Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Stock market

தங்கப்பத்திரம் வெளியீடு பிப். 12ம் தேதி தொடங்குகிறது; மலிவு விலையில் தங்கம் வாங்கலாம்…

தங்கப்பத்திரம் வெளியீடு பிப். 12ம் தேதி தொடங்குகிறது; மலிவு விலையில் தங்கம் வாங்கலாம்…

முக்கிய செய்திகள், வர்த்தகம்
இந்தியப் பாரம்பரியத்தில் தங்கத்திற்கு எப்போதும் தனித்த இடம் உண்டு. சேமிப்பு என்றாலே வெகுமக்களின் சிந்தனையில் முதலிடம் பிடிப்பது தங்கத்தில் முதலீடு செய்வதுதான். அதற்கு அடுத்து வங்கிகளில் டெபாசிட், நிலம், இன்சூரன்ஸ், பங்குகளில் முதலீடு செய்கின்றனர். தங்கத்தில் முதலீடு என்றாலே நகைகளாக வாங்குவதுதான் என்ற மனவோட்டத்தில் மக்கள் இருக்கின்றனர். நகை அல்லது நாணயங்களாக வாங்கும்போது அவசரத் தேவைக்காக உடனடியாக அடகு வைத்தோ அல்லது அன்றைய சந்தை மதிப்பிற்கு விற்றோ எளிதில் பணமாக்கிக் கொள்ள முடியும். அதேநேரம், செய்கூலி, சேதாரம் கணக்கில் கணிசமான இழப்பையும் சந்திக்க நேரிடுகிறது. ஆனால், தங்கப்பத்திரங்களில் முதலீடு செய்வது அப்படியானது அல்ல. இங்கு எல்லாமே காகித வடிவம்தான். அதாவது, டிஜிட்டல் வர்த்தகம்தான். ஆபரணங்களில் முதலீடு செய்வதைக் காட்டிலும் தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்யும்போது, கணிச
பாஜக வெற்றி: புதிய உச்சத்தை தொட்ட இந்திய பங்குச்சந்தை

பாஜக வெற்றி: புதிய உச்சத்தை தொட்ட இந்திய பங்குச்சந்தை

முக்கிய செய்திகள், வர்த்தகம்
நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மூன்று மாநிலங்களில் பாஜக பெற்ற அதிரிபுதிரியான வெற்றியின் தாக்கம், இந்தியப் பங்குச்சந்தையிலும் எதிரொலித்தது. இதனால் வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை (டிச. 4) சென்செக்ஸ் 1400 புள்ளிகளுக்கு மேலும், நிப்டி 400 புள்ளிகளுக்கு மேலும் உயர்ந்து வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டது. வர்த்தக நேர முடிவில் தேசிய பங்குச்சந்தையான நிப்டி 418 புள்ளிகள் (2.07%) உயர்ந்து, 20686 புள்ளிகளில் முடிவடைந்தது. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 1383 புள்ளிகள் உயர்வுடன் (2.05%) 68865 புள்ளிகளில் நிறைவடைந்தது. பொதுத்துறை வங்கிகள் 3.85 சதவீதம், நிதிச்சேவை நிறுவனப் பங்குகள் 3.23 சதவீதம், எனர்ஜி துறை பங்குகள் 2.61 சதவீதம், ரியால்டி நிறுவனப் பங்குகள் 2.03 சதவீதம் மற்றும் உலோகத்துறை பங்குகளும் ஏற்றம் கண்டன. அதேநேரம், மருந்து மற்றும் ஊடகத்துறை பங்குகள் லே
கடும் எதிர்ப்புக்கு இடையே எல்ஐசி ஐபிஓ பெரும் வெற்றி! வெளியீட்டு அளவை விட 3 மடங்கு விண்ணப்பங்கள் குவிந்தன!!

கடும் எதிர்ப்புக்கு இடையே எல்ஐசி ஐபிஓ பெரும் வெற்றி! வெளியீட்டு அளவை விட 3 மடங்கு விண்ணப்பங்கள் குவிந்தன!!

இந்தியா, முக்கிய செய்திகள், வர்த்தகம்
கடும் எதிர்ப்புக்கு இடையே, பங்குச்சந்தையில் களமிறங்கிய எல்ஐசியின் பொதுப்பங்கு வெளியீடு (ஐபிஓ) பெரும் வெற்றி அடைந்துள்ளது. பொதுப்பங்கு வெளியீட்டு அளவைக் காட்டிலும் சுமார் மூன்று மடங்கு வரை கூடுதலாக பங்குகள் கேட்டு விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.   இந்திய அரசு தொடர்ந்து பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்த்து வரும் நிலையில், இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவன (எல்ஐசி) பங்குகளையும் தனியாருக்கு விற்க முடிவெடுத்தது. இதற்கு ஊழியர்கள் சங்கங்கள், இடதுசாரிகளிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. எனினும், கொள்கை முடிவில் இருந்து இந்திய அரசு பின்வாங்கவில்லை. எல்ஐசி பொதுப்பங்கு வெளியீட்டின் மூலம் ஒரு லட்சம் கோடி ரூபாய் திரட்ட இந்திய அரசு உத்தேசித்துள்ளது. இந்த நிறுவனத்தின் பொதுப்பங்கு வெளியீடு (ஐபிஓ), என்எஸ்இ மற்றும் பிஎஸ்இ சந்தைகளில் மே 4ம் தேதி தொடங்கியது.   ரஷ
கடந்த 2 மாதத்தில் 15 லட்சம் கோடி ரூபாய் இழப்பு! பங்கு முதலீட்டாளர்கள் சோகம்!

கடந்த 2 மாதத்தில் 15 லட்சம் கோடி ரூபாய் இழப்பு! பங்கு முதலீட்டாளர்கள் சோகம்!

இந்தியா, முக்கிய செய்திகள், வர்த்தகம்
  ஓமிக்ரான், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வெளியேறியது, மத்திய வங்கிகளின் வட்டி விகிதம் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகளில் கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் 15.30 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.   குறிப்பாக, அமெரிக்காவின் ஃபெடரல் வங்கியின் வட்டி விகிதங்கள் உயர்த்தப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவியதால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்கத் தொடங்கினர். அதன் தாக்கம், இந்திய பங்குச்சந்தையில் பெரிய அளவில் எதிரொலித்தது.   தேசிய பங்குச்சந்தையான நிப்டி, வரலாற்றில் முதன்முறையாக கடந்த அக். 19ம் தேதி 18604 புள்ளிகள் வரை எகிறியது. அடுத்த ஒரே மாதத்தில் 10 சதவீதம் வீழ்ச்சி அடைந்து, தற்போது 16782 புள்ளிகள் ஆக சரிவடைந்துள்ளது.   கடந்த வாரம் 17516 புள்ளிகளாக அதாவது, 3.5 சதவீதம் வரை உயர்ந்த
ஏற்றத்தில் பங்குச்சந்தைகள்! சென்செக்ஸ் 57600 புள்ளிகளில் நிறைவு!!

ஏற்றத்தில் பங்குச்சந்தைகள்! சென்செக்ஸ் 57600 புள்ளிகளில் நிறைவு!!

இந்தியா, முக்கிய செய்திகள், வர்த்தகம்
கடந்த இரண்டு செஷன்களாக சரிவில் இருந்த இந்திய பங்குச்சந்தைகள் செவ்வாய்க்கிழமை (டிச. 7) மீண்டெழுந்து ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்திருக்கின்றன. புதிய வகை ஒமிக்ரான் வைரஸ் பற்றிய அதீத அச்சுறுத்தல்களால் உலகம் முழுவதும் கடந்த வார இறுதியிலும், நடப்பு வாரத்தின் முதல் நாளான திங்களன்றும் பங்குச்சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்தன.   இந்நிலையில், முந்தைய கொரோனா வைரஸைக் காட்டிலும் பெரிய அளவில் பாதிப்பை ஒமிக்ரான் வைரஸ் ஏற்படுத்தாது என்ற தகவலால் பங்குச்சந்தைகள் இன்று தடாலடியாக மீண்டெழுந்தன.   இன்று வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 886.51 புள்ளிகள் (1.56%) உயர்ந்து, 57633 புள்ளிகளுடன் வர்த்தகத்தை நிறைவு செய்திருந்தது. அதேபோல, தேசிய பங்குச்சந்தையான நிப்டி 264.45 புள்ளிகள் உயர்ந்து 17176.70 புள்ளிகளில் நிறைவு பெற்றது. இது, முந்தைய நாள்
பேடிஎம் ஐபிஓ வெளியீடு! 18000 கோடி ரூபாய் முதலீடு திரட்ட திட்டம்; முதல் நாளிலேயே அமர்க்களம்!

பேடிஎம் ஐபிஓ வெளியீடு! 18000 கோடி ரூபாய் முதலீடு திரட்ட திட்டம்; முதல் நாளிலேயே அமர்க்களம்!

இந்தியா, முக்கிய செய்திகள், வர்த்தகம்
முதலீட்டாளர்களிடையே பெரிதும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்பட்ட பேடிஎம் பொதுப்பங்கு (ஐபிஓ) வெளியீடு திங்கள்கிழமை (நவ. 8) தொடங்கியது. டிஜிட்டல் பேமென்ட் மற்றும் நிதிச்சேவை வர்த்தகத்தில் முன்னணியில் உள்ள ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான பேடிஎம், வணிக விரிவாக்கத்திற்காக பொதுப்பங்கு வெளியீட்டின் மூலம் 18300 கோடி ரூபாய் திரட்ட உத்தேசித்துள்ளது. இந்திய பங்குச்சந்தை வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் மிகப்பெரும் பொதுப்பங்கு வெளியீடாக பேடிஎம் ஐபிஓ கருதப்படுகிறது. கடைசியாக, கடந்த 2010ம் ஆண்டு கோல் இந்தியா ஐபிஓ மூலம் 15475 கோடி ரூபாய் திரட்டப்பட்டதே பெரிய ஐபிஓ ஆக இருந்தது. மோர்கன் ஸ்டேன்லி இண்டியா, கோல்டுமேன் சாக்ஸ் (இண்டியா) செக்யூரிட்டீஸ், ஆக்சிஸ் கேப்பிடல், ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ், ஜேபி மோர்கன் இண்டியா, சிட்டி குரூப் குளோபல் மார்க்கெட்ஸ் இண்டியா, ஹெச்டிஎப்சி
பங்குச்சந்தையை பதம் பார்த்த கோவிட் 2.O: ஒரே நாளில் 8.70 லட்சம் கோடி ரூபாய் இழப்பு!!

பங்குச்சந்தையை பதம் பார்த்த கோவிட் 2.O: ஒரே நாளில் 8.70 லட்சம் கோடி ரூபாய் இழப்பு!!

முக்கிய செய்திகள், வர்த்தகம்
கொரோனா இரண்டாவது அலையின் தாக்கத்தால் திங்கள்கிழமை (ஏப். 12) இந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி அடைந்தன. இதனால் முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் 8.70 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் வேகமெடுத்துள்ளது. இந்தியாவில் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அதன் தாக்கம் பங்குச்சந்தைகளிலும் எதிரொலித்தது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி, திங்கள் கிழமை (ஏப். 12) காலை 14644.65 புள்ளிகளுடன் வர்த்தகத்தை தொடங்கியது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 14652.50 புள்ளிகளுக்குச் சென்றது. குறைந்தபட்சமாக 14283.55 புள்ளிகள் வரை சரிந்தது. தேசிய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள 50 பங்குகளில் வெறும் 4 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே முந்தைய வர்த்தக தினத்தை விட சற்று ஏற்றம் கண்டிருந்தன. 46 நிறுவ
கொரோனா இரண்டாவது அலை: ஒரே நாளில் 3 லட்சம் கோடி ரூபாய் வீழ்ச்சி கண்ட இந்திய பங்கு சந்தைகள்!

கொரோனா இரண்டாவது அலை: ஒரே நாளில் 3 லட்சம் கோடி ரூபாய் வீழ்ச்சி கண்ட இந்திய பங்கு சந்தைகள்!

முக்கிய செய்திகள், வர்த்தகம்
உலகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை பரவலின் தாக்கம் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் இன்று (மார்ச் 24) ஒரே நாளில் 3.20 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீட்டாளர்களுக்கு இழப்பை ஏற்படுத்தி உள்ளது.   பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு, புதன்கிழமை காலை முதலே கொரோனா இரண்டாவது அலையால் சந்தையில் தாக்கம் இருக்கலாம் என்ற தகவல் வேகமாக பரவியது.   இதனால் முன்னெச்சரிக்கையாக பலரும் போட்டிப்போட்டுக் கொண்டு கையிருப்பில் இருந்த பங்குகளை விற்கக் தொடங்கினர். அதாவது, நிமிடத்திற்கு 860 கோடி ரூபாய் என்ற கணக்கில் பங்குகளை விற்றுத் தள்ளினர்.   சில்லரை முதலீட்டாளர்களிடையே காணப்பட்ட அச்சம், மும்பையின் தலால் தெருவில் இருக்கும் அமைப்பு ரீதியான முதலீட்டாளர்களிடமும் காணப்பட்டது.   மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் இன்று ஒரே நாளில் 871.13 புள்
ரயில்டெல் ஐபிஓ நாளை பங்குச்சந்தையில் பட்டியலிடப்படுகிறது!

ரயில்டெல் ஐபிஓ நாளை பங்குச்சந்தையில் பட்டியலிடப்படுகிறது!

முக்கிய செய்திகள், வர்த்தகம்
பொதுத்துறை நிறுவனமான ரயில்டெல் கார்ப்பரேஷன் ஐபிஓ வெளியீடு வெற்றியடைந்துள்ளது. பொதுப்பங்குகள் வேண்டி சில்லரை முதலீட்டாளர்கள் தரப்பில் 42.39 மடங்கு விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. வெள்ளிக்கிழமை (பிப். 26) இந்நிறுவனப் பங்குகள் இந்தியப் பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்படுகிறது. ரயில்வே துறையின் ஓர் அங்கமான ரயில்டெல் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட், ஒரு பொதுத்துறை நிறுவனம் ஆகும். இந்நிறுவனம், ஒரு தகவல் மற்றும் தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு வழங்குநர் ஆகும். இத்துறையில் நாட்டின் முன்னணி நிறுவனமாகவும் விளங்குகிறது.   இந்நிறுவனம், 819.24 கோடி ரூபாய் நிதி திரட்டும் நோக்கில் முதன்முதலாக பிப். 16ம் தேதி ஐபிஓ எனப்படும் பொதுப்பங்கு வெளியீட்டில் களமிறங்கியது. மினிமம் லாட் சைஸ் 155 பங்குகள் ஆகும். ஒரு பங்கின் விலை 94 ரூபாய் ஆக நிர்ணயிக்கப்பட்டது.  
11000 புள்ளிகளை நோக்கி தலால் ஸ்ட்ரீட்! சந்தையில் ஏற்ற, இறக்கம் தொடரும்!

11000 புள்ளிகளை நோக்கி தலால் ஸ்ட்ரீட்! சந்தையில் ஏற்ற, இறக்கம் தொடரும்!

முக்கிய செய்திகள், வர்த்தகம்
மும்பை தலால் தெருவின் பங்குச்சந்தைகளைப் பொருத்தமட்டில் நடப்பு வாரத்திலும் நிலையற்றத் தன்மை தொடரும் என்கிறார்கள் சந்தை நிபுணர்கள். என்றாலும், நிப்டி 11000 புள்ளிகளைக் கடக்கும் புதிய உச்சம் தொட அதிகம் வாய்ப்பு உள்ளதாகச் சொல்கிறார்கள்.   கடந்த வாரத்தில், சென்செக்ஸ் மற்றும் நிப்டி இரண்டு பங்குச்சந்தைகளின் இண்டெக்ஸூம் தலா ஒன்றரை சதவீதம் உயர்ந்தன. கோவிட் - 19 தொற்று மீண்டும் அதிகரித்து வருவது முதலீட்டாளர்களை கொஞ்சம் பதற்றத்திலேயே வைத்திருந்ததால் சந்தையில் நிலையற்றத் தன்மையும் காணப்பட்டது. ''நடப்பு வாரத்தில் நிப்டியில் திசை நகர்வு குறியீடு 10500 - 10950 மண்டலத்திற்குள் இருக்கும். மேலும், பங்குகள் குறிப்பிட்ட உச்சத்திற்குச் செல்லும்போது ஏற்ற, இறக்கம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்,'' என்கிறார் ரேலிகர் புரோக்கிங் நிறுவன துணைத் தலைவர்