Sunday, January 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

மற்றவை

மகாநதி! நல்லவனுக்கு கிடைக்கிற எல்லா மரியாதையும் கெட்டவனுக்கும் கிடைக்குதே எப்படி?

மகாநதி! நல்லவனுக்கு கிடைக்கிற எல்லா மரியாதையும் கெட்டவனுக்கும் கிடைக்குதே எப்படி?

சினிமா, சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
மனைவியை இழந்து, இரண்டு குழந்தைகளுடன் கிராமத்தில் செல்வாக்குடன் வாழ்ந்து வரும் நடுத்தர வயது இளைஞன் ஒருவன், பட்டணத்தைச் சேர்ந்த மோசடிப் பேர்வழியை நம்பி தன் சொத்துக்களை எல்லாம் இழக்கிறான். பிள்ளைகளும் தொலைந்து போகிறார்கள். சிதிலம் அடைந்த தன் வாழ்க்கையை அவன் மீட்டெடுத்தானா? குழந்தைகளைக் கண்டுபிடித்தானா? என்பதுதான் மகாநதி படத்தின் மையக்கதை. கொரியன், ஈரானிய படங்கள்தான்உலகப்படங்கள் என அலட்டிக்கொள்வோர், சந்தேகமே இல்லாமல்மகாநதியைக் கொண்டாடலாம்.இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும்உலகப்படங்களின் வரிசையில்கமல்ஹாசனின், மகாநதிநின்று விளையாடும். கமலின் உற்ற நண்பர்களுள்ஒருவரான சந்தானபாரதி இயக்கத்தில்1994, ஜனவரி 14ஆம் தேதி பொங்கல்விருந்தாக வெளியானது.இன்றுடன் (14.1.2025)மகாநதிக்கு 31 வயது. மோசடி குற்றத்திற்காகதண்டனை பெற்று, சென்னைமத்திய சிறையில் அடைக்கப்படுகிறார்கிருஷ்ணா என்கிற கிருஷ்ணசாமி (கமல்).அதே ...
வினாடி? விநாடி? எது சரி? தமிழ் வளர்ச்சித்துறை விழித்தெழுமா?

வினாடி? விநாடி? எது சரி? தமிழ் வளர்ச்சித்துறை விழித்தெழுமா?

சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பள்ளி, கல்லூரிகள் மட்டுமின்றி ஊடகங்களிலும் 'வினாடி-வினா' போட்டிகள் நடத்தப்படுவது நீண்டகாலமாக இருந்து வருகிறது. கேட்கப்படும் வினாவுக்கு நொடிப்பொழுதில் விடை அளிக்க வேண்டும் என்பதால்தான் இத்தகைய நிகழ்ச்சிக்கு விநாடி - வினா என்று பெயர் வந்தது. இப்போது பிரச்சினை அதுவன்று. வினாடி, விநாடி ஆகியவற்றில் எந்த சொல் சரியானது என்பதுதான். வினாடி என்ற சொல்லைவி+னாடி என்றும்;விநாடி என்ற சொல்லைவி+நாடி என்றும் பிரித்து எழுதலாம். இவற்றில், 'னாடி' என்றால்எந்தப் பொருளும் தராது. 'நாடி' என்பது ஒரு வினையைக் குறிக்கும். நாடிச்செல்வது என்றும் பொருள் கொள்ளலாம். நாடித்துடிப்பையும் குறிக்கும். விநாடியில் உள்ள 'வி' என்ற முன்னொட்டானது விசை, விரைதல், சிறந்த, உயர்வான என பல பொருள்கள் தருகின்றன. விரைந்து நாடுதல் எனலாம். நொடியின் அடிப்படையில்உருவானச் சொல்தான் விநாடி.விரைந்து துடிப்பதுதான் நாடி.நாடியின் கால ...
உய்வில்லை தமிழ் கொன்ற மகற்கு! ஊடகங்களில் வதைபடும் தாய்மொழி!!

உய்வில்லை தமிழ் கொன்ற மகற்கு! ஊடகங்களில் வதைபடும் தாய்மொழி!!

சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
மொழி, இனம், பண்பாடு ஆகிய மூன்றும் மனித குலத்தின் பரிணாம வளர்ச்சிக் கூறுகள் ஆகும். மொழி செழுமை அடையும்போது அங்கு இனமும், பண்பாடும், கலாச்சாரமும் மேலும் செழுமை அடைகிறது. எங்கே, ஒரு மொழி அழிந்து போகிறதோ அங்கே ஓர் இனம் அழிவுக்கு உள்ளாகிறது. மொழி, கலாச்சார ரீதியாகமனிதனை ஓர்மைப்படுத்துகிறது.பழமையான மொழிகளுள்ஒன்றான சீனம், உலகம் முழுவதும்110 கோடிக்கும் மேற்பட்டமக்களால் பேசப்படுகிறது.ஆங்கில மொழியை 150 கோடிக்கும்மேற்பட்டோர் பேசுகின்றனர்.தொன்மையான தமிழ் மொழியை,உலகளவில் 10 கோடிபேர் பேசுகிறார்கள்.ஆக, இப்போதைக்குதமிழ் மொழி அழிந்து விடுமோஎன்ற கவலை தேவையற்றது.என்றாலும், அழியக்கூடியமொழிகளுள் தமிழ் 8ஆவதுஇடத்தில் இருப்பதாக யுனெஸ்கோசொல்கிறது கூர்ந்து நோக்கவேண்டியதாகிறது. பிற செவ்வியல் மொழிகளோடுஒப்பு நோக்கும்போது, தமிழைப் போலசெறிவான இலக்கண, இலக்கிய வளம்கொண்ட வேறு மொழிகள்உலகில் இல்லை. நம்முடையதமிழ் ச...
பாலியல் துன்புறுத்தல் அச்சத்தில் 51% கைம்பெண்கள்; ஆய்வில் தகவல்

பாலியல் துன்புறுத்தல் அச்சத்தில் 51% கைம்பெண்கள்; ஆய்வில் தகவல்

சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு
கைம்பெண்களில் 51 சதவீதம் பேர், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக நேரிடும் என்ற அச்சத்துடனேயே வாழ்வதாக ஆய்வில் கருத்து தெரிவித்து உள்ளனர். ஆண்டுதோறும் ஜூன் 23ம் தேதி,சர்வதேச கைம்பெண்கள் தினம்கடைப்பிடிக்கப்படுகிறது.2011ஆம் ஆண்டில் இருந்துஇப்படியொரு தினம்பின்பற்றப்பட்டு வருகிறது.கைம்பெண்கள் சந்திக்கும்சவால்கள், பொருளாதார சுதந்திரம்,சமூகம் பாதுகாப்பு குறித்துஇந்த நாளில் பேசப்படுகிறது. மறைந்த தமிழக முதல்வர்கருணாநிதியிடம் சிலர்,'விதவை' என்ற சொல்லில் கூடபொட்டில்லையே? எனக் கேட்க,அதற்கு அவரோ சட்டென்று,'கைம்பெண் என்றுசொல்லிப் பாருங்கள்.இரண்டு பொட்டு இருக்கும்,'என்றார் சமயோசிதமாக.அப்போது முதல்தான்கைம்பெண் என்ற சொல்லும்பரவலாக பயன்பாட்டுக்கு வந்தது.அதனால் நாமும் இங்கேவிதவை என்ற சொல்லுக்குமாற்றாக கைம்பெண் என்றேபயன்படுத்துகிறோம். நாகப்பட்டினத்தில் இயங்கிவரும் 'கலங்கரை' என்றதொண்டு நிறுவனம்,கைம்ப...
தீராப்பழியைச் சுமக்கப் போகிறீரா துணைவேந்தரே?

தீராப்பழியைச் சுமக்கப் போகிறீரா துணைவேந்தரே?

சிறப்பு கட்டுரைகள், சேலம், முக்கிய செய்திகள்
பெரியார் பல்கலை உதவி பேராசிரியர் பிரேம்குமார் மீதான, சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளுக்கு தீர்வு கிடைக்குமா? கிடைக்காதா? என்ற பரபரப்பான கட்டத்தில் இன்று (நவ. 22) 116ஆவது சிண்டிகேட் கூட்டம் நடக்கிறது.  சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில், வரலாற்றுத்துறை உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தவர் பிரேம்குமார். பல்கலை ஆசிரியர் சங்க பொதுச்செயலாளராகவும் இருக்கிறார். துடிப்பான இளைஞரான இவர், மாணவர்களுக்கும் நூலகத்திற்கும் இடையே அறுபட்டு இருந்த தொடர்பை மீண்டும் புத்துயிரூட்டினார். மாணவர்கள் அன்றாடம் நூலகத்தைப் பயன்படுத்துவதை நடைமுறைப் படுத்தியதோடு, போட்டித் தேர்வுகளுக்கும் தயார்படுத்தி வந்தார். மாணவர்கள் சிலருக்கு தேர்வுக்கட்டணம் கூட செலுத்தி இருக்கிறார். பல்கலையில் நடக்கும் விதிமீறல்கள், முறைகேடுகள் குறித்து அவ்வப்போது வெளிப்படையாக பேசி வந்ததை துணைவேந்தர், பதிவாளர் உள்ளிட்ட நிர்வாக முக்கியஸ்தர்கள்...
யாருக்கு உங்கள் வாக்கு? நில்… கவனி… செல்!

யாருக்கு உங்கள் வாக்கு? நில்… கவனி… செல்!

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள்
உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழா என்றாலே அது இந்தியாவின் பொதுத்தேர்தல்கள்தான். 543 மக்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் 7 கட்டங்களாக நடக்கின்றன. முதல்கட்டத் தேர்தல் தமிழகம், புதுவையில் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஏப். 19ஆம் தேதி நடக்கிறது. இந்திய சமூக வாழ்வியலில், திருமண உறவு புனிதமாகப் போற்றப்படுகிறது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக தொடரும் திருமண பந்தத்தைக்கூட நீதிமன்றங்கள் மூலம் முடிவுக்குக் கொண்டு வந்து முடிகிறது. அதற்கான சட்டப்பரிகாரம் நம்மிடத்தில் உள்ளது. ஆனால் 140 கோடி மக்களின் தலையெழுத்தை நிர்ணயிக்கக்கூடிய மக்களவை உறுப்பினர்களை நாம் பெரும்பான்மை அடிப்படையில் தேர்ந்தெடுத்துவிட்டால் அதன்பின், 5 ஆண்டுகளுக்கு அவர்களை திரும்ப அழைக்கவே முடியாது. இதற்கு யாதொரு சட்டப்பரிகாரமும் இல்லை. வாக்களித்து தேர்ந்தெடுக்கும் உரிமை அளிக்கப்பட்டுள்ள தேசத்தில் அவர்களை நீக்குவதற்கான அ...
இந்த உசுரே உனக்காகத்தான்… படைச்சானே சாமிதான்…! காதலுடன் தமிழர் வாழ்வியல் பேசும் சிட்டான் குருவி!!

இந்த உசுரே உனக்காகத்தான்… படைச்சானே சாமிதான்…! காதலுடன் தமிழர் வாழ்வியல் பேசும் சிட்டான் குருவி!!

சினிமா, சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
இயக்குநர் பாரதிராஜாவின் இயக்கத்தில் தென்றலோடும் தெம்மாங்கு பாடல்களோடும் மண்மணம் கமழ வெளியான படம்தான், 'புது நெல்லு புது நாத்து'. 1991ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் தேதி இந்தப் படம் வெளியானது. சுகன்யா, ராகுல், நெப்போலியன், பொன்வண்ணன், ராம் அர்ஜூன், ருத்ரா உள்ளிட்ட முதன்மைப் பாத்திரத்தில் நடித்தவர்கள் அனைவரும் இந்தப் படத்திற்கு புதிய நாற்றுகள்தான். பாரதிராஜவின் ஆஸ்தான இசையமைப்பாளரான இளையராஜாதான் இந்தப் படத்திற்கும் இசை. கங்கை அமரன், முத்துலிங்கம் ஆகியோருடன் இணைந்து இளையராஜாவும் இந்தப் படத்திற்காக சில பாடல்களை எழுதி இருக்கிறார். படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களும் ஹிட் அடித்தன. அதிலும், கங்கைஅமரன் எழுதிய, 'சிட்டான் சிட்டான் குருவி உனக்குத்தானே...' என்ற பாடல், அந்தக் காலக்கட்டத்தில் திருவிழாக்கள், கல்யாண வீடுகள், விருந்து விழாக்கள் என ஒலிக்காத இடமே இல்லை. பேருந்து பயணத்தின் 'பிளே லிஸ்...
மக்களே போல்வர் கயவர்…! ஊடகங்களும் அத்தகையவர்களே!!

மக்களே போல்வர் கயவர்…! ஊடகங்களும் அத்தகையவர்களே!!

அரசியல், சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
மக்களவைத் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு இன்னும் பத்து நாள்களில் வர உள்ள நிலையில், செய்தி நிறுவனங்கள், ஊடகங்கள், தேர்தல் கள ஆய்வு நிறுவனங்கள் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில், புதிய தலைமுறை செய்தி தொலைக்காட்சி நிறுவனம், பெடரல் இணைய ஊடகம் மற்றும் ஏபிடி நிறுவனமும் இணைந்து நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை அண்மையில் வெளியிட்டது. மக்களவைத் தேர்தல்-2024ல் தமிழகத்தில், திமுக 38.35 சதவீத வாக்குகளைப் பெறும் என்றும், அதிமுக 17.26 சதவீத வாக்குகளைப் பெறும் என்றும் தெரிவிக்கிறது, புதிய தலைமுறை கருத்துக்கணிப்பு. நாம் தமிழர் கட்சி 7.26 சதவீத வாக்குகளைப் பெற்று நான்காம் இடத்தைப் பிடிக்கும் என்றும் அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால், தொண்டர்கள் மற்றும் கட்டமைப்பு ரீதியாக வலிமையாக உள்ள அதிமுகவைக் கா...
சிபிஐ பிடியில் சிக்கியது சர்வோதய சங்கம்! கோடிக்கணக்கில் ஊழல் நடந்தது வெட்டவெளிச்சம்!!

சிபிஐ பிடியில் சிக்கியது சர்வோதய சங்கம்! கோடிக்கணக்கில் ஊழல் நடந்தது வெட்டவெளிச்சம்!!

கோயம்பத்தூர், சிறப்பு கட்டுரைகள், சேலம், தேனி, மதுரை, முக்கிய செய்திகள்
கோவை அருகே, சர்வோதய சங்கத்தில் போலி கைத்தறி நெசவாளர்கள் பெயரில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது சிபிஐ போலீசார் விசாரணையில் வெட்டவெளிச்சம் ஆகியுள்ளது. விரைவில், இந்த வழக்கில் முக்கிய புள்ளிகள் மீது எப்ஐஆர் பாய்கிறது. கோவை அருகே, ரெட் ஃபீல்ட்ஸ் பகுதியில் ஆவாரம்பாளையம் சர்வோதய சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கம், 1966ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தொண்டாமுத்தூர், சரவணம்பட்டி, பீளமேடு, கருமத்தம்பட்டி, வாகராயம்பாளையம், நீலாம்பூர், ஒண்டிப்புதூர், காமாட்சிபுரம், இடையர்பாளையம், ராம் நகர் மற்றும் ஊத்துக்குளி, ஸ்ரீவில்லிப்புத்தூர், சுப்ளாபுரம், செங்கோட்டை, தேனி ஜக்கம்பட்டி உள்பட 28 இடங்களில் இதன் கிளைகள் உள்ளன. செயலாளர், பொருளாளர், மேலாளர், எழுத்தர், தினக்கூலி பணியாளர்கள் என மொத்தம் 500 பேர் வேலை செய்து வருகின்றனர். தலைமையிடம் மற்றும் கிளைகளில் 1000 கைத்தறி நெசவாளர்கள் உறுப்பினர்களாக உள்ளதா...
திண்ணை: அப்படி என்னய்யா செஞ்சிட்டான் என் கட்சிக்காரன்…?

திண்ணை: அப்படி என்னய்யா செஞ்சிட்டான் என் கட்சிக்காரன்…?

சேலம், தமிழ்நாடு, திண்ணை, முக்கிய செய்திகள்
மார்கழி பொறந்துடுச்சு. சீசனுக்கு இதமா இருக்கட்டுமேனு சுடச்சுட ஒரு சங்கதிய கொண்டு வந்திருக்கேன்னு சொன்னாரு நம்ம பேனாக்காரர். ''சொல்லுங்களேன்...கேட்போம்'' - இது நக்கல் நல்லசாமி.   ''அறிவுக்கோயில் தலைவரு போன பிப்ரவரி மாசம் சேலத்துல அனைத்துத் துறை முக்கியஸ்தர்களுடன் ஆய்வுக்கூட்டம் போட்டாரே ஞாபகம் இருக்கா...?,'' ''ஓ... நல்லா ஞாபகம் இருக்கு. கள ஆய்வில் தலைவருனு சொல்லிட்டு, கடவுள் அன்பு, யுசி டீம் எல்லாம் ஆய்வு நடத்துனதே... தலைவரு பேரளவுக்கு சும்மா உட்கார்ந்துட்டுப் போனாரே... அந்தக் கூட்டத்தைதானே சொல்றீங்க... நல்லா ஞாபகம் இருக்கு...,''   ''நக்கலாரே... உமக்கு குசும்பு ஜாஸ்தியா''   ''அன்னிக்கு சாயங்காலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவு வளைவு முன்னாடி நின்னு அறிவுக்கோயில் தலைவரு, அவரோட அப்பா நினைவாக செல்பி எடுத்துக்கிட்டாரு. புரோக்கர் ஊடகங்கள் எல...