவருமான யாதவமூர்த்தி,'சாலை சீரமைப்பு பணிகளுக்காக30 கோடி ரூபாயில் டெண்டர்கோரப்பட்டு இருந்தது. அமைச்சரின்ஆதரவாளரான காமராஜூக்குடெண்டர் ஒதுக்குவதற்கு ஏதுவாகடெண்டரை ரத்து செய்தது ஏன்?,'என்று கேள்வி எழுப்பினார். அவர் இப்படி பேசி முடிப்பதற்குள்ளாகவேஆளுங்கட்சி கவுன்சிலர்கள் பொங...
கரும்பு கொள்முதல் தொகை 23 கோடி ரூபாய் நிலுவை; விவசாயிகள் கவலை

கரும்பு கொள்முதல் தொகை 23 கோடி ரூபாய் நிலுவை; விவசாயிகள் கவலை

சேலம், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
கரும்பு அரைவைப் பணிகள் முடிந்து மூன்று மாதங்களுக்கு மேல் ஆகியும், சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகம் கொள்முதல் பணம் 23 கோடி ரூபாய் பட்டுவாடா செய்யாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை நாமக்கல் மாவட்டம் மோகனூரில்,சேலம் கூட்டுறவு சர்க்கரைஆலை இயங்கி வருகிறது.இந்த ஆலை நிர்வாகம் நாமக்கல்,மோகனூர், ராசிபுரம், சேந்தமங்கலம்,திருச்சி மாவட்டத்தில் தொட்டியம்,முசிறி, துறையூர், சேலம் மாவட்டத்தில்ஆத்தூர், கெங்கவல்லி வரையிலானபதிவு பெற்ற விவசாயிகளிடம் இருந்துசர்க்கரை உற்பத்திக்காக கரும்புகொள்முதல் செய்து வருகிறது. ஆலையின் எல்லைக்குஉட்பட்ட பகுதிகளில்கடந்த ஆண்டு 2445 ஏக்கர்பரப்பளவில் கரும்பு பயிரிடப்பட்டது.அதன் அடிப்படையில்,2024-2025ம் ஆண்டிற்கு,1.45 லட்சம் டன் கரும்புஅரைவைக்குக் கொண்டு வரசேலம் கூட்டுறவு சர்க்கரைஆலை இலக்கு நிர்ணயித்தது. ஆனால், பருவம் தப்பிய மழைகா...
சேலம்: அமைச்சருக்கு எதிராக அணிதிரளும் கவுன்சிலர்கள்!

சேலம்: அமைச்சருக்கு எதிராக அணிதிரளும் கவுன்சிலர்கள்!

அரசியல், சேலம், முக்கிய செய்திகள்
சேலம் மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் கடந்த மாதம், ஆளுங்கட்சி கவுன்சிலர்களே மேயரை புகார்களால் புரட்டி எடுத்த சம்பவத்தின் பின்னணியில் மாவட்ட அமைச்சருக்கு எதிரான அதிருப்திதான் காரணம் என்ற பரபரப்பு தகவல்கள் கிளம்பி உள்ளன. சேலம் மாநகராட்சி 43வது வார்டுகவுன்சிலர் குணா என்கிற குணசேகரன்.வழக்கறிஞரான இவரை, 'சார்' என்றஅடைமொழியுடன் கட்சியினர் குறிப்பிடுவர்.தற்போது சுற்றுலாத்துறை அமைச்சராகஉள்ள வழக்கறிஞர் ராஜேந்திரனைஎதிர்த்து அரசியல் செய்யக்கூடியவர்.இருமுறை மண்டலக்குழுத்தலைவராக இருந்தவர்.இப்போதும், திமுக தலைவர்மு.க.ஸ்டாலினின் 'குட்புக்'கில்இருப்பவர். குணசேகரன் இவர், வழக்கமாக மாமன்றகூட்டத்தில் வருவதும் தெரியாது;செல்வதும் தெரியாது.சைலண்ட் மோடிலேயேஇருக்கக்கூடிய குணசேகரன்,கடந்த பிப். 25ம் தேதி நடந்தமாமன்ற கூட்டத்தில் திடீரென்றுபொங்கி எழுந்துவிட்டார். மேயர் முதல் காண்டிராக்டர்கள்வரை ஒரு பிட...
சேலம் அதிமுக மாவட்ட செயலாளர் நீக்கம் ஏன்? பரபரப்பு பின்னணி!

சேலம் அதிமுக மாவட்ட செயலாளர் நீக்கம் ஏன்? பரபரப்பு பின்னணி!

அரசியல், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலம் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் பதவியில் இருந்து முன்னாள் எம்எல்ஏ ஜி.வெங்கடாசலம், திடீரென்று நீக்கப்பட்டதன் பின்னணியில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிமுகவில், சேலம் மாநகர்மாவட்டச் செயலாளராகஇருந்தவர் ஜி.வெங்கடாசலம்.8 ஆண்டுக்கும் மேலாக இந்தப்பதவியில் இருந்து வந்தார்.எடப்பாடியின் தீவிர விசுவாசியாகஅறியப்பட்ட இவர்,கடந்த ஜன. 28ம் தேதி,திடீரென்று மா.செ. பதவியில்இருந்து கட்டம் கட்டப்பட்டார்.அத்துடன், கொள்கை பரப்புதுணைச் செயலாளர் என்ற'டம்மி' பதவியில் நியமிக்கப்பட்டார். ஜி.வெங்கடாசலம் சூட்டோடு சூடாக,அனைத்துலக எம்ஜிஆர் மன்றதுணைச்செயலாளர் எம்.கே.செல்வராஜ்,சேலம் சூரமங்கலம் பகுதி செயலாளர்ஏ.கே.எஸ்.எம்.பாலு ஆகியஇருவரையும் சேலம் மாநகர்மாவட்ட பொறுப்பாளர்களாகநியமித்திருக்கிறார்எடப்பாடி பழனிசாமி. மா.செ. பதவியில் இருந்துவெங்கடாசலம் நீக்கப்பட்டதன்பின்னணி குறித்து இலைக்கட்சியின்மூத்த ந...