
போலி ஜனநாயகத்திற்கா உங்கள் வாக்கு? #2
தமிழக சட்டப்பேரவை
தேர்தல் களம்,
வழக்கம்போல கனல்
கக்குகிறது.
இதுவரையிலான தமிழக
தேர்தல் வரலாற்றில்,
இந்த தேர்தலானது
அதிமுக, திமுக ஆகிய
இரு திராவிட கட்சிகளுக்கும்
முற்றிலும் புதிய அனுபவமாக
இருக்கும். மக்களும் கூட,
தேர்தல் முடிவுகளை தெரிந்து
கொள்ள வழக்கத்தை விடவும்
கூடுதல் ஆவலுடன்
காத்திருக்கிறார்கள்.
நாளை (ஏப். 6) காலை
7 மணிக்கு வாக்குப்பதிவு
தொடங்க உள்ள இந்த
கடைசி நிமிடத்தில்,
திருவாளர் பொதுஜனங்களின்
சிந்தனைக்காக சில சங்கதிகளை
பேச விழைகிறேன்.
சற்றே நீளமான பதிவுதான்.
இந்த நாட்டின் எதிர்காலத்திற்காக
கொஞ்சம் பொறுமை காத்து
செவிசாய்க்க வேண்டுகிறேன்.
களத்தில் எத்தனை முனை
போட்டி நிலவினாலும்,
நீங்கள் திமுக அல்லது
அதிமுக கூட்டணி ஆகியவற்றில்
ஒன்றைத்தான் தேர்வு செய்யப்
போகிறீர்கள். எவற்றையெல்லாம்
முன்வைத்து இங்கே ஒரு
கூட்டணியை புற