Tuesday, March 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: India

டி-20 கிரிக்கெட் தொடரை வென்றது இந்தியா! தீபக் சஹார் ‘ஹாட்ரிக்’ சாதனை!!

டி-20 கிரிக்கெட் தொடரை வென்றது இந்தியா! தீபக் சஹார் ‘ஹாட்ரிக்’ சாதனை!!

உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
வங்கதேச அணியுடனான ட்வெண்டி-20 கிரிக்கெட் தொடரை, 2 - 1 கணக்கில் இந்திய அணி வென்றது. இந்தியாவின் தீபக் சஹார், 'ஹாட்ரிக்' விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்டார்.   இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச கிரிக்கெட் அணி, மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச ட்வெண்டி-20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வந்தது. முதல் போட்டியில் வங்கதேசமும், இரண்டாவது போட்டியில் இந்தியாவும் வென்று 1-1 என சமநிலையில் இருந்தன. இந்நிலையில், கோப்பையைக் கைப்பற்றப்போகும் அணி எது? என்பதை தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டி-20 கிரிக்கெட் போட்டி, நாக்பூரில் ஞாயிற்றுக்கிழமை (நவ. 10, 2019) இரவு நடந்தது. இந்திய அணியில், ஆல் ரவுண்டர் குருணால் பாண்டியாவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு, அவருக்கு மாற்றாக மனீஷ்பாண்டே சேர்க்கப்பட்டார். டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் மஹமதுல்லா, முதலில் பந்து வீச்சை தேர்வ
இந்தியாவில் மொபைல் சந்தாதாரர்களில் 17% பேர் மட்டுமே பெண்கள்! ‘ஆண்களின் ராஜ்ஜியம் தொடர்கிறது’

இந்தியாவில் மொபைல் சந்தாதாரர்களில் 17% பேர் மட்டுமே பெண்கள்! ‘ஆண்களின் ராஜ்ஜியம் தொடர்கிறது’

இந்தியா, தகவல், முக்கிய செய்திகள்
இந்தியாவில் அதிகரித்து வரும் மொபைல் போன் பயன்பாடு என்பது கிட்டத்தட்ட ஒரு புரட்சிபோல உருவெடுத்து உள்ளது. ஆனாலும், மொபைல் போன் சிம் கார்டு பதிவுதாரர்களில் 17.4 சதவீதம் பேர் மட்டுமே பெண்கள் என்பது ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது.   நடப்பு ஆண்டில் 31.3.2018ம் தேதி வரையில், இந்தியாவில் 99 கோடி மொபைல் சந்தாதாரர்கள் இருப்பதும், அவர்களில் 17.24 கோடி பெண் சந்தாதாரர்கள் என்றும் இந்திய தொலைத்தொடர்புத்துறை ஆய்வு கூறுகிறது.   அதேநேரம், மொத்தம் உள்ள 79.58 ஆண் சந்தாதாரர்களில் 2.50 கோடி சந்தாதாரர்கள் பற்றிய விவரங்கள் அடையாளம் காணப்படவில்லை என்றும் கூறுகிறது.   மொபைல் சந்தாதாரர்களில் நிலவும் பாலின இடைவெளி குறித்து ஒவ்வொரு தொலைதொடர்பு வட்டத்திலும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பல்வேறு சுவாரஸ்ய தகவல்கள் கிடைத்தன.   மும்பையில், மொபைல் சந்தாதாரர்களில் 11.85 சதவீதம் பேர் பெண்க
பாலியல் அத்துமீறல்: குழந்தைகள் மீதான தாக்குதலே அதிகம்!

பாலியல் அத்துமீறல்: குழந்தைகள் மீதான தாக்குதலே அதிகம்!

இந்தியா, சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார்களில் குழந்தைகள் மீதான தாக்குதல் நிகழ்வுகளே அதிகளவில் காவல்துறையில் பதிவாகி இருப்பது அண்மைய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்தியா மட்டுமின்றி உலகளவில் பிரபலங்கள் பலர், சிறு வயதில் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல் குறித்த அனுபவங்களை பொதுவெளியில் பகிர்ந்து வருகின்றனர். இதற்காக ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் #MeToo என்ற ஹேஷ்டேக் உருவாக்கி, பாலியல் அத்துமீறல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அமெரிக்க அதிபராக பில் கிளிண்டன் இருந்தபோது வெள்ளை மாளிகையில் மோனிகா லெவின்ஸ்கி என்பவர் பணிப்பெண்ணாக இருந்தார். அவருடன் கிளிண்டன் பாலியல் ரீதியில் தகாத உறவு வைத்திருந்தார் என்ற புகார் எழுந்தது. அதை ஆரம்பத்தில் மறுத்த கிளிண்டன், பின்னர் மோனிகா ஆதாரமாக ஒரு நீல நிற துணியை காட்டியபோது பகிரங்கமாக ஒப்புக்கொள்ள நேர்ந்தது. இதையடுத்து, மோனிகா லெவின்ஸ்
செஞ்சூரியன் டி-20: தென்னாப்பிரிக்காவிடம் இந்தியா தோல்வி

செஞ்சூரியன் டி-20: தென்னாப்பிரிக்காவிடம் இந்தியா தோல்வி

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
செஞ்சூரியனில் நடந்த இரண்டாவது ட்வென்டி-20 கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி, இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்திய வீரர்களின் ரன் குவிப்பும், பந்துவீச்சும் பெரிய அளவில் எடுபடாததால் தோல்வியை சந்திக்க நேர்ந்தது. தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அங்கு மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இரண்டாவது டி-20 போட்டி செஞ்சூரியனில் நேற்று (பிப்ரவரி 21, 2018) நடந்தது. 'டாஸ்' வென்ற தென்னாப்பிரிக்கா அணி கேப்டன் டுமினி, இந்தியாவை பேட்டிங் செய்ய பணித்தார். இந்திய அணியில், தசை பிடிப்பால் அவதிப்பட்டு வரும் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு, அவருக்கு பதிலாக ஷர்துல் தாகூர் சேர்க்கப்பட்டார். இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. முதல் ஓவரை வீசிய கிறிஸ் மோரீஸ்
முதல் டி-20: இந்தியா அபார வெற்றி; புவி. 5 விக்கெட் வீழ்த்தி புதிய சாதனை

முதல் டி-20: இந்தியா அபார வெற்றி; புவி. 5 விக்கெட் வீழ்த்தி புதிய சாதனை

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
ஜோகன்னஸ்பர்கில் இன்று (பிப்ரவரி 18, 2018) நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர்குமார் 5 விக்கெட் வீழ்த்தி புதிய சாதனை படைத்தார். தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட ட்வென்டி-20 தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி ஜோகன்னஸ்பர்கில் இன்று நடந்தது. 'டாஸ்' வென்ற தென்னாப்பிரிக்கா கேப்டன் டுமினி, முதலில் பந்து வீச தீர்மானித்தார். இந்திய அணியில் சுழல் பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு, வேகப்பந்து வீச்சாளர் ஜெயதேவ் உனத்கட் இடம் பெற்றார். ஓர் ஆண்டு இடைவெளிக்குப் பின்னர், சுரேஷ் ரெய்னா மீண்டும் அணியில் இணைந்தார். தென்னாப்பிரிக்கா அதிரடி ஆட்டக்காரர் ஏபி டி வில்லியர்ஸ், காயம் காரணமாக அணியில் இடம்பெறவில்லை. கிளாசன், டாலா அறிமுகமா
கிரிக்கெட்: கடைசி ஒருநாள் போட்டியிலும் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா;  விராட் கோலி அபார சதம்

கிரிக்கெட்: கடைசி ஒருநாள் போட்டியிலும் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா; விராட் கோலி அபார சதம்

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆறாவது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் விராட் கோலி, ஒரு நாள் அரங்கில் 35 சதம் அடித்து அசத்தினார். தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அந்த நாட்டுடன் 6 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றது. இந்திய அணி ஏற்கனவே 4-1 கணக்கில் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ள நிலையில், 6வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி செஞ்சுரியன் மைதானத்தில் இன்று (பிப்ரவரி 16, 2018) நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் புவனேஷ்வர்குமாருக்கு ஓய்வளிக்கப்பட்டு, இளம் வீரர் ஷர்துல் தாகூர் சேர்க்கப்பட்டார். தென்னாப்பிரிக்கா தரப்பில் கிறிஸ் மோரீஸ், ஸோண்டோ, இம்ரான் தாக
கடைசி ஒருநாள்: இந்தியாவுக்கு 205 ரன்கள் இலக்கு; ஷர்துல் தாகூர் 4 விக்கெட்

கடைசி ஒருநாள்: இந்தியாவுக்கு 205 ரன்கள் இலக்கு; ஷர்துல் தாகூர் 4 விக்கெட்

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆறாவது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர்களின் அபார பந்து வீச்சு காரணமாக அந்த அணி 46.5 ஓவர்களில் 204 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்திய அணி, 205 ரன்கள் இலக்குடன் விளையாடி வருகிறது. தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அந்த நாட்டுடன் 6 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்திய அணி ஏற்கனவே 4 -1 கணக்கில் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், 6வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி செஞ்சுரியன் மைதானத்தில் இன்று (பிப்ரவரி 16, 2018) மாலை தொடங்கி, நடந்து வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் புவனேஷ்வர்குமாருக்கு ஓய்வளிக்க
5வது ஒருநாள் கிரிக்கெட்:  தென்னாப்பிரிக்கா மண்ணில் இந்தியா வரலாற்று சாதனை;  மிரட்டும் விராட் கோலி படை

5வது ஒருநாள் கிரிக்கெட்: தென்னாப்பிரிக்கா மண்ணில் இந்தியா வரலாற்று சாதனை; மிரட்டும் விராட் கோலி படை

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள்
தென்னாப்பிரிக்கா உடனான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி, 73 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இத்துடன் 6 போட்டிகள் கொண்ட தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியதுடன், 25 ஆண்டுகால தொடர் தோல்வி என்ற சோகத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்து, வரலாற்று சாதனை படைத்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 6 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் 'ஹாட்ரிக்' வெற்றி பெற்ற இந்திய அணி, நான்காவது போட்டியில் தோல்வி அடைந்தது. இந்நிலையில் ஐந்தாவது ஒருநாள் போட்டி போர்ட் எலிசபெத் மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நேற்று (பிப்ரவரி 13, 2018) நடந்தது.   ரோஹித் ஷர்மா சதம்:   டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா கேப்டன் மார்க்ராம், முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களான ஷிகர் தவான், ரோஹித் ஷர்ம
5வது ஒருநாள்: ரோஹித் ஷர்மா அபார சதம்; இந்தியா 274 ரன்கள் குவிப்பு

5வது ஒருநாள்: ரோஹித் ஷர்மா அபார சதம்; இந்தியா 274 ரன்கள் குவிப்பு

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
போர்ட் எலிசபெத்தில் நடந்து வரும் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா, 7 விக்கெட் இழப்பிற்கு 274 ரன்கள் எடுத்துள்ளது. அபாரமாக ஆடிய ரோஹித் ஷர்மா 115 ரன்களை குவித்தார். இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான ஐந்தாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி, போர்ட் எலிசபெத்தில் இன்று (பிப்ரவரி 13, 2018) நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா கேப்டன் மார்க்ராம் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். ஆறு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா தொடர்ச்சியாக முதல் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. நான்காவது போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வென்றது. தொடரில் இந்தியா 3-1 கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால், தென்னாப்பிரிக்கா மண்ணில் ஒருநாள் தொடரை கைப்பற்றிய முதல் ஆசிய அணி என்ற வரலாறு படைக்க வாய்ப்பு இருக்கிறது. அத
இந்தியாவின் கோடீஸ்வர முதல்வர்கள் யார் யார்?; ஏழை முதல்வர் மாணிக் சர்க்கார்!

இந்தியாவின் கோடீஸ்வர முதல்வர்கள் யார் யார்?; ஏழை முதல்வர் மாணிக் சர்க்கார்!

அரசியல், இந்தியா, முக்கிய செய்திகள்
தேர்தல் சீர்திருத்தத்திற்காக போராடி வரும் ஏடிஆர் அமைப்பும், தேசிய தேர்தல் கண்காணிப்பகம் அமைப்பும் இணைந்து அண்மையில் ஓர் ஆய்வை மேற்கொண்டன. இந்திய ஒன்றிய அரசில் உள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் என மொத்தமுள்ள 31 முதலமைச்சர்களைப் பற்றிய ஆய்வு அது. அவர்களின் சொத்துமதிப்பு, அவர்களுக்கு எதிரான வழக்குகள், கல்வித்தகுதி போன்ற அம்சங்களை அவ்விரு அமைப்புகளும் ஆய்வு செய்தன. இன்றைய நிலையில் 25 முதலமைச்சர்கள் கோடீஸ்வரர்களாக உள்ளனர் என்கிறது அந்த ஆய்வு. அவர்களில் இருவர், 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சொத்துக்களை வைத்திருப்பவர்கள். ஒருவர், ஆந்திரா மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு. அவருடைய சொத்து மதிப்பு 177 கோடி ரூபாய். மற்றொருவர், அருணாச்சல பிரதேச மாநில முதல்வர் பீமா காண்டு. அவருடைய சொத்து மதிப்பு 129 கோடி ரூபாய். மூன்றாம் இடத்தில் இருக்கும் பஞ்சாப் மாநில முதல்வர் அம்ரீத்தர் சிங், 48 கோ