ரத்தக்களரியான பங்குச்சந்தை; ஒரே நாளில் 8.30 லட்சம் கோடி ரூபாய் இழப்பு! ஹெச்எம்பிவி தொற்று காரணமா?
புத்தாண்டின் முதல் வாரத்திலேயே பங்குச்சந்தையில் இப்படி ஒரு பேரிடி வந்திறங்கும் என்று முதலீட்டாளர்கள் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். ஏனெனில், கடந்த 2024ஆம் ஆண்டின் கடைசி ஆறு மாதங்கள், பங்குச்சந்தை பெரும்பாலும் சரிவிலேயே இருந்தன. புதிய ஆண்டிலாவது எழுச்சி பெறும் என்று எதிர்பார்த்திருந்த முதலீட்டாளர்களுக்கு மீண்டும் பலத்த அடியைக் கொடுத்திருக்கிறது பங்குச்சந்தை.
ஜனவரி 6ஆம் தேதியானநேற்றைய தினம்,இந்தியப் பங்குச்சந்தைகள்கடும் வீழ்ச்சியைச் சந்தித்தன.வர்த்தக நேர முடிவில்,மும்பை பங்குச்சந்தையானசென்செக்ஸ், 1258 புள்ளிகள்(1.59%) சரிந்து, 77964புள்ளிகளில் முடிந்தது.
தேசியப் பங்குச்சந்தையானநிஃப்டி குறியீடு 23616 புள்ளிகளுடன்வர்த்தகத்தை நிறைவு செய்தது.நிஃப்டி 388 புள்ளிகளை(1.62%) இழந்தது.
பங்குச்சந்தை தடாலடியாகசரிந்ததற்கு சில முக்கியகாரணங்கள் சொல்லப்படுகின்றன.சீனாவில் தற்போது ஹெச்எம்பிவிஎன்ற...