Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

ஆத்தூர் அருகே சேகோ ஆலையில் விஷ வாயு தாக்கி தொழிலாளி பலி!

ஆத்தூர் அருகே,
சேகோ ஆலையில்
கழிவுநீர்த் தொட்டியை
சுத்தம் செய்வதற்காக
தொட்டியின் மேல் மூடியை
திறந்தபோது விஷ வாயு
தாக்கியதில்
கூலித்தொழிலாளி
மூச்சுத்திணறல்
ஏற்பட்டு உயிரிழந்தார்.

 

சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்துள்ள கெங்கவல்லி பள்ளக்காட்டைச் சேர்ந்தவர் மாணிக்கம் (65). அப்பகுதியில் சண்முகா சேகோ பேக்டரி என்ற பெயரில் கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கும் ஜவ்வரிசி, ஸ்டார்ச் மாவு தயாரிக்கும் ஆலையை நடத்தி வருகிறார்.

இந்த ஆலையில் அம்மம்பாளையம் கண்ணகி நகரைச் சேர்ந்த ராமமூர்த்தி மகன் மணி என்கிற ஜெயச்சந்திரன் (35) கூலி வேலை செய்து வந்தார். அவருடன், பள்ளக்காட்டைச் சேர்ந்த மாது (55), காங்கமுத்து (50), கலியன் (48) ஆகியோரும் வேலை செய்து வருகின்றனர்.

 

ஜவ்வரிசி, ஸ்டார்ச்
தயாரிப்பதற்கான
மரவள்ளிக் கிழங்குகளை
அரைத்த பின்னர்
வெளியேற்றப்படும்
கழிவு நீரை தேக்கி வைக்க,
60 அடி நீள, அகலம்
மற்றும் 20 அடி ஆழத்தில்
இரண்டு தொட்டிகள்
கட்டப்பட்டு உள்ளன.
இந்த இரு தொட்டிகளுக்கும்
நடுவில் 8 அடி நீளம்,
மூன்றடி அகலம்,
20 அடி ஆழம் கொண்ட
ஒரு கழிவு நீர்
தொட்டியும் கட்டப்பட்டு
உள்ளது. இந்த
தொட்டிகளின் மீது மூடி
போட்டு மூடி
வைத்துள்ளனர்.

 

இந்த மூன்று தொட்டிகளும்
ஓரளவு நிரம்பியுடன்
அவற்றில் இருந்து கழிவுநீரை
வெளியேற்றி விடுவது
வாடிக்கை. இந்த
நிலையில்தான்,
வெள்ளிக்கிழமை
(நவ. 29, 2019) மாலை
5.30 மணியளவில்,
இரண்டு பெரிய
தொட்டிகளுக்கு நடுவில்
உள்ள தொட்டியில்
இருந்து கழிவு நீரை
வெளியேற்றுவதற்காக மாது,
தொட்டியின் மீது ஏறி,
அதில் மூடப்பட்டிருந்த
மூடியை அகற்றினார்.
அப்போது எதிர்பாராத
விதமாக கழிவுநீர்த்
தொட்டியில் இருந்து
வெளியேறிய விஷ வாயு
தாக்கியதில் மாது
மூர்ச்சையாகி,
தொட்டிக்குள்ளேயே
தவறி விழுந்தார்.

 

சம்பவத்தின்போது அருகில் இருந்த ஆலை அதிபர் மாணிக்கம் பதறிப்போய், தொட்டிக்குள் வி-ழுந்த மாதுவை காப்பாற்றுவதற்காக அவரும் தொட்டிக்குள் குதித்தார். ஆலை அதிபர் தொட்டிக்குள் குதிப்பதை பார்த்த மணி என்கிற ஜெயச்சந்திரனும் அவரை காப்பாற்றுவதற்காக தொட்டிக்குள் குதித்தார். காங்கமுத்து, கலியன் ஆகியோரும் அவர்களை மீட்பதற்காக தொட்டிக்குள் அடுத்தடுத்து குதித்துள்ளனர்.

இதில், மணி என்கிற ஜெயச்சந்திரன் விஷ வாயு தாக்கியதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கினார். மற்றவர்கள் பாதுகாப்பாக மேலேறி வந்துவிட்டனர். ஆனால் மணி மட்டும் சுயநினைவுக்கு திரும்பாததால், அவரை ஆத்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மருத்துவர்கள் பரிசோதனையில் அவர், வரும் வழியிலேயே இறந்துவிட்டது தெரிய வந்தது.

 

ஆலை அதிபர் மாணிக்கம் உள்ளிட்ட நான்கு பேரும், ஆத்தூரில் உள்ள ஸ்ரீ ஆண்டவர் நர்சிங் ஹோம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்கள் சிகிச்சை அளி க்கப்பட்டு வருகிறது.

 

இதுகுறித்து தகவல் அறிந்த கெங்கவல்லி காவல்நிலைய உதவி ஆய்வாளர் முருகேசன் மற்றும் காவலர்கள் நிகழ்விடம் விரைந்து சென்று விசாரித்தனர். சடலத்தை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த மணிக்கு, சங்கீதா என்ற மனைவியும், இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்த சம்பவம் கெங்கவல்லி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.