
ஏற்றத்தில் நிப்டி! 10300 புள்ளிகளை எட்டும்!!
இந்திய பங்குச்சந்தைகளான
சென்செக்ஸ் மற்றும் நிப்டி
ஆகிய இரண்டிலுமே கடந்த
வெள்ளியன்று (ஜூன் 19)
ஏற்றத்துடன் வர்த்தகம்
முடிந்திருப்பது,
முதலீட்டாளர்களிடம்
நம்பிக்கையை அதிகரித்திருக்கிறது.
கடந்த சில வாரங்களாகவே
சென்செக்ஸ், நிப்டி இரண்டு
சந்தைகளிலுமே சராசரியாக
3 சதவீதம் வரை வர்த்தகம்
உயர்ந்துள்ளன.
கொரோனா வைரஸின்
இரண்டாம் கட்ட அலை
காரணமாக கடந்த வாரம்
உலகம் முழுவதுமே
பங்குச்சந்தைகள் சரிவுடன்
தொடங்கின. இதுபோன்ற
செய்திகளால்
முதலீட்டாளர்களிடமும்
அச்சம் தொற்றிக் கொள்கிறது.
கடந்த வாரம், கொரோனா
மற்றும் இந்தியா - சீனா
நாடுகளிடையேயான பதற்றம்
என இந்திய பங்குச்சந்தைகளை
இரட்டை தாக்குதல் தாக்கியது.
எனினும், சென்செக்ஸ்
மற்றும் நிப்டி ஆகியவற்றில்
கடந்த வாரத்தின் பிற்பகுதி
தித்திப்புடன் வர்த்தகம்
முடிந்ததால் முதலீட்டாளர்கள்
மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந...