Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

இந்திய இறையாண்மைக்கு எதிராக கருத்து: உடுமலை கவுசல்யா பணியிடை நீக்கம்!

இந்திய இறையாண்மைக்கு
எதிராக பேட்டி அளித்ததாக
உடுமலை கவுசல்யாவை
பணியிடைநீக்கம் செய்து
வெலிங்டன் கண்டோன்மென்ட்
உத்தரவிட்டுள்ளது.

 

திருப்பூர் அருகே உள்ள குமரலிங்கத்தைச் சேர்ந்தவர் கவுசல்யா. தேவர் சமூகத்தைச் சேர்ந்த இவர், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த சங்கர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த காதலுக்கு ஆரம்பத்தில் இருந்தே கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த கவுசல்யாவின் பெற்றோர், கூலிப்படையை ஏவி பட்டப்பகலில் சங்கரை ஆணவப்படுகொலை செய்தனர்.

இந்த வழக்கில் கவுசல்யாவின் தந்தை உள்ளிட்ட முக்கிய குற்றவாளிகளுக்கு இரட்டை தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, கவுசல்யா சமூகநீதி அறக்கட்டளை என்ற அமைப்பை தொடங்கி செயல்பட்டு வந்தார். முற்போக்கு அமைப்புகள் பெயரில் இயங்கி வரும் சில அமைப்புகள் அவரை புதிய போராளியாக முன்னிறுத்தின.

 

சங்கர் படுகொலைக்குப் பிறகு, அவர் வசித்து வந்த குடிசை வீட்டை பசுமை வீடாக கட்டிக்கொடுத்தது தமிழக அரசு. சங்கரின் தந்தைக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது. கவுசல்யாவுக்கும் குன்னூர் வெலிங்டன் கன்டோண்மென்டில் இளநிலை உதவியாளர் பணி வழங்கப்பட்டது.

சங்கர் நினைவாகவே
வாழ்வேன் என்றும்,
சாதிய போக்கிற்கு எதிராக
போராடுவேன் என்றும்
முழங்கி வந்த கவுசல்யா,
சங்கர் மறைந்த ஓராண்டுக்கு
உள்ளாகவே கோவையைச் சேர்ந்த
சக்தி என்ற இளைஞரை
காதலித்து திருமணம்
செய்து கொண்டார்.
இதற்கு பல்வேறு தரப்பில்
இருந்து ஆதரவும், எதிர்ப்புகளும்
எழுந்தன. இந்நிலையில்
ஓர் ஆங்கில செய்தி
சேனலுக்கு அவர்
அண்மையில் பேட்டி
அளித்து இருந்தார்.
அதில், அவர் இந்திய
இறையாண்மைக்கு
எதிரான சில கருத்துகளை
கூறியதாக தெரிகிறது.

 

இதையடுத்து அவரை அதிரடியாக பணியிடைநீக்கம் செய்து குன்னூர் கன்டோண்மென்ட் உத்தரவிட்டுள்ளது. அவர் பேட்டி அளித்தது தொடர்பாக துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் கன்டோண்மென்ட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.