Friday, April 26மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: பாஜக.

பாஜக: எலி ஏன் 8 முழ வேட்டி கட்டிக்கிட்டு ஓடுது? #MannKiBaat #NarendraModi

பாஜக: எலி ஏன் 8 முழ வேட்டி கட்டிக்கிட்டு ஓடுது? #MannKiBaat #NarendraModi

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
உலகிலேயே பழமையான மொழியாக தமிழ் மொழி இருப்பதால் இந்தியாவே பெருமை கொள்கிறது என்று திடீரென்று தமிழின் மீது பாசமழை பொழிந்திருக்கிறார், பிரதமர் நரேந்திர மோடி. இதுதான் சமூக ஊடகங்களில் அண்மைய விவாதங்களில் இது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.   மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் நரேந்திர மோடி, வானொலியில் 'மனதில் இருந்து பேசுகிறேன்' (மன் கீ பாத்) உரையாற்றி வருகிறார். கடந்த 25.8.2018ம் தேதி நடந்த ஓர் உரையாடலில்தான் தமிழை வானளாவப் புகழ்ந்திருக்கிறார்.     இப்படி அவர் உயர்தனிச் செம்மொழியாம் தமிழைப் புகழ்வது முதல் முறையல்ல. நடப்பு ஆண்டில் பிப்ரவரி மாதம் டெல்லி டால்கோட்ராவில் நடந்த ஒரு விவாதத்தின்போதும்கூட, 'சமஸ்கிருதத்தைவிட அழகான தமிழ்மொழியை கற்காமல் விட்டது வருத்தம் அளிக்கிறது,' என்று கூறியிருக்கிறார்.     மேடைகளில் தமிழில் சில வ
தமிழக முதல்வர் கிரிஜாவை மதிக்கிறேன்!; எஸ்.வி. சேகருக்கு காமெடி நடிகர் கிண்டல் ட்வீட்!!

தமிழக முதல்வர் கிரிஜாவை மதிக்கிறேன்!; எஸ்.வி. சேகருக்கு காமெடி நடிகர் கிண்டல் ட்வீட்!!

அரசியல், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு நடிகர் சங்க பொதுக்குழுவில் இரங்கல் தெரிவிக்காததற்கு கண்டனம் தெரிவித்த பாஜகவைச் சேர்ந்த நடிகர் எஸ்.வி. சேகருக்கு, காமெடி நடிகர் கருணாகரன் கிண்டலாக ட்விட்டரில் பதில் அளித்துள்ளது கவன ஈர்ப்பைப் பெற்றுள்ளது.   முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த 16.8.2018ம் தேதி உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக ஆகஸ்ட் 17ம் நாடு முழுவதும் பொது விடுமுறை விடப்பட்டது. தமிழக அரசும் ஒரு வார காலத்திற்கு துக்கம் அனுசரிக்கும் என்று அறிவித்தது. இந்நிலையில் நேற்று முன்தினம், (ஆகஸ்ட் 19) நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. அக்கூட்டத்தில் மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதோடு, மவுன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. அவர் அரசியல் தலைவர் என்பது மட்டுமின்றி,
எட்டுவழிச்சாலையும் எடப்பாடி பழனிசாமியும்…  மீம்ஸ்களால் தோரணம் கட்டும் இணையவாசிகள்!

எட்டுவழிச்சாலையும் எடப்பாடி பழனிசாமியும்… மீம்ஸ்களால் தோரணம் கட்டும் இணையவாசிகள்!

சிறப்பு கட்டுரைகள், சென்னை, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  சென்னை - சேலம் இடையிலான எட்டுவழி பசுமைச்சாலைத் திட்டத்தை செயல்படுத்துவதில் முனைப்பு காட்டும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி ஆகியோரை கேலி, கிண்டல் செய்து சமூகவலைத்தளங்களில்  வெளியிடப்பட்டுள்ள மீம்ஸ்கள் ரொம்பவே வைரல் ஆகி வருகின்றனர்.   சென்னை - சேலம் இடையே எட்டுவழி பசுமைச்சாலைத் திட்டம், 10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளது. சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்கள் வழியாக இந்த சாலை அமைகிறது. இதற்காக 2343 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. இதில், 90 சதவீத நிலம், விளை நிலங்கள் ஆகும்.     இத்திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கியதில் இருந்தே விவசாயிகள், பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமியோ, விவசாயிகள் தானாகவே முன்வ
கூட்டு வன்புணர்வு… கழுத்தை நெரித்தோம்… சுவர் மீது தலையை மோதினோம்… போதை மருந்து கொடுத்தோம்… எல்லாமே கடவுளின் கண் முன்னே நடந்தது!#Asifa#JusticeForAsifa

கூட்டு வன்புணர்வு… கழுத்தை நெரித்தோம்… சுவர் மீது தலையை மோதினோம்… போதை மருந்து கொடுத்தோம்… எல்லாமே கடவுளின் கண் முன்னே நடந்தது!#Asifa#JusticeForAsifa

இந்தியா, குற்றம், முக்கிய செய்திகள்
சிறுமி ஆசிஃபாவை கூட்டு வன்புணர்வு செய்து காட்டு மிராண்டித்தனமாக படுகொலை செய்யப்பட்ட வழக்கு, இந்தியாவை உலுக்கி எடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த வழக்கில் பாஜக பிரமுகர், சிறுவர்கள் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கத்துவா பகுதியைச் சேர்ந்த சிறுமி ஆசிஃபா (8). கடந்த ஜனவரி மாதம் 10ம் தேதி, அந்தப் பகுதியில் இருந்த வனத்திற்குள் குதிரைகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்சென்றவள் அதன்பின் வீடு திரும்பவில்லை. சிறுமியின் தந்தை யூசுப் பூஜ்வாலா, நண்பர்களுடன் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் மனதளவில் நொந்து போனார். இரு நாள்கள் கழித்து காவல்துறையில் புகார் கொடுக்கச் சென்றபோது அவரை அலட்சியம் செய்து விரட்டி அடித்ததோடு, வழக்குப் பதிவு செய்யவும் மறுத்துவிட்டனர். ஜனவரி 17ம் தேதி, காட்டுப்பகுதிக்குள் சிறுமியின் சடலம் கிடப்பது தெரியவந்தது. அவளுடைய கை, கால் எலும்புகள் முறிக
ஊடகங்களை ஒடுக்க பாஜக திட்டம்!; தொடர் தோல்விகளால் விரக்தி!!

ஊடகங்களை ஒடுக்க பாஜக திட்டம்!; தொடர் தோல்விகளால் விரக்தி!!

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
ஆட்சி நிர்வாகத் தளத்தில் ஏற்பட்டுள்ள தொடர் தோல்விகள் காரணமாக, டிஜிட்டல் ஊடகங்களை ஒடுக்கும் முடிவில் பாஜக தீவிரமாக ஈடுபட்டுள்ளது. மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக இணைய ஊடகங்கள், சமூக ஊடகங்களுக்குக் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் எனத்தெரிகிறது. கடந்த 2014ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும்கூட பாஜக, 282 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையோடு ஆட்சியில் அமர்ந்தது. எனினும், கூட்டணி கட்சிகளுக்கும் அமைச்சரவையில் இடம் கொடுத்தது. இந்து தேசியத்தை அமைக்கும் முகமாக ஒரே மொழி, ஒரே தேசம், ஒரே வரி சித்தாந்தங்களை நோக்கி நகர்ந்தது. பாஜக வந்தால் என்னவெல்லாம் நடக்கும் என்று இடதுசாரிகளும், காங்கிரஸூம் எச்சரித்தனவோ அதே வறட்சியான சித்தாந்தங்களை நோக்கி பாஜக நடைபோட்டது. விளைவு, கடந்த நான்கு ஆண்டுகளில் நடந்த 11 இடைத்தேர்களில் பத்து மக்களவை தொகுதிகளை இழந்துள்ளது.
காவிரி விவகாரம்: கொலை வாளினை எடடா!

காவிரி விவகாரம்: கொலை வாளினை எடடா!

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத நடுவண் அரசைக் கண்டித்து மற்றுமொரு மெரீனா புரட்சிக்கு தமிழக இளைஞர்கள் தயாராகி வருகின்றனர். துவக்க நிலையிலேயே கைது நடவடிக்கை மூலம் கடுமை காட்டும் தமிழக அரசை முற்றாக வீட்டுக்கு அனுப்பும் புதிய அத்தியாயத்தை இந்தப் போராட்டம் முன்னெடுக்கும் எனத்தெரிகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுவதற்கான முழு காலக்கெடுவையும் தின்று தீர்த்த நடுவண் பாஜக அரசு, தமிழக நலனுக்கு எதிராக மிகத்தந்திரமான நடவடிக்கைகளைக் கையாண்டு வருகிறது. சட்ட ரீதியாக தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய காவிரி நீரையும் கிடைக்க விடாதபடி, பாஜகவும் காங்கிரஸ் கட்சிகளும் ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கின்றன. மக்கள் நலன் பாராத காட்டுமிராண்டித்தன போக்கிற்கு வாக்கு அரசியல் மட்டுமே காரணம். கர்நாடகாவில் விரைவில் வர உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை மையப்படுத்தியே பாஜக, இத்தகைய மாற்றாந்தாய் மனப்போக்கி
பாஜகவின் பச்சை துரோகம்!; கிளர்ச்சிக்குத் தயாராகும் தமிழகம்!!

பாஜகவின் பச்சை துரோகம்!; கிளர்ச்சிக்குத் தயாராகும் தமிழகம்!!

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
இந்தியாவின் நீதிபரிபாலனத்தையும், மாநிலங்களின் கூட்டாட்சித் தத்துவத்தையும் தொடர்ந்து சிதைத்து வரும் பாஜக, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் இருந்து மீறியிருப்பதன் மூலம், தமிழகத்திற்கு பச்சை துரோகத்தை இழைத்திருக்கிறது. காவிரி விவகாரத்தில் உறங்கும் எரிமலையாக இருந்த தமிழகம், வெடித்துக் கிளம்பும் எனத் தெரிகிறது. காவிரி நீர் பங்கீடு தொடர்பான வழக்கில் கடந்த 16.2.2018ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அந்தத் தீர்ப்பில், கர்நாடகா மாநிலம் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு ஆண்டுக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று உத்தரவிட்டது. அத்துடன், காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்காற்றுக்குழுவை ஆறு வார காலத்திற்குள் அமைக்க வேண்டும் என்றும் நடுவண் அரசுக்கு உத்தரவிட்டு இருந்தது. காவிரி நடுவர் மன்றம் 1991ம் ஆண்டு வழங்கிய இடைக்காலத் தீர்ப்பில் தமிழகத்திற்கு 205 டிஎம்சி தண்
”பணமதிப்பு நீக்கம் முற்றிலும் தோல்வி!”: பாஜக மூத்த தலைவர் பேச்சு

”பணமதிப்பு நீக்கம் முற்றிலும் தோல்வி!”: பாஜக மூத்த தலைவர் பேச்சு

அரசியல், இந்தியா, முக்கிய செய்திகள்
பணமதிப்பு நீக்கத்தின்போது பிரமதர் நரேந்திர மோடி சொன்ன ஊழல், கருப்புப் பணம் ஒழிப்பு, பயங்கரவாதம் தடுப்பு ஆகிய அனைத்து நோக்கங்களும் முற்றிலும் தோல்வி அடைந்திருக்கிறது என்று பாஜக மூத்த தலைவரும் முன்னாள் நடுவண் அமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார். பொருளாதார பேராசிரியர் அருண்குமார் எழுதிய 'பணமதிப்பு நீக்கமும் கருப்புப் பொருளாதாரமும்' என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா அண்மையில் டெல்லியில் நடந்தது. பாஜக மூத்தத் தலைவரும், முன்னாள் நடுவண் நிதியமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா நூலை வெளியிட்டார். நிகழ்ச்சியில் அவர் தன்னை, 'ஆளும் கட்சிக்குள் இருக்கும் எதிர்க்குரல்' என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். அவர் பேசியது: நடுவண் அரசின் அனைத்து முடிவெடுக்கும் அதிகாரங்களும் பிரதமர் அலுவலகத்தில் மட்டுமே குவிந்து கிடக்கின்றன. பிரதமர் நரேந்திர மோடி என்ற ஒரே ஒரு கொள்கை வகுப்பாளரை மட்டுமே இந்த அரசு கொண
ஆந்திரா: பாஜகவின் மோடி மஸ்தான் விளையாட்டு ஆரம்பம்!#NoConfidenceMotion

ஆந்திரா: பாஜகவின் மோடி மஸ்தான் விளையாட்டு ஆரம்பம்!#NoConfidenceMotion

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
ஆந்திரா மாநிலத்தில் தெலுங்குதேசம் கட்சிக்கு நாலாபுறமும் முட்டுக்கட்டைகள் பெருகி வருவதை மிக தாமதமாக உணர்ந்து கொண்ட பிறகே, சந்திரபாபு நாயுடு மத்திய அமைச்சரவையில் இருந்தும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் வெளியேறியிருக்கிறார். கடந்த 2014ம் ஆண்டு நடந்த மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தலின்போது பாஜகவின் புதிய பங்காளியாக இணைந்து கொண்ட சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, இன்று மத்திய பாஜகவுடன் உடனான உறவை முறித்துக் கொண்டுள்ளது. அரசியல் சதுரங்கத்தில் ஒவ்வொரு காய் நகர்த்தலின் பின்னணியிலும் வாக்கு வங்கி, சுயலாபமே மேலோங்கி இருக்கும். மக்கள் நலன், மாநில சுயாட்சி என்பதெல்லாம் அதற்கான சப்பைக்கட்டு வாதமே. மத்திய அமைச்சரவையில் இருந்து வெளியேறியதற்கு இரண்டு காரணங்களை முன்வைக்கிறது தெலுங்கு தேசம். ஒன்று, ஆந்திராவிற்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்கப்படாதது; இன்னொன்று,
எதிர்ப்புகளை எப்படி எதிர்கொண்டார் பெரியார்?

எதிர்ப்புகளை எப்படி எதிர்கொண்டார் பெரியார்?

அரசியல், ஈரோடு, கடலூர், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பெரியார் சிலைகளை தகர்ப்போம் என்ற ஹெச்.ராஜாவுக்கு கடும் கண்டனங்கள் தீக்கனலாய் பரவி வரும் நிலையில், அவரும் பாஜகவினரும் பெரியார் தன் மீதான எதிர்ப்புகளை எப்படியெல்லாம் எதிர்கொண்டு, நெஞ்சுரத்துடன் களமாடினார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ் என்று யுனெஸ்கோ அமைப்பே பாராட்டிய ஒப்பற்ற சமூகப் போராளியான பெரியாரின் ஒட்டுமொத்த பயணமும் திராவிடர்களுக்கானது; தமிழர்களுக்கானது. அவருடைய பயணத்தில் அவர் எதிர்கொண்ட எதிர்ப்புகளும், அவற்றை எதிர்கொண்ட விதமும் பற்றிய சில பதிவுகள் இங்கே... திராவிடர் கழகத்தினர், சேலத்தில் 1971ம் ஆண்டு ஜனவரி 23ம் தேதி மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாடு ஒன்றை நடத்தினர். அந்த மாநாட்டையொட்டி ஓர் ஊர்வலம் நடத்தப்பட்டது. அதில், திராவிடர் கழகத்தினர் ஹிந்து மத கடவுளர்களை அவமதித்ததாகக் கூறி, அவருடைய எதிர்ப்பாளர்கள் பெரியார் படத்தை எரித்தும், செருப்பால் அடித