![தர்மபுரி: கடத்தப்பட்ட ஆண் குழந்தை மீட்பு! 3 பெண் உள்பட 4 பேர் கைது!!](https://i0.wp.com/puthiyaagarathi.com/wp-content/uploads/2021/06/save-baby.jpeg?resize=665%2C365)
தர்மபுரி: கடத்தப்பட்ட ஆண் குழந்தை மீட்பு! 3 பெண் உள்பட 4 பேர் கைது!!
தர்மபுரி அரசு மருத்துவமனையில், பிறந்து ஒரு நாளே ஆன பச்சிளம் ஆண் குழந்தையை கடத்தியதாக மூன்று பெண்கள் உள்பட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கடத்தப்பட்ட குழந்தையும் பத்திரமாக மீட்கப்பட்டு, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
தர்மபுரி மாவட்டம்
பென்னாகரம் அருகே உள்ள
நாச்சனூரைச் சேர்ந்தவர்
அருள்மணி (35). மரத்தச்சு
வேலை செய்பவர்.
இவருடைய மனைவி மாலினி (19).
நிறைமாத கர்ப்பிணியாக
இருந்த மாலினி, கடந்த
18ம் தேதி மாலை 4 மணியளவில்,
தர்மபுரி அரசு மருத்துவமனையில்
சேர்க்கப்பட்டார். மறுநாள்
(ஜூன் 19) இரவு 7 மணியளவில்
அவருக்கு அழகான
ஆண் குழந்தை பிறந்தது.
அதற்கு அடுத்த நாள்
காலையில் மாலினி, பிரசவ
அறை அருகே உள்ள
கழிப்பறைக்குச் சென்று விட்டு
மீண்டும் தன் அறைக்கு
வந்து பார்த்தார். அப்போது,
தன்னுடைய குழந்தை திடீரென்று
மாயமாகி இருப்பது கண்டு
அதிர்ச்சி