Thursday, June 4மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

தமிழ்நாடு

மக்கள் முட்டாள்களா?: பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு!

மக்கள் முட்டாள்களா?: பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு!

சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பிக்பாஸ் வீட்டில் இருந்து ஓவியா வெளியேறியதில் இருந்து அந்த நிகழ்ச்சி மீதான சுவாரஸ்யங்கள் குறைந்து விட்டது. மீண்டும் டிஆர்பி-ஐ எகிற வைக்கும் விதமாக காஜல், சுஜா, ஹரீஷ் போன்றவர்களை அழைத்து வந்தாலும், பிக்பாஸ் நிகழ்ச்சி என்னவோ களைகட்டவில்லை. தினமும் காலையில் ஒலிபரப்பப்படும் 'வேக்-அப்' பாடலுக்கு ஆடும் ஓவியாவின் நடனத்தை ரசிகர்கள ரொம்பவே இழப்பு என்றுதான் சொல்ல வேண்டும். இப்போது இருப்பவர்களில் பிந்து மாதவி, 'வேக்-அப் பாடலுக்கு ஆடினாலும், ஓவியாவின் எனர்ஜி அவரிடம் மிஸ்ஸிங். இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் மேலும் சுவாரஸ்யத்தைக் கூட்டுவதற்காக மீண்டும் ஹாரத்தி, ஜூலியானாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. நேற்று (27/8/17), நிகழ்ச்சியின் இடையே ஜூலியானா, ஹாரத்தி, காயத்ரி, பரணி 'டிரிக்கர்' சக்தி ஆகியோர் அழைக்கப்பட்டு இருந்தனர். பரணியைத் தவிர, மற்றவர்கள் மேடைக்கு வந்தபோது அரங்கில் இருந்த பார்வைய...
அதிமுக: சசிகலாவை நீக்க முடியுமா?

அதிமுக: சசிகலாவை நீக்க முடியுமா?

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரமாணப் பத்திரங்களில் அதிமுக பொதுச்செயலாளர் என சசிகலா கையெழுத்திட்டு உள்ள நிலையில், அவரை அந்தப் பதவியில் இருந்து நீக்க முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தினகரன் தரப்பும், எடப்பாடி பழனிசாமி தரப்பும் மாறி மாறி முண்டா தட்டுவதால், உச்சக்கட்ட குழப்பத்தில் அதிமுக உள்ளது. அதிமுக கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் இன்று (28/8/17) காலை நடந்தது. இந்தக் கூட்டத்தில் ஜெயா டிவி, நமது எம்ஜிஆர் ஊடகங்களை கட்சியே ஏற்று நடத்துவது, தினகரனால் நியமிக்கப்பட்ட பதவிகள் செல்லாது, தினகரனை கட்சியை விட்டு நீக்க வேண்டும், விரைவில் பொதுக்குழு&செயற்குழுவைக் கூட்டுவது என நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தீர்மானத்தில், சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் நியமிக்கப்பட்டது தற்காலிகமானது என்றும், அவருடைய நியமனத்தை தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை என்றும் குறிப்பிட...
ஓபிஎஸ் – இபிஎஸ் இணைந்தால் போதுமா?

ஓபிஎஸ் – இபிஎஸ் இணைந்தால் போதுமா?

அரசியல், அரியலூர், ஈரோடு, கடலூர், கன்னியாகுமரி, கரூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, கோயம்பத்தூர், சிவகங்கை, சென்னை, சேலம், தஞ்சாவூர், தமிழ்நாடு, தர்மபுரி, திண்டுக்கல், திருச்சி, திருநெல்வேலி, திருப்பூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி, தேனி, நாகப்பட்டினம், நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, புதுச்சேரி, பெரம்பலூர், மதுரை, முக்கிய செய்திகள், ராமநாதபுரம், விருதுநகர், விழுப்புரம், வேலூர்
அதிமுகவில் ஆதாயம் தரக்கூடிய பதவிகளில் இருப்பவர்கள் மட்டுமே இப்போதைக்கு இணைந்திருக்கிறார்கள். ஆனால், மாவட்ட அளவில் ஓபிஎஸ் - இபிஎஸ் அணிகளில் ஏற்பட்ட பிளவு இன்னும் சரிசெய்யப்படாததால், கிளைக்கழக தொண்டர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். பதவி, பணம் போன்ற சுகபோகங்களுக்காக அடித்துக் கொள்பவர்கள் தர்ம யுத்தம், தியாக - துரோக யுத்தம் போன்ற நவீன சொல்லாடல்களில் யுத்தங்களை நடத்தி வருவது தமிழகம் அறிந்த செய்திதான். அதிமுக கட்சிக்குள் நிலவிய தர்ம யுத்தம் இப்போதைக்கு சுமூகமாக 'முடித்து வைக்கப்பட்டு' இருக்கிறது. அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் ஓரங்கட்டப்பட்ட பின்னர், அவருடன் 10 எம்எல்ஏக்கள் சென்றனர். மற்றவர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து, முதல்வராக தொடர பக்கபலமாக இருந்தனர். ஓபிஎஸ் பக்கம் குறைவான எண்ணிக்கையில் எம்எல்ஏக்கள் இருந்தாலும் மாவட்ட அளவிலான கிளைக்கழக நிர்வாகிகள், குறிப்பாக எந்தப்ப...
எடப்பாடி பழனிசாமி பதவி பறிப்பு: தினகரன்

எடப்பாடி பழனிசாமி பதவி பறிப்பு: தினகரன்

அரசியல், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலம் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் பதவியில் இருந்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி நீக்கப்பட்டதாக, அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.  தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க.வில் ஏற்பட்ட உட்கட்சி பூசல்களால் அரசு இக்கட்டான நிலையில் உள்ளது. அக்கட்சியின் 21 எம்.எல்.ஏ.க்கள் டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அவர்கள் புதுச்சேரி விடுதியில் தங்கியுள்ளனர். தினகரனுக்கு எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் டி.டி.வி. தினகரன் அதிரடி நடவடிக்கையாக கட்சி பொறுப்பில் உள்ளவர்களின் பதவியினை பறித்து வருகிறார். அதற்கு பதிலாக தன்னுடைய ஆதரவாளர்களை நியமித்து வருகிறார். திருச்சி. எம்.பி. குமார், தைரியமிருந்தால் முதல் அமைச்சரை கட்சி பதவியிலிருந்து நீக்குங்கள் என தினகரனுக்கு சவால் விடுத்திருந்தார். இந்நிலையில், சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் ப...
அப்படி சொன்னாரா உதயசந்திரன் ஐஏஎஸ்?

அப்படி சொன்னாரா உதயசந்திரன் ஐஏஎஸ்?

கல்வி, சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலர் உதயச்சந்திரன் ஐஏஎஸ்-சின் அதிகாரத்தைக் குறைக்கும் வகையில், தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கை அத்துறை வட்டாரத்தையும் தாண்டி, பல்வேறு மட்டங்களிலும் அதிர்வலைகளை கிளப்பி இருக்கிறது. எதிர்க்கட்சிகள், கல்வியாளர்களிடம் இருந்து தொடர்ந்து வரும் கண்டனங்களே அதற்கு சான்று. இதையெல்லாம் தமிழக அரசு அவதானித்துக் கொண்டுதான் இருக்கும். உதயச்சந்திரன் ஐஏஎஸ், பள்ளிக்கல்வித்துறைக்கு பொறுப்பேற்ற பின்னர் அத்துறையில் நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கைகளையும், அவருக்கு 'செக்' வைக்கப்பட்டதற்கான சில காரணங்களையும் நாம் முன்பே குறிப்பிட்டு இருந்தோம். இப்போது மேலும் சில பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளன. ஒவ்வொரு கல்வி ஆண்டின் துவக்கத்திலும் ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படுவது வழக்கம். அதற்கு முன்பே, எந்தெந்த பள்ளிக்கு யார் யார் செல்ல வேண்டும் என்பதை ஆசிரியர்கள், தங்களுக்க...
சர்ச்சை நாயகன் குர்மீத் ராம் ரஹீம்!

சர்ச்சை நாயகன் குர்மீத் ராம் ரஹீம்!

இந்தியா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சாமியார் என்றாலே சர்ச்சைகள் இல்லாமலா?. வாயில் இருந்து லிங்கம் எடுப்பதாக பரபரப்பை ஏற்படுத்திய பிரேமானந்தா, ராஜீவ் கொலையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சந்திராசாமி, சங்கரராமன் கொலை வழக்கில் பரபரப்பை ஏற்படுத்திய ஜெயேந்திரர் என சாமியார்களை சுற்றி சர்ச்சைகளும் றெக்கை கட்டி பறந்துள்ளன. இவர்களை எல்லாம் ஓரங்கட்டி, எப்போதும் தன்னை சர்ச்சை வளையத்திற்குள்ளேயே வைத்திருப்பவர்தான் குர்மீத் ராம் ரஹீம் சிங். தேரா சச்சா சவுதா, என்பது ஓர் ஆன்மீக சபை. இதன் தலைவராக 1990ம் ஆண்டு பொறுப்புக்கு வந்தவர்தான் குர்மீத் ராம் ரஹீம். ஆரம்பம் முதலே தனக்கென ஒரு தொண்டர்கள் வட்டத்தை உருவாக்கி வைத்திருந்தார். இளம் வயதிலேயே ஆன்மீக தீட்சை பெற்றவர், அவர் ஒரு தெய்வப்பிறவி என்றெல்லாம் சொல்ல வைத்தார். சாமியார் என்றாலே காவி உடையில் அல்லது வெள்ளை உடையில்தான் இருக்க வேண்டும் என்ற மரபை உடைத்தார், குர்மீத் ராம். ராமராஜன், டி....
அஜித்தின் ‘விவேகம்’ வசூல்  எவ்வளவு?

அஜித்தின் ‘விவேகம்’ வசூல் எவ்வளவு?

தமிழ்நாடு
அஜித்குமார் நடிப்பில் கடந்த 24ம் தேதி 'விவேகம்' படம் வெளியானது. 'வேதாளம்' படத்தை அடுத்து, இரண்டரை ஆண்டு இடைவெளிக்குப் பின் இந்தப்படம் வெளியாகிறது என்பதால், ரிலீசுக்கு முன்பே 'தல' ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. தமிழ்நாட்டில் மட்டும் இந்தப்படம் 770 திரையரங்குகளில் வெளியிடப்பட்டு உள்ளது. உலகம் முழுவதும் 3000 திரையரங்குகளில் படம் வெளியாகி இருக்கிறது. காஜல் அகர்வால், அக்ஷராஹாஸன், பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் என நட்சத்திர அந்தஸ்து இருந்ததால் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு விவேகம் ஆரம்பத்திலேயே ரூ.120 கோடிக்கு வியாபாரம் ஆகியிருந்தது. தமிழில் ஜேம்ஸ்பாண்டு வகையறா பாத்திரங்களில் நடிக்க அஜித்குமாரை விட்டால் வேறு ஆளில்லை என்ற ரீதியில் நேர்மறை விமர்சனங்களும் வந்துள்ளன. 'தல' ரசிகர்களை பெரிய அளவில் விவேகம் திருப்தி படுத்தியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். இருப்பினும், 'வ...
நீடிக்குமா இந்த ஆட்சி?

நீடிக்குமா இந்த ஆட்சி?

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
மழை விட்டும் தூவானம் விடவில்லை என்ற கதையாக ஆளும் அதிமுகவுக்குள் உச்சக்கட்ட பூசல்கள் அரங்கேறி வருகின்றன. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அக்கட்சிக்குள் நிகழும் சம்பவங்களை வைத்துப் பார்க்கையில் இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு, இந்த கட்சி ஆட்சிக்கட்டிலில் இருக்குமா என்ற சந்தேகம் பாமரனுக்கும் எழாமல் இல்லை. ஜெ., மரணத்தின் பின்னணியில் சசிகலா குடும்பம் இருக்கிறதோ இல்லையோ, ஆனால் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது ஓ.பன்னீர்செல்வம் உள்பட யாரையுமே பார்க்க அனுமதிக்காததன் பின்னணி என்ன?. இதெல்லாம், ஜெ., ஆளுமையை நேசிக்கும் வெகுஜன மக்களின் மனதில் படிந்திருக்கும் கேள்விகள். அதன் காரணமாகவே சசிகலா குடும்பத்தினர் மீது மக்களுக்கு ஒருவித வெறுப்புணர்வு இருக்கிறது. அதேநேரம், ஒன்றரை கோடி தொண்டர்கள் கொண்ட மாபெரும் இயக்கமான அதிமுகவை, 'எல்லா விதத்திலும்' வழிநடத்தும் 'சக்தி' மன்னார்குடி கும்பலுக்கு இருக்கிறது என்பதையும் ம...
ஆளுநர் நாளை தமிழகம் வருகிறார்

ஆளுநர் நாளை தமிழகம் வருகிறார்

சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மாற்றக்கோரி, டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் கடிதம் கொடுத்துள்ள நிலையில் ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் நாளை (26/8/17) தமிழகம் வருகிறார். இதற்கிடையே, புதுச்சேரியில் ரிசார்ட்டில் தங்கியுள்ள தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேரும் நாளை ஆளுநரை நேரில் சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் தினகரன் அணியைச் சேர்ந்த 19 எம்எல்ஏக்களையும் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி அணியைச் சேர்ந்த கொறடா ராஜேந்திரன், பேரவைத் தலைவர் தனபாலிடம் கடிதம் கொடுத்துள்ளார். இதுபோன்ற பரபரப்பான சூழ்நிலையில் ஆளுநர் வருவது, தமிழக அரசியல் களத்தில் மீண்டும் பரபரப்பு சம்பவங்கள் நிகழக்கூடும் என்றும் தெரிகிறது....
பள்ளிக்கல்வித்துறை செயலர் உதயசந்திரனுக்கு ‘செக்’?

பள்ளிக்கல்வித்துறை செயலர் உதயசந்திரனுக்கு ‘செக்’?

கல்வி, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பள்ளிக்கல்வித்துறைக்கு தற்காலிக முதன்மைச் செயலர் அந்தஸ்தில் ஒருவரை தமிழக அரசு நியமித்திருப்பதன் மூலம், பள்ளிக்கல்வித்துறை செயலராக இருந்து வரும் உதயச்சந்திரன் ஐஏஎஸ்-க்கு, தமிழக அரசு மறைமுகமாக கடிவாளம் போட்டுள்ளது. இதன் பின்னணியில் தனியார் பள்ளிகளின் அழுத்தமும், காண்டிராக்டர்களும் இருப்பதாக சொல்லப்படுகிறது. தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலராக நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த சபீதா ஐஏஎஸ், கடந்த மார்ச் மாதம் அதிரடியாக மாற்றப்பட்டார். உடனடியாக அந்த பதவிக்கு உதயச்சந்திரன் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டார். அவர் ஆட்சியராக இருந்தபோதே மக்களிடம் நற்பெயரை சம்பாதித்து இருந்ததால், அவரால் பள்ளிக்கல்வித்துறையில் ஆக்கப்பூர்வமான பல நன்மைகள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் - உதயச்சந்திரன் ஆகியோர் கூட்டணியில் பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நட...