
சேலத்தில் கோர விபத்து; காஸ் சிலிண்டர் வெடித்ததில் 4 வீடுகள் இடிந்தன; 5 பேர் பலி!
சேலத்தில், சமையல் காஸ் சிலிண்டர் வெடித்துச் சிதறியதில் அடுத்தடுத்து நான்கு வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. இந்த விபத்தில் 3 பெண்கள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.
சேலம் கருங்கல்பட்டி
பாண்டுரங்கவிட்டல் 3வது
தெருவைச் சேர்ந்தவர் வெங்கடராஜன் (62).
இவருக்கு தன் வீடு அருகே சொந்தமாக
மூன்று வீடுகள் உள்ளன.
இந்த வீடுகளில் கோபி, கணேசன், முருகன்
ஆகியோர் குடும்பத்துடன் வாடகைக்கு
வசித்து வருகின்றனர்.
இதில், கோபியுடன் அவருடைய
மாமியார் ராஜலட்சுமி, உறவினர்
எல்லம்மாள் ஆகியோரும், கணேசன்
வீட்டில் தாயார் அம்சவேணி,
மனைவி லட்சுமி, மகன்கள் ஷாம்,
சுதர்சன் ஆகியோரும், முருகன் வீட்டில்
மனைவி உஷாராணி, மகன் கார்த்திக்ராம்,
மகள் பூஜாஸ்ரீ ஆகியோரும்
வசித்து வருகின்றனர்.
இவர்களுடைய வீட்டிற்கு
அருகிலேயே சேலம் செவ்வாய்பேட்டை
தீயணைப்பு நிலையத்தில் சிறப்பு நிலைய
அலுவலராக பணியாற்றி வந்த
பத்மநாபன் (48), தனது ...