Sunday, February 16மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

முக்கிய செய்திகள்

சேலம் அதிமுக மாவட்ட செயலாளர் நீக்கம் ஏன்? பரபரப்பு பின்னணி!

சேலம் அதிமுக மாவட்ட செயலாளர் நீக்கம் ஏன்? பரபரப்பு பின்னணி!

அரசியல், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலம் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் பதவியில் இருந்து முன்னாள் எம்எல்ஏ ஜி.வெங்கடாசலம், திடீரென்று நீக்கப்பட்டதன் பின்னணியில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிமுகவில், சேலம் மாநகர்மாவட்டச் செயலாளராகஇருந்தவர் ஜி.வெங்கடாசலம்.8 ஆண்டுக்கும் மேலாக இந்தப்பதவியில் இருந்து வந்தார்.எடப்பாடியின் தீவிர விசுவாசியாகஅறியப்பட்ட இவர்,கடந்த ஜன. 28ம் தேதி,திடீரென்று மா.செ. பதவியில்இருந்து கட்டம் கட்டப்பட்டார்.அத்துடன், கொள்கை பரப்புதுணைச் செயலாளர் என்ற'டம்மி' பதவியில் நியமிக்கப்பட்டார். ஜி.வெங்கடாசலம் சூட்டோடு சூடாக,அனைத்துலக எம்ஜிஆர் மன்றதுணைச்செயலாளர் எம்.கே.செல்வராஜ்,சேலம் சூரமங்கலம் பகுதி செயலாளர்ஏ.கே.எஸ்.எம்.பாலு ஆகியஇருவரையும் சேலம் மாநகர்மாவட்ட பொறுப்பாளர்களாகநியமித்திருக்கிறார்எடப்பாடி பழனிசாமி. மா.செ. பதவியில் இருந்துவெங்கடாசலம் நீக்கப்பட்டதன்பின்னணி குறித்து இலைக்கட்சியின்மூத்த ந...
அன்னை தெரேசா பெயரில்1000 கோடி ரூபாய் வசூல்!கதிகலங்கிய கூட்டுறவு வங்கிகள்!

அன்னை தெரேசா பெயரில்1000 கோடி ரூபாய் வசூல்!கதிகலங்கிய கூட்டுறவு வங்கிகள்!

சேலம், முக்கிய செய்திகள்
சேலத்தில், அன்னை தெரேசா டிரஸ்ட் பெயரில் மக்களிடம் சட்ட விரோதமாக 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்த முன்னாள் பா.ஜ.க., பெண் நிர்வாகி உள்ளிட்ட 17 பேரை காவல்துறையினர் கொத்தாக கைது செய்துள்ளனர். சேலம் அம்மாபேட்டையில்உள்ள சிவகாமி திருமண மண்டபத்தில்,புனித அன்னை தெரேசா மனிதநேயஅறக்கட்டளை என்ற தொண்டுநிறுவனம் கடந்த இரண்டு ஆண்டுக்கும்மேலாக இயங்கி வருகிறது.இந்த அமைப்பின் மூலம்பெண்களுக்கு தையல்,பாக்கு தட்டு தயாரித்தல்உள்ளிட்ட கைத்தொழில்பயிற்சிகள் இலவசமாகவழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஜன. 23ம் தேதி,இந்த மண்டபத்திற்குள்பொதுமக்கள் கூட்டம் கூட்டமாகமுண்டியடித்துச் சென்றனர்.மண்டபம் அமைந்துள்ள சாலையில்போக்குவரத்து நெரிசல் ஏற்படும்அளவுக்கு கூட்டம் திரண்டது. அறக்கட்டளை நிர்வாகிகள்,பொதுமக்களிடம் முதலீடுகளைப்பெற்று வருவதாகவும்,அதை இரண்டே மாதத்தில்இரட்டிப்பாக திருப்பித் தருவதாகவும்கவர்ச்சிகரமான திட்டத்தை...
சேலம் கூட்டுறவு ஆலையில் 19 லட்சம் ரூபாய்க்கு சர்க்கரையை தின்ற பெண் அதிகாரியின் எடுபிடி!

சேலம் கூட்டுறவு ஆலையில் 19 லட்சம் ரூபாய்க்கு சர்க்கரையை தின்ற பெண் அதிகாரியின் எடுபிடி!

சேலம், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் தொழிலாளர்களுக்கு சலுகை விலையில் விற்பனை செய்வதற்காக ஒதுக்கப்பட்ட சர்க்கரையில் போலி இருப்புக் கணக்கு மூலம் 19 லட்சம் ரூபாய் சுருட்டப்பட்டு உள்ள விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் மாவட்டம் மோகனூரில்,சேலம் கூட்டுறவு சர்க்கரைஆலை இயங்கி வருகிறது.நிரந்தர தொழிலாளர்கள்,அலுவலக ஊழியர்கள் மற்றும்தற்காலிக தொழிலாளர்கள் எனமொத்தம் 450 பேர் பணியாற்றுகின்றனர். நடப்பு ஆண்டுக்கானகரும்பு அரவைப் பணிகள்,கடந்த ஆண்டு நவம்பரில்தொடங்கியது. ஒரு லட்சம் டன்கரும்பு அரவைக்கு இலக்குநிர்ணயிக்கப்பட்டு உள்ளது.தினசரி 2500 டன் கரும்புஅரவைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. இந்த ஆலையில்பணியாற்றி வரும் அனைத்துப்பிரிவுதொழிலாளர்களுக்கும் மாதம்தோறும்10 கிலோ லெவி சர்க்கரைதலா 33 ரூபாய்க்கு விற்பனைசெய்யப்பட்டு வருகிறது.வெளிச்சந்தையை விடஇங்கு கிலோவுக்கு 15 ரூபாய்வரை குறைவு....
வருமான வரி விலக்கு உச்ச வரம்பு உயர்வு; இனி 12 லட்சம் ரூபாய் வரை வரி கிடையாது!

வருமான வரி விலக்கு உச்ச வரம்பு உயர்வு; இனி 12 லட்சம் ரூபாய் வரை வரி கிடையாது!

இந்தியா, முக்கிய செய்திகள்
மாதச் சம்பளதாரர்கள், மத்திய தர வர்க்கத்தினரை மகிழ்ச்சிப் படுத்தும் விதமாக, ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு வரி விலக்கு அளிக்கப்படும் என்று மத்திய நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்திய அரசின் 2025-2026ஆம்ஆண்டுக்கான நிதிநிலைஅறிக்கையை பிப். 1ஆம் தேதி(சனிக்கிழமை) நிதித்துறைஅமைச்சர் நிர்மலா சீதாராமன்நாடாளுமன்றத்தில்தாக்கல் செய்தார். நிதிநிலை அறிக்கையின் முக்கிய அம்சங்கள்: வருமான வரி விலக்கு உச்ச வரம்பு உயர்வு: புதிய வருமான வரி முறையில்,வருமான வரி விலக்கிற்கானஉச்ச வரம்பு 7 லட்சம் ரூபாயில்இருந்து 12 லட்சம் ரூபாயாகஉயர்த்தப்பட்டு உள்ளது. இதன்படி,ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் வரைவருமானம் பெறுவோர், வருமான வரிசெலுத்துவதில் இருந்து விலக்குஅளிக்கப்படுவதாக அமைச்சர்நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். கடந்த 2019ல் 5 லட்சமாகவும்,2023ல் 7 லட்சமாகவும் உயர்த்தப்பட்டவரு...
சேலம் மாநகராட்சியில் பல கோடி ரூபாய் கையாடல்; தணிக்கை அறிக்கையில் ‘ஷாக்’

சேலம் மாநகராட்சியில் பல கோடி ரூபாய் கையாடல்; தணிக்கை அறிக்கையில் ‘ஷாக்’

சேலம், முக்கிய செய்திகள்
சேலம் மாநகராட்சிக்கு வர வேண்டிய வரி வருவாயில் பல கோடி ரூபாய், அதிகாரிகள் கூட்டு சேர்ந்து கொண்டு போலி ரசீது மூலம் கையாடல் செய்துள்ள அதிர்ச்சி தகவல் தணிக்கை அறிக்கையில் தெரிய வந்துள்ளது. சேலம் மாநகராட்சியில் சூரமங்கலம், அஸ்தம்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை என நான்கு மண்டலங்களும், 60 கோட்டங்களும் உள்ளன. இம்மாநகராட்சியின் 2023-24ம் ஆண்டுக்கான கணக்கு வழக்குகள், அண்மையில் உள்ளாட்சித் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டது. இதில், சூரமங்கலம் மண்டல கணக்கு வழக்கு விவரங்களை தணிக்கை செய்ததில், பல கோடி ரூபாய் கையாடல் நடந்திருப்பதும், மாநகராட்சிக்கு பெருமளவு வருவாய் இழப்பு ஏற்படுத்தி இருப்பதும் அம்பலமாகி உள்ளது. தணிக்கை அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள விவரங்கள்: தணிக்கை அறிக்கையின் ஒரு பகுதி சேலம் மாநகராட்சி மையஅலுவலகத்தில் இருந்துசொத்துவரி, தொழில் வரி,பிறப்பு - இறப்பு படிவம்,சொத்து...
மகாநதி! நல்லவனுக்கு கிடைக்கிற எல்லா மரியாதையும் கெட்டவனுக்கும் கிடைக்குதே எப்படி?

மகாநதி! நல்லவனுக்கு கிடைக்கிற எல்லா மரியாதையும் கெட்டவனுக்கும் கிடைக்குதே எப்படி?

சினிமா, சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
மனைவியை இழந்து, இரண்டு குழந்தைகளுடன் கிராமத்தில் செல்வாக்குடன் வாழ்ந்து வரும் நடுத்தர வயது இளைஞன் ஒருவன், பட்டணத்தைச் சேர்ந்த மோசடிப் பேர்வழியை நம்பி தன் சொத்துக்களை எல்லாம் இழக்கிறான். பிள்ளைகளும் தொலைந்து போகிறார்கள். சிதிலம் அடைந்த தன் வாழ்க்கையை அவன் மீட்டெடுத்தானா? குழந்தைகளைக் கண்டுபிடித்தானா? என்பதுதான் மகாநதி படத்தின் மையக்கதை. கொரியன், ஈரானிய படங்கள்தான்உலகப்படங்கள் என அலட்டிக்கொள்வோர், சந்தேகமே இல்லாமல்மகாநதியைக் கொண்டாடலாம்.இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும்உலகப்படங்களின் வரிசையில்கமல்ஹாசனின், மகாநதிநின்று விளையாடும். கமலின் உற்ற நண்பர்களுள்ஒருவரான சந்தானபாரதி இயக்கத்தில்1994, ஜனவரி 14ஆம் தேதி பொங்கல்விருந்தாக வெளியானது.இன்றுடன் (14.1.2025)மகாநதிக்கு 31 வயது. மோசடி குற்றத்திற்காகதண்டனை பெற்று, சென்னைமத்திய சிறையில் அடைக்கப்படுகிறார்கிருஷ்ணா என்கிற கிருஷ்ணசாமி (கமல்).அதே ...
சேலம்: வ.உ.சி. பூ மார்க்கெட் ஒப்பந்ததாரர்கள் கோஷ்டி மோதல்; தொங்கலில் விட்ட அமைச்சர்கள்!

சேலம்: வ.உ.சி. பூ மார்க்கெட் ஒப்பந்ததாரர்கள் கோஷ்டி மோதல்; தொங்கலில் விட்ட அமைச்சர்கள்!

சேலம், முக்கிய செய்திகள்
சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட் ஒப்பந்ததாரர்களிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலால் மார்க்கெட் இரண்டாக உடைந்ததோடு, மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு அபாயமும் ஏற்பட்டுள்ளது. வ.உ.சி. பூ மார்க்கெட் சேலம் மாநகர மையப்பகுதியில் 100 ஆண்டுகள்பழமையான வ.உ.சி. பூ மார்க்கெட்இயங்கி வருகிறது.பழைய கட்டடத்தில்இயங்கி வந்த இந்த வளாகம்,ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ்,புதிதாக கட்டுவதற்காககடந்த 2020ம் ஆண்டு இடிக்கப்பட்டது.14.97 கோடி ரூபாய் பட்ஜெட்டில்நான்கு தளங்களுடன் புதிதாகவ.உ.சி. பூ மார்க்கெட் வளாகம்கட்டி முடிக்கப்பட்டது.கடந்த 2023 ஜூன் 11ம் தேதி,தமிழக முதல்வர் திறந்து வைத்தார்.இதில் மொத்தம் 240 கடைகள்கட்டப்பட்டு உள்ளன. சேலம் மாநகராட்சி கட்டுப்பாட்டில்உள்ள வ.உ.சி. மார்க்கெட்டிற்குவரும் வியாபாரிகள், விவசாயிகளிடம்சுங்கம் மற்றும் கடை வாடகைவசூலிக்கும் உரிமத்திற்கானபொது ஏலம் கடந்த 2023 நவம்பர்மாதம் நடத்தப்பட்டது.சே...
ரத்தக்களரியான பங்குச்சந்தை; ஒரே நாளில் 8.30 லட்சம் கோடி ரூபாய் இழப்பு! ஹெச்எம்பிவி தொற்று காரணமா?

ரத்தக்களரியான பங்குச்சந்தை; ஒரே நாளில் 8.30 லட்சம் கோடி ரூபாய் இழப்பு! ஹெச்எம்பிவி தொற்று காரணமா?

முக்கிய செய்திகள், வர்த்தகம்
புத்தாண்டின் முதல் வாரத்திலேயே பங்குச்சந்தையில் இப்படி ஒரு பேரிடி வந்திறங்கும் என்று முதலீட்டாளர்கள் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். ஏனெனில், கடந்த 2024ஆம் ஆண்டின் கடைசி ஆறு மாதங்கள், பங்குச்சந்தை பெரும்பாலும் சரிவிலேயே இருந்தன. புதிய ஆண்டிலாவது எழுச்சி பெறும் என்று எதிர்பார்த்திருந்த முதலீட்டாளர்களுக்கு மீண்டும் பலத்த அடியைக் கொடுத்திருக்கிறது பங்குச்சந்தை. ஜனவரி 6ஆம் தேதியானநேற்றைய தினம்,இந்தியப் பங்குச்சந்தைகள்கடும் வீழ்ச்சியைச் சந்தித்தன.வர்த்தக நேர முடிவில்,மும்பை பங்குச்சந்தையானசென்செக்ஸ், 1258 புள்ளிகள்(1.59%) சரிந்து, 77964புள்ளிகளில் முடிந்தது. தேசியப் பங்குச்சந்தையானநிஃப்டி குறியீடு 23616 புள்ளிகளுடன்வர்த்தகத்தை நிறைவு செய்தது.நிஃப்டி 388 புள்ளிகளை(1.62%) இழந்தது. பங்குச்சந்தை தடாலடியாகசரிந்ததற்கு சில முக்கியகாரணங்கள் சொல்லப்படுகின்றன.சீனாவில் தற்போது ஹெச்எம்பிவிஎன்ற...
பல்கலை மாணவி பலாத்காரம்: அனைவரும் வெட்கப்பட வேண்டும்!; உயர்நீதிமன்றம் ‘நறுக்’

பல்கலை மாணவி பலாத்காரம்: அனைவரும் வெட்கப்பட வேண்டும்!; உயர்நீதிமன்றம் ‘நறுக்’

சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
அரசியல் விளம்பரத்திற்காக செய்யப்படும் போராட்டங்களுக்கு அனுமதி வழங்க உத்தரவிட முடியாது எனக்கூறி, பாமக வழக்கறிஞர் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை (ஜன. 2, 2025) உத்தரவிட்டுள்ளது. சென்னை அண்ணா பல்கலை.யில்பி.இ., படித்து வரும் மாணவி ஒருவர்,அண்மையில் பாலியல்பலாத்காரம் செய்யப்பட்டார்.பல்கலை வளாகத்தில்ஒதுக்குப்புறமான இடத்தில்இரவு நடந்த இந்தகொடூர சம்பவம், நாடுமுழுவதும் பரபரப்பைஏற்படுத்தி உள்ளது. மாணவியை நாசப்படுத்தியதாகசென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்தஞானசேகரன் என்ற இளைஞரைகாவல்துறையினர் கைது செய்துள்ளனர்.காவல்நிலையத்தில் வைத்துவிசாரித்தபோது, வழக்கம்போல் அவர்கழிப்பறையில் வழுக்கி விழுந்ததில்இடது கை, காலில் எலும்புமுறிவு ஏற்பட்டுள்ளது.அவருக்கு அரசு மருத்துவமனையில்சிகிச்சை அளிக்கப்பட்டு வரும்அதேவேளையில், காவல்துறைவிசாரணையும் தீவிரமாகநடந்து வருகிறது. மேல...
பெண்கள் எப்படி வாழ வேண்டும் என்று வழிநடத்தும் உரிமை யாருக்கும் இல்லை; உயர்நீதிமன்றம் உத்தரவு!

பெண்கள் எப்படி வாழ வேண்டும் என்று வழிநடத்தும் உரிமை யாருக்கும் இல்லை; உயர்நீதிமன்றம் உத்தரவு!

சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பெண்கள் என்ன உடை அணிய வேண்டும்? எப்படி வாழ வேண்டும் என்று வழி நடத்துவதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அண்ணா பல்கலையில்பி.இ., இரண்டாம் ஆண்டு படித்துவரும் ஒரு மாணவியைகோட்டூர்புரத்தைச் சேர்ந்தஞானசேகரன் என்பவர்,கடந்த 23.12.2024ம் தேதி இரவுபல்கலை வளாகத்தில் வைத்துபாலியல் பலாத்காரம் செய்தார். இந்த சம்பவம் தொடர்பாகஞானசேகரனை காவல்துறையினர்கைது செய்தனர். இந்நிலையில்,பாதிக்கப்பட்ட மாணவியின்புகார் குறித்த எப்ஐஆர் அறிக்கை,ஊடகங்களில் கசிந்த விவகாரம்பெரும் அதிர்வலைகளைஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் வரலட்சுமி, பாஜக வழக்கறிஞர் ஏற்காடு மோகன்தாஸ் ஆகியோர் தனித்தனியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகளை வெள்ளிக்கிழமை...