Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: women

உடல் பருமனான பெண்கள் பேரல் போன்றவர்களா? தனியார் ஜிம் மீது பாய்ச்சல்

உடல் பருமனான பெண்கள் பேரல் போன்றவர்களா? தனியார் ஜிம் மீது பாய்ச்சல்

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள்
இலங்கையில் உள்ள ஓஸ்மோ என்ற தனியார் உடற்பயிற்சி நிறுவனம் (ஜிம்), உடல் பருமனான பெண்களை பீப்பாயுடன் (பேரல்) ஒப்பிட்டு வைத்திருந்த விளம்பரத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சமூக வலைத்தளங்களில் அந்நிறுவனத்தை இணையவாசிகள் தொடர்ந்து புரட்டி எடுத்து வருகின்றனர். உடல் பருமன் இன்று இளைய தலைமுறையினரை வாட்டி எடுக்கும் பிரச்சனையாக உள்ளது. ஆசிய நாடுகளில், குறிப்பாக இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் உடல் பருமன் சமூக பிரச்னையாகவும் உருவெடுத்துள்ளது. மாறிவரும் உணவு பழக்கம், முறையற்ற வேலை நேரம் உள்ளிட்ட வாழ்வியல் முறைகளால் உடல் பருமன் ஏற்படுகிறது. இதனால், ஆண், பெண் என இருபாலினத்தவரும் பாதிக்கப்பட்டாலும், பெண்கள் அதனால் பலராலும் பொதுவெளியில் அவமானபடுத்தப்படுகின்றனர். உடற்பயிற்சி கூடங்களில் விளம்பரம் கூட பெண்களை மையப்படுத்திதான் உள்ளது. பெண்கள் இந்த வடிவத்திலும், அளவிலும் இருக்க வேண்டும் என்றே
பூப்படைதல் சடங்கு இன்றும் தேவையா?

பூப்படைதல் சடங்கு இன்றும் தேவையா?

இந்தியா, உலகம், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஒரு பெண், தனது முதல் மாதவிடாயை அடைவதில் என்ன பெரிய விஷயம் இருந்துவிடப் போகிறது? தமிழ் கலாச்சாரத்தில் அது மிகப் பெரிய விசேஷமாக பார்க்கப்படுவதோடு, அதைத்தொடர்ந்து ஒரு பெரிய விழாவும் நடத்தப்படுகிறது. என் மூத்த சகோதரிக்கான நிகழ்ச்சியை நடத்த, குடும்பத்தினர் தயாராகியபோது, எதற்காக என்றே எனக்கு புரியவில்லை. ஆர்வம் மிகுதியால், இந்த சம்பிரதாயத்தின் முக்கியத்துவம் குறித்து என் குடும்பத்தினரிடம் கேட்டேன். என் சகோதரி `பெரியவள்` ஆகியுள்ளதால் இந்த நிகழ்ச்சி நடப்பதாக அவர்கள் கூறியதும், அந்த அறியாத வயதில் எல்லா ஆண் குழந்தையும் கேட்கும் கேள்வியைத்தான் நானும் கேட்டேன். "நான் `பெரிய பையன்` ஆகியதற்கான நிகழ்ச்சி எப்போது?" என்று நான் கேட்டேன். என் குடும்பத்தினர் அன்று எதற்காக அவ்வளவு நேரம் சிரித்தார்கள், வீட்டிற்கு உறவினர்கள், நண்பர்கள் என்று யார் வந்தாலும், அந்த கதையை ஏன் தொடர்ந்து கூறிக்கொண்டு இரு
கர்ப்பப்பையில் கட்டி…! ”ஆபத்தை அறியாத பெண்கள்”

கர்ப்பப்பையில் கட்டி…! ”ஆபத்தை அறியாத பெண்கள்”

அலோபதி, சேலம், தமிழ்நாடு, பெண்கள் நலம், மருத்துவம், முக்கிய செய்திகள், விழுப்புரம்
(நலமறிய ஆவல்) பெண்களின் கர்ப்பப்பையில் கட்டி வளருதல் என்பது, அவர்களுக்கு ஏற்படும் முக்கிய உடல்நலப் பிரச்னைகளில் ஒன்று. இப்பிரச்னை சற்று விநோதமானதும்கூட. காரணம், கர்ப்பப்பையில் கட்டி வளர்ந்திருக்கிறது என்பதே பெண்கள் பலருக்கும் தெரியாது என்கிறார்கள் மருத்துவர்கள். சேலம் இரண்டாவது அக்ரஹாரத்தில் உள்ள திரு மருத்துவமனையில் ஒரு பெண்ணின் கர்ப்பப்பையில் இருந்து, சுமார் 4 கிலோ கட்டியை, லேப்ராஸ்கோப் அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றி இருக்கிறார்கள் மருத்துவர்கள். மூத்த மருத்துவர் திருவருட்செல்வன், மகப்பேறு மருத்துவர் சரவணக்குமார், மயக்கவியல் மருத்துவர் சாய்குமார் குழுவினர் இந்த சிகிச்சையை திறம்பட செய்துள்ளனர். கர்ப்பப்பை கட்டி எதனால் ஏற்படுகிறது? காரணங்கள் என்ன? புற்றுநோயாக மாறுமா? உள்ளிட்ட கேள்விகளை மகப்பேறு மருத்துவர் சரவணக்குமாரிடம் முன்வைத்தோம். இனி, அவர்... காரணங்கள்: ஈஸ்
”பெண்களைவிட ஆண்களுக்கு  அதிக சம்பளம் கொடுத்தால் தண்டனை!”; எங்கே தெரியுமா?

”பெண்களைவிட ஆண்களுக்கு அதிக சம்பளம் கொடுத்தால் தண்டனை!”; எங்கே தெரியுமா?

இந்தியா, உலகம், சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
சம வேலைக்கு சம ஊதியமே தர மாட்டேங்கிறார்கள் என்ற புலம்பல்கள் அதிகரித்திருக்கும் இந்த வேளையில், ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு குறைவாக ஊதியம் கொடுப்பது தண்டனைக்குரிய குற்றம் என்று தடாலடியாக சட்டம் கொண்டு வந்திருக்கிறது ஐஸ்லாந்து. ஆண், பெண் பாலின சமத்துவத்தில் ஆசிய நாடுகளைவிட ஐரோப்பிய நாடுகள் எப்போதும் ஒரு படி மேலேதான் இருக்கிறது எனலாம். அட, நம்ம இந்தியாவில் ஆண்கள் செய்யும் அதே வேலையை பெண்கள் செய்தாலும்கூட, ஆண்களுக்கு கொடுக்கப்படும் அளவுக்கு சம்பளமே கொடுக்கப்படுவது இல்லை. ஆண்கள் பெறும் ஊதியத்தில் 60 முதல் 70 விழுக்காடுதான் பெண்களின் ஊதியமாக இருக்கிறது. இத்தனைக்கும் நம்ம நாட்டு மக்கள்தொகையில் சரிபாதி பெண்கள். இந்தியா மட்டுமல்ல. உலகம் முழுவதுமே பெண்கள் எல்லா இடங்களிலும் பாலின பாகுபாட்டை சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அமெரிக்கா மாதிரியான வளர்ந்த நாடுகளிலும் இந்த பிரச்னை இருக்க
‘நாறும்’ முதலமைச்சரின் மாநகரம்!; ‘இருட்டை தேடும்’ பெண்கள்!!

‘நாறும்’ முதலமைச்சரின் மாநகரம்!; ‘இருட்டை தேடும்’ பெண்கள்!!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊரான சேலம் மாநகரத்திலேயே போதிய பொதுக்கழிப்பறை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் ரயில் தண்டவாளம், இருட்டு நேரத்தில் முள் புதரோரங்களில் 'அவசரத்துக்கு ஒதுங்கும்' அவல நிலை நீடிப்பதாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (டிஒய்எப்ஐ) புகார் தெரிவித்துள்ளது. சேலம் நகராட்சி, 1994ம் ஆண்டில் மாநகராட்சியாக நிலை உயர்த்தப்பட்டது. தமிழகத்தின் ஐந்தாவது பெரிய மாநகரமாக இருந்து வருகிறது. ஆனாலும், அதற்குரிய உள்கட்டமைப்பு வசதிகள் இன்னும் முழுமை பெறவில்லை. தனிநபர் வருவாய் உயர்விலும் மோசமான நிலையில் இருக்கிறது. இது ஒருபுறம் இருக்க, இந்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தை முன்னெடுக்கும் வகையில், சேலம் மாநகராட்சி நிர்வாகம் தனிநபர் கழிப்பறை திட்டம் குறித்து தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறது. மாநகராட்சியில் மொத்தம் உள்ள 60 கோட்டங்களில் 52 கோட்டங்களில் திறந்தவெள
‘சுமார் மூஞ்சி குமார்’களை விரும்பும் பெண்கள்: சர்வே சொல்றத கேளுங்க!

‘சுமார் மூஞ்சி குமார்’களை விரும்பும் பெண்கள்: சர்வே சொல்றத கேளுங்க!

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள்
எல்லாவற்றிலும் ஸ்மார்ட் ஆக இருக்கும் ஆண்களைக் காட்டிலும், 'சுமார் மூஞ்சி குமார்'களையே பெண்களுக்கு அதிகம் பிடித்திருக்கிறதாம். நம்ம ஊர்ல இல்லைங்க. இது லண்டன் பெண்களின் சமாச்சாரம். இங்கிலாந்தின் லண்டன் பல்கலை., ஒன்று, பெண்களுக்கு எப்படிப்பட்ட ஆண்களை பிடிக்கும் என்ற ஆய்வை சமீபத்தில் நடத்தியது. எத்தனை பேரிடம் இந்த ஆய்வு நடந்தது என்ற தகவல்கள் இல்லை. ஆனால் ஆய்வின் முடிவில், பல்வேறு ருசிகரமான தகவல்கள் கிடைத்திருக்கின்றன. அர்னால்டு ஸ்வஸ்நேகர் போல கட்டுமஸ்தான ஆண்களை, அவ்வளவாக பெண்கள் விரும்புவதில்லை என்பது அந்த ஆய்வில் கிடைத்த முக்கிய தகவல்களில் ஒன்று. அதேபோல், விரல் நுனியில் தகவல்களை வைத்துக்கொண்டு 'டான் டான்' என்று பொளந்து கட்டும் ஆண்கள் மீது மதிப்பு இருக்கிறதே தவிர, அவர்களை வாழ்க்கைத் துணையாக ஏற்பதில் சற்று தயக்கம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வில் பங்கேற்ற பெண்களில் 1
பெண்ணுக்கு பாதுகாப்பான தேசமா இந்தியா?

பெண்ணுக்கு பாதுகாப்பான தேசமா இந்தியா?

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள்
இந்திய உயர்நீதிமன்றங்களில் மட்டும் 137458 பாலியல் வல்லுறவு வழக்குகள் இன்னும் விசாரணை நிலையிலேயே இருப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆண்டுக்கணக்கில் நீடிக்கும் விசாரணைகளால், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய நீதி கிடைக்காமல் போகக்கூடும். இதன் தீவிரம் தெரியாமல் இந்திய நீதிமன்றங்களும், அரசும் பரிபாலனம் நடத்துவது, இந்தியாவில் பெண்களுக்கான பாதுகாப்பை கேள்விக்கு உள்ளாக்கி இருக்கிறது. தேரா சச்சா சவுதா ஆசிரம பெண் சீடர்கள் இருவரை, அதன் தலைவர் குர்மீத் ராம் ரஹீம்சிங் பாலியல் வல்லுறவு செய்ததாக 2002ல் புகார் பதிவு செய்யப்பட்டது. கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் கழித்தே தண்டனை கிடைத்திருக்கிறது. தாமதமான நீதி என்றாலும், பசுத்தோல் போர்த்திய சாமியார்களுக்கு சரியான சவுக்கடியாகத்தான் இந்த தண்டனை அமைந்திருக்கிறது. 20 ஆண்டுகள் சிறை, நிச்சயம் கடுமையான தண்டனைதான். ஆனால், தாமத
துணிச்சலின் முகவரி  மீனாட்சி!

துணிச்சலின் முகவரி மீனாட்சி!

சென்னை, மகளிர், மதுரை, வேலூர்
''தமிழகத்தின் முதல் பெண் தீயணைப்பு அலுவலர்" "இப்போதுள்ள இளம்பெண்கள் எதையும் ஈஸியாக எடுத்துக்கொள்கிறார்கள். சொடுக்குப்போட்ட மாத்திரத்தில் எல்லாமே கிடைத்துவிட வேண்டும் என சினிமாத்தனமாக யோசிக்கிறார்கள். கனவுலகில் வாழ்கிறார்கள். அந்தக்கனவு கலையும்போதுதான், நிஜ வாழ்க்கை எவ்வளவு கடினமானது என்பது தெரியும். பெண்களோ, ஆண்களோ யாராக இருந்தாலும் உழைப்பைக் கைவிடக்கூடாது. உழைத்தால்தான் மேலே உயர முடியும். எளிமையாகச் சொல்வதென்றால், உன் வாழ்க்கை உன் கையில்," என்கிறார், மீனாட்சி விஜயகுமார். தமிழகத் தீயணைப்புத்துறையில் பெண்களும் பணியாற்றலாம் என்ற அறிவிப்பு வந்தபோது, மாவட்ட தீயணைப்பு அலுவலராக முதன்முதலில் இரண்டு பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர், மீனாட்சி விஜயகுமார். இவர் சென்னையில் நியமிக்கப்பட்டதால், அப்போதே பெரிய அளவில் ஊடக கவனம் பெற்றவர். துறையில் இன்றுவரை அப்பழுக்கின்றி பணியாற்றி வர
பெண்ணே நிர்வாக ஆளுமையில் சிறந்தவள்! – சொல்கிறார் லட்சுமி சித்தார்த்தன்; டி.எம்.எஸ். கண் மருத்துவமனை இயக்குநர்

பெண்ணே நிர்வாக ஆளுமையில் சிறந்தவள்! – சொல்கிறார் லட்சுமி சித்தார்த்தன்; டி.எம்.எஸ். கண் மருத்துவமனை இயக்குநர்

சிறப்பு கட்டுரைகள், சேலம், தன்னம்பிக்கை, மகளிர்
திட்டமிட்ட நேர மேலாண்மை இருந்தால், நாம் ஒவ்வொருவரும் சமுதாயத்திற்கு பல்வேறு விதங்களிலும் ஆக்கப்பூர்வமாக பங்களிக்க முடியும் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம், லட்சுமி சித்தார்த்தன். இவர், சேலம் சாரதா கல்லூரிச்சாலை எல்ஆர்என் காலனியில் உள்ள டிஎம்எஸ் கண் மருத்துவமனையின் இயக்குநர். இது மட்டுமல்ல. லேடீஸ் சர்க்கிள், சேலம் சிட்டிசன் ஃபோரம், இந்திய தொழிற்கூட்டமைப்பு (சிஐஐ), சேலத்தின் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் 'இன்டேக்' உள்ளிட்ட அமைப்புகளில் இணைந்தும் செயல்பட்டு வருகிறார். லட்சுமி சித்தார்த்தனின் பிறந்த வீடு, புகுந்த வீடு இரண்டுமே பாரம்பரியம் மிக்கது. இலங்கையின் கொழும்பு நகரம்தான் இவருடைய பூர்வீகம். ஈழ மண்ணில் தொடங்கப்பட்ட முதல் தமிழ் பத்திரிகையான 'வீரகேசரி' நாளேட்டின் நிறுவனரான நடேசன் அய்யாவின் பேத்திதான் இவர். இவருடைய கணவர் சித்தார்த்தன். சேலம் அறிந்த பிரபல கண் மருத்துவர். காங்கிரஸ் கட்சிய
மிரட்டும் ஹீமோபிலியா…! “பெண்களையும் தாக்கும்” #Hemophilia

மிரட்டும் ஹீமோபிலியா…! “பெண்களையும் தாக்கும்” #Hemophilia

தமிழ்நாடு, மருத்துவம், முக்கிய செய்திகள்
'ஏப்ரல்-17 உலக ஹீமோஃபிலியா தினம்'   உடலில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தால், ரத்தம் வெளிக்காற்றுடன் தொடர்பு கொண்ட சில நொடிகளிலேயே உறைய ஆரம்பித்து விடும். இது, நாம் உயிர் வாழ்வதற்காக இயற்கை நமக்களித்த கொடை.   ரத்தம் உறையாமை ஆனால், ஹீமோபிலியா (HEMOPHILIA) (ரத்தம் உறையாமை) குறைபாடு உள்ளவர்களுக்கு இங்குதான் சிக்கலே. இந்தக் குறைபாடு உள்ளவர்களுக்கு ரத்தம் உறையாது. நீண்ட நேரம் ரத்தப்போக்கு நீடிக்கும். அதனால் உயிரிழப்புகூட நிகழக்கூடும்.   ரத்தம் உறைவதற்கு ஒரு வகையான புரதச்சத்து தேவை. இந்த புரதம், ரத்தத்தில் உள்ள 13 வகையான காரணிகளில் உள்ளன. அதை மருத்துவர்கள், பேக்டர் (Factor) 1 முதல் பேக்டர் 13 வரை வகைப்படுத்துகின்றனர்.   எக்ஸ் (X) குரோமோசோம் இந்த பேக்டர்கள் 'எக்ஸ்' (X) குரோமோசோம்களில் உள்ளன. அதனால்தான், 'எக்ஸ்' குரோமோசோம் பாதிக்கப்படும்போது, ரத்தம் உறைய