Sunday, April 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

சேலம்

மசாஜ் அழகி கொலை: சஸ்பெண்ட் போலீசாரில் இருவருக்கு ‘வெண்ணெய்’; இருவர் கண்ணில் ‘சுண்ணாம்பு’! கமிஷனரின் பாரபட்சம் ஏன்?

மசாஜ் அழகி கொலை: சஸ்பெண்ட் போலீசாரில் இருவருக்கு ‘வெண்ணெய்’; இருவர் கண்ணில் ‘சுண்ணாம்பு’! கமிஷனரின் பாரபட்சம் ஏன்?

குற்றம், சேலம், முக்கிய செய்திகள்
சேலத்தில், படுகொலை செய்யப்பட்ட மசாஜ் அழகியுடனும், அவருடைய ரகசிய காதலனுடனும் தொடர்பில் இருந்ததாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட நான்கு போலீசாரில் இருவரை மட்டும் பணிக்கு திரும்ப அழைத்துள்ள மாநகர காவல்துறை, எஸ்ஐ உள்ளிட்ட இருவருக்கு மட்டும் விளக்கம் கேட்டு ஷோகாஸ் நோட்டீஸ் அளித்துள்ளது விமர்சனங்களைக் கிளப்பி உள்ளது.   சேலம் குமாரசாமிப்பட்டியில் உள்ள ஓர் அபார்மெண்ட்டில் தேஜ் மண்டல் (26) என்ற இளம்பெண் வசித்து வந்தார். அவர் வசித்து வந்த குடியிருப்பு, அதிமுக பிரமுகரும், சேலம் மாநகராட்சி முன்னாள் கவுன்சிலருமான நடேசனுக்குச் சொந்தமானது. தேஜ் மண்டல், சேலத்தில் சங்கர் நகர், அங்கம்மாள் காலனி ஆகிய இடங்களில் 'தேஜாஸ் ஸ்பா' என்ற பெயரில் மசாஜ் மையங்களை நடத்தி வந்தார். தான் வசித்து வந்த வீட்டிற்குக் கீழ் தளத்தில் இன்னொரு வீட்டை வாடகைக்கு எடுத்து, அதில் தன்னிடம் வேலை செய்து வந்த ரிஷி, நிஷி,
சேலம்: மாவட்ட ஆலோசகர், சமூக பணியாளர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு ஆளெடுப்பு; விண்ணப்பிக்க ஜன. 4ம் தேதி கடைசி!

சேலம்: மாவட்ட ஆலோசகர், சமூக பணியாளர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு ஆளெடுப்பு; விண்ணப்பிக்க ஜன. 4ம் தேதி கடைசி!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலம் மாவட்டத்தில் மாவட்ட ஆலோசகர், சமூக பணியாளர், தரவு உள்ளீட்டாளர் ஆகிய பணியிடங்களுக்கு, ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கடந்த 2007ம் ஆண்டு, தமிழக பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறையின் கீழ் மாநில புகையிலை கட்டுப்பாட்டு மையம் தொடங்கப்பட்டது.   மாவட்ட அளவில் இதனை நடைமுறைப்படுத்துவதற்கு ஏதுவாக, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பில் மாவட்ட ஆலோசகர், சமூக பணியாளர் (சோஷியல் ஒர்க்கர்), தரவு உள்ளீட்டாளர் (டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்) ஆகிய பணியிடங்கள் புதிதாக தோற்றுவிக்கப்பட்டன.   இப்பணியிடங்கள் அனைத்தும் முற்றிலும் தற்காலிகமானவை; ஒப்பந்த அடிப்படையிலானவை.   ஊதியம் எவ்வளவு?:   மாவட்ட ஆலோசகர் பணிக்கு மாத ஊதியம் 35 ஆயிரம் ரூபாய். சமூக பணியாளர் பணிக்கு மாத ஊதியம் 13 ஆயிரம் ரூபாய்
மசாஜ் அழகி கொலை: பலிகடாவான 4 போலீசார்! யாரை காப்பாற்ற நாடகம் ஆடுகிறது சேலம் காவல்துறை?

மசாஜ் அழகி கொலை: பலிகடாவான 4 போலீசார்! யாரை காப்பாற்ற நாடகம் ஆடுகிறது சேலம் காவல்துறை?

குற்றம், சேலம், முக்கிய செய்திகள்
சேலத்தில் கொல்லப்பட்ட மசாஜ் அழகியுடன் தொடர்பில் இருந்ததாக மூன்று எஸ்ஐக்கள் உள்ளிட்ட 4 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டதும், அதன் தொடர்ச்சியாக உளவுப்பிரிவு உதவி கமிஷனர், 2 பெண் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்ட விவகாரம் மாநகர காவல்துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. சேலம் குமாரசாமிப்பட்டியைச் சேர்ந்தவர் நடேசன். அதிமுக பிரமுகர். இவருக்குச் சொந்தமான அபார்ட்மெண்டில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தார் தேஜ் மண்டல். 26 வயதான இவர், சேலம் சங்கர் நகர், பள்ளப்பட்டி ஆகிய இடங்களில் 'தேஜாஸ் ஸ்பா' என்ற பெயரில் மசாஜ் செண்டர்களை நடத்தி வந்தார்.   தான் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில், பக்கத்திலேயே இன்னொரு அறை எடுத்து, அதில் தன்னிடம் வேலை செய்து வந்த ரிஷி, நிஷி, ஷீலா ஆகிய 3 பெண்களையும், லப்லு என்ற ஆணையும் தங்க வைத்திருந்தார். தேஜ் மண்டல் உள்பட இவர்கள்
பெண்களுக்கு இலவச பேருந்து பயணம்: தொழிலை விட்டு வெளியேறிய 40% ஆட்டோ ஓட்டுநர்கள்! கந்து வட்டிக்காரர்களிடம் வாகனங்கள் சரண்டர்!

பெண்களுக்கு இலவச பேருந்து பயணம்: தொழிலை விட்டு வெளியேறிய 40% ஆட்டோ ஓட்டுநர்கள்! கந்து வட்டிக்காரர்களிடம் வாகனங்கள் சரண்டர்!

சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  அரசு நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என்ற திட்டத்தால், ஆட்டோ ஓட்டுநர்கள் பலர் சவாரியின்றி பெரும் நலிவைச் சந்தித்துள்ளனர்.   தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அரசு நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தேர்தல் அறிக்கையில் அக்கட்சி தெரிவித்து இருந்தது. ஆட்சிக்கு வந்த கையோடு, அத்திட்டத்தை அமலுக்கு கொண்டு வந்தது திமுக அரசு.   இதற்கு பெண்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது. சேலத்தை அடுத்த பனமரத்துப்பட்டியைச் சேர்ந்த பொன்னம்மாள் என்ற பெண் விவசாயி, ''கீரைக்கட்டுகளை எடுத்துக்கொண்டு தினமும் சேலம் மார்க்கெட்டுக்கு சென்று வர பஸ் செலவு மட்டும் தினமும் 30 ரூபாய் ஆகிவிடும்.   கூவிக்கூவி விற்பதால் காலையில் சீக்கிரமாகவே பசியெடுக்கும். அதற்காக ஏன் செலவு செய்ய வேண்டும் என்று பட்டின
சேலம் மாநகராட்சியில் 719361 வாக்காளர்கள்; ஆண்களை விட பெண் வாக்குகள் அதிகம்!

சேலம் மாநகராட்சியில் 719361 வாக்காளர்கள்; ஆண்களை விட பெண் வாக்குகள் அதிகம்!

சேலம், முக்கிய செய்திகள்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி, சேலம் மாநகராட்சியில் புகைப்படத்துடன் கூடிய புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி, சேலம் மாநகராட்சியில் புகைப்படத்துடன் கூடிய புதிய வாக்காளர் பட்டியலை, ஆணையர் கிறிஸ்துராஜ் வியாழக்கிழமை (டிச. 9) வெளியிட்டார். அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகன் முன்னிலையில் இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டது.   இதுகுறித்து சேலம் மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் கூறியது:   நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு 1.11.2021ம் தேதியன்று இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட தமிழ்நாடு சட்டமன்றத் கொகுதி ஒருங்கிணைந்த வாக்காளர் வரைவுப் பட்டியல்களை அடிப்படையாகக் கொண்டு, சம்பந்தப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியல்கள் தயாரிக்கப்பட்டு உள்ளன.   வாக்காளர் பட்டியல்கள் அடிப
சேலத்தில் கோர விபத்து; காஸ் சிலிண்டர் வெடித்ததில் 4 வீடுகள் இடிந்தன; 5 பேர் பலி!

சேலத்தில் கோர விபத்து; காஸ் சிலிண்டர் வெடித்ததில் 4 வீடுகள் இடிந்தன; 5 பேர் பலி!

சேலம், முக்கிய செய்திகள்
சேலத்தில், சமையல் காஸ் சிலிண்டர் வெடித்துச் சிதறியதில் அடுத்தடுத்து நான்கு வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. இந்த விபத்தில் 3 பெண்கள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். சேலம் கருங்கல்பட்டி பாண்டுரங்கவிட்டல் 3வது தெருவைச் சேர்ந்தவர் வெங்கடராஜன் (62). இவருக்கு தன் வீடு அருகே சொந்தமாக மூன்று வீடுகள் உள்ளன. இந்த வீடுகளில் கோபி, கணேசன், முருகன் ஆகியோர் குடும்பத்துடன் வாடகைக்கு வசித்து வருகின்றனர். இதில், கோபியுடன் அவருடைய மாமியார் ராஜலட்சுமி, உறவினர் எல்லம்மாள் ஆகியோரும், கணேசன் வீட்டில் தாயார் அம்சவேணி, மனைவி லட்சுமி, மகன்கள் ஷாம், சுதர்சன் ஆகியோரும், முருகன் வீட்டில் மனைவி உஷாராணி, மகன் கார்த்திக்ராம், மகள் பூஜாஸ்ரீ ஆகியோரும் வசித்து வருகின்றனர். இவர்களுடைய வீட்டிற்கு அருகிலேயே சேலம் செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்தில் சிறப்பு நிலைய அலுவலராக பணியாற்றி வந்த பத்மநாபன் (48), தனத
ஆளுங்கட்சியிடம் தஞ்சம் புகுந்த ஊழல் மாஜி துணைவேந்தர்! தோண்டி துருவும் லஞ்ச ஒழிப்புத்துறை!

ஆளுங்கட்சியிடம் தஞ்சம் புகுந்த ஊழல் மாஜி துணைவேந்தர்! தோண்டி துருவும் லஞ்ச ஒழிப்புத்துறை!

குற்றம், சேலம், முக்கிய செய்திகள்
  ஆசிரியர் பணி நியமனங்களுக்கு லட்சக்கணக்கில் பட்டியல் போட்டு வசூல் வேட்டை நடத்திய பெரியார் பல்கலை முன்னாள் துணைவேந்தர் சுவாமிநாதன், வழக்கில் இருந்து தப்பிக்க ஆளுங்கட்சியில் ஐக்கியமாகிவிட்ட முன்னாள் அமைச்சர்களிடம் தஞ்சம் அடைந்துவிட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.   சேலத்தை அடுத்த கருப்பூரில், கடந்த 24 ஆண்டுகளாக பெரியார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இப்பல்கலையுடன், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த 113 கலை, அறிவியல் கல்லூரிகள் இணைவு பெற்று செயல்பட்டு வருகின்றன.   இப்பல்கலையின் துணைவேந்தராக கடந்த 2014 முதல் 2017 வரை சுவாமிநாதன் என்பவர் பணியாற்றி வந்தார். ஆராய்ச்சியாளர்களையும், பெரும் கல்வியாளர்களையும் உருவாக்க வேண்டிய பல்கலைக்கழகம், அவருடைய பணிக்காலத்தில்தான் ஊழல் வேட்டைக்களமாக மாறிப்போனதாக கூறுகிறார்கள்
மாணவர்களுக்கு வைட்டமின், ஸிங்க் மாத்திரைகள்; மருத்துவ பரிசோதனை! செப். 1 முதல் 9, 10, 11, 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு!!

மாணவர்களுக்கு வைட்டமின், ஸிங்க் மாத்திரைகள்; மருத்துவ பரிசோதனை! செப். 1 முதல் 9, 10, 11, 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு!!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழகத்தில் வரும் செப். 1ம் தேதி முதல் 9, 10, 11, 12ம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்கும் என அரசு அறிவித்துள்ளது. கொரோனா நோய்த்தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவ, மாணவிகளுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்வதுடன், வைட்டமின், ஸிங்க் மாத்திரைகள் வழங்கவும் உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்று ஓரளவு கட்டுக்குள் வந்த நிலையில், தமிழகத்தில் வரும் செப். 1ம் தேதி முதல் 9, 10, 11, 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து, பள்ளிகளில் முன்னேற்பாட்டுப் பணிகளை மேற்கொள்வதற்கான முன்ஆயத்தக் கூட்டங்கள் அனைத்து மாவட்டங்களிலும் நடந்து வருகிறது.   இது தொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஆட்சியர் கார்மேகம் சனிக்கிழமை (ஆக. 21) விரிவான ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது:   கொரோனா தொற்று குற
ஐஏஎஸ் அதிகாரிக்கு சேலம் அரசு மருத்துவமனையில் முதல் பிரசவம்; அழகான தேவதையை பெற்றெடுத்தார்!

ஐஏஎஸ் அதிகாரிக்கு சேலம் அரசு மருத்துவமனையில் முதல் பிரசவம்; அழகான தேவதையை பெற்றெடுத்தார்!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பொருளாதாரத்தின் மேல் அடுக்கில் உள்ளோரும், அரசின் உயர் மட்ட அதிகாரத்தில் இருப்போரும் அரசுப்பள்ளிகள், அரசு மருத்துவமனைகளின் சேவைகளைப் பயன்படுத்திக் கொள்வதில் இருந்து எப்போதும் விலகியே இருக்கின்றனர். அதனால் வெகுசன மக்களும் அத்தகைய அரசு ஸ்தாபனங்களை நம்பாமல் தனியாருக்குச் செல்லும் போக்கு சமூகத்தில் மலிந்து கிடக்கிறது.   இந்நிலையில், தனது ஒரே ஒரு செயலால் ஒட்டுமொத்த சமூகத்தின் பார்வையையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார் சேலத்தைச் சேர்ந்த பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர்.   சேலம் மாவட்டம் பேளூர் அருகே உள்ள கரடிப்பட்டியைச் சேர்ந்தவர் தர்மலாஸ்ரீ (29). கடந்த 2019ம் ஆண்டு நடந்த ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று, கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்ட உதவி ஆட்சியராக பணியாற்றி வருகிறார்.   இவருக்கு, கடந்த ஓராண்டுக்கு முன்பு சென்னையைச் சேர்ந்த தாமரைக்கண்ணன் என்ற மருத்துவருடன் திருமணம் நடந
சேலம் பட்டு கூட்டுறவு சங்கத்தில் நூதன மோசடி! கஞ்சிக்கே வழியில்லாத நெசவாளர்கள் வயிற்றில் அடித்த நிர்வாகம்!!

சேலம் பட்டு கூட்டுறவு சங்கத்தில் நூதன மோசடி! கஞ்சிக்கே வழியில்லாத நெசவாளர்கள் வயிற்றில் அடித்த நிர்வாகம்!!

சிறப்பு கட்டுரைகள், சேலம், முக்கிய செய்திகள்
கொரோனா ஊரடங்கு காலத்தில் ஒரு வேளை கஞ்சிக்கே வழியில்லாமல் திண்டாடிய கைத்தறி நெசவாளர்களை நூதன முறையில் சுரண்டி மோசடியில் ஈடுபட்டுள்ளது, சேலம் பட்டு கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கம்.   சேலம் 2ஆம் அக்ரஹாரத்தில், 1956ம் ஆண்டு முதல் சேலம் பட்டு கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது.   இக்கூட்டுறவு சங்கத்தில் 1558 கைத்தறி நெசவாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் வெண்பட்டு வேஷ்டி, சட்டைத்துணி, அங்கவஸ்திரம் ஆகியவற்றை சங்கம் நேரடியாக கொள்முதல் செய்து விற்பனை செய்கிறது.   இதற்காக சங்க உறுப்பினர்களுக்கு மாதத்திற்கு ஒரு பாவு, அதற்குரிய கோரா பட்டு நூல் ஆகியவற்றை வழங்குகிறது. ஒரு பாவு மூலம் பத்து வெண்பட்டு வேஷ்டிகளை உற்பத்தி செய்ய முடியும். ஒரு வேஷ்டியின் கொள்முதல் விலை 750 ரூபாய்.   ஒரு கு