Sunday, January 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

வர்த்தகம்

ரத்தக்களரியான பங்குச்சந்தை; ஒரே நாளில் 8.30 லட்சம் கோடி ரூபாய் இழப்பு! ஹெச்எம்பிவி தொற்று காரணமா?

ரத்தக்களரியான பங்குச்சந்தை; ஒரே நாளில் 8.30 லட்சம் கோடி ரூபாய் இழப்பு! ஹெச்எம்பிவி தொற்று காரணமா?

முக்கிய செய்திகள், வர்த்தகம்
புத்தாண்டின் முதல் வாரத்திலேயே பங்குச்சந்தையில் இப்படி ஒரு பேரிடி வந்திறங்கும் என்று முதலீட்டாளர்கள் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். ஏனெனில், கடந்த 2024ஆம் ஆண்டின் கடைசி ஆறு மாதங்கள், பங்குச்சந்தை பெரும்பாலும் சரிவிலேயே இருந்தன. புதிய ஆண்டிலாவது எழுச்சி பெறும் என்று எதிர்பார்த்திருந்த முதலீட்டாளர்களுக்கு மீண்டும் பலத்த அடியைக் கொடுத்திருக்கிறது பங்குச்சந்தை. ஜனவரி 6ஆம் தேதியானநேற்றைய தினம்,இந்தியப் பங்குச்சந்தைகள்கடும் வீழ்ச்சியைச் சந்தித்தன.வர்த்தக நேர முடிவில்,மும்பை பங்குச்சந்தையானசென்செக்ஸ், 1258 புள்ளிகள்(1.59%) சரிந்து, 77964புள்ளிகளில் முடிந்தது. தேசியப் பங்குச்சந்தையானநிஃப்டி குறியீடு 23616 புள்ளிகளுடன்வர்த்தகத்தை நிறைவு செய்தது.நிஃப்டி 388 புள்ளிகளை(1.62%) இழந்தது. பங்குச்சந்தை தடாலடியாகசரிந்ததற்கு சில முக்கியகாரணங்கள் சொல்லப்படுகின்றன.சீனாவில் தற்போது ஹெச்எம்பிவிஎன்ற...
அடேங்கப்பா…! கல்யாணச் சந்தையில் புழங்கும் 6 லட்சம் கோடி ரூபாய்!

அடேங்கப்பா…! கல்யாணச் சந்தையில் புழங்கும் 6 லட்சம் கோடி ரூபாய்!

இந்தியா, முக்கிய செய்திகள், வர்த்தகம்
''கல்யாணம் பண்ணிப்பார்; வீட்டைக் கட்டிப்பார்!'' ஆகிய இரண்டுமே அனுபவித்து, ஆய்ந்து சொன்ன மொழிகள். இவ்விரண்டு திட்டங்களிலும் பொருளாதாரம் முக்கிய பங்காற்றுகிறது. மட்டுமின்றி, உறவுகளை ஒன்றிணைப்பதும் முக்கியமாகிறது. எப்போது, எது கைகூடும்? எது உடையும்? எப்போது இத்திட்டங்கள் நிறைவேறும்? என்று கடைசித் தருணம் வரை திக்… திக்… நிமிடங்களாகவே கடந்து போக வேண்டியதிருக்கிறது. இரண்டுமே உணர்வுப்பூர்வமானது. என்றாலும்கூட, கல்யாண வைபவம் என்பது வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே நிகழக்கூடியது என்பதால் மனதிற்கு நெருக்கமானதாகிறது. ஒரு காலத்தில் மணமகள் அல்லது மணமகன் வீட்டிலேயே தென்னங்கீற்றுப் பந்தல் போட்டு, திருமண விழாக்களும், விருந்து உபசரிப்பும் களைகட்டின. நாகரிக மாற்றத்தால் இப்போது அவரவர் சக்திக்கு ஏற்ப மண்டபம் பிடிக்கின்றனர். மண்டபத்தை உறுதி செய்த பிறகு அழைப்பிதழ் அச்சடிப்பதில் இருந்து தொடங்குகிறது கல்யாண வ...
தங்கப்பத்திரம் வெளியீடு பிப். 12ம் தேதி தொடங்குகிறது; மலிவு விலையில் தங்கம் வாங்கலாம்…

தங்கப்பத்திரம் வெளியீடு பிப். 12ம் தேதி தொடங்குகிறது; மலிவு விலையில் தங்கம் வாங்கலாம்…

முக்கிய செய்திகள், வர்த்தகம்
இந்தியப் பாரம்பரியத்தில் தங்கத்திற்கு எப்போதும் தனித்த இடம் உண்டு. சேமிப்பு என்றாலே வெகுமக்களின் சிந்தனையில் முதலிடம் பிடிப்பது தங்கத்தில் முதலீடு செய்வதுதான். அதற்கு அடுத்து வங்கிகளில் டெபாசிட், நிலம், இன்சூரன்ஸ், பங்குகளில் முதலீடு செய்கின்றனர். தங்கத்தில் முதலீடு என்றாலே நகைகளாக வாங்குவதுதான் என்ற மனவோட்டத்தில் மக்கள் இருக்கின்றனர். நகை அல்லது நாணயங்களாக வாங்கும்போது அவசரத் தேவைக்காக உடனடியாக அடகு வைத்தோ அல்லது அன்றைய சந்தை மதிப்பிற்கு விற்றோ எளிதில் பணமாக்கிக் கொள்ள முடியும். அதேநேரம், செய்கூலி, சேதாரம் கணக்கில் கணிசமான இழப்பையும் சந்திக்க நேரிடுகிறது. ஆனால், தங்கப்பத்திரங்களில் முதலீடு செய்வது அப்படியானது அல்ல. இங்கு எல்லாமே காகித வடிவம்தான். அதாவது, டிஜிட்டல் வர்த்தகம்தான். ஆபரணங்களில் முதலீடு செய்வதைக் காட்டிலும் தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்யும்போது, கணிசமா...
பங்குச்சந்தை: உயர்வுடன் முடிந்த சென்செக்ஸ்; புதிய உச்சம் தொட காத்திருக்கும் நிப்டி!

பங்குச்சந்தை: உயர்வுடன் முடிந்த சென்செக்ஸ்; புதிய உச்சம் தொட காத்திருக்கும் நிப்டி!

முக்கிய செய்திகள், வர்த்தகம்
இந்திய பங்குச்சந்தைகள் கடந்த வாரம் ஓரளவு உயர்வுடன் முடிவடைந்துள்ளது. வாரத்தின் இறுதி வர்த்தக நாளான வெள்ளிக்கிழமை (ஜன. 12), மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 847.28 (1.18%) புள்ளிகள் உயர்ந்து 72568 புள்ளிகளுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது. தேசிய பங்குசந்தையான நிப்டி 247.35 புள்ளிகள் உயர்ந்து (1.14%) 21894 புள்ளிகளில் முடிவடைந்தது. வரும் வாரத்தில், நிப்டி 22000 புள்ளிகளை கடந்து வரலாற்று உச்சத்தை எட்டும் என சந்தை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். கடைசி மூன்று அமர்வுகள் ஏற்றத்துடன் இருந்ததால் முதலீட்டாளர்கள் உற்சாக மனநிலையில் இருக்கிறார்கள். அதேநேரம், அடுத்தடுத்து வெளியாக உள்ள மூன்றாவது காலாண்டு முடிவுகளைப் பொறுத்து, சந்தையில் அதிகளவில் ஏற்ற, இறக்கங்களும் இருக்கலாம் எனவும் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். ஜன. 8 - ஜன. 12 வரையிலான வாரத்தில், தேசிய பங்குச்சந்தையில் ஐடி துறை சார்ந்த பங்குக...
பாஜக வெற்றி: புதிய உச்சத்தை தொட்ட இந்திய பங்குச்சந்தை

பாஜக வெற்றி: புதிய உச்சத்தை தொட்ட இந்திய பங்குச்சந்தை

முக்கிய செய்திகள், வர்த்தகம்
நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மூன்று மாநிலங்களில் பாஜக பெற்ற அதிரிபுதிரியான வெற்றியின் தாக்கம், இந்தியப் பங்குச்சந்தையிலும் எதிரொலித்தது. இதனால் வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை (டிச. 4) சென்செக்ஸ் 1400 புள்ளிகளுக்கு மேலும், நிப்டி 400 புள்ளிகளுக்கு மேலும் உயர்ந்து வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டது. வர்த்தக நேர முடிவில் தேசிய பங்குச்சந்தையான நிப்டி 418 புள்ளிகள் (2.07%) உயர்ந்து, 20686 புள்ளிகளில் முடிவடைந்தது. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 1383 புள்ளிகள் உயர்வுடன் (2.05%) 68865 புள்ளிகளில் நிறைவடைந்தது. பொதுத்துறை வங்கிகள் 3.85 சதவீதம், நிதிச்சேவை நிறுவனப் பங்குகள் 3.23 சதவீதம், எனர்ஜி துறை பங்குகள் 2.61 சதவீதம், ரியால்டி நிறுவனப் பங்குகள் 2.03 சதவீதம் மற்றும் உலோகத்துறை பங்குகளும் ஏற்றம் கண்டன. அதேநேரம், மருந்து மற்றும் ஊடகத்துறை பங்குகள் லேசா...
கடும் எதிர்ப்புக்கு இடையே எல்ஐசி ஐபிஓ பெரும் வெற்றி! வெளியீட்டு அளவை விட 3 மடங்கு விண்ணப்பங்கள் குவிந்தன!!

கடும் எதிர்ப்புக்கு இடையே எல்ஐசி ஐபிஓ பெரும் வெற்றி! வெளியீட்டு அளவை விட 3 மடங்கு விண்ணப்பங்கள் குவிந்தன!!

இந்தியா, முக்கிய செய்திகள், வர்த்தகம்
கடும் எதிர்ப்புக்கு இடையே, பங்குச்சந்தையில் களமிறங்கிய எல்ஐசியின் பொதுப்பங்கு வெளியீடு (ஐபிஓ) பெரும் வெற்றி அடைந்துள்ளது. பொதுப்பங்கு வெளியீட்டு அளவைக் காட்டிலும் சுமார் மூன்று மடங்கு வரை கூடுதலாக பங்குகள் கேட்டு விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.   இந்திய அரசு தொடர்ந்து பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்த்து வரும் நிலையில், இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவன (எல்ஐசி) பங்குகளையும் தனியாருக்கு விற்க முடிவெடுத்தது. இதற்கு ஊழியர்கள் சங்கங்கள், இடதுசாரிகளிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. எனினும், கொள்கை முடிவில் இருந்து இந்திய அரசு பின்வாங்கவில்லை. எல்ஐசி பொதுப்பங்கு வெளியீட்டின் மூலம் ஒரு லட்சம் கோடி ரூபாய் திரட்ட இந்திய அரசு உத்தேசித்துள்ளது. இந்த நிறுவனத்தின் பொதுப்பங்கு வெளியீடு (ஐபிஓ), என்எஸ்இ மற்றும் பிஎஸ்இ சந்தைகளில் மே 4ம் தேதி தொடங்கியது.   ரஷ...
களை கட்டிய குந்தாரப்பள்ளி சந்தை; ஒரே நாளில் 10 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை!

களை கட்டிய குந்தாரப்பள்ளி சந்தை; ஒரே நாளில் 10 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை!

கிருஷ்ணகிரி, தமிழ்நாடு, முக்கிய செய்திகள், வர்த்தகம்
புகழ்பெற்ற ஆட்டுச்சந்தைகளுள் ஒன்றான குந்தாரப்பள்ளி சந்தையில், கடந்த வெள்ளியன்று ஒரே நாளில் 10 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை ஆகியுள்ளன. ரம்ஜான் பண்டிகை எதிரொலியாக அதிரிபுதிரியான விற்பனை நடந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.   கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குந்தாரப்பள்ளியில் வெள்ளிக்கிழமைதோறும் வாரச்சந்தை கூடுவது வழக்கம். இந்த சந்தையில் காய்கறி, மசாலா பொருள்கள் விற்றாலும் இறைச்சிக்கான ஆடு விற்பனைக்கு மிகவும் புகழ் பெற்றது ஆகும். கடந்த வெள்ளிக்கிழமை (ஏப். 29) அன்றும் வழக்கம்போல் வாரச்சந்தை கூடியது.   முஸ்லிம்களின் முக்கிய விழாக்களுள் ஒன்றான ரம்ஜான் பண்டிகை, வரும் 3ம் கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையை குறி வைத்து, கிருஷ்ணகிரி, குந்தாரப்பள்ளி, ஓசூர், சூளகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த கால்நடை வளர்ப்போர், விவசா...
கடந்த 2 மாதத்தில் 15 லட்சம் கோடி ரூபாய் இழப்பு! பங்கு முதலீட்டாளர்கள் சோகம்!

கடந்த 2 மாதத்தில் 15 லட்சம் கோடி ரூபாய் இழப்பு! பங்கு முதலீட்டாளர்கள் சோகம்!

இந்தியா, முக்கிய செய்திகள், வர்த்தகம்
  ஓமிக்ரான், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வெளியேறியது, மத்திய வங்கிகளின் வட்டி விகிதம் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகளில் கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் 15.30 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.   குறிப்பாக, அமெரிக்காவின் ஃபெடரல் வங்கியின் வட்டி விகிதங்கள் உயர்த்தப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவியதால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்கத் தொடங்கினர். அதன் தாக்கம், இந்திய பங்குச்சந்தையில் பெரிய அளவில் எதிரொலித்தது.   தேசிய பங்குச்சந்தையான நிப்டி, வரலாற்றில் முதன்முறையாக கடந்த அக். 19ம் தேதி 18604 புள்ளிகள் வரை எகிறியது. அடுத்த ஒரே மாதத்தில் 10 சதவீதம் வீழ்ச்சி அடைந்து, தற்போது 16782 புள்ளிகள் ஆக சரிவடைந்துள்ளது.   கடந்த வாரம் 17516 புள்ளிகளாக அதாவது, 3.5 சதவீதம் வரை உயர்ந்த நிப...
ஏற்றத்தில் பங்குச்சந்தைகள்! சென்செக்ஸ் 57600 புள்ளிகளில் நிறைவு!!

ஏற்றத்தில் பங்குச்சந்தைகள்! சென்செக்ஸ் 57600 புள்ளிகளில் நிறைவு!!

இந்தியா, முக்கிய செய்திகள், வர்த்தகம்
கடந்த இரண்டு செஷன்களாக சரிவில் இருந்த இந்திய பங்குச்சந்தைகள் செவ்வாய்க்கிழமை (டிச. 7) மீண்டெழுந்து ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்திருக்கின்றன. புதிய வகை ஒமிக்ரான் வைரஸ் பற்றிய அதீத அச்சுறுத்தல்களால் உலகம் முழுவதும் கடந்த வார இறுதியிலும், நடப்பு வாரத்தின் முதல் நாளான திங்களன்றும் பங்குச்சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்தன.   இந்நிலையில், முந்தைய கொரோனா வைரஸைக் காட்டிலும் பெரிய அளவில் பாதிப்பை ஒமிக்ரான் வைரஸ் ஏற்படுத்தாது என்ற தகவலால் பங்குச்சந்தைகள் இன்று தடாலடியாக மீண்டெழுந்தன.   இன்று வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 886.51 புள்ளிகள் (1.56%) உயர்ந்து, 57633 புள்ளிகளுடன் வர்த்தகத்தை நிறைவு செய்திருந்தது. அதேபோல, தேசிய பங்குச்சந்தையான நிப்டி 264.45 புள்ளிகள் உயர்ந்து 17176.70 புள்ளிகளில் நிறைவு பெற்றது. இது, முந்தைய நாள் ...
ஷேர் மார்க்கெட்: பொதுப்பங்கு வெளியீட்டில் களம் இறங்கிய ஸ்டார் ஹெல்த்!

ஷேர் மார்க்கெட்: பொதுப்பங்கு வெளியீட்டில் களம் இறங்கிய ஸ்டார் ஹெல்த்!

இந்தியா, முக்கிய செய்திகள், வர்த்தகம்
மருத்துவக் காப்பீட்டுத் துறையில் கணிசமான சந்தைப் பங்களிப்பை வைத்திருக்கும் ஸ்டார் ஹெல்த் அன்டு அலைடு இன்சூரன்ஸ் நிறுவனம், நவ. 30ம் தேதி பொதுப்பங்கு வெளியீட்டில் களமிறங்கியுள்ளது.   பங்குசந்தைகளில் ஒரு நிறுவனம் முதன்முதலில் பங்குகளை வெளியிட்டு, முதலீடுகளை திரட்டுவதைத்தான் பொதுப்பங்கு அதாவது, ஐபிஓ என்கிறார்கள். இதுபோன்ற பொதுப்பங்கு வெளியீட்டில் முதலீடு செய்யும் சிறு முதலீட்டாளர்களுக்கு, குறைந்த விலையில் பங்குகள் கிடைப்பதுடன், பட்டியலிடப்படும் நாளன்று பெரும்பாலும் கணிசமான லாபமும் கிடைத்துவிடும். அதனால் முதலீட்டாளர்களிடையே எப்போதும் ஐபிஓக்களுக்கு வரவேற்பு இருக்கும்.   இந்நிலையில், ஸ்டார் ஹெல்த் அன்டு அலைடு இன்சூரன்ஸ் நிறுவனம் செவ்வாய்க்கிழமை (நவ. 30) ஐபிஓவை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரும் பங்குச்சந்தை தரகரான ராகேஷ் ஜூன்ஜூன்வாலா இந்நிறுவனத்தின் புர...