Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Suspend

திண்ணை: ”எதையும் நியாயமாதான் செய்வோம்…!” பெரியார் பல்கலையில் அக்கப்போர்!

திண்ணை: ”எதையும் நியாயமாதான் செய்வோம்…!” பெரியார் பல்கலையில் அக்கப்போர்!

சேலம், தமிழ்நாடு, திண்ணை, முக்கிய செய்திகள்
''தலைநகரையே புரட்டிப்போட்ட மிச்சாங் புயல் ஓய்ந்தாலும் கூட, சேலம் பெரியார் பல்கலையில் சனாதனத்திற்கும், திராவிடத்திற்குமான மோதல் இப்போதைக்கு ஓயாது போலருக்கு,'' என்று நேரடியாக சப்ஜெக்டுக்கு வந்தார் பேனாக்காரர். காதுகளை தீட்டிக்கொண்டு ஆர்வமாகக் கேட்கத் தொடங்கினார் நம்ம நக்கல் நல்லசாமி. ''பெரியார் பல்கலையில் முருகக்கடவுள் பேர் கொண்ட அந்தப் பேராசிரியர், பெரியார் பற்றி சில புத்தகங்களை தொகுத்து வெளியிட்டு இருந்திருக்கிறார். அவரும்கூட கருப்புச்சட்டை சிந்தனாவாதிதான். இந்த புத்தகம் வெளியிட்டு, அதையெல்லாம் விடியல் தலைவர்கிட்ட காட்டி அந்த பேராசிரியர் வாழ்த்தெல்லாம்கூட வாங்கிய படங்கள் பொதுவெளியில் வந்துச்சு,'' ''அது தெரிஞ்ச சேதிதானே. மேலே சொல்லுங்க'' அவசரம் காட்டினார் நக்கல் நல்லசாமி. ''பல்கலைக்கழக சாசன விதிகளின்படி, முன்அனுமதி பெற்றுதான் புத்தகம் வெளியிடணுமாம். அந்த பேராசிரியர்
மசாஜ் அழகி கொலை: சஸ்பெண்ட் போலீசாரில் இருவருக்கு ‘வெண்ணெய்’; இருவர் கண்ணில் ‘சுண்ணாம்பு’! கமிஷனரின் பாரபட்சம் ஏன்?

மசாஜ் அழகி கொலை: சஸ்பெண்ட் போலீசாரில் இருவருக்கு ‘வெண்ணெய்’; இருவர் கண்ணில் ‘சுண்ணாம்பு’! கமிஷனரின் பாரபட்சம் ஏன்?

குற்றம், சேலம், முக்கிய செய்திகள்
சேலத்தில், படுகொலை செய்யப்பட்ட மசாஜ் அழகியுடனும், அவருடைய ரகசிய காதலனுடனும் தொடர்பில் இருந்ததாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட நான்கு போலீசாரில் இருவரை மட்டும் பணிக்கு திரும்ப அழைத்துள்ள மாநகர காவல்துறை, எஸ்ஐ உள்ளிட்ட இருவருக்கு மட்டும் விளக்கம் கேட்டு ஷோகாஸ் நோட்டீஸ் அளித்துள்ளது விமர்சனங்களைக் கிளப்பி உள்ளது.   சேலம் குமாரசாமிப்பட்டியில் உள்ள ஓர் அபார்மெண்ட்டில் தேஜ் மண்டல் (26) என்ற இளம்பெண் வசித்து வந்தார். அவர் வசித்து வந்த குடியிருப்பு, அதிமுக பிரமுகரும், சேலம் மாநகராட்சி முன்னாள் கவுன்சிலருமான நடேசனுக்குச் சொந்தமானது. தேஜ் மண்டல், சேலத்தில் சங்கர் நகர், அங்கம்மாள் காலனி ஆகிய இடங்களில் 'தேஜாஸ் ஸ்பா' என்ற பெயரில் மசாஜ் மையங்களை நடத்தி வந்தார். தான் வசித்து வந்த வீட்டிற்குக் கீழ் தளத்தில் இன்னொரு வீட்டை வாடகைக்கு எடுத்து, அதில் தன்னிடம் வேலை செய்து வந்த ரிஷி, நிஷி,
சேலம் பெரியார் பல்கலை பேராசிரியர் திடீர் பணியிடைநீக்கம்! 8 நாளில் ஓய்வு பெற இருந்தார்!!

சேலம் பெரியார் பல்கலை பேராசிரியர் திடீர் பணியிடைநீக்கம்! 8 நாளில் ஓய்வு பெற இருந்தார்!!

குற்றம், சேலம், முக்கிய செய்திகள்
சேலம் பெரியார் பல்கலை டீன் கிருஷ்ணகுமார், இன்னும் 8 நாளில் ஓய்வு பெற இருந்த நிலையில், ஊழல் புகாரின்பேரில் திடீரென்று பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். சேலம் பெரியார் பல்கலையில் இயற்பியல் துறைத்தலைவராகவும், பல்கலை டீன் ஆகவும் பணியாற்றி வந்தவர் கிருஷ்ணகுமார். இவர், கடந்த 2010ம் ஆண்டு சிறிது காலம் பெரியார் பல்கலை துணைவேந்தராகவும் பொறுப்பு வகித்தார். அதன்பிறகு, புதிய துணைவேந்தராக முத்துச்செழியன் நியமிக்கப்பட்டார். பேராசிரியர் கிருஷ்ணகுமார், துணைவேந்தர் பொறுப்பில் இருந்தபோது, பல்கலை விருந்தினர் மாளிகையை புதுப்பிப்பதற்காக குளிர்சாதன உபகரணங்கள், அறைகலன்கள் கொள்முதல் செய்ததில் பல லட்சம் ரூபாய் முறைகேடு செய்ததாக அவர் மீது புகார்கள் எழுந்தன.   மேலும், எழுதுபொருள்கள் கொள்முதல் செய்ததிலும் இல்லாத நிறுவனங்களின் பெயரில் போலியாக ரசீதுகளை தயாரித்து மோசடியில
சேலம்: போதை ஆசிரியர் பணியிடை நீக்கம்; பள்ளியில் குறட்டை விட்டு தூக்கம்!

சேலம்: போதை ஆசிரியர் பணியிடை நீக்கம்; பள்ளியில் குறட்டை விட்டு தூக்கம்!

குற்றம், சேலம், முக்கிய செய்திகள்
சங்ககிரி அருகே, அரசுப்பள்ளியில் குடிபோதையில் வகுப்பறையில் தூங்கிய ஆசிரியர் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.   அரசுப்பள்ளிகளில் தரமற்ற கற்பித்தல் முறை, போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது, குழந்தைகளுக்கு பாதுகாப்பின்மை போன்ற காரணங்களால் ஏற்கனவே மாணவர் சேர்க்கை குறைந்து வரும் நிலையில், ஒழுக்கக்கேடான ஆசிரியர்களால் மேலும் சீர்குலைந்து வருகின்றன. சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள கே.மேட்டுப்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 1 முதல் 5ம் வகுப்பு வரையிலும் மொத்தமே 20க்கும் குறைவான குழந்தைகளே படித்து வருகின்றனர். இரண்டு ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இருதயராஜ் என்பவர் தலைமை ஆசிரியராகவும், அறிவழகன் என்பவர் இடைநிலை ஆசிரியராகவும் பணியாற்றி வருகின்றனர்.   மாணவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய ஆச
பாலக்கோடு: சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறல்! ஆசிரியர் பணியிடைநீக்கம்!!

பாலக்கோடு: சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறல்! ஆசிரியர் பணியிடைநீக்கம்!!

தமிழ்நாடு, தர்மபுரி, முக்கிய செய்திகள்
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே பள்ளி வகுப்பறையில் சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக வந்த புகாரின்பேரில் கணித ஆசிரியர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே வெள்ளி சந்தையில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 1 முதல் 8ம் வகுப்பு வரை செயல்படும் இப்பள்ளியில் 90 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பிரகாஷ்குமார் (54) என்பவர், இப்பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த பத்து நாள்களுக்கு முன்பு, ஆசிரியர் பிரகாஷ்குமார், 6ம் வகுப்பு படித்து வரும் இரண்டு மாணவிகளிடம் வகுப்பறையில் வைத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. சம்பந்தப்பட்ட சிறுமிகள் இதுபற்றி பெற்றோர்களிடம் அன்றே கூறியிருக்கின்றனர். அதன்பேரில், பெற்றோர்கள் இதுபற்றி பள்ளித்தலைமை ஆசிரியர் சிவகாமசுந்தரியை நேரில் சந்தித்துப் பு
இந்திய இறையாண்மைக்கு எதிராக கருத்து: உடுமலை கவுசல்யா பணியிடை நீக்கம்!

இந்திய இறையாண்மைக்கு எதிராக கருத்து: உடுமலை கவுசல்யா பணியிடை நீக்கம்!

தமிழ்நாடு, திருப்பூர், முக்கிய செய்திகள்
இந்திய இறையாண்மைக்கு எதிராக பேட்டி அளித்ததாக உடுமலை கவுசல்யாவை பணியிடைநீக்கம் செய்து வெலிங்டன் கண்டோன்மென்ட் உத்தரவிட்டுள்ளது.   திருப்பூர் அருகே உள்ள குமரலிங்கத்தைச் சேர்ந்தவர் கவுசல்யா. தேவர் சமூகத்தைச் சேர்ந்த இவர், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த சங்கர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த காதலுக்கு ஆரம்பத்தில் இருந்தே கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த கவுசல்யாவின் பெற்றோர், கூலிப்படையை ஏவி பட்டப்பகலில் சங்கரை ஆணவப்படுகொலை செய்தனர். இந்த வழக்கில் கவுசல்யாவின் தந்தை உள்ளிட்ட முக்கிய குற்றவாளிகளுக்கு இரட்டை தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, கவுசல்யா சமூகநீதி அறக்கட்டளை என்ற அமைப்பை தொடங்கி செயல்பட்டு வந்தார். முற்போக்கு அமைப்புகள் பெயரில் இயங்கி வரும் சில அமைப்புகள் அவரை புதிய போராளியாக முன்னிறுத்தின.   சங்கர் படுகொலைக்குப் பிறகு, அ
துணை வேந்தர் கணபதி பணியிடை நீக்கம்; ஆளுநர் உத்தரவு

துணை வேந்தர் கணபதி பணியிடை நீக்கம்; ஆளுநர் உத்தரவு

குற்றம், கோயம்பத்தூர், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பணி நியமனத்திற்காக 30 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்ட பாரதியார் பல்கலை துணை வேந்தர் கணபதியை பணியிடை நீக்கம் செய்து, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டுள்ளார். கோவை பாரதியார் பல்கலையில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருபவர் சுரேஷ். அவரை அந்தப் பணியில் நியமனம் செய்வதற்காக பல்கலை துணைவேந்தர் கணபதி, ரூ.30 லட்சம் கேட்டுள்ளார்.   கடந்த 3ம் தேதி சுரேஷ் தான் ஏற்கனவே ஒப்புக்கொண்டபடி துணை வேந்தரிடம் லஞ்சப்பணத்தைக் கொடுப்பதற்காக அவருடைய வீட்டிற்குச் சென்றார். லஞ்சம் வாங்கிய துணை வேந்தர் கணபதியை, லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். கணபதியின் லஞ்ச பேரத்திற்கு உடந்தையாக இருந்ததாக பாரதியார் பல்கலை பேராசிரியர் தர்மராஜ் என்பவரையும் கைது செய்தனர். கணபதி, சிறையில் அடைக்கப்பட்டு 48 மணி நேரத்திற்கு மேலாகியும் அவர் பணியிடை நீக்கம் செய