Monday, December 11மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Author: புதிய அகராதி

திண்ணை: ”எதையும் நியாயமாதான் செய்வோம்…!” பெரியார் பல்கலையில் அக்கப்போர்!

திண்ணை: ”எதையும் நியாயமாதான் செய்வோம்…!” பெரியார் பல்கலையில் அக்கப்போர்!

சேலம், தமிழ்நாடு, திண்ணை, முக்கிய செய்திகள்
''தலைநகரையே புரட்டிப்போட்ட மிச்சாங் புயல் ஓய்ந்தாலும் கூட, சேலம் பெரியார் பல்கலையில் சனாதனத்திற்கும், திராவிடத்திற்குமான மோதல் இப்போதைக்கு ஓயாது போலருக்கு,'' என்று நேரடியாக சப்ஜெக்டுக்கு வந்தார் பேனாக்காரர். காதுகளை தீட்டிக்கொண்டு ஆர்வமாகக் கேட்கத் தொடங்கினார் நம்ம நக்கல் நல்லசாமி. ''பெரியார் பல்கலையில் முருகக்கடவுள் பேர் கொண்ட அந்தப் பேராசிரியர், பெரியார் பற்றி சில புத்தகங்களை தொகுத்து வெளியிட்டு இருந்திருக்கிறார். அவரும்கூட கருப்புச்சட்டை சிந்தனாவாதிதான். இந்த புத்தகம் வெளியிட்டு, அதையெல்லாம் விடியல் தலைவர்கிட்ட காட்டி அந்த பேராசிரியர் வாழ்த்தெல்லாம்கூட வாங்கிய படங்கள் பொதுவெளியில் வந்துச்சு,'' ''அது தெரிஞ்ச சேதிதானே. மேலே சொல்லுங்க'' அவசரம் காட்டினார் நக்கல் நல்லசாமி. ''பல்கலைக்கழக சாசன விதிகளின்படி, முன்அனுமதி பெற்றுதான் புத்தகம் வெளியிடணுமாம். அந்த பேராசிரியர்
இந்தியாவில் அதிகரிக்கும் பொருளாதார ஏற்றத்தாழ்வு! – கோ.விசுவநாதன்

இந்தியாவில் அதிகரிக்கும் பொருளாதார ஏற்றத்தாழ்வு! – கோ.விசுவநாதன்

சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியைப் பொருத்துதான் இருக்கும். உலகில் உள்ள நாடுகளில் சுமார் 70 நாடுகள் பொருளாதார வளர்ச்சி பெற்ற நாடுகளாக கருதப்படுகின்றன. பொருளாதார வளர்ச்சி என்பது, தனிநபர் வருமானத்தை வைத்துதான் கணக்கிடப்படுகிறது. தனிநபர் வருமானம் 15 ஆயிரம் டாலர்கள் உள்ள நாடுகளை வளர்ந்த நாடுகள் என்று அழைக்கிறோம். மீதமுள்ள நாடுகளை வளரும் நாடுகள், வளர்ச்சி பெறாத நாடுகள் என்று இரு வகையாகப் பிரித்து வைத்திருக்கிறோம். அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனி ஆகிய நான்கு நாடுகள் மட்டுமே உலகில் பெரிய பொருளாதார நாடுகளாக கருதப்படுகின்றன. மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) அளவீட்டை வைத்துதான் தன்னிறைவு பெற்ற நாடு, வளர்ந்த நாடு, வளர்கின்றன நாடுகள் என்றெல்லாம் வகைப்படுத்தப்படுகின்றன. நடப்பு 2023ம் ஆண்டில், அமெரிக்காவின் ஜிடிபி 26 டிரில்லியன் டாலர். சீனா 19 டிரில்லியன் டாலர். ஜ
பாஜக வெற்றி: புதிய உச்சத்தை தொட்ட இந்திய பங்குச்சந்தை

பாஜக வெற்றி: புதிய உச்சத்தை தொட்ட இந்திய பங்குச்சந்தை

முக்கிய செய்திகள், வர்த்தகம்
நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மூன்று மாநிலங்களில் பாஜக பெற்ற அதிரிபுதிரியான வெற்றியின் தாக்கம், இந்தியப் பங்குச்சந்தையிலும் எதிரொலித்தது. இதனால் வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை (டிச. 4) சென்செக்ஸ் 1400 புள்ளிகளுக்கு மேலும், நிப்டி 400 புள்ளிகளுக்கு மேலும் உயர்ந்து வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டது. வர்த்தக நேர முடிவில் தேசிய பங்குச்சந்தையான நிப்டி 418 புள்ளிகள் (2.07%) உயர்ந்து, 20686 புள்ளிகளில் முடிவடைந்தது. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 1383 புள்ளிகள் உயர்வுடன் (2.05%) 68865 புள்ளிகளில் நிறைவடைந்தது. பொதுத்துறை வங்கிகள் 3.85 சதவீதம், நிதிச்சேவை நிறுவனப் பங்குகள் 3.23 சதவீதம், எனர்ஜி துறை பங்குகள் 2.61 சதவீதம், ரியால்டி நிறுவனப் பங்குகள் 2.03 சதவீதம் மற்றும் உலோகத்துறை பங்குகளும் ஏற்றம் கண்டன. அதேநேரம், மருந்து மற்றும் ஊடகத்துறை பங்குகள் லே
ஐபிஎல் கிரிக்கெட்: பிரியாணிதான் உண்மையான சாம்பியன்; ஸ்விக்கி வேடிக்கையான ட்வீட்!

ஐபிஎல் கிரிக்கெட்: பிரியாணிதான் உண்மையான சாம்பியன்; ஸ்விக்கி வேடிக்கையான ட்வீட்!

இந்தியா, முக்கிய செய்திகள்
ஐபிஎல் கிரிக்கெட் சீசனில் ஸ்விக்கி நிறுவனத்துக்கு அதிகளவில் ஆர்டர் கொடுக்கப்பட்ட உணவு வகைகளில் பிரியாணிதான் முதலிடம் பிடித்துள்ளது. அந்த நிறுவனமே கண்டு வியக்கும் அளவுக்கு 12 மில்லியன் பிரியாணி ஆர்டர்கள் குவிந்துவிட்டதாக கூறுகிறது. அந்த வகையில், இந்த ஐபிஎல் சீசனில் கோப்பையை வென்றது உண்மையில் பிரியாணிதான் என்றும் அந்த நிறுவனம் பகடியாக கூறியுள்ளது. உணவு டெலிவரி வர்த்தகத்தில் முன்னணியில் உள்ள ஸ்விக்கி நிறுவனம், ஐபிஎல் கிரிக்கெட் இறுதி ஆட்டம் நடந்த நாளன்று இந்தியர்கள் என்னென்ன ஆர்டர் செய்தார்கள் என்பது குறித்து சில சுவாரஸ்யமான தரவுகளை வெளியிட்டுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் மீது இந்தியர்களிடையே எப்போதும் பேரார்வம் உண்டு. ஒவ்வொரு ஐபிஎல் சீசனையும் அவர்கள் கொண்டாட்டமாக பார்க்கின்றனர். எந்த அணி வெல்லும், யார் யார் எத்தனை ரன் குவிப்பார்கள், ஆரஞ்ச் நிற தொப்பியை கைப்
குத்தகை வாக்காளர்கள்! திராவிட மாடலின் ‘நேர்மையான’ திருட்டு!!

குத்தகை வாக்காளர்கள்! திராவிட மாடலின் ‘நேர்மையான’ திருட்டு!!

அரசியல், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் களம், இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இன்று (பிப். 25, 2023) மாலையுடன் பரப்புரை ஓய்கிறது. பிப். 27ம் தேதி, வாக்குப்பதிவு நடக்கிறது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அதிமுக சார்பில் தென்னரசு, நாம் தமிழர் சார்பில் மேனகா, தேமுதிக சார்பில் ஆனந்த் உள்பட மொத்தம் 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். எனினும், திமுக, அதிமுக இடையேதான் வழக்கம்போல் நேரடி போட்டி நிலவுகிறது.   மாற்று அரசியலை முன்னெடுக்கும் பாமக தலைவர் ராமதாஸ், நாம் தமிழர் சீமான் போன்றோர், இடைத்தேர்தலே அவசியமற்றது எனத் தொடர்ந்து சொல்லி வருகின்றனர்.   ஈரோடு கிழக்கில் காங்கிரஸ் போட்டியிட்டாலும் களத்தில் முண்டா தட்டுவது என்னவோ திமுகதான். கடந்த 21 மாத திமுக ஆட்சிக்கு உரைகல்லாக இந்த இடைத்தேர்தலை ஆளும்தரப்பு கருதுகிறது. அதனால் ம
இந்திராவின் காலில் விழுந்தாரா கருணாநிதி? பரவும் காணொலியின் பின்னணி என்ன?

இந்திராவின் காலில் விழுந்தாரா கருணாநிதி? பரவும் காணொலியின் பின்னணி என்ன?

அரசியல், தமிழ்நாடு
தேர்தல் காலம் என்றாலே ஆளுங்கட்சியும், பிரதான எதிர்க்கட்சியும் பரஸ்பரம் புகார் புஸ்தகம் வாசிப்பது என்பது தேர்தல் ஜனநாயகத்தில் சகஜம்தான். ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலையொட்டி, இப்போது சமூக ஊடகங்களில் ஒரு காணொலி காட்சி திட்டமிட்டு பரப்பி வருகின்றனர்.   'அம்மையார் இந்திரா காலில் விழும் கருணாநிதி. என்ன உங்க சுயமரியாதை?' என்று தலைப்பிட்டு ஒரு காணொலி பரவி வருகிறது. அந்தக் காணொலியில், வயதான ஒரு பெண்மணிக்கு மறைந்த திமுக தலைவர் கருணாநிதி மாலை அணிவிக்கிறார். பிறகு அந்தப் பெண்மணியின் காலைத் தொட்டு வணங்குகிறார். அவர் அருகில் மறைந்த பேராசிரியர் அன்பழகன் மற்றும் திமுக முன்னணியினர் இருக்கின்றனர். காணொலி, மொத்தம் 7 வினாடிகள் ஓடுகிறது. அந்தப் பதிவில் இருக்கும் பெண்மணி யாரென்றே தெளிவாகத் தெரியாதபோது, அவர் இந்திராகாந்திதான் என்ற முன்முடிவுடன் காணொலி பகிரப்பட்டு வருவது அபத்த
தேங்காய் சுட்டு தலையாடிக்கு வரவேற்பு! இது கொங்கு மண்டல ஸ்பெஷல்!

தேங்காய் சுட்டு தலையாடிக்கு வரவேற்பு! இது கொங்கு மண்டல ஸ்பெஷல்!

கலாச்சாரம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஆடி மாதப் பிறப்பை, கொங்கு மண்டல மக்கள் வீடுகள்தோறும் தேங்காய் சுடும் பண்டிகை மூலம் உற்சாகமாக வரவேற்றுக் கொண்டாடினர்.   ஆடி மற்றும் மார்கழி மாதங்களில் திருமணம், புதுமனை புகுதல், புதிய வணிகம் உள்ளிட்ட புதிய தொடக்கங்களை சாதி இந்துக்கள் மேற்கொள்வதில்லை. புதுமணத் தம்பதிகளுக்கு ஆகாத மாதமாகவும் ஆடி மாதம் உள்ளது.   இப்படி ஆடியைப் (ஆடி கார் அல்ல) பற்றி வெவ்வேறு நம்பிக்கைகள், கற்பிதங்கள் விரவிக் கிடந்தாலும், ஆடி மாதத்தில்தான் அம்மன் கோயில்களில் விழாக்கள் களைகட்டுகின்றன. வணிக நிறுவனங்கள் ஆடி தள்ளுபடி என விசேஷ சலுகைகளும் வாரி வழங்குகின்றன.   இதெல்லாம் ஒருபுறம் இருக்க, ஆடி மாதப் பிறப்பை 'தலையாடி' என்ற பெயரில் கொங்கு மண்டல மக்கள் தொன்றுதொட்டு கொண்டாடி வருகின்றனர். ஆடி மாதம் முதல் தேதியை குறிக்கும் வகையில் 'தலை ஆடி' என்கிறார்களே தவிர, தஞ்சாவூர் தலையாட்ட
ஒரே நாடு ஒரே மொழி… ஆனால், இரண்டு கோமாளிகள்! பாராளுமன்றத்தில் பேசக்கூடாத சொற்களின் பட்டியல்!

ஒரே நாடு ஒரே மொழி… ஆனால், இரண்டு கோமாளிகள்! பாராளுமன்றத்தில் பேசக்கூடாத சொற்களின் பட்டியல்!

அரசியல், இந்தியா, முக்கிய செய்திகள்
பாராளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத சொற்களின் பட்டியலை மக்களவைச் செயலகம் வெளியிட்டுள்ளது.   மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், மக்களவை, மாநிலங்களவையில் பயன்படுத்தக் கூடாது சொற்களின் பட்டியலை மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது. ஆங்கிலம், ஹிந்தி மொழிச் சொற்கள் அதிகளவில் இடம் பிடித்துள்ளன.   தடை செய்யப்பட்டுள்ள சொற்கள்:   வெட்கக்கேடு திட்டினார் துரோகம் செய்தார் ஊழல் ஒட்டுக்கேட்பு ஊழல் கொரோனா பரப்புபவர் வாய்ஜாலம் காட்டுபவர் நாடகம் கபட நாடகம் திறமையற்றவர் அராஜகவாதி சகுனி சர்வாதிகாரம் சர்வாதிகாரி அழிவு சக்தி காலிஸ்தானி இரட்டை வேடம் பயனற்றது ரத்தக்களரி குரூரமானவர் ஏமாற்றினார் குழந்தைத்தனம் கோழை கிரிமினல் முதலைக்கண்ணீர் அவமானம் கழுதை கண்துடைப்பு ரவுடித்தனம்
விக்ரம் – சினிமா விமர்சனம்! ”நல்லதைக்கூட முகமூடி போட்டுக்கிட்டுதான் செய்ய வேண்டியது இருக்கு!”

விக்ரம் – சினிமா விமர்சனம்! ”நல்லதைக்கூட முகமூடி போட்டுக்கிட்டுதான் செய்ய வேண்டியது இருக்கு!”

சினிமா, முக்கிய செய்திகள்
விக்ரம் - விமர்சனம் நடிகர்கள்: கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா, காளிதாஸ் ஜெயராம், காயத்ரி, ஸ்வாதிஸ்தா மற்றும் பலர். இசை: அனிருத் ஒளிப்பதிவு: ஹரிஷ் கங்காதரன் ஆக்ஷன்: அன்பறிவ் எடிட்டிங்: பிலோமின் ராஜ் தயாரிப்பு: ராஜ்கமல் பிலிம்ஸ் இயக்கம்: லோகேஷ் கனகராஜ்   கதை என்ன?:   காவல்துறை அதிகாரியான தன் மகனை டிரக் மாபியா கும்பல் கொலை செய்து விடுகிறது. மகனை இழந்த, முன்னாள் ரா ஏஜன்ட் கமல்ஹாசன், அந்த கும்பலை கண்டுபிடித்து அழித்தாரா? போதைப்பொருள் இல்லாத உலகத்தை படைத்தாரா? என்பதுதான் படத்தின் ஒரு வரி கதை.   திரைமொழி:   படத்தின் துவக்கத்திலேயே, பத்தல... பத்தல... பாடலில் அதகளம் செய்கிறார் கமல். அடுத்த காட்சியிலேயே அவரை முகமூடி அணிந்த கும்பல் ஒன்று, கிரானைட் வெடிகுண்டு வீசி கொடூரமாக கொலை செய்து விடுகிறது. அவருடன் காளிதாஸ், ஹ
சிறை கொட்டடியில் சந்தன வீரப்பன் அண்ணன் மாதையன் மரணம்; வயதான கைதிகளின் கதி என்ன?

சிறை கொட்டடியில் சந்தன வீரப்பன் அண்ணன் மாதையன் மரணம்; வயதான கைதிகளின் கதி என்ன?

ஈரோடு, சேலம், தமிழ்நாடு
கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சந்தன கடத்தல் வீரப்பனின் அண்ணன் மாதையன், மே 25ம் தேதி, புதன்கிழமை மாரடைப்பால் உயிரிழந்தார். 78 வயதான மாதையன், நீண்ட காலமாக சிறைக் கொட்டடியில் இருந்தே உயிர் விட்டிருக்கிறார். அவருடைய மரணம், தமிழக சிறைச்சாலைகள் வயதான கைதிகளின் வதை முகாம்களாக மாறி வருகிறதா என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறது. சந்தன கடத்தல் வீரப்பனின் அண்ணன் மாதையன், ஈரோடு மாவட்டம் பங்களாபுதூர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வனச்சரகர் சிதம்பரம் என்கிற சிதம்பரநாதன் கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டார். 1987ல் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஆரம்பத்தில், சிதம்பரம் கொலை வழக்கில் மாதையன் பெயர் சேர்க்கப்படவில்லை. ஆனாலும் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த 1996ம் ஆண்டு அவருக்கு