Friday, May 1மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Blog

சட்டமன்ற தேர்தல் 2026: தமிழகத்தில் 85.10 சதவீதம் வாக்குப்பதிவு

சட்டமன்ற தேர்தல் 2026: தமிழகத்தில் 85.10 சதவீதம் வாக்குப்பதிவு

அரசியல், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப். 23ம் தேதி நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம், கடந்த மார்ச் 15ம் தேதி அறிவிக்கை வெளியிட்டது. அந்த நிமிடத்தில் இருந்தே மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இந்த தேர்தலில், திமுக தலைமையில் காங்கிரஸ், தேமுதிக, விசிக, சிபிஐ., சிபிஎம்., மதிமுக, ஐயுஎம்எல் உள்ளிட்ட 25 கட்சிகள் கூட்டணி அமைத்து களம் கண்டன. அதிமுக தலைமையில் பாஜக., அமமுக, தமாகா., உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. இந்த இரு கூட்டணிகள் தவிர, நாம் தமிழர் கட்சி, புதிய வரவான நடிகர் விஜய்யின் தவெக., ஆகிய கட்சிகளும் தேர்தல் களம் கண்டன. மாநிலம் முழுவதும் நான்கு முனைப் போட்டி ஏற்பட்டது. குறிப்பிட்ட தொகுதிகளில் வி.கே.சசிகலாவின் அஇபுதமமுக கட்சியும், டாக்டர் ராமதாஸின் அணி கட்சியும் கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்தித்தது. கடைசி நேரத்தில் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி...
நாமக்கல் மாவட்டம்: தேர்தல் களத்தில் முந்துவது யார்?

நாமக்கல் மாவட்டம்: தேர்தல் களத்தில் முந்துவது யார்?

அரசியல், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
தமிழக சட்டமன்ற தேர்தல் பரப்புரை நேற்று மாலையுடன் ஓய்ந்த நிலையில், நாளை வாக்குப்பதிவு நடக்கிறது. இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்தின் இறுதிக்கட்ட தேர்தல் கள நிலவரங்களை விசாரித்தோம். நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், ராசிபுரம் (தனி), சேந்தமங்கலம் (தனி), பரமத்தி வேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. நாதக, தவெக கட்சிகள் களத்தில் இருந்தாலும் திமுக, அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு இடையேதான் நேரடி போட்டி நிலவுகிறது. நாமக்கல்: திமுக தரப்பில் மகளிர் தொண்டரணி நிர்வாகி ராணி, அதிமுகவில் தொழில் அதிபர் ஸ்ரீதேவி பி.எஸ்.மோகன் நேரடியாக மோதுகின்றனர். முன்னாள் மா.செ.க்கள் காந்திசெல்வன், 'பார்' இளங்கோவன் ஆகியோருக்கு வேறு தொகுதிகளில் தேர்தல் பணிகள் வழங்கப்பட்டதால் அவர்களுடைய ஆதரவாளர்களும், சிட்டிங் எம்எல்ஏ ராமலிங்கமும் வேட்பாளர் ராணிக்கு ஆதரவாக பரப்புரைக்குச் செல்லவில்லை என்...
சேலம்: 11 தொகுதிகளின் இறுதிக்கட்ட தேர்தல் கள நிலவரம்!

சேலம்: 11 தொகுதிகளின் இறுதிக்கட்ட தேர்தல் கள நிலவரம்!

அரசியல், சேலம், முக்கிய செய்திகள்
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளையும் வாரிச் சுருட்டும் நோக்கில் திமுக, அதிமுக கூட்டணி கட்சிகள் உச்சக்கட்ட பரப்புரையில் ஈடுபட்டுள்ளன. நா.த.க., த.வெ.க., கட்சிகளும் களத்தில் இருக்கின்றன. வெற்றி நிலவரம் குறித்து களத்தில் விசாரித்தோம். கெங்கவல்லி (தனி): இத்தொகுதியில், திமுக தரப்பில் மாஜி எம்எல்ஏ சின்னதுரை களமிறங்கியுள்ளார். தொகுதியில் நன்கு அறிமுகம் ஆனவர். மகளிர் உரிமைத்தொகை, விடியல் பயணம் உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்கள் பெரிய அளவில் பெண்களிடம் 'ரீச்' ஆகியிருப்பது இவருக்கு பலம். அதிமுக சார்பில் சிட்டிங் எம்.எல்.ஏ., நல்லதம்பி மீண்டும் போட்டியிடுகிறார். கடந்த 5 ஆண்டுகளில் தொகுதியில் குறிப்பிடத்தக்க வளர்ச்சிப் பணிகளைச் செய்யவில்லை. எனினும், மக்களிடம் இவர் மீது அதிருப்தியும் இல்லை. தம்மம்பட்டி பேரூர், உலிபுரம், நாகியம்பட்டி, ஜக்கமசமுத்திரம் பகுதி வரை திமுகவுக்கும், கெங்கவல்...
பட்டுவாடா பணத்தில் ‘கட்டிங்’; எடப்பாடியில் திமுக அப்செட்!

பட்டுவாடா பணத்தில் ‘கட்டிங்’; எடப்பாடியில் திமுக அப்செட்!

அரசியல், சேலம், முக்கிய செய்திகள்
எடப்பாடி தொகுதியில் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக, திமுக மேலிடம் வழங்கிய பணத்தில் கை வைத்த மேற்கு மா.செ., கணிசமான தொகையை, மேட்டூர் தொகுதிக்கு மடைமாற்றம் செய்ததாக பரபரப்பு புகார்கள் கிளம்பியுள்ளன. தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை மறுநாள் (ஏப். 23) நடக்கிறது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக, நாதக, தவெக என நான்கு முனை போட்டி நிலவினாலும் திமுக, அதிமுக கூட்டணி கட்சிகளிடையேதான் நேரடி போட்டி நிலவுகிறது. முக்கிய கட்சிகள் கடந்த இரு நாள்களாக வாக்காளர்களுக்கு கரன்சி பாசனத்தில் கவனம் செலுத்தி வருகின்றன. சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் அமைச்சர் ராஜேந்திரன் போட்டியிடும் சேலம் வடக்கு, அம்மாபேட்டை லோகநாதன் களமிறங்கியுள்ள சேலம் தெற்கு, கொளத்தூர் மிதுன் சக்கரவர்த்தி களம் காணும் மேட்டூர் ஆகிய மூன்று தொகுதிகளில் மட்டும் ஆளுங்கட்சியான திமுக தரப்பில் வாக்காளர்களுக்கு 2000 ரூபாய் பட்டுவ...
சட்டமன்ற தேர்தல்: ராசிபுரத்தின் ‘வேந்தர்’ ஆவாரா அமைச்சர் மதிவேந்தன்?

சட்டமன்ற தேர்தல்: ராசிபுரத்தின் ‘வேந்தர்’ ஆவாரா அமைச்சர் மதிவேந்தன்?

அரசியல், நாமக்கல், முக்கிய செய்திகள்
தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப். 23ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் இறுதிக்கட்ட பரப்புரையில் தீவிரமாக இறங்கியுள்ளன. இந்நிலையில், திமுக சார்பில் அமைச்சர் மதிவேந்தன் மீண்டும் ராசிபுரம் (தனி) சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். அமைச்சராக அவர் இந்த தொகுதியில் செய்த வளர்ச்சிப்பணிகள், தேர்தல் நிலவரம் குறித்து களத்தில் விசாரித்தோம். மதிவேந்தன் ராசிபுரம் தொகுதியில், 1971க்குப் பிறகு நடந்த 12 தேர்தல்களில் அதிமுக 8 முறை வென்றுள்ளது. இந்த தொகுதி இலைக்கட்சியின் வலுவான கோட்டை. கடந்த 2021 தேர்தலில் அதிமுகவின் டாக்டர் சரோஜாவை எதிர்த்து, திமுக சார்பில் முதன்முதலாக களமிறங்கிய மதிவேந்தன், 1952 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, அதிமுக கோட்டையைத் தகர்த்தார். நாமக்கல் மாவட்டத்தில் திமுகவின் முன்னோடிகளில் ஒருவரான டாக்டர் மாயவனின் மகன் என்ற நுழைவுச் சீட்டு இருந்தாலும், கடந்...
தேர்தல் 2026: சேலத்தில் கோட்டையைப் பிடிக்குமா திமுக?

தேர்தல் 2026: சேலத்தில் கோட்டையைப் பிடிக்குமா திமுக?

அரசியல், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் மார்ச் 30ம் தேதி தொடங்குகிறது. தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டை வெற்றிகரமாக முடித்து, முதல்கட்டமாக 23 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டிருக்கிறார் அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி. இன்னும் ஓரிரு நாளில் திமுக கூட்டணியும், முழு வேட்பாளர் பட்டியலை வெளியிட உள்ளது. திமுக, அதிமுக, நாதக, தவெக என வெளிப்பார்வைக்கு நான்கு முனைப் போட்டியெனக் கூறப்பட்டாலும், உண்மையில் திமுக, அதிமுக இடையேதான் நேரடிப் போட்டி நிலவுகிறது. ஆளுங்கட்சி அந்தஸ்து, அபரிமிதமான பணபலம், வலுவான கூட்டணி உள்ளிட்ட காரணிகளால் ஒட்டுமொத்த அளவில் திமுகவுக்கு சற்று சாதகமான சூழல் உள்ளது. அதேநேரம், கொங்கு மண்டலத்தில் இந்த முறையும் ஆளும் திமுகவுக்கு இலைக்கட்சி சிம்மசொப்பனமாக இருக்கும் என்றே கள நிலவரம் கூறுகிறது. குறிப்பாக, சேலம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 11 தொகுதிகள...
போட்டுக்கொடுத்த மேயர்… மாட்டிக்கொண்ட அமைச்சர்…!

போட்டுக்கொடுத்த மேயர்… மாட்டிக்கொண்ட அமைச்சர்…!

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
திமுக கூட்டணியை இறுதி செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வரும் நிலையில், வேட்பாளர்களை தேர்வு செய்வதில் ஆளுங்கட்சி கவனம் செலுத்தி வருகிறது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட அண்ணா அறிவாலயத்திடம் டிக்கெட் கேட்டு 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விருப்ப மனு அளித்துள்ளனர். இதையடுத்து, விருப்ப மனு அளித்தவர்களிடம் தொகுதிவாரியாக நேர்காணல் நடந்து வருகிறது. திமுக நேர்காணல் எப்படி நடக்கிறது என்பது குறித்து அறிந்து கொள்ள அண்ணா அறிவாலயம் வட்டாரத்தில் ஒரு விசிட் அடித்தோம். கூட்டணி கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு, கட்சி நிர்வாகிகள் கூட்டம், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு பதிலடி, திராவிட மாடல் ஆட்சியின் சாதனை தொடர்பான விளம்பர ஷூட்டிங் என பல்வேறு 'டைட்' ஷெட்யூல்களுக்கு இடையிலும், வேட்பாளர்களைத் தேர்வு செய்வதிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் படு சுறுசுறுப்பாக இயங்கி வருவதா...
ஏப்ரல் 23ல் தமிழக சட்டமன்ற தேர்தல்; வேட்புமனு தாக்கல் 30ம் தேதி தொடக்கம்

ஏப்ரல் 23ல் தமிழக சட்டமன்ற தேர்தல்; வேட்புமனு தாக்கல் 30ம் தேதி தொடக்கம்

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழகத்தில், வரும் ஏப்ரல் 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 30ம் தேதி தொடங்குகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் அறிவிப்பை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் ஞானேஷ்குமார், மார்ச் 15ம் தேதி மாலையில் வெளியிட்டார். தமிழகத்தில் நடப்பு சட்டமன்றத்தின் ஆயுள் காலம் மே 10ம் தேதியும், புதுச்சேரி சட்டமன்றத்தின் ஆயுள் ஜூன் 15ம் தேதியும் முடிவுக்கு வருகின்றன. இதையடுத்து இரு மாநிலங்களுக்கும் சட்டமன்ற தேர்தல் நடத்துவதற்கான ஆயத்தப்பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் தமிழகம், புதுச்சேரி மட்டுமின்றி அசாம், கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பையும் ஆணையம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் நடக்கிறது. இத...
திண்ணை: அமைச்சருக்கு எதிராக படை திரட்டும் கோஷ்டிகள்

திண்ணை: அமைச்சருக்கு எதிராக படை திரட்டும் கோஷ்டிகள்

திண்ணை, முக்கிய செய்திகள்
''இந்த வருஷம் வெயில் புரட்டி எடுக்கும்னு பேசிக்கிறாங்களே அப்படியா?,'' என்று ஏற்கனவே வீட்டுத் திண்ணையில் வந்து அமர்ந்திருந்த பேனாக்காரரைப் பார்த்துக் கேட்டபடியே பக்கத்தில் வந்து அமர்ந்தார் பொய்யாமொழியார். ''வானிலை அறிக்கையை விடுங்க… தமிழ்நாட்டு தேர்தல் களம் வரலாறு காணாத வகையில இந்தமுறை ரொம்பவே கனல் தெறிக்கப் போகுது பாருங்க,'' என்று நேரடியாகவே சங்கதிக்கு வந்தார் பேனாக்காரர். இதற்கிடையே அங்கு வந்து சேர்ந்த நக்கல் நல்லசாமி, ''தமிழ்நாடு அரசியல் களம் இருக்கட்டும். மாங்கனி மாவட்ட கள நிலவரத்தைச் சொல்லுங்க,'' என்றார். ''சமீபத்துல மாங்கனி மாவட்டத்தில் கடாரம் கொண்டான் அமைச்சரின் உள்ளடி வேலைகள் குறித்து ஒரு பத்திரிகையில் செய்தி வந்தது. சில நாள்களுக்கு முன்பு மாநகராட்சியில் நடந்த கூட்டத்துல எதிர்க்கட்சி கவுன்சிலர் அந்த பத்திரிகையை கையில் ஏந்தியபடி அமைச்சரின் ஆதரவு கவுன்சிலர்கள் குறித்து ஏதோ பே...
பட்ஜெட் எதிரொலி: ரத்தக்களறியான இந்திய பங்குச்சந்தை

பட்ஜெட் எதிரொலி: ரத்தக்களறியான இந்திய பங்குச்சந்தை

முக்கிய செய்திகள், வர்த்தகம்
பியூச்சர் மற்றும் ஆப்ஷன் டிரேடிங் மீதான எஸ்டிடி வரி உயர்வு காரணமாக, பட்ஜெட் நாளான நேற்று இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்தன. இந்திய அரசின் 2026 - 2027ஆம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட் உரையை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஞாயிற்றுக்கிழமை (பிப். 1) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு உற்சாகம் தரும் அறிவிப்புகள் வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பட்ஜெட் உரையில் அதற்கான அறிகுறிகள் இல்லாததால் ஏமாற்றம் அடைந்தனர். பியூச்சர் மற்றும் ஆப்ஷன் வர்த்தகத்தின் மீது எஸ்டிடி வரி உயர்வு, திரும்பப் பெறுதல்களுக்கான வரி விதிப்பு, லாப முன்பதிவு, உலோகப் பங்குகளின் வீழ்ச்சி காரணமாக இந்தியப் பங்குச்சந்தைகள் ரத்தக் களறியானது. பட்ஜெட் தாக்கலுக்கு முன்பு, சென்செக்ஸ் மற்றும் நிப்டி 0.5 சதவீதம் வரை உயர்ந்தது. ஆனால், பட்ஜெட் தாக்கலான பிறகு சந்தையின் போக்கில் பெரும்...