Thursday, January 15மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

தமிழ்நாடு

பயந்துட்டீங்களா சீமான்? விஜய் மீதான விமர்சனத்தின் பின்னணி!

பயந்துட்டீங்களா சீமான்? விஜய் மீதான விமர்சனத்தின் பின்னணி!

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
நடிகர் விஜய், தமிழக வெற்றிக்கழகம் கட்சியைத் தொடங்கி, கொடி அறிமுகம், கொள்கை விளக்க மாநாடு என்று நின்று நிதானமாக, டெஸ்ட் கிரிக்கெட் போல ஆடத் தொடங்கி இருக்கிறார்.  கடந்த அக். 27ஆம் தேதி, கள்ளக்குறிச்சி மாவட்டம் விக்கிரவாண்டியில் நடந்த, த.வெ.க., மாநாட்டில், கட்சியின் கொள்கை விளக்கம் குறித்து பேசினார், விஜய். அந்த மாநாட்டில், ''தந்தை பெரியார், அண்ணா பெயரைச் சொல்லிக்கொண்டு, திராவிட மாடல் என்ற பெயரில் தமிழ்நாட்டைச் சுரண்டி கொள்ளையடிக்கிறது ஒரு குடும்பம். அந்த சுயநலக் கூட்டம்தான் நமது அரசியல் எதிரி,'' என திமுகவின் பெயரைச் சொல்லாமலேயே சம்மட்டி அடி கொடுத்தார் விஜய். அதேபோல, ''சாதி, மதத்தின் பெயராலே பெரும்பான்மை, சிறுபான்மை பயத்தைக் காட்டும் பிளவுவாத அரசியல் செய்பவர்கள்தான் நமது கொள்கை எதிரி,'' என்று பாஜக, ஆர்எஸ்எஸ் சங்பரிவாரங்களின் மண்டையிலும் 'பொளேர்' என ஒரு போடு போட்டார...
விஜய் போட்ட குண்டு; கலக்கத்தில் ஆளுங்கட்சி!

விஜய் போட்ட குண்டு; கலக்கத்தில் ஆளுங்கட்சி!

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள், விழுப்புரம்
''தமிழக வெற்றிக்கழகத்துடன் கூட்டணி வைப்போருக்கு ஆட்சி, அதிகாரத்தில் பங்கீடும், அதிகாரப் பகிர்வும் கொடுப்போம்,'' என்று அக்கட்சித் தலைவர் நடிகர் விஜய் கூறியிருப்பது, தமிழக அரசியல் களத்தில் பெரும் சூட்டைக் கிளப்பி இருக்கிறது. தமிழ்த்திரை உலகின் சூப்பர் ஸ்டாரான நடிகர் விஜய், கடந்த பிப்ரவரி 2ம் தேதி, தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கினார். பத்து ஆண்டுகளுக்கு முன்பு, விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பை தொடங்கியபோதே அவரின் அரசியல் வருகை தொடர்பான பேச்சும் தொடங்கி விட்டது. இன்றைய தேதியில், இந்தியாவில் 200 கோடி ரூபாய் சம்பளம் பெறும் வெகுசில நடிகர்களில் விஜய்யும் ஒருவர். அதிகபட்ச சம்பளம், புகழின் உச்சத்தில் இருக்கும் ஒருவர் முழுநேர அரசியல்வாதியாக களம் காண வருகிறார் என்றபோதே பலரின் புருவங்களும் உயர்ந்தன. கட்சி தொடங்கியபோதே, நமது இலக்கு 2026 சட்டப...
பெரியார் பல்கலை ஆட்சிக்குழுவில் ‘காலாவதி’ உறுப்பினர்கள்; ஆசிரியர்கள் அதிருப்தி

பெரியார் பல்கலை ஆட்சிக்குழுவில் ‘காலாவதி’ உறுப்பினர்கள்; ஆசிரியர்கள் அதிருப்தி

கல்வி, சேலம், தமிழ்நாடு
சேலம் பெரியார் பல்கலை. ஆட்சிக்குழு உறுப்பினர்களாக உள்ள ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற்ற பிறகும், அதே பதவியில் தொடர்வதற்கு பல்கலை ஆசிரியர் சங்கம் அதிருப்தி தெரிவித்துள்ளது. சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை தலைவராக பணியாற்றி வரும் பெரியசாமி, வேதியியல் துறைத்தலைவர் ராஜ் ஆகியோர் தற்போது ஆட்சிக்குழு உறுப்பினராகவும் பதவி வகித்து வருகின்றனர். இவர்கள் பேராசிரியர் பிரிவில் இருந்து இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் இருவரும் அக். 9ம் தேதியுடன் மூத்த பேராசிரியர் ஆக பதவி உயர்வு பெற்று விட்டனர். பல்கலை சாசன விதிப்படி, ஒருவர் எந்த பிரிவில் இருந்து ஆட்சிக்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டாரோ அவர் அந்த நிலையில் இருந்து பதவி உயர்வு பெற்றுவிடும் பட்சத்தில், முந்தைய வகைப்பாட்டிலேயே ஆட்சிக்குழு உறுப்பினராக தொடர முடியாது. அதன்படி, மூத்த பேராசிரியராக ப...
எதுக்காக சொல்றேன்னா… அதுக்காக சொல்றேன்…! பேனாக்காரன் பதில்கள்!!

எதுக்காக சொல்றேன்னா… அதுக்காக சொல்றேன்…! பேனாக்காரன் பதில்கள்!!

தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
உதயநிதி, இளைஞர் பட்டாளத்தை திரட்டிக் கொண்டிருப்பதாக அமைச்சர் துரைமுருகன் சொல்லி இருக்கிறாரே? பழைய மாணவர்கள் பற்றி ரஜினி பேசிய பேச்சுக்கு துரைமுருகன் எதிர்வினையாற்றியது குறித்து அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரை கடுமையாக கடிந்து கொண்டதாகச் சொல்லப்பட்டது. அதனால் அவரை குளிர்விக்கவே இந்தளவுக்கு இறங்கி வந்திருக்கிறார் துரைமுருகன். பெரியார் சிலைக்கு த.வெ.க. தலைவர் விஜய் மரியாதை செலுத்தியது எதைக் காட்டுகிறது?  நடிகர் விஜயை அரசியல் ரீதியாக அவரை வழிநடத்த சரியான ஆள் இல்லை என்ற விமர்சனம் கிளம்பிய நிலையில், பெரியார் பிறந்தநாளில் அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து அரசியல் களத்திலும் தான் ஒரு கில்லிதான் என்பதை நிரூபித்திருக்கிறார் தளபதி. ஏற்கனவே சமூக ஊடகங்களில் விஜயை, திமுகவின் இணையக்கூலிகள் ஆபாசமாக அடித்து துவைத்து வரும் நிலையில், பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தியது ஆளும்தரப்...
அரங்கேறிய கூட்டுக்களவாணித்தனம்: சிக்கப்போகும் ஐஏஎஸ்; கிலியில் பொறியாளர்கள்

அரங்கேறிய கூட்டுக்களவாணித்தனம்: சிக்கப்போகும் ஐஏஎஸ்; கிலியில் பொறியாளர்கள்

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலம் மாநகராட்சியில் ஐஏஎஸ் அதிகாரி, பொறியாளர்கள், அமைச்சுப் பணியாளர்கள் கூட்டாக நடத்திய பணி நியமன ஊழல் விவகாரத்தில் அவர்களின் ஒட்டுமொத்தத் தலைகளும் உருளப்போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சி பொறியியல் பிரிவில், ஸ்கில்டு அசிஸ்டன்ட் (கிரேடு - 2) எனப்படும் இரண்டாம் நிலை செயல்திறன் உதவியாளர் காலியிடங்கள் கடந்த 2022ம் ஆண்டு நிரப்பப்பட்டது. இந்தப் பிரிவில் மொத்தம் 6 காலியிடங்கள் இருந்தன. இதற்காக, 9.12.2022ம் தேதி நேர்காணல் நடந்தது. மொத்தம் 55 பேர் நேர்காணலில் கலந்து கொண்டனர். குறைந்தபட்சக் கல்வித்தகுதி ஐ.டி.ஐ. படிப்பில் தேர்ச்சி என நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இப்பணிக்கான ஊதிய விகிதம் 19500 - 62500 ரூபாய். குறைந்தபட்ச கல்வித்தகுதி, நல்ல சம்பளம், உள்ளூரிலேயே வேலை என்பதால், 6 செயல்திறன் உதவியாளர் பணியிடங்களையும் சேலம் மாநகராட்சியில் பணியாற்றும் ஊழியர்களும், ஆளும்...
‘எவ்வளவோ செஞ்சிருக்கேன்… ஆனா அந்த மாஜி எம்.பி., கண்டுக்கவே இல்ல…!’ – துணைவேந்தர் புலம்பல்!!

‘எவ்வளவோ செஞ்சிருக்கேன்… ஆனா அந்த மாஜி எம்.பி., கண்டுக்கவே இல்ல…!’ – துணைவேந்தர் புலம்பல்!!

சேலம், முக்கிய செய்திகள்
சேலத்தில் உள்ள பல்கலைக்கழகத்திற்கு எப்போது பெரியார் என்ற கலகக்காரரின் பெயரைச் சூட்டினார்களோ அப்போது முதல் சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லை. வாழ்நாளெல்லாம் சாதி ஒழிப்பிற்காகப் போராடி வந்த பெரியாரின் பெயரில் அமைந்த பல்கலையில் குறிப்பிட்ட சில சாதிகளின் ஆதிக்கம் தொடர்ந்து வருகிறது. திமுக, அதிமுக எந்த அரசு ஆட்சியில் இருந்தாலும் சாதியவாதம் மேலோங்கி இருக்கிறது. குறிப்பாக, கடந்த பத்து ஆண்டுகளில் கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த சுவாமிநாதன், குழந்தைவேல், ஜெகநாதன் ஆகியோர் அடுத்தடுத்து துணைவேந்தர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் குழந்தைவேல், ஜெகநாதன் ஆகிய இருவரும் ஆர்எஸ்எஸ் பின்புலத்தோடு துணைவேந்தர் ஆனவர்கள் என்ற பேச்சும் உண்டு. இப்போதைய துணைவேந்தர் ஜெகநாதன், கடந்த 2021ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி பெரியார் பல்கலையில் பொறுப்பேற்றார். அவரின் பதவிக்காலம் கடந்த ஜூன் ...
கள்ளக்குறிச்சி துயரம்: வெட்கப்பட வேண்டாமா முதல்வரே?

கள்ளக்குறிச்சி துயரம்: வெட்கப்பட வேண்டாமா முதல்வரே?

தமிழ்நாடு, முக்கிய செய்திகள், விழுப்புரம்
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் ஜூன் 18ம் தேதி திடீரென்று கொத்துக் கொத்தாக பலர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். சிலர் கண் பார்வை மங்கி விட்டதாக கதறினர்; சிலருக்கு ரத்த வாந்தி நின்றபாடில்லை. அப்போதுதான் ஏதோ விபரீதம் நடந்துவிட்டதை மருத்துவமனை நிர்வாகம் உணர்ந்தது. சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர்கள் எல்லோருமே சொல்லி வைத்தாற்போல் கள்ளக்குறிச்சி நகரில் உள்ள கருணாபுரத்தைச் சேர்ந்தவர்கள். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்கள் பலரும் பட்டியலினத்தவர்கள்; கூலித்தொழிலாளிகள். மருத்துவப் பரிசோதனையில் அவர்கள் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தைக் குடித்து இருப்பது தெரிய வந்தது. இதையடுத்தே, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரும், மாவட்ட எஸ்பியும் மருத்துவமனைக்கு விரைந்து, என்ன ஏது என்று விசாரிக்கத் தொடங்கினர். அதற்குள், சிகிச்சைக்கு வந்தவர்களில் 6 பேர் உயிரிழந்து விட்டனர். ஜூன் 19ம் தேதியும்...
சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 78.13 சதவீதம் வாக்குப்பதிவு; எடப்பாடியில் அபாரம்!

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 78.13 சதவீதம் வாக்குப்பதிவு; எடப்பாடியில் அபாரம்!

அரசியல், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 78.13 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. அதிகபட்சமாக, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த தொகுதியான எடப்பாடியில் 84.71 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது. தமிழகம், புதுவையில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வெள்ளிக்கிழமை (ஏப். 19) தேர்தல் நடந்தது. சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரை 11 சட்டமன்ற தொகுதிகளில் நான்கு நாடாளுமன்ற தொகுதிகள் இடம்பெறுகின்றன. மாவட்டம் முழுவதும் 14 லட்சத்து 56 ஆயிரத்து 299 ஆண்கள், 14 லட்சத்து 71 ஆயிரத்து 524 பெண்கள், இதரர் 299 என மொத்தம் 29 லட்சத்து 28 ஆயிரத்து 122 வாக்காளர்கள் உள்ளனர். சேலம் நாடாளுமன்ற தொகுதியில் ஆளும் திமுக சார்பில் டி.எம்.செல்வகணபதி, அதிமுக தரப்பில் ஓமலூரைச் சேர்ந்த விக்னேஷ், பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அண்ணாதுரை, நாம் தமிழர் கட்சி தரப்பில் மருத்துவர் மனோஜ்குமார் ஆகியோர் உள்பட மொத்த...
மக்களவை தேர்தல்: தமிழகத்தில் 69.72 சதவீதம் வாக்குப்பதிவு

மக்களவை தேர்தல்: தமிழகத்தில் 69.72 சதவீதம் வாக்குப்பதிவு

தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
மக்களவை தேர்தலில் தமிழகத்தில் 69.72 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆண்களை விட பெண் வாக்காளர்கள் ஆர்வத்துடன் அதிகளவில் வாக்களித்துள்ளனர். தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளுக்கும், புதுச்சேரி மக்களவை தொகுதிக்கும் என மொத்தம் 40 தொகுதிகளுக்கும் ஏப். 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இத்துடன் தமிழகத்தில் காலியாக இருந்த விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் அதேநாளில் இடைத்தேர்தல் நடந்தது. வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக தமிழகம் முழுவதும் 68321 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 950 பேர் களம் இறங்கினர். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி, மாலை 6 மணிக்கு நிறைவு பெற்றது. 6 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்...
மருத்துவ படிப்பில் சேரணுமா? நீட் தேர்வுக்கு மார்ச் 9ம் தேதிக்குள் விண்ணப்பிங்க…

மருத்துவ படிப்பில் சேரணுமா? நீட் தேர்வுக்கு மார்ச் 9ம் தேதிக்குள் விண்ணப்பிங்க…

கல்வி, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
இளங்கலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு, மே மாதம் 5ம் தேதி நடக்கிறது. இத்தேர்வுக்காக, வரும் மார்ச் 9ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ்., பிடிஎஸ்., மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகள், கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு நீட் எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் வெற்றி பெறுவது கட்டாயம். இந்திய ராணுவக் கல்லூரிகளில் பி.எஸ்சி., நர்சிங் படிக்கவும், நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. தேசிய தேர்வு முகமை எனப்படும் என்.டி.ஏ., ஆண்டுக்கு ஒருமுறை நீட் தேர்வை நடத்துகிறது. ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் உள்பட 13 மொழிகளில் இத்தேர்வு நடக்கிறது. நீட் தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு பிப். 9ம் தேதி தொடங்கியது. மார்ச் 9ம் தேதி வரை ஆன்ல...