Thursday, April 23மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

தமிழ்நாடு

வினாடி? விநாடி? எது சரி? தமிழ் வளர்ச்சித்துறை விழித்தெழுமா?

வினாடி? விநாடி? எது சரி? தமிழ் வளர்ச்சித்துறை விழித்தெழுமா?

சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பள்ளி, கல்லூரிகள் மட்டுமின்றி ஊடகங்களிலும் 'வினாடி-வினா' போட்டிகள் நடத்தப்படுவது நீண்டகாலமாக இருந்து வருகிறது. கேட்கப்படும் வினாவுக்கு நொடிப்பொழுதில் விடை அளிக்க வேண்டும் என்பதால்தான் இத்தகைய நிகழ்ச்சிக்கு விநாடி - வினா என்று பெயர் வந்தது. இப்போது பிரச்சினை அதுவன்று. வினாடி, விநாடி ஆகியவற்றில் எந்த சொல் சரியானது என்பதுதான். வினாடி என்ற சொல்லைவி+னாடி என்றும்;விநாடி என்ற சொல்லைவி+நாடி என்றும் பிரித்து எழுதலாம். இவற்றில், 'னாடி' என்றால்எந்தப் பொருளும் தராது. 'நாடி' என்பது ஒரு வினையைக் குறிக்கும். நாடிச்செல்வது என்றும் பொருள் கொள்ளலாம். நாடித்துடிப்பையும் குறிக்கும். விநாடியில் உள்ள 'வி' என்ற முன்னொட்டானது விசை, விரைதல், சிறந்த, உயர்வான என பல பொருள்கள் தருகின்றன. விரைந்து நாடுதல் எனலாம். நொடியின் அடிப்படையில்உருவானச் சொல்தான் விநாடி.விரைந்து துடிப்பதுதான் நாடி.நாடியின் கால ...
உய்வில்லை தமிழ் கொன்ற மகற்கு! ஊடகங்களில் வதைபடும் தாய்மொழி!!

உய்வில்லை தமிழ் கொன்ற மகற்கு! ஊடகங்களில் வதைபடும் தாய்மொழி!!

சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
மொழி, இனம், பண்பாடு ஆகிய மூன்றும் மனித குலத்தின் பரிணாம வளர்ச்சிக் கூறுகள் ஆகும். மொழி செழுமை அடையும்போது அங்கு இனமும், பண்பாடும், கலாச்சாரமும் மேலும் செழுமை அடைகிறது. எங்கே, ஒரு மொழி அழிந்து போகிறதோ அங்கே ஓர் இனம் அழிவுக்கு உள்ளாகிறது. மொழி, கலாச்சார ரீதியாகமனிதனை ஓர்மைப்படுத்துகிறது.பழமையான மொழிகளுள்ஒன்றான சீனம், உலகம் முழுவதும்110 கோடிக்கும் மேற்பட்டமக்களால் பேசப்படுகிறது.ஆங்கில மொழியை 150 கோடிக்கும்மேற்பட்டோர் பேசுகின்றனர்.தொன்மையான தமிழ் மொழியை,உலகளவில் 10 கோடிபேர் பேசுகிறார்கள்.ஆக, இப்போதைக்குதமிழ் மொழி அழிந்து விடுமோஎன்ற கவலை தேவையற்றது.என்றாலும், அழியக்கூடியமொழிகளுள் தமிழ் 8ஆவதுஇடத்தில் இருப்பதாக யுனெஸ்கோசொல்கிறது கூர்ந்து நோக்கவேண்டியதாகிறது. பிற செவ்வியல் மொழிகளோடுஒப்பு நோக்கும்போது, தமிழைப் போலசெறிவான இலக்கண, இலக்கிய வளம்கொண்ட வேறு மொழிகள்உலகில் இல்லை. நம்முடையதமிழ் ச...
பாலியல் துன்புறுத்தல் அச்சத்தில் 51% கைம்பெண்கள்; ஆய்வில் தகவல்

பாலியல் துன்புறுத்தல் அச்சத்தில் 51% கைம்பெண்கள்; ஆய்வில் தகவல்

சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு
கைம்பெண்களில் 51 சதவீதம் பேர், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக நேரிடும் என்ற அச்சத்துடனேயே வாழ்வதாக ஆய்வில் கருத்து தெரிவித்து உள்ளனர். ஆண்டுதோறும் ஜூன் 23ம் தேதி,சர்வதேச கைம்பெண்கள் தினம்கடைப்பிடிக்கப்படுகிறது.2011ஆம் ஆண்டில் இருந்துஇப்படியொரு தினம்பின்பற்றப்பட்டு வருகிறது.கைம்பெண்கள் சந்திக்கும்சவால்கள், பொருளாதார சுதந்திரம்,சமூகம் பாதுகாப்பு குறித்துஇந்த நாளில் பேசப்படுகிறது. மறைந்த தமிழக முதல்வர்கருணாநிதியிடம் சிலர்,'விதவை' என்ற சொல்லில் கூடபொட்டில்லையே? எனக் கேட்க,அதற்கு அவரோ சட்டென்று,'கைம்பெண் என்றுசொல்லிப் பாருங்கள்.இரண்டு பொட்டு இருக்கும்,'என்றார் சமயோசிதமாக.அப்போது முதல்தான்கைம்பெண் என்ற சொல்லும்பரவலாக பயன்பாட்டுக்கு வந்தது.அதனால் நாமும் இங்கேவிதவை என்ற சொல்லுக்குமாற்றாக கைம்பெண் என்றேபயன்படுத்துகிறோம். நாகப்பட்டினத்தில் இயங்கிவரும் 'கலங்கரை' என்றதொண்டு நிறுவனம்,கைம்ப...
விசிகவில் இருந்து நிரந்தரமாக வெளியேறினார் ஆதவ் அர்ஜூனா!

விசிகவில் இருந்து நிரந்தரமாக வெளியேறினார் ஆதவ் அர்ஜூனா!

அரசியல், தமிழ்நாடு
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து நிரந்தரமான விலகுவதாக அக்கட்சியின் முன்னாள் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். லாட்டரி சாம்ராஜ்யத்தின்சாம்ராட்டாக விளங்கி வரும்மார்ட்டினின் மருமகன்தான்இந்த ஆதவ் அர்ஜூனா.'வாய்ஸ் ஆப் காமன்ஸ்' என்றநிறுவனத்தைத் தொடங்கி,கட்சி மாநாடுகளை ஒருங்கிணைக்கும்பணிகளையும், தேர்தல் நேரத்தில்அரசியல் கட்சிகளுக்குபிரஷாந்த் கிஷோர் போலவியூக வகுப்பாளராகவும்செயல்பட்டு வந்தார். கடந்த 2021 சட்டப்பேரவைத்தேர்தலின்போது விடுதலைச்சிறுத்தைகள் கட்சிக்கு வியூகவகுப்பாளராக பணியாற்றினார்.இதன்மூலமாக விசிக தலைவர்திருமாவளவனுக்கு நெருக்கமான அவர்,நடப்பு ஆண்டு பிப்ரவரி மாதம்விசிகவில் இணைந்தார். கட்சியில் சேர்ந்த 20 நாளில்,அவரை துணைப் பொதுச்செயலாளராக்கினார்திருமாவளவன். அப்போதே,கட்சியின் மூத்த நிர்வாகிகளிடையேஆதவ் மீது எரிச்சல் ஏற்பட்டது. கட்சியில்...
தொழிற்சங்க தேர்தல்: புதிய கூட்டணிக்கு அச்சாரமிட்ட கம்யூனிஸ்ட்; கரன்சி மழையை பொழிந்த திமுக!

தொழிற்சங்க தேர்தல்: புதிய கூட்டணிக்கு அச்சாரமிட்ட கம்யூனிஸ்ட்; கரன்சி மழையை பொழிந்த திமுக!

அரசியல், சேலம், முக்கிய செய்திகள்
சேலம் உருக்காலையில் நடந்ததொழிற்சங்க அங்கீகாரத் தேர்தலில்,மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின்சிஐடியூ தொழிற்சங்கம், அதிமுக, பா.ம.க.,ஆதரவுடன் களமிறங்கிய விவகாரம்,வரும் சட்டப்பேரவைத் தேர்தலில்அதிமுக கூட்டணிக்கு மார்க்சிஸ்ட் கம்யூ.,தாவப்போவதாக பரபரப்புபேச்சு கிளம்பியுள்ளது. பிரசித்தி பெற்ற சேலம் உருக்காலையில்591 நிரந்தர தொழிலாளர்களும்,1000 ஒப்பந்த தொழிலாளர்களும்பணியாற்றுகின்றனர்.ஆண்டுக்கு 1600 கோடி ரூபாய்க்கு மேல்வர்த்தகம் செய்து வருகிறது. இந்த உருக்காலையில் உள்ளதொழிற்சங்கங்களுக்கான அங்கீகாரத் தேர்தல்,கடந்த நவ. 22ம் தேதி நடந்தது.இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறைநடத்தப்படும் இந்தத் தேர்தலில்வெற்றி பெறும் தொழிற்சங்கமே,உருக்காலை நிர்வாகத்துடனானஊதிய ஒப்பந்தம், போனஸ்,தொழிலாளர் நலன்கள் குறித்தபேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதுடன்,அதிகாரப்பூர்வ ஒப்பந்தங்களில்கையெழுத்திட முடியும். காலை 6 மணிக்குத் தொடங்க...
தீராப்பழியைச் சுமக்கப் போகிறீரா துணைவேந்தரே?

தீராப்பழியைச் சுமக்கப் போகிறீரா துணைவேந்தரே?

சிறப்பு கட்டுரைகள், சேலம், முக்கிய செய்திகள்
பெரியார் பல்கலை உதவி பேராசிரியர் பிரேம்குமார் மீதான, சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளுக்கு தீர்வு கிடைக்குமா? கிடைக்காதா? என்ற பரபரப்பான கட்டத்தில் இன்று (நவ. 22) 116ஆவது சிண்டிகேட் கூட்டம் நடக்கிறது.  சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில், வரலாற்றுத்துறை உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தவர் பிரேம்குமார். பல்கலை ஆசிரியர் சங்க பொதுச்செயலாளராகவும் இருக்கிறார். துடிப்பான இளைஞரான இவர், மாணவர்களுக்கும் நூலகத்திற்கும் இடையே அறுபட்டு இருந்த தொடர்பை மீண்டும் புத்துயிரூட்டினார். மாணவர்கள் அன்றாடம் நூலகத்தைப் பயன்படுத்துவதை நடைமுறைப் படுத்தியதோடு, போட்டித் தேர்வுகளுக்கும் தயார்படுத்தி வந்தார். மாணவர்கள் சிலருக்கு தேர்வுக்கட்டணம் கூட செலுத்தி இருக்கிறார். பல்கலையில் நடக்கும் விதிமீறல்கள், முறைகேடுகள் குறித்து அவ்வப்போது வெளிப்படையாக பேசி வந்ததை துணைவேந்தர், பதிவாளர் உள்ளிட்ட நிர்வாக முக்கியஸ்தர்கள்...
ராசிபுரம் பஸ் நிலைய விவகாரம்: திமுகவுக்கு எதிராக கூட்டணி கட்சிகள்!

ராசிபுரம் பஸ் நிலைய விவகாரம்: திமுகவுக்கு எதிராக கூட்டணி கட்சிகள்!

நாமக்கல், முக்கிய செய்திகள்
ராசிபுரம் பேருந்து நிலைய இடமாற்றத் திட்டத்தின் பின்னணியில் பல்வேறு தகிடுதத்தங்கள் இருப்பதாக திமுகவுக்கு எதிராக கூட்டணி கட்சிகள் பகீர் புகார்களைக் கிளப்பி இருக்கின்றன. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் நகரம், நெய் மற்றும் ஜவுளி உற்பத்திக்கு பெயர் பெற்றது. இங்குள்ள பேருந்து நிலையத்தில் இருந்து அரசு மற்றும் தனியார் என மொத்தம் 120 பேருந்துகள் பல்வேறு ஊர்களுக்கு இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நகரத்தின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, மையப்பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தை, ராசிபுரத்தில் இருந்து 8.50 கி.மீ. தொலைவில் 1200 பேர் மட்டுமே வசிக்கும் அணைப்பாளையம் என்ற குக்கிராமத்திற்குக் கொண்டு செல்ல நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அணைப்பாளையத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கான மின்னணு ஏலம் விட்டு, பணி ஆணை வழங்கும் நிலையில் உள்ளது. இந்நிலையில்தான், ரியல...
நாமக்கல்: திமுக நகர்மன்ற தலைவருக்கு கொலை மிரட்டல்; உச்சத்தில் உள்கட்சி பூசல்!

நாமக்கல்: திமுக நகர்மன்ற தலைவருக்கு கொலை மிரட்டல்; உச்சத்தில் உள்கட்சி பூசல்!

அரசியல், நாமக்கல், முக்கிய செய்திகள்
  குமாரபாளையம் நகர திமுக செயலாளருக்கு சொந்தக் கட்சியினரே 'நாகரிகமாக' கொலை மிரட்டல் விடுத்து, அறிவாலயத்திற்கு அனுப்பியுள்ள மர்ம கடிதம், நாமக்கல் மாவட்ட அரசியல் களத்தில் உஷ்ணத்தை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வடக்கு நகர திமுக செயலாளராகவும், நகர மன்றத் தலைவராகவும் இருப்பவர் விஜய்கண்ணன். இவர் மீது திமுக மேலிடத்திற்கு அண்மையில் ஒரு பரபரப்பு புகார் கடிதத்தை கழக உடன்பிறப்புகள், பெயர் குறிப்பிடாமல் அனுப்பி வைத்துள்ளனர். அந்தக் கடிதத்தில், ''விஜய்கண்ணன், திருச்சியில் அமைச்சர் கே.என்.நேருவை சந்தித்து ஏற்கனவே இருந்த நகர பொறுப்பாளர் செல்வத்தை தூக்கச் செய்துவிட்டு, அந்தப் பதவியைக் கைப்பற்றிக் கொண்டார். பதவிக்கு வந்த பிறகு மூத்த நிர்வாகிகளை மதிக்காமல் தான்தோன்றித்தனமாக செயல்பட்டு வருகிறார். தன்னை மட்டும் ஃபோகஸ் செய்து கொள்கிறார். கட்சியினரின் தனிப்பட...
பயந்துட்டீங்களா சீமான்? விஜய் மீதான விமர்சனத்தின் பின்னணி!

பயந்துட்டீங்களா சீமான்? விஜய் மீதான விமர்சனத்தின் பின்னணி!

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
நடிகர் விஜய், தமிழக வெற்றிக்கழகம் கட்சியைத் தொடங்கி, கொடி அறிமுகம், கொள்கை விளக்க மாநாடு என்று நின்று நிதானமாக, டெஸ்ட் கிரிக்கெட் போல ஆடத் தொடங்கி இருக்கிறார்.  கடந்த அக். 27ஆம் தேதி, கள்ளக்குறிச்சி மாவட்டம் விக்கிரவாண்டியில் நடந்த, த.வெ.க., மாநாட்டில், கட்சியின் கொள்கை விளக்கம் குறித்து பேசினார், விஜய். அந்த மாநாட்டில், ''தந்தை பெரியார், அண்ணா பெயரைச் சொல்லிக்கொண்டு, திராவிட மாடல் என்ற பெயரில் தமிழ்நாட்டைச் சுரண்டி கொள்ளையடிக்கிறது ஒரு குடும்பம். அந்த சுயநலக் கூட்டம்தான் நமது அரசியல் எதிரி,'' என திமுகவின் பெயரைச் சொல்லாமலேயே சம்மட்டி அடி கொடுத்தார் விஜய். அதேபோல, ''சாதி, மதத்தின் பெயராலே பெரும்பான்மை, சிறுபான்மை பயத்தைக் காட்டும் பிளவுவாத அரசியல் செய்பவர்கள்தான் நமது கொள்கை எதிரி,'' என்று பாஜக, ஆர்எஸ்எஸ் சங்பரிவாரங்களின் மண்டையிலும் 'பொளேர்' என ஒரு போடு போட்டார...
விஜய் போட்ட குண்டு; கலக்கத்தில் ஆளுங்கட்சி!

விஜய் போட்ட குண்டு; கலக்கத்தில் ஆளுங்கட்சி!

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள், விழுப்புரம்
''தமிழக வெற்றிக்கழகத்துடன் கூட்டணி வைப்போருக்கு ஆட்சி, அதிகாரத்தில் பங்கீடும், அதிகாரப் பகிர்வும் கொடுப்போம்,'' என்று அக்கட்சித் தலைவர் நடிகர் விஜய் கூறியிருப்பது, தமிழக அரசியல் களத்தில் பெரும் சூட்டைக் கிளப்பி இருக்கிறது. தமிழ்த்திரை உலகின் சூப்பர் ஸ்டாரான நடிகர் விஜய், கடந்த பிப்ரவரி 2ம் தேதி, தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கினார். பத்து ஆண்டுகளுக்கு முன்பு, விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பை தொடங்கியபோதே அவரின் அரசியல் வருகை தொடர்பான பேச்சும் தொடங்கி விட்டது. இன்றைய தேதியில், இந்தியாவில் 200 கோடி ரூபாய் சம்பளம் பெறும் வெகுசில நடிகர்களில் விஜய்யும் ஒருவர். அதிகபட்ச சம்பளம், புகழின் உச்சத்தில் இருக்கும் ஒருவர் முழுநேர அரசியல்வாதியாக களம் காண வருகிறார் என்றபோதே பலரின் புருவங்களும் உயர்ந்தன. கட்சி தொடங்கியபோதே, நமது இலக்கு 2026 சட்டப...