
சேலத்தில் நாளை முதல் தொழிற்சாலைகள் இயங்கலாம்! ஆட்சியர் அறிவிப்பு!!
சேலத்தில் தொழில்
நிறுவனங்கள், வணிக
கடைகளை புதன்கிழமை
(மே 6) முதல் இயக்க
அனுமதி வழங்கி மாவட்ட
ஆட்சியர் ராமன்
உத்தரவிட்டுள்ளார்.
சேலம் மாவட்ட
குறு, சிறு, நடுத்தர
தொழிற்சாலைகள்
சங்க பிரநிதிகள்,
இந்திய தொழில் கூட்டமைப்பு
நிர்வாகிகள் உடனான
ஆலோசனைக் கூட்டம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலக
கூட்டரங்கில் திங்களன்று
(மே 4) நடந்தது.
ஆட்சியர் ராமன் கூறியதாவது:
கொரோனா நோய்த்தொற்று
பரவலைத் தடுக்கும் வகையில்
தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு
பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
ஊரடங்கு தளர்வு விதிகளுக்கு
உட்பட்டு நாளை
(மே 6ம் தேதி) முதல்
தொழில் நிறுவனங்கள்
இயங்க சில தளர்வுகள்
அளித்து உத்தரவிடப்பட்டு
உள்ளது.
பெரு நிறுவனங்கள்,
தங்கள் ஆலைகளை இயக்கிட
சேலம் மாவட்ட
ஆட்சியருக்கு
slmdic@gmail.com
என்ற மின்னஞ்சல் மூலம்
உரிய ஆவணங்களுடன்
விண்ணப்பிக்க வேண்டும்.
&...