Sunday, April 20மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

நாமக்கல்

கரும்பு கொள்முதல் தொகை 23 கோடி ரூபாய் நிலுவை; விவசாயிகள் கவலை

கரும்பு கொள்முதல் தொகை 23 கோடி ரூபாய் நிலுவை; விவசாயிகள் கவலை

சேலம், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
கரும்பு அரைவைப் பணிகள் முடிந்து மூன்று மாதங்களுக்கு மேல் ஆகியும், சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகம் கொள்முதல் பணம் 23 கோடி ரூபாய் பட்டுவாடா செய்யாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை நாமக்கல் மாவட்டம் மோகனூரில்,சேலம் கூட்டுறவு சர்க்கரைஆலை இயங்கி வருகிறது.இந்த ஆலை நிர்வாகம் நாமக்கல்,மோகனூர், ராசிபுரம், சேந்தமங்கலம்,திருச்சி மாவட்டத்தில் தொட்டியம்,முசிறி, துறையூர், சேலம் மாவட்டத்தில்ஆத்தூர், கெங்கவல்லி வரையிலானபதிவு பெற்ற விவசாயிகளிடம் இருந்துசர்க்கரை உற்பத்திக்காக கரும்புகொள்முதல் செய்து வருகிறது. ஆலையின் எல்லைக்குஉட்பட்ட பகுதிகளில்கடந்த ஆண்டு 2445 ஏக்கர்பரப்பளவில் கரும்பு பயிரிடப்பட்டது.அதன் அடிப்படையில்,2024-2025ம் ஆண்டிற்கு,1.45 லட்சம் டன் கரும்புஅரைவைக்குக் கொண்டு வரசேலம் கூட்டுறவு சர்க்கரைஆலை இலக்கு நிர்ணயித்தது. ஆனால், பருவம் தப்பிய மழைகா...
சேலம் கூட்டுறவு ஆலையில் 19 லட்சம் ரூபாய்க்கு சர்க்கரையை தின்ற பெண் அதிகாரியின் எடுபிடி!

சேலம் கூட்டுறவு ஆலையில் 19 லட்சம் ரூபாய்க்கு சர்க்கரையை தின்ற பெண் அதிகாரியின் எடுபிடி!

சேலம், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் தொழிலாளர்களுக்கு சலுகை விலையில் விற்பனை செய்வதற்காக ஒதுக்கப்பட்ட சர்க்கரையில் போலி இருப்புக் கணக்கு மூலம் 19 லட்சம் ரூபாய் சுருட்டப்பட்டு உள்ள விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் மாவட்டம் மோகனூரில்,சேலம் கூட்டுறவு சர்க்கரைஆலை இயங்கி வருகிறது.நிரந்தர தொழிலாளர்கள்,அலுவலக ஊழியர்கள் மற்றும்தற்காலிக தொழிலாளர்கள் எனமொத்தம் 450 பேர் பணியாற்றுகின்றனர். நடப்பு ஆண்டுக்கானகரும்பு அரவைப் பணிகள்,கடந்த ஆண்டு நவம்பரில்தொடங்கியது. ஒரு லட்சம் டன்கரும்பு அரவைக்கு இலக்குநிர்ணயிக்கப்பட்டு உள்ளது.தினசரி 2500 டன் கரும்புஅரவைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. இந்த ஆலையில்பணியாற்றி வரும் அனைத்துப்பிரிவுதொழிலாளர்களுக்கும் மாதம்தோறும்10 கிலோ லெவி சர்க்கரைதலா 33 ரூபாய்க்கு விற்பனைசெய்யப்பட்டு வருகிறது.வெளிச்சந்தையை விடஇங்கு கிலோவுக்கு 15 ரூபாய்வரை குறைவு....
ராசிபுரம் பஸ் நிலைய விவகாரம்: திமுகவுக்கு எதிராக கூட்டணி கட்சிகள்!

ராசிபுரம் பஸ் நிலைய விவகாரம்: திமுகவுக்கு எதிராக கூட்டணி கட்சிகள்!

நாமக்கல், முக்கிய செய்திகள்
ராசிபுரம் பேருந்து நிலைய இடமாற்றத் திட்டத்தின் பின்னணியில் பல்வேறு தகிடுதத்தங்கள் இருப்பதாக திமுகவுக்கு எதிராக கூட்டணி கட்சிகள் பகீர் புகார்களைக் கிளப்பி இருக்கின்றன. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் நகரம், நெய் மற்றும் ஜவுளி உற்பத்திக்கு பெயர் பெற்றது. இங்குள்ள பேருந்து நிலையத்தில் இருந்து அரசு மற்றும் தனியார் என மொத்தம் 120 பேருந்துகள் பல்வேறு ஊர்களுக்கு இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நகரத்தின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, மையப்பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தை, ராசிபுரத்தில் இருந்து 8.50 கி.மீ. தொலைவில் 1200 பேர் மட்டுமே வசிக்கும் அணைப்பாளையம் என்ற குக்கிராமத்திற்குக் கொண்டு செல்ல நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அணைப்பாளையத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கான மின்னணு ஏலம் விட்டு, பணி ஆணை வழங்கும் நிலையில் உள்ளது. இந்நிலையில்தான், ரியல...
நாமக்கல்: திமுக நகர்மன்ற தலைவருக்கு கொலை மிரட்டல்; உச்சத்தில் உள்கட்சி பூசல்!

நாமக்கல்: திமுக நகர்மன்ற தலைவருக்கு கொலை மிரட்டல்; உச்சத்தில் உள்கட்சி பூசல்!

அரசியல், நாமக்கல், முக்கிய செய்திகள்
  குமாரபாளையம் நகர திமுக செயலாளருக்கு சொந்தக் கட்சியினரே 'நாகரிகமாக' கொலை மிரட்டல் விடுத்து, அறிவாலயத்திற்கு அனுப்பியுள்ள மர்ம கடிதம், நாமக்கல் மாவட்ட அரசியல் களத்தில் உஷ்ணத்தை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வடக்கு நகர திமுக செயலாளராகவும், நகர மன்றத் தலைவராகவும் இருப்பவர் விஜய்கண்ணன். இவர் மீது திமுக மேலிடத்திற்கு அண்மையில் ஒரு பரபரப்பு புகார் கடிதத்தை கழக உடன்பிறப்புகள், பெயர் குறிப்பிடாமல் அனுப்பி வைத்துள்ளனர். அந்தக் கடிதத்தில், ''விஜய்கண்ணன், திருச்சியில் அமைச்சர் கே.என்.நேருவை சந்தித்து ஏற்கனவே இருந்த நகர பொறுப்பாளர் செல்வத்தை தூக்கச் செய்துவிட்டு, அந்தப் பதவியைக் கைப்பற்றிக் கொண்டார். பதவிக்கு வந்த பிறகு மூத்த நிர்வாகிகளை மதிக்காமல் தான்தோன்றித்தனமாக செயல்பட்டு வருகிறார். தன்னை மட்டும் ஃபோகஸ் செய்து கொள்கிறார். கட்சியினரின் தனிப்பட...
முடிவுக்கு வந்த கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு; முதல் குற்றவாளி யுவராஜிக்கு இறுதிமூச்சு வரை சிறைவாசம்!

முடிவுக்கு வந்த கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு; முதல் குற்றவாளி யுவராஜிக்கு இறுதிமூச்சு வரை சிறைவாசம்!

சேலம், தமிழ்நாடு, நாமக்கல், மதுரை, முக்கிய செய்திகள்
  தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில், முதல் குற்றவாளியான யுவராஜிக்கு மூன்று ஆயுள் தண்டனை விதித்து மதுரை வன்கொடுமை சிறப்பு நீதிமன்றம் மார்ச் 8ம் தேதி பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. அவர், இறுதிமூச்சு உள்ள வரை சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.   சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த சித்ரா - வெங்கடாசலம் தம்பதியின் மகன் கோகுல்ராஜ் (23). பொறியியல் பட்டதாரி. கடந்த 2015ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி ஒரு கும்பலால் கொடூரமாக கழுத்து அறுத்துக் கொலை செய்யப்பட்டார். அந்த கும்பல், ரயில் தண்டவாளத்தில் சடலத்தை வீசிவிட்டுச் சென்றுவிட்டது. பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த கோகுல்ராஜ், தன்னுடன் படித்து வந்த கொங்கு வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த சுவாதியை காதலித்ததால், அவரை கொடூரமாக கொலை செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்த...
கோகுல்ராஜ் ஆணவக்கொலை; தீர்ப்பு மார்ச் 5ம் தேதிக்கு தள்ளி வைப்பு!

கோகுல்ராஜ் ஆணவக்கொலை; தீர்ப்பு மார்ச் 5ம் தேதிக்கு தள்ளி வைப்பு!

குற்றம், சேலம், நாமக்கல், மதுரை, முக்கிய செய்திகள்
சேலம் கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கின் தீர்ப்பு, வரும் மார்ச் 5ம் தேதிக்கு தள்ளி வைத்து மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த வெங்கடாசலம் - சித்ரா தம்பதியின் மகன் கோகுல்ராஜ் (23). பொறியியல் பட்டதாரி. பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர். இவர், நாமக்கல்லைச் சேர்ந்த, தன்னுடன் படித்து வந்த கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த சுவாதி என்பவருடன் நெருங்கிப் பழகி வந்தார்.   கடந்த 2015ம் ஆண்டு, ஜூன் 23ம் தேதி, வீட்டில் இருந்து கல்லூரிக்குச் சென்று வருவதாகக் கூறிவிட்டுச் சென்றவர் அதன்பின் வீடு திரும்பவில்லை.   மறுநாள் மாலையில், நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிப்பாளையம் அருகில் ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கோகுல்ராஜின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.   கோகுல்ராஜ், தங்கள் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணுடன் நெ...
மாப்பிள்ளை அவருதான்… ஆனா அவர் போட்டிருக்கிற டிரஸ் என்னுது! இது நாமக்கல் திமுக பாலிடிக்ஸ்!

மாப்பிள்ளை அவருதான்… ஆனா அவர் போட்டிருக்கிற டிரஸ் என்னுது! இது நாமக்கல் திமுக பாலிடிக்ஸ்!

அரசியல், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
சுற்றுலாத்துறை அமைச்சராக மதிவேந்தன் செயல்பட்டு வந்தாலும், நாமக்கல் மாவட்டத்தைப் பொருத்தவரை சகலமும் நான்தான் என காலரை தூக்கிவிட்டு பவர் பாலிடிக்ஸ் நடத்தி வருகிறார் மாவட்ட பொறுப்பாளரான கேஆர்என். ராஜேஷ்குமார்.   நாமக்கல்லைச் சேர்ந்தவர் மருத்துவர் மாயவன். திமுகவின் மூத்த நிர்வாகிகளுள் ஒருவர். இவருடைய மகன் மதிவேந்தன் (36). நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளராக இருக்கிறார். எம்பிபிஎஸ்., எம்.டி., படித்துள்ள மதிவேந்தன், 2021 சட்டமன்ற தேர்தலில் ராசிபுரம் தனித்தொகுதியில் முன்னாள் அமைச்சர் சரோஜாவை எதிர்த்துப் போட்டியிட்டு 2000க்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் போராடி வெற்றி பெற்றார்.   யாருமே எதிர்பாராத வகையில் மதிவேந்தனை சுற்றுலாத்துறை அமைச்சராக்கி அழகு பார்த்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். தமிழக அமைச்சரவையில் இவர்தான் மிகவும் ஜூனியர். அருந்த...
இதிலேயுமா கோல்மால்? வாக்காளர்களுக்கு கிழிந்த புடவை, இரும்பு கொலுசு விநியோகம்! வெண்ணந்தூர் உள்ளாட்சி தேர்தல் கலாட்டா! திமுக அப்செட்!!

இதிலேயுமா கோல்மால்? வாக்காளர்களுக்கு கிழிந்த புடவை, இரும்பு கொலுசு விநியோகம்! வெண்ணந்தூர் உள்ளாட்சி தேர்தல் கலாட்டா! திமுக அப்செட்!!

அரசியல், நாமக்கல், முக்கிய செய்திகள்
வெண்ணந்தூரில் நாளை நடக்க உள்ள மாவட்ட கவுன்சிலர் தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு ரொக்கம், வேட்டி, சேலை என வாரி இறைத்த திமுக, இறுதிக்கட்டத்தில் வெள்ளி கொலுசு என்ற பெயரில் இரும்பு கம்பியால் ஆன கொலுசுகளை கொடுத்தது, வாக்காளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.   நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 6வது வார்டில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான இடைத்தேர்தல் சனிக்கிழமை (அக். 9) நடக்கிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி, மாலை 6 மணி வரை நடக்கிறது. 107 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. ஆறாவது வார்டில் மொத்தம் 54 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். வெண்ணந்தூர் ஒன்றியம் நீண்ட காலமாகவே அதிமுகவின் கோட்டையாக இருந்து வந்துள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது கூட திமுகவுக்கு அதிமுகவைக் காட்டிலும் 1700 வாக்குகள் குறைவாகவே கிடைத்துள்ளன.   தே...
ஆளுங்கட்சி 1000; அதிமுக 500 ரூபாயும் வேட்டி சேலையும்! சூடு பறக்கும் வெண்ணந்தூர் உள்ளாட்சி தேர்தல் களம்!!

ஆளுங்கட்சி 1000; அதிமுக 500 ரூபாயும் வேட்டி சேலையும்! சூடு பறக்கும் வெண்ணந்தூர் உள்ளாட்சி தேர்தல் களம்!!

அரசியல், நாமக்கல், முக்கிய செய்திகள்
நாமக்கல் அருகே, வெண்ணந்தூர் 6வது வார்டு மாவட்ட கவுன்சிலர் தேர்தலையொட்டி, திமுக, அதிமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் போட்டிப்போட்டு பண பட்டுவாடாவில் ஈடுபட்டது, அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட மற்றும் விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு முதல்கட்டமாக அக். 6ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு சனிக்கிழைமை (அக். 9) தேர்தல் நடக்கிறது.   நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியத்தில் 6வது வார்டில் இருந்து மாவட்ட கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுகவின் பி.ஆர்.சுந்தரம், கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது பதவியை ராஜிநாமா செய்துவிட்டார். அதையடுத்து அந்தப் பதவிக்கு நாளை வாக்குப்பதிவு நடக்கிறது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக கூட்டணியாகவும், பாமக, தேமுதிக, அமமுக,...
திருச்செங்கோடு: எழுந்து நின்று பதில் சொல்லாததால் பட்டியல் சமூக இளைஞர்கள் மீது தாக்குதல்; எப்ஐஆர் பதியாமல் போலீசார் கட்டப்பஞ்சாயத்து!

திருச்செங்கோடு: எழுந்து நின்று பதில் சொல்லாததால் பட்டியல் சமூக இளைஞர்கள் மீது தாக்குதல்; எப்ஐஆர் பதியாமல் போலீசார் கட்டப்பஞ்சாயத்து!

நாமக்கல், முக்கிய செய்திகள்
திருச்செங்கோடு அருகே, பொது வெளியில் மது அருந்திய பட்டியல் சமூக இளைஞர்களை உள்ளூரைச் சேர்ந்த கவுண்டர் சமூக ஆள்கள் தட்டிக் கேட்டபோது, அவர்கள் எழுந்து நின்று பதில் சொல்லாததால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் பட்டியல் சமூக வாலிபரின் காது ஜவ்வு கிழிந்தது.   நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த மல்லசமுத்திரம் அருகே உள்ள அவினாசிப்பட்டியைச் சேர்ந்த செங்கோடன் மகன் வெற்றிவேல் (32). ரிக் லாரி ஓட்டுநர். இதே ஊரைச் சேர்ந்த சின்னுசாமி மகன் ராஜமாணிக்கம் (40). அவினாசிப்பட்டி ஊராட்சிமன்றத் துணைத்தலைவர். இருவரும் உறவினர்கள். கடந்த 4ம் தேதி இரவு, அவினாசிப்பட்டிக்கு பக்கத்து ஊரான வண்டிநத்தம் சின்ன ஏரி பகுதியில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். இதையடுத்து அவர்கள் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்குச் சென்றபோது செயின் ரிப்பேர் ஆனதால் அதை சரி செய்து கொண்டிருந...