Friday, May 3மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

அரசியல்

சேலம் மாவட்டத்தில் இரண்டு கட்ட உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எவ்வளவு?

சேலம் மாவட்டத்தில் இரண்டு கட்ட உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எவ்வளவு?

அரசியல், சேலம், முக்கிய செய்திகள்
சேலம் மாவட்டத்தில், இரண்டு கட்டங்களாக நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மொத்தம் 81.50 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு, எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது. முதல்கட்டமாக டிசம்பர் 27, 2019ம் தேதி தேர்தல் நடந்தது. இரண்டாம் கட்டமாக திங்கள்கிழமை (டிச. 30, 2019) வாக்குப்பதிவு நடந்தது.   சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரை, மொத்தம் 20 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இவற்றில், முதல்கட்டமாக 12 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 27ம் தேதி தேர்தல் நடந்தது. அதில், 81.68 சதவீதம் பேர் வாக்களித்து இருந்தனர். இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் எஞ்சியுள்ள ஆத்தூர், அயோத்தியாப்பட்டணம், கெங்கவல்லி, பனமரத்துப்பட்டி, பெத்தநாயக்கன்பாளையம், சேலம், தலைவாசல், வாழப்பாடி
தமிழ்நாட்டில் ஊழலை ஊழலே இடப்பெயர்ச்சி செய்கிறது! பழ.கருப்பையா சொல்கிறார்!!

தமிழ்நாட்டில் ஊழலை ஊழலே இடப்பெயர்ச்சி செய்கிறது! பழ.கருப்பையா சொல்கிறார்!!

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
கடந்த 2011 முதல் 2016 வரை ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அதிமுக எம்எல்ஏவாக இருந்தவர் பழ.கருப்பையா (76). அவருடைய மறைவுக்குப் பிறகு திமுகவில் இணைந்தார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, அக்கட்சியில் இருந்தும் வெளியேறி இருக்கிறார் பழ.கருப்பையா. பழ.கருப்பையா, ஒரு கட்சியில் இருந்து கொண்டே எப்போது அந்தக் கட்சியையே எதிர்மறையாக விமர்சிக்கிறாரோ அதையடுத்து அவர் அக்கட்சியைவிட்டு விலகி வேறு கட்சியில் சேரப்போகிறார் என்பது அவருடைய கடந்த கால அரசியல் செயல்பாடுகளை உற்றுக் காண்பவர்களுக்கு நன்றாகவே தெரியும்.   இந்திய தேசிய காங்கிரஸ், சிண்டிகேட் காங்கிரஸ், ஜனதா கட்சி, திமுக, மதிமுக மீண்டும் காங்கிரஸ், பின்னர் அதிமுக, திமுக என கடந்த 50 ஆண்டுகளில் அவர் போகாத அரசியல் கட்சிகள் இல்லை. நாளையே அவர் மீண்டும் திமுகவில் இணைந்தாலும், சேர்த்துக் கொள்ள அக்கட்சியும் மறுக்காது. ஆனாலும், தரம
பணமதிப்பிழப்பு காலத்தில் சொத்துகளை வாங்கி குவித்த சசிகலா! 

பணமதிப்பிழப்பு காலத்தில் சொத்துகளை வாங்கி குவித்த சசிகலா! 

அரசியல், முக்கிய செய்திகள்
பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட காலத்தில், ஜெயலலிதான் தோழி சசிகலா, 1674.5 கோடிக்கு சொத்துகளை வாங்கி குவித்துள்ளதை வருமானவரித்துறை கண்டுபிடித்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி இரவு, இந்தியாவில் அதுவரை புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் தாள்கள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி திடீரென்று அறிவித்தார்.   கருப்புப்பணத்தை ஒழிப்பது, தீவிரவாதிகளுக்கு பணம் கைமாறுவதை தடுப்பது, ஊழலை ஒழிப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக அப்போது அவர் சொன்னார்.   பிறகு, 2017 ஜனவரி மாதம் முதல் புதிதாக 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் தாள்களை அச்சிட்டு புழக்கத்திற்கு கொண்டு வந்தனர். பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது மாபெரும் முட்டாள்தனம் என்று பாஜகவினரைத் தவிர உலகின் எல்லா பொருளாதார வல்லுநர்களும
அன்று தீவிரவாதி; இன்று வன்முறை! சிக்கிக் கொண்டாரா ரஜினி?

அன்று தீவிரவாதி; இன்று வன்முறை! சிக்கிக் கொண்டாரா ரஜினி?

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 17 பேர் பலியாயினர். அப்போது இதுகுறித்து கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த், போராட்டக்காரர்களுடன் தீவிரவாதிகளும் நுழைந்ததால்தான் போராட்டம் வேறு திசைக்குச் சென்றதாகவும், இப்படி எதற்கெடுத்தாலும் போராடினால் நாடு சுடுகாடு ஆகிவிடும் என்றும் சொன்னார். இப்படி அவர் கருத்து சொன்ன அடுத்த நிமிடமே, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் போன்றவர்கள் ரஜினியை கடுமையாக விமர்சனம் செய்தனர். போராட்டக்காரர்களையும், குண்டடிபட்டு இறந்தவர்களையும் ரஜினி தீவிரவாதிகள் என்கிறாரா? என பொதுவெளியில் வினாக்களை முன்வைத்தனர். அதற்கு ரஜினியிடம் இருந்து மவுனமே பதிலாக இருந்தாலும், அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினார். இந்நிலையில், நடுவண் பாஜக அரசு, குடியுரிமை திர
சேலம் திமுக பிரமுகரை மிரட்டிய உளவுத்துறை! ஆழம் பார்க்கும் ஆளுங்கட்சி!

சேலம் திமுக பிரமுகரை மிரட்டிய உளவுத்துறை! ஆழம் பார்க்கும் ஆளுங்கட்சி!

அரசியல், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலத்தைச் சேர்ந்த திமுக பிரமுகரை,  மாவோயிஸ்ட்களுடன் தொடர்புடையவராக சித்தரித்து, உளவுத்துறை மூலம் மிரட்டிப் பணிய வைக்கும் மூன்றாம்தர வேலைகளில் ஆளுங்கட்சி இறங்கி இருப்பது அரசியல் அரங்கில் சலசலப்புகளை ஏற்படுத்தி உள்ளது.   சேலத்தை அடுத்த அயோத்தியாப்பட்டணத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். அயோத்தியாப்பட்டணம் ஒன்றியக்கு-ழுத் தலைவர், திமுகவில் அயோத்தியாப்பட்டண ஒன்றிய செயலாளர் ஆகிய பொறுப்புகளில் இருந்து வந்த அவர், தற்போது கிழக்கு மாவட்ட திமுகவில் அவ்வொன்றியத்தின் பொறுப்பாளராகவும் இருந்து வருகிறார். செவ்வாய்க்கிழமை (நவ. 12, 2019) மாலை 4.30 மணியளவில், வீடு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று இரண்டு கார்கள் விஜயகுமார் அருகில் வந்து நிற்க, அவற்றில் இருந்து 'டிப்-டாப்' ஆக உடையணிந்த நான்கைந்து பேர் இறங்கியிருக்கின்றனர். அவரிடம் ஏதோ ரகசியமாக கிசுகிசுத்தவர்க
சொந்த மண்ணில் எடப்பாடி வீழ்ந்தது ஏன்? காலை வாரிய பாமக, தேமுதிக! கைவிட்ட வெற்றி விநாயகர்!!

சொந்த மண்ணில் எடப்பாடி வீழ்ந்தது ஏன்? காலை வாரிய பாமக, தேமுதிக! கைவிட்ட வெற்றி விநாயகர்!!

அரசியல், சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஆளுங்கட்சியின் மீதான வெறுப்பு, பாஜகவுக்கு எதிரான மக்களின் மனநிலை மட்டுமின்றி, பெரிதும் நம்பிக்கொண்டிருந்த கூட்டணி கட்சிகளே சொந்த மண்ணில் எடப்பாடியை திட்டமிட்டு வீழ்த்தி இருப்பது தெரிய வந்துள்ளது.   பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி, தமிழக முதல்வராக அமர்த்தப்பட்டது ஒரு விபத்து என்றாலும், அதன் பிறகு அவரின் ஒட்டுமொத்த கவனமும் கொங்கு மண்டலத்தின் மீதே குவிந்து இருந்தது. மக்களவைக்கு மட்டுமல்ல; ஒருவேளை சட்டப்பேரவை தேர்தல் வந்தாலும் கொங்கு மண்டலத்தில் தனது செல்வாக்கை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் நோக்கிலேயே மாதத்தில் இருமுறையாவது அவர் தனது சொந்த மாவட்டமான சேலத்திற்கு வந்து விடுவார். நீரா பானம், அத்திக்கடவு அவினாசி திட்டங்கள் கொண்டு வந்ததும்கூட, அவர் சார்ந்த சமூகத்தினரின் வாக்குகளை குறிவைத்துதான். ஆனால், இந்த மக்களவை தேர்தலில் கொங்கு மண்டலத்தில் அதிமுகவின் க
மக்களவை தேர்தல்: சேலத்தில் திமுக வரலாற்று வெற்றி! எஸ்.ஆர். பார்த்திபன் எம்.பி. ஆனார்!!

மக்களவை தேர்தல்: சேலத்தில் திமுக வரலாற்று வெற்றி! எஸ்.ஆர். பார்த்திபன் எம்.பி. ஆனார்!!

அரசியல், சேலம், முக்கிய செய்திகள்
மக்களவை தேர்தலில், 39 ஆண்டுகளுக்குப் பிறகு சேலம் தொகுதியை வசப்படுத்தி, வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது, திமுக. அக்கட்சியின் வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் அமோக வெற்றி பெற்று, எம்.பி. ஆகியுள்ளார்.   தமிழகத்தில் மக்களவை தேர்தலில் சேலம் தொகுதியில் திமுக சார்பில் எஸ்.ஆர்.பார்த்திபன், ஆளும் அதிமுக தரப்பில் கே.ஆர்.எஸ். சரவணன் ஆகியோர் போட்டியிட்டனர். இவர்கள் மட்டுமின்றி, டிடிவி தினகரனின் அமமுக தரப்பில் எஸ்.கே.செல்வம், மக்கள் நீதி மய்யம் சார்பில் பிரபு மணிகண்டன், நாம் தமிழர் கட்சி சார்பில் ராசா அம்மையப்பன் உள்ளிட்ட 22 பேர் போட்டியிட்டனர். ஏற்கனவே கடந்த 2009, 2014 ஆகிய இரு மக்களவை தேர்தல்களிலும் சேலம் தொகுதியை அதிமுகவே கைப்பற்றி இருந்தது. அத்துடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டம் என்பதால், எப்படியும் இந்த தேர்தலிலும் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக வெற
போலி ஜனநாயகத்திற்கா உங்கள் வாக்கு? #1

போலி ஜனநாயகத்திற்கா உங்கள் வாக்கு? #1

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா என்பதைக் காட்டிலும் அதில் மெச்சத்தக்கது வேறேதும் இல்லை என்பது என்னளவிலான புரிதல். ஏப்ரல் 18, 2019ல் நடக்க இருக்கும் மிகப்பெரும் ஜனநாயகத் திருவிழாவில் பங்கேற்க, தமிழக வாக்காளர்கள் இந்நேரம் மனதளவில் தயார் படுத்திக் கொண்டிருக்கக்கூடும். வாக்குச்சாவடிக்குள் நீங்கள் செல்வதற்குள்ளாவது நான் உங்களுடன் பேசி விட வேண்டும் என்ற உந்துதலாலேயே இப்போது பேச விழைகிறேன். இந்தியத் தேர்தல் அமைப்பு முறை, இந்த தேசத்தின் குடிமக்களை வெறும் வாக்காளன் என்ற அளவில் மட்டுமே சுருங்கிப் போகச் செய்துவிட்டதுதான், இந்திய ஒன்றியத்தில் நாம் கண்ட மக்களாட்சி தத்துவம். சொல்லப்போனால், இப்போதுள்ள தேர்தல் நடைமுறைகள், அரசியல் களத்தில் இருந்து சாமானிய மக்களை முற்றாக ஒதுக்கித் தள்ளிவிட்டது எனலாம். உடனே நீங்கள், காளியம்மாக்களும், பொன்னுத்தாய்களும்கூட இந்த தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு பெற்
திண்ணை: சொல்வதெல்லாம் பொய்!

திண்ணை: சொல்வதெல்லாம் பொய்!

அரசியல், தமிழ்நாடு, திண்ணை, முக்கிய செய்திகள்
''தமிழ்நாட்டுல மக்களவை தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் களம் சூடு ஏறிட்டே போறது. அதைவிட இப்பவே கத்திரி வெயிலாட்டம் கொளுத்துது. வெளில தல காட்ட முடியலப்பா...'' என்றபடியே, நக்கல் நல்லசாமியின் வீட்டுத் திண்ணையில் வந்து அமர்ந்தார் பேனாக்காரர்.   வெயிலுக்கு இதமாக மய்ய அரைத்த இஞ்சி, கறிவேப்பிலை, பொடியாக நறுக்கின வெள்ளரி துண்டுகள் கலந்த மோரை கொண்டு வந்து கொடுத்தார் நக்கலார். ''தேர்தல் சம்பந்தமா லேட்டஸ்ட் சேதி என்ன இருக்கு? கருத்துக்கணிப்பு கிணிப்பு ஏதாச்சும் இருக்கா?'' என்றார்.   ''இப்பலாம் எங்க உருப்படியான கருத்துக்கணிப்பு இருக்கு... எல்லாம் திணிப்புதான். அவங்கவங்க அரிப்புக்கு தகுந்தமாதிரி சொறிஞ்சு விடறதுக்கும் இன்றைக்கு நிறைய ஊடகங்கள், தரகர்கள் வந்துட்டாங்க. அப்படி யாருக்கிட்டதான் கருத்துக்கணிப்பு நடத்துவாங்களோ... கருத்து சொன்ன ஒரு பயலும் பேஸ்புக்லயோ, டிவிட்டர்லயோ, வாட்ஸ்அப்பு
எட்டுவழிச்சாலை ரத்து: உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு; விவசாயிகள் வெற்றி கொண்டாட்டம்!

எட்டுவழிச்சாலை ரத்து: உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு; விவசாயிகள் வெற்றி கொண்டாட்டம்!

அரசியல், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, சென்னை, சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, திருவண்ணாமலை, முக்கிய செய்திகள்
சேலம் - சென்னை எட்டு வழிச்சாலைத் திட்டம் குறித்த அராசணையை ரத்து செய்து உயர்நீதிமன்றம் திங்கள் கிழமையன்று (ஏப்ரல் 8, 2019) பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. இதையடுத்து சேலம் உள்ளிட்ட ஐந்து மாவட்ட விவசாயிகளும் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியைக் கொண்டாடினர். சேலம் முதல் சென்னை வரையில் பசுமைவழி விரைவுச்சாலை என்ற பெயரில் எட்டுவழிச்சாலைத் திட்டத்தை நிறைவேற்ற நடுவண் பாஜக மற்றும் தமிழக அதிமுக அரசுகள் மும்முரமாக செயல்பட்டு வந்தன. பத்தாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டத்தால், சேலம் - சென்னை இடையிலான பயண நேரம் 70 கி.மீ. தூரம் குறையும் வகையில் மொத்தம் 277.3 கி.மீ. தூரத்திற்கு பாதை அமைக்கப்படும் என்று வரைவுத்திட்டத்தில் சொல்லப்பட்டது.   இதற்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் 2343 ஹெக்டேர் நிலம் தேவை என்பதும்