Monday, April 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

தமிழ்நாடு

கோவிட் தடுப்பூசி இன்னும் போடலையா? ஏப்ரல் 30ல் மீண்டும் வாய்ப்பு!

கோவிட் தடுப்பூசி இன்னும் போடலையா? ஏப்ரல் 30ல் மீண்டும் வாய்ப்பு!

சேலம், தகவல், முக்கிய செய்திகள்
கோவிட் நோய்த்தொற்றில் இருந்து காத்துக்கொள்ள இதுவரை தடுப்பூசி போட்டுக்கொள்ளாத பொதுமக்களுக்கு வாய்ப்பு அளிக்கும் விதமாக, சேலம் மாவட்டத்தில் சனிக்கிழமை (ஏப். 30) மாபெரும் கோவிட் தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. மொத்தம் 1392 மையங்களில் இந்த முகாம் நடக்கிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள சிறப்பு முகாம்களை மீண்டும் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.   இதையடுத்து, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 28வது மாபெரும் கோவிட் தடுப்பூசி முகாம் நடத்துவது தொடர்பாக அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை (ஏப். 27) நடந்தது. மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமையில் இக்கூட்டம் நடந்தது. அவர் பேசியது:   கோவிட் தடுப்புப் பணிக
ஆத்தூர் ‘அம்மன்’ கொடூர கொலை; வாலிபருக்கு தூக்கு தண்டனை!

ஆத்தூர் ‘அம்மன்’ கொடூர கொலை; வாலிபருக்கு தூக்கு தண்டனை!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஆத்தூர் அருகே, பட்டியலின சிறுமியை கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்த வாலிபருக்கு தூக்கு தண்டனை விதித்து சேலம் போக்சோ சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (ஏப். 26) தீர்ப்பு அளித்துள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தளவாய்ப்பட்டியைச் சேர்ந்தவர் சாமிவேல். இவருடைய மனைவி சின்னப்பொண்ணு. பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுடைய இரண்டாவது மகள் ராஜலட்சுமி (13). அதே ஊரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள்.   இவர்களுடைய வீட்டில் இருந்து சுமார் 150 அடி தூரத்தில் கார்த்தி என்கிற தினேஷ்குமார் (25) என்பவரின் வீடு உள்ளது. இவருடைய மனைவி சாரதா. காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.   கொடூர கொலை:   தினேஷ்குமார், கதிர் அறுக்கும் வண்டியில் ஓட்டுநராக வேலை செய்து வந்தார். கடந்த 2018ம் ஆண்டு அக். 22ம் தேதி திங்க
‘செருப்படி’ பேராசிரியருக்கு மீள்பணி! பரபரப்பு பின்னணி அம்பலம்!!

‘செருப்படி’ பேராசிரியருக்கு மீள்பணி! பரபரப்பு பின்னணி அம்பலம்!!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பெரியார் பல்கலையில், பதவி உயர்வுக்காக நடந்த செருப்படி சண்டையில் பரபரப்பு கிளப்பிய பேராசிரியர் குமாரதாஸூக்கு மீள்பணியமர்வு வழங்க சிண்டிகேட் ஒப்புதல் அளித்திருக்கிறது. இதன் பின்னணி குறித்த பரபரப்பு தகவல்கள் அம்பலமாகி உள்ளன. சேலம் பெரியார் பல்கலையில் இயற்பியல் துறைத் தலைவரா£க பணியாற்றி வருபவர் குமாரதாஸ். இவர், வரும் ஜூன் 30ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இவரை, ஓய்வுக்குப் பிறகும் 'ரீ அப்பாயின்ட்மெண்ட்' எனப்படும் மீள்பணியமர்வு செய்ய சிண்டிகேட் குழு ஒப்புதல் அளித்துள்ளது. சிண்டிகேட்டின் இந்த முடிவுதான், பெரியார் பல்கலையை மீண்டும் சர்ச்சை வளையத்திற்குள் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது.   ஓய்வு பெற்றவர்களுக்கு மீள் பணியமர்வு கூடாது என்று அரசாணை உள்ளது. ஏற்கனவே இதே பல்கலையில் ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் ராஜேந்திரன், முருகேசன் ஆகியோருக்கு மீள்பணி வாய்ப்பு மறுக்கப்பட்டு உள்ளது. &nb
கேள்விகள் எழுப்பலாமா அல்லது வேண்டாமா? இதுதான் என் கேள்வி?

கேள்விகள் எழுப்பலாமா அல்லது வேண்டாமா? இதுதான் என் கேள்வி?

சிறப்பு கட்டுரைகள், சேலம், முக்கிய செய்திகள்
ஏன்? எதற்கு? எப்படி? என்று யாரையும், எதையும், எப்போதும் கேள்வி எழுப்பச் சொல்லி பழக்கிவிட்டுப் போயிருக்கிறார் தந்தை பெரியார். அவரின் பெயரில் அமைந்த பல்கலைக்கழகமோ, கேள்வி எழுப்பியதாலேயே ஓர் உதவி பேராசிரியரை சிறையில் தள்ள துடித்துக் கொண்டிருப்பதுதான் ஆகப்பெரும் துயரம். எல்லாமே தலைகீழ் விகிதமாக மாறிப் போயிருந்த அல்லது அதுவே ஒழுக்கமாகிவிட்ட ஒரு பல்கலையில், ஓர் இளைஞன் நுழைந்தான். தான் கற்றுவந்த ஆகச்சிறந்த நெறிகளை இங்கும் பரவச் செய்ய வேண்டும் என்று நினைத்ததுதான் அந்த இளைஞன் செய்த ஒரே குற்றம்.   ஒரு மூத்த பேராசிரியர் வகுப்பிற்குள் நுழைகிறார். ஏதோ கேள்வி கேட்கிறார். ஒரு மாணவி, இருக்கையில் அமர்ந்தபடியே பதில் அளிக்கிறாள். அதற்கு அந்த பேராசிரியரோ, 'ஏன்மா... இதுதான் நீ ஆசிரியருக்கு தரும் மரியாதையா? உட்கார்ந்துட்டே பதில் சொல்ற?,' என அதிகாரமாய் கேட்கிறார். அதற்கு அந்த மாணவி
சிண்டிகேட் ரகசியம் கசிவு; புரபசரை செக்ஸ் புகாரில் சிக்க வைக்கும் பெரியார் பல்கலை! பகடை காயான மாணவி!!

சிண்டிகேட் ரகசியம் கசிவு; புரபசரை செக்ஸ் புகாரில் சிக்க வைக்கும் பெரியார் பல்கலை! பகடை காயான மாணவி!!

சேலம், முக்கிய செய்திகள்
பெரியார் பல்கலை சிண்டிகேட் தீர்மானத்தை முன்கூட்டியே வெளியிட்ட உதவி பேராசிரியரை பழிதீர்க்க, பட்டியல் சமூக மாணவி மூலம் பாலியல் புகாரில் சிக்க வைக்கும் பல்கலை நிர்வாகத்தால் ஆசிரியர்கள் கொதிப்படைந்து உள்ளனர்.   சேலத்தை அடுத்த கருப்பூரில் பெரியார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்தப் பல்கலையுடன் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள அரசு, நிதியுதவி பெறும் மற்றும் சுயநிதி என 105 கல்லூரிகள் இணைவு பெற்றுள்ளன.   பேராசிரியர்கள் நியமனத்தில் ஊழல், தேர்வில் தில்லுமுல்லு, கவுண்டர் சமூக ஆதிக்கம், காவி அரசியலுக்கு ஆதரவு என பல்வேறு முறைகேடு புகார்களில் சிக்கித் திணறி வரும் பெரியார் பல்கலை மீது, அண்மையில் கிடைத்த ஏ++ அங்கீகாரம் சற்றே நன்மதிப்பைக் கூட்டியது. ஆனால், நடுநிலையாக இருக்க வேண்டிய பல்கலை நிர்வாகமே, ஆசிரியர்களை பழிவாங்கும் நோக்கில
முடிவுக்கு வந்த கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு; முதல் குற்றவாளி யுவராஜிக்கு இறுதிமூச்சு வரை சிறைவாசம்!

முடிவுக்கு வந்த கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு; முதல் குற்றவாளி யுவராஜிக்கு இறுதிமூச்சு வரை சிறைவாசம்!

சேலம், தமிழ்நாடு, நாமக்கல், மதுரை, முக்கிய செய்திகள்
  தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில், முதல் குற்றவாளியான யுவராஜிக்கு மூன்று ஆயுள் தண்டனை விதித்து மதுரை வன்கொடுமை சிறப்பு நீதிமன்றம் மார்ச் 8ம் தேதி பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. அவர், இறுதிமூச்சு உள்ள வரை சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.   சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த சித்ரா - வெங்கடாசலம் தம்பதியின் மகன் கோகுல்ராஜ் (23). பொறியியல் பட்டதாரி. கடந்த 2015ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி ஒரு கும்பலால் கொடூரமாக கழுத்து அறுத்துக் கொலை செய்யப்பட்டார். அந்த கும்பல், ரயில் தண்டவாளத்தில் சடலத்தை வீசிவிட்டுச் சென்றுவிட்டது. பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த கோகுல்ராஜ், தன்னுடன் படித்து வந்த கொங்கு வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த சுவாதியை காதலித்ததால், அவரை கொடூரமாக கொலை செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்த
கோகுல்ராஜ் ஆணவக்கொலை: யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகள்! மதுரை நீதிமன்றம் தீர்ப்பு!!

கோகுல்ராஜ் ஆணவக்கொலை: யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகள்! மதுரை நீதிமன்றம் தீர்ப்பு!!

சேலம், தமிழ்நாடு, மதுரை, முக்கிய செய்திகள்
கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில், யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகள் என்று மதுரை எஸ்சி, எஸ்டி சிறப்பு நீதிமன்றம் சனிக்கிழமை (மார்ச் 5) பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. யுவராஜின் தம்பி தங்கதுரை உள்ளிட்ட 5 பேரை விடுதலை செய்துள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த வெங்கடாசலம் - சித்ரா தம்பதியின் மகன் கோகுல்ராஜ் (23). திருச்செங்கோட்டில் உள்ள கேஎஸ்ஆர் கல்லூரியில் பி.இ., படித்திருந்தார். கடந்த 2015ம் ஆண்டு ஜூன் 23ம் தேதியன்று காலையில் வீட்டில் இருந்து கல்லூரி பேருந்தில் ஏறிச்சென்றவர் அன்றிரவு வீடு திரும்பவில்லை.   இரவில் பல இடங்களிலும், நண்பர்கள் வீடுகளிலும் தேடிப்பார்த்துள்ளனர். கோகுல்ராஜை பற்றிய தகவல் இல்லை. அவருடைய செல்போனும் அணைத்து வைக்கப்பட்டிருந்ததால் தாயாருக்கு சந்தேகம் வலுத்தது.   மறுநாள் காலையில் கோகுல்ராஜின் நண்பர் கார்த்திக்கிடம் விசாரித்தபோது
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: இளம்பெண்கள் வாக்கு யாருக்கு?

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: இளம்பெண்கள் வாக்கு யாருக்கு?

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
புதிதாக வாக்களித்த இளம்பெண்கள், நடப்பு அரசியல் நிகழ்வுகளை முன்வைத்து வாக்களித்து இருப்பதும், அவர்களிடையேயும் அரசியல் ஆர்வம் அதிகரித்து இருப்பதும் தெரிய வந்துள்ளது.   தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் சனிக்கிழமை (பிப். 19) நடந்தது. மாநகர பகுதிகளைக் காட்டிலும், கிராமங்களை உள்ளடக்கிய பேரூராட்சி, நகராட்சிகளில் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களித்திருப்பது தெரிய வந்துள்ளது.   இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட இடங்கணசாலை, தாரமங்கலம் நகராட்சிகளிலும், மாநகராட்சி பகுதியிலும் முதல்முறை வாக்களித்த இளம் பெண் வாக்காளர்கள் சிலரிடம், எந்தெந்த அம்சங்களை முன்னிறுத்தி வாக்களித்தீர்கள் என கேட்டறிந்தோம். அவர்களிடம் இருந்து எதிர்பாராத சில பதில்களும் கிடைத்தன. தாரமங்கலம் நகராட்சியில் வசிக்கும் கல்லூரி மாணவி உஷா (19), அவருடைய அக்காவும்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: சேலம் மாவட்டத்தில் 70.54% வாக்குப்பதிவு! பேரூராட்சி, நகராட்சிகளில் உற்சாகம்!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: சேலம் மாவட்டத்தில் 70.54% வாக்குப்பதிவு! பேரூராட்சி, நகராட்சிகளில் உற்சாகம்!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சேலம் மாவட்டத்தில் 70.54 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது.   தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு சனிக்கிழமை (பிப். 19) தேர்தல் நடந்தது. சேலம் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 6 நகராட்சி, 31 பேரூராட்சிகள் உள்ளன.   சேலம் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளுக்கும், ஆத்தூர், நரசிங்கபுரம், இடைப்பாடி, மேட்டூர், இடங்கணசாலை, தாரமங்கலம் ஆகிய நாகராட்சிகளில் உள்ள 165 வார்டுகளுக்கும், 31 பேரூராட்சிகளில் உள்ள 470 வார்டுகளுக்கும் என மொத்தம் 695 இடங்களுக்கு தேர்தல் நடந்தது.   இதற்காக மொத்தம் 1514 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன.   சேலம் மாநகராட்சியில் 64.36 சதவீத வாக்குகளும், நகராட்சிகளில் 76.64 சதவீத வாக்குகளும், பேரூராட்சிகளில் 78.49 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளன.   மாநகர
வீரம் என்றால் என்ன தெரியுமா? போலி ஜனநாயகத்திற்கா உங்கள் வாக்கு? #3

வீரம் என்றால் என்ன தெரியுமா? போலி ஜனநாயகத்திற்கா உங்கள் வாக்கு? #3

அரசியல், சிறப்பு கட்டுரைகள், சேலம், முக்கிய செய்திகள்
விடிந்தால், தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. யாருக்கு வாக்களிக்க வேண்டும்? என்பதை இந்நேரத்தில் வாக்காளர்கள் முடிவு செய்திருக்கக் கூடும். எனினும், தேர்தல் ஜனநாயகத்தின் பெருமதிப்பிற்குரிய வாக்காளர்களிடம் கொஞ்சம் உரையாட விரும்பியே இந்த பதிவை எழுதுகிறேன்.   களத்தில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு நிறம் உண்டு. எத்தனை நிறங்கள் இருந்தாலும், அடிப்படையில் அவை ஒரே வண்ணத்தின் நிறப்பிரிகைகள்தான்.   அதாவது, 99 விழுக்காடு கட்சிகள் முதலாளிய வர்க்கத்தினருக்கு ஆதரவானவை. உழைக்கும் வர்க்கத்திற்காக பேசக்கூடியவை எப்போதும் பொதுவுடைமைக் கட்சிகளே.   தமிழகத்தைப் பொருத்தவரை பொதுவுடைமைக் கட்சிகளும் கூட்டணி விசுவாசம் என்ற பெயரில் தன் சுயத்தை எப்போதோ தொலைத்துவிட்டு, முதலாளிய பாதையை நோக்கிச் சென்று கொண்டிரு