Tuesday, March 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

மற்றவை

இந்த உசுரே உனக்காகத்தான்… படைச்சானே சாமிதான்…! காதலுடன் தமிழர் வாழ்வியல் பேசும் சிட்டான் குருவி!!

இந்த உசுரே உனக்காகத்தான்… படைச்சானே சாமிதான்…! காதலுடன் தமிழர் வாழ்வியல் பேசும் சிட்டான் குருவி!!

சினிமா, சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
இயக்குநர் பாரதிராஜாவின் இயக்கத்தில் தென்றலோடும் தெம்மாங்கு பாடல்களோடும் மண்மணம் கமழ வெளியான படம்தான், 'புது நெல்லு புது நாத்து'. 1991ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் தேதி இந்தப் படம் வெளியானது. சுகன்யா, ராகுல், நெப்போலியன், பொன்வண்ணன், ராம் அர்ஜூன், ருத்ரா உள்ளிட்ட முதன்மைப் பாத்திரத்தில் நடித்தவர்கள் அனைவரும் இந்தப் படத்திற்கு புதிய நாற்றுகள்தான். பாரதிராஜவின் ஆஸ்தான இசையமைப்பாளரான இளையராஜாதான் இந்தப் படத்திற்கும் இசை. கங்கை அமரன், முத்துலிங்கம் ஆகியோருடன் இணைந்து இளையராஜாவும் இந்தப் படத்திற்காக சில பாடல்களை எழுதி இருக்கிறார். படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களும் ஹிட் அடித்தன. அதிலும், கங்கைஅமரன் எழுதிய, 'சிட்டான் சிட்டான் குருவி உனக்குத்தானே...' என்ற பாடல், அந்தக் காலக்கட்டத்தில் திருவிழாக்கள், கல்யாண வீடுகள், விருந்து விழாக்கள் என ஒலிக்காத இடமே இல்லை. பேருந்து பயணத்தின் 'பிளே
மக்களே போல்வர் கயவர்…! ஊடகங்களும் அத்தகையவர்களே!!

மக்களே போல்வர் கயவர்…! ஊடகங்களும் அத்தகையவர்களே!!

அரசியல், சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
மக்களவைத் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு இன்னும் பத்து நாள்களில் வர உள்ள நிலையில், செய்தி நிறுவனங்கள், ஊடகங்கள், தேர்தல் கள ஆய்வு நிறுவனங்கள் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில், புதிய தலைமுறை செய்தி தொலைக்காட்சி நிறுவனம், பெடரல் இணைய ஊடகம் மற்றும் ஏபிடி நிறுவனமும் இணைந்து நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை அண்மையில் வெளியிட்டது. மக்களவைத் தேர்தல்-2024ல் தமிழகத்தில், திமுக 38.35 சதவீத வாக்குகளைப் பெறும் என்றும், அதிமுக 17.26 சதவீத வாக்குகளைப் பெறும் என்றும் தெரிவிக்கிறது, புதிய தலைமுறை கருத்துக்கணிப்பு. நாம் தமிழர் கட்சி 7.26 சதவீத வாக்குகளைப் பெற்று நான்காம் இடத்தைப் பிடிக்கும் என்றும் அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால், தொண்டர்கள் மற்றும் கட்டமைப்பு ரீதியாக வலிமையாக உள்ள அதிமுகவைக் கா
சிபிஐ பிடியில் சிக்கியது சர்வோதய சங்கம்! கோடிக்கணக்கில் ஊழல் நடந்தது வெட்டவெளிச்சம்!!

சிபிஐ பிடியில் சிக்கியது சர்வோதய சங்கம்! கோடிக்கணக்கில் ஊழல் நடந்தது வெட்டவெளிச்சம்!!

கோயம்பத்தூர், சிறப்பு கட்டுரைகள், சேலம், தேனி, மதுரை, முக்கிய செய்திகள்
கோவை அருகே, சர்வோதய சங்கத்தில் போலி கைத்தறி நெசவாளர்கள் பெயரில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது சிபிஐ போலீசார் விசாரணையில் வெட்டவெளிச்சம் ஆகியுள்ளது. விரைவில், இந்த வழக்கில் முக்கிய புள்ளிகள் மீது எப்ஐஆர் பாய்கிறது. கோவை அருகே, ரெட் ஃபீல்ட்ஸ் பகுதியில் ஆவாரம்பாளையம் சர்வோதய சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கம், 1966ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தொண்டாமுத்தூர், சரவணம்பட்டி, பீளமேடு, கருமத்தம்பட்டி, வாகராயம்பாளையம், நீலாம்பூர், ஒண்டிப்புதூர், காமாட்சிபுரம், இடையர்பாளையம், ராம் நகர் மற்றும் ஊத்துக்குளி, ஸ்ரீவில்லிப்புத்தூர், சுப்ளாபுரம், செங்கோட்டை, தேனி ஜக்கம்பட்டி உள்பட 28 இடங்களில் இதன் கிளைகள் உள்ளன. செயலாளர், பொருளாளர், மேலாளர், எழுத்தர், தினக்கூலி பணியாளர்கள் என மொத்தம் 500 பேர் வேலை செய்து வருகின்றனர். தலைமையிடம் மற்றும் கிளைகளில் 1000 கைத்தறி நெசவாளர்கள் உறுப்பினர்களாக உள்ளதா
திண்ணை: அப்படி என்னய்யா செஞ்சிட்டான் என் கட்சிக்காரன்…?

திண்ணை: அப்படி என்னய்யா செஞ்சிட்டான் என் கட்சிக்காரன்…?

சேலம், தமிழ்நாடு, திண்ணை, முக்கிய செய்திகள்
மார்கழி பொறந்துடுச்சு. சீசனுக்கு இதமா இருக்கட்டுமேனு சுடச்சுட ஒரு சங்கதிய கொண்டு வந்திருக்கேன்னு சொன்னாரு நம்ம பேனாக்காரர். ''சொல்லுங்களேன்...கேட்போம்'' - இது நக்கல் நல்லசாமி.   ''அறிவுக்கோயில் தலைவரு போன பிப்ரவரி மாசம் சேலத்துல அனைத்துத் துறை முக்கியஸ்தர்களுடன் ஆய்வுக்கூட்டம் போட்டாரே ஞாபகம் இருக்கா...?,'' ''ஓ... நல்லா ஞாபகம் இருக்கு. கள ஆய்வில் தலைவருனு சொல்லிட்டு, கடவுள் அன்பு, யுசி டீம் எல்லாம் ஆய்வு நடத்துனதே... தலைவரு பேரளவுக்கு சும்மா உட்கார்ந்துட்டுப் போனாரே... அந்தக் கூட்டத்தைதானே சொல்றீங்க... நல்லா ஞாபகம் இருக்கு...,''   ''நக்கலாரே... உமக்கு குசும்பு ஜாஸ்தியா''   ''அன்னிக்கு சாயங்காலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவு வளைவு முன்னாடி நின்னு அறிவுக்கோயில் தலைவரு, அவரோட அப்பா நினைவாக செல்பி எடுத்துக்கிட்டாரு. புரோக்கர் ஊடகங்கள் எல
திண்ணை: ”எதையும் நியாயமாதான் செய்வோம்…!” பெரியார் பல்கலையில் அக்கப்போர்!

திண்ணை: ”எதையும் நியாயமாதான் செய்வோம்…!” பெரியார் பல்கலையில் அக்கப்போர்!

சேலம், தமிழ்நாடு, திண்ணை, முக்கிய செய்திகள்
''தலைநகரையே புரட்டிப்போட்ட மிச்சாங் புயல் ஓய்ந்தாலும் கூட, சேலம் பெரியார் பல்கலையில் சனாதனத்திற்கும், திராவிடத்திற்குமான மோதல் இப்போதைக்கு ஓயாது போலருக்கு,'' என்று நேரடியாக சப்ஜெக்டுக்கு வந்தார் பேனாக்காரர். காதுகளை தீட்டிக்கொண்டு ஆர்வமாகக் கேட்கத் தொடங்கினார் நம்ம நக்கல் நல்லசாமி. ''பெரியார் பல்கலையில் முருகக்கடவுள் பேர் கொண்ட அந்தப் பேராசிரியர், பெரியார் பற்றி சில புத்தகங்களை தொகுத்து வெளியிட்டு இருந்திருக்கிறார். அவரும்கூட கருப்புச்சட்டை சிந்தனாவாதிதான். இந்த புத்தகம் வெளியிட்டு, அதையெல்லாம் விடியல் தலைவர்கிட்ட காட்டி அந்த பேராசிரியர் வாழ்த்தெல்லாம்கூட வாங்கிய படங்கள் பொதுவெளியில் வந்துச்சு,'' ''அது தெரிஞ்ச சேதிதானே. மேலே சொல்லுங்க'' அவசரம் காட்டினார் நக்கல் நல்லசாமி. ''பல்கலைக்கழக சாசன விதிகளின்படி, முன்அனுமதி பெற்றுதான் புத்தகம் வெளியிடணுமாம். அந்த பேராசிரியர்
இந்தியாவில் அதிகரிக்கும் பொருளாதார ஏற்றத்தாழ்வு! – கோ.விசுவநாதன்

இந்தியாவில் அதிகரிக்கும் பொருளாதார ஏற்றத்தாழ்வு! – கோ.விசுவநாதன்

சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியைப் பொருத்துதான் இருக்கும். உலகில் உள்ள நாடுகளில் சுமார் 70 நாடுகள் பொருளாதார வளர்ச்சி பெற்ற நாடுகளாக கருதப்படுகின்றன. பொருளாதார வளர்ச்சி என்பது, தனிநபர் வருமானத்தை வைத்துதான் கணக்கிடப்படுகிறது. தனிநபர் வருமானம் 15 ஆயிரம் டாலர்கள் உள்ள நாடுகளை வளர்ந்த நாடுகள் என்று அழைக்கிறோம். மீதமுள்ள நாடுகளை வளரும் நாடுகள், வளர்ச்சி பெறாத நாடுகள் என்று இரு வகையாகப் பிரித்து வைத்திருக்கிறோம். அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனி ஆகிய நான்கு நாடுகள் மட்டுமே உலகில் பெரிய பொருளாதார நாடுகளாக கருதப்படுகின்றன. மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) அளவீட்டை வைத்துதான் தன்னிறைவு பெற்ற நாடு, வளர்ந்த நாடு, வளர்கின்றன நாடுகள் என்றெல்லாம் வகைப்படுத்தப்படுகின்றன. நடப்பு 2023ம் ஆண்டில், அமெரிக்காவின் ஜிடிபி 26 டிரில்லியன் டாலர். சீனா 19 டிரில்லியன் டாலர். ஜ
குத்தகை வாக்காளர்கள்! திராவிட மாடலின் ‘நேர்மையான’ திருட்டு!!

குத்தகை வாக்காளர்கள்! திராவிட மாடலின் ‘நேர்மையான’ திருட்டு!!

அரசியல், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் களம், இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இன்று (பிப். 25, 2023) மாலையுடன் பரப்புரை ஓய்கிறது. பிப். 27ம் தேதி, வாக்குப்பதிவு நடக்கிறது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அதிமுக சார்பில் தென்னரசு, நாம் தமிழர் சார்பில் மேனகா, தேமுதிக சார்பில் ஆனந்த் உள்பட மொத்தம் 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். எனினும், திமுக, அதிமுக இடையேதான் வழக்கம்போல் நேரடி போட்டி நிலவுகிறது.   மாற்று அரசியலை முன்னெடுக்கும் பாமக தலைவர் ராமதாஸ், நாம் தமிழர் சீமான் போன்றோர், இடைத்தேர்தலே அவசியமற்றது எனத் தொடர்ந்து சொல்லி வருகின்றனர்.   ஈரோடு கிழக்கில் காங்கிரஸ் போட்டியிட்டாலும் களத்தில் முண்டா தட்டுவது என்னவோ திமுகதான். கடந்த 21 மாத திமுக ஆட்சிக்கு உரைகல்லாக இந்த இடைத்தேர்தலை ஆளும்தரப்பு கருதுகிறது. அதனால் ம
தேங்காய் சுட்டு தலையாடிக்கு வரவேற்பு! இது கொங்கு மண்டல ஸ்பெஷல்!

தேங்காய் சுட்டு தலையாடிக்கு வரவேற்பு! இது கொங்கு மண்டல ஸ்பெஷல்!

கலாச்சாரம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஆடி மாதப் பிறப்பை, கொங்கு மண்டல மக்கள் வீடுகள்தோறும் தேங்காய் சுடும் பண்டிகை மூலம் உற்சாகமாக வரவேற்றுக் கொண்டாடினர்.   ஆடி மற்றும் மார்கழி மாதங்களில் திருமணம், புதுமனை புகுதல், புதிய வணிகம் உள்ளிட்ட புதிய தொடக்கங்களை சாதி இந்துக்கள் மேற்கொள்வதில்லை. புதுமணத் தம்பதிகளுக்கு ஆகாத மாதமாகவும் ஆடி மாதம் உள்ளது.   இப்படி ஆடியைப் (ஆடி கார் அல்ல) பற்றி வெவ்வேறு நம்பிக்கைகள், கற்பிதங்கள் விரவிக் கிடந்தாலும், ஆடி மாதத்தில்தான் அம்மன் கோயில்களில் விழாக்கள் களைகட்டுகின்றன. வணிக நிறுவனங்கள் ஆடி தள்ளுபடி என விசேஷ சலுகைகளும் வாரி வழங்குகின்றன.   இதெல்லாம் ஒருபுறம் இருக்க, ஆடி மாதப் பிறப்பை 'தலையாடி' என்ற பெயரில் கொங்கு மண்டல மக்கள் தொன்றுதொட்டு கொண்டாடி வருகின்றனர். ஆடி மாதம் முதல் தேதியை குறிக்கும் வகையில் 'தலை ஆடி' என்கிறார்களே தவிர, தஞ்சாவூர் தலையாட்ட
கோவிட் தடுப்பூசி இன்னும் போடலையா? ஏப்ரல் 30ல் மீண்டும் வாய்ப்பு!

கோவிட் தடுப்பூசி இன்னும் போடலையா? ஏப்ரல் 30ல் மீண்டும் வாய்ப்பு!

சேலம், தகவல், முக்கிய செய்திகள்
கோவிட் நோய்த்தொற்றில் இருந்து காத்துக்கொள்ள இதுவரை தடுப்பூசி போட்டுக்கொள்ளாத பொதுமக்களுக்கு வாய்ப்பு அளிக்கும் விதமாக, சேலம் மாவட்டத்தில் சனிக்கிழமை (ஏப். 30) மாபெரும் கோவிட் தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. மொத்தம் 1392 மையங்களில் இந்த முகாம் நடக்கிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள சிறப்பு முகாம்களை மீண்டும் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.   இதையடுத்து, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 28வது மாபெரும் கோவிட் தடுப்பூசி முகாம் நடத்துவது தொடர்பாக அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை (ஏப். 27) நடந்தது. மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமையில் இக்கூட்டம் நடந்தது. அவர் பேசியது:   கோவிட் தடுப்புப் பணிக
கேள்விகள் எழுப்பலாமா அல்லது வேண்டாமா? இதுதான் என் கேள்வி?

கேள்விகள் எழுப்பலாமா அல்லது வேண்டாமா? இதுதான் என் கேள்வி?

சிறப்பு கட்டுரைகள், சேலம், முக்கிய செய்திகள்
ஏன்? எதற்கு? எப்படி? என்று யாரையும், எதையும், எப்போதும் கேள்வி எழுப்பச் சொல்லி பழக்கிவிட்டுப் போயிருக்கிறார் தந்தை பெரியார். அவரின் பெயரில் அமைந்த பல்கலைக்கழகமோ, கேள்வி எழுப்பியதாலேயே ஓர் உதவி பேராசிரியரை சிறையில் தள்ள துடித்துக் கொண்டிருப்பதுதான் ஆகப்பெரும் துயரம். எல்லாமே தலைகீழ் விகிதமாக மாறிப் போயிருந்த அல்லது அதுவே ஒழுக்கமாகிவிட்ட ஒரு பல்கலையில், ஓர் இளைஞன் நுழைந்தான். தான் கற்றுவந்த ஆகச்சிறந்த நெறிகளை இங்கும் பரவச் செய்ய வேண்டும் என்று நினைத்ததுதான் அந்த இளைஞன் செய்த ஒரே குற்றம்.   ஒரு மூத்த பேராசிரியர் வகுப்பிற்குள் நுழைகிறார். ஏதோ கேள்வி கேட்கிறார். ஒரு மாணவி, இருக்கையில் அமர்ந்தபடியே பதில் அளிக்கிறாள். அதற்கு அந்த பேராசிரியரோ, 'ஏன்மா... இதுதான் நீ ஆசிரியருக்கு தரும் மரியாதையா? உட்கார்ந்துட்டே பதில் சொல்ற?,' என அதிகாரமாய் கேட்கிறார். அதற்கு அந்த மாணவி