‘எவ்வளவோ செஞ்சிருக்கேன்… ஆனா அந்த மாஜி எம்.பி., கண்டுக்கவே இல்ல…!’ – துணைவேந்தர் புலம்பல்!!
சேலத்தில் உள்ள பல்கலைக்கழகத்திற்கு எப்போது பெரியார் என்ற கலகக்காரரின் பெயரைச் சூட்டினார்களோ அப்போது முதல் சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லை.
வாழ்நாளெல்லாம்
சாதி ஒழிப்பிற்காகப் போராடி வந்த
பெரியாரின் பெயரில் அமைந்த
பல்கலையில் குறிப்பிட்ட
சில சாதிகளின் ஆதிக்கம்
தொடர்ந்து வருகிறது.
திமுக, அதிமுக எந்த அரசு
ஆட்சியில் இருந்தாலும் சாதியவாதம்
மேலோங்கி இருக்கிறது.
குறிப்பாக, கடந்த பத்து ஆண்டுகளில்
கொங்கு வெள்ளாள கவுண்டர்
சமூகத்தைச் சேர்ந்த சுவாமிநாதன்,
குழந்தைவேல், ஜெகநாதன் ஆகியோர்
அடுத்தடுத்து துணைவேந்தர்களாக
நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இவர்களில் குழந்தைவேல், ஜெகநாதன்
ஆகிய இருவரும் ஆர்எஸ்எஸ்
பின்புலத்தோடு துணைவேந்தர்
ஆனவர்கள் என்ற பேச்சும் உண்டு.
இப்போதைய துணைவேந்தர் ஜெகநாதன்,
கடந்த 2021ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி
பெரியார் பல்கலையில் பொறுப்பேற்றார்.
அவரின் பதவிக்காலம் கடந்த
ஜ