
பாஜக வெற்றி: புதிய உச்சத்தை தொட்ட இந்திய பங்குச்சந்தை
நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மூன்று மாநிலங்களில் பாஜக பெற்ற அதிரிபுதிரியான வெற்றியின் தாக்கம், இந்தியப் பங்குச்சந்தையிலும் எதிரொலித்தது. இதனால் வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை (டிச. 4) சென்செக்ஸ் 1400 புள்ளிகளுக்கு மேலும், நிப்டி 400 புள்ளிகளுக்கு மேலும் உயர்ந்து வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டது.
வர்த்தக நேர முடிவில்
தேசிய பங்குச்சந்தையான
நிப்டி 418 புள்ளிகள் (2.07%) உயர்ந்து,
20686 புள்ளிகளில் முடிவடைந்தது.
மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ்
1383 புள்ளிகள் உயர்வுடன் (2.05%)
68865 புள்ளிகளில் நிறைவடைந்தது.
பொதுத்துறை வங்கிகள் 3.85 சதவீதம்,
நிதிச்சேவை நிறுவனப் பங்குகள் 3.23 சதவீதம்,
எனர்ஜி துறை பங்குகள் 2.61 சதவீதம்,
ரியால்டி நிறுவனப் பங்குகள் 2.03 சதவீதம் மற்றும்
உலோகத்துறை பங்குகளும் ஏற்றம் கண்டன.
அதேநேரம், மருந்து மற்றும் ஊடகத்துறை
பங்குகள் லே