
பெரியார் பல்கலை ஆட்சிக்குழுவில் ‘காலாவதி’ உறுப்பினர்கள்; ஆசிரியர்கள் அதிருப்தி
சேலம் பெரியார் பல்கலை.
ஆட்சிக்குழு உறுப்பினர்களாக உள்ள
ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற்ற பிறகும்,
அதே பதவியில் தொடர்வதற்கு
பல்கலை ஆசிரியர் சங்கம்
அதிருப்தி தெரிவித்துள்ளது.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில்
தமிழ்த்துறை தலைவராக பணியாற்றி
வரும் பெரியசாமி, வேதியியல்
துறைத்தலைவர் ராஜ் ஆகியோர்
தற்போது ஆட்சிக்குழு உறுப்பினராகவும்
பதவி வகித்து வருகின்றனர்.
இவர்கள் பேராசிரியர் பிரிவில் இருந்து
இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இவர்கள் இருவரும் அக். 9ம் தேதியுடன்
மூத்த பேராசிரியர் ஆக
பதவி உயர்வு பெற்று விட்டனர்.
பல்கலை சாசன விதிப்படி,
ஒருவர் எந்த பிரிவில் இருந்து
ஆட்சிக்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டாரோ
அவர் அந்த நிலையில் இருந்து பதவி உயர்வு
பெற்றுவிடும் பட்சத்தில்,
முந்தைய வகைப்பாட்டிலேயே
ஆட்சிக்குழு உறுப்பினராக
தொடர முடியாது.
அதன்படி,
மூத்த பேராசிரியராக ப...