Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: உயர்கல்வித்துறை.

‘செருப்படி’ பேராசிரியருக்கு மீள்பணி! பரபரப்பு பின்னணி அம்பலம்!!

‘செருப்படி’ பேராசிரியருக்கு மீள்பணி! பரபரப்பு பின்னணி அம்பலம்!!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பெரியார் பல்கலையில், பதவி உயர்வுக்காக நடந்த செருப்படி சண்டையில் பரபரப்பு கிளப்பிய பேராசிரியர் குமாரதாஸூக்கு மீள்பணியமர்வு வழங்க சிண்டிகேட் ஒப்புதல் அளித்திருக்கிறது. இதன் பின்னணி குறித்த பரபரப்பு தகவல்கள் அம்பலமாகி உள்ளன. சேலம் பெரியார் பல்கலையில் இயற்பியல் துறைத் தலைவரா£க பணியாற்றி வருபவர் குமாரதாஸ். இவர், வரும் ஜூன் 30ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இவரை, ஓய்வுக்குப் பிறகும் 'ரீ அப்பாயின்ட்மெண்ட்' எனப்படும் மீள்பணியமர்வு செய்ய சிண்டிகேட் குழு ஒப்புதல் அளித்துள்ளது. சிண்டிகேட்டின் இந்த முடிவுதான், பெரியார் பல்கலையை மீண்டும் சர்ச்சை வளையத்திற்குள் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது.   ஓய்வு பெற்றவர்களுக்கு மீள் பணியமர்வு கூடாது என்று அரசாணை உள்ளது. ஏற்கனவே இதே பல்கலையில் ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் ராஜேந்திரன், முருகேசன் ஆகியோருக்கு மீள்பணி வாய்ப்பு மறுக்கப்பட்டு உள்ளது. &nb
ஊழலை அம்பலப்படுத்தினால் தண்டனை; அடக்கி வாசித்தால் புரமோஷன்! பெரியார் பல்கலை வகுத்த புதிய சிலபஸ்!! #PeriyarUniversity #Scam

ஊழலை அம்பலப்படுத்தினால் தண்டனை; அடக்கி வாசித்தால் புரமோஷன்! பெரியார் பல்கலை வகுத்த புதிய சிலபஸ்!! #PeriyarUniversity #Scam

கல்வி, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஊழல் முறைகேடுகளை அம்பலப்படுத்தினால் தண்டனையும், தில்லுமுல்லுகளை கண்டும்காணாமல் அடக்கி வாசித்தால் பதவி உயர்வும் வழங்கும் விந்தையான நடைமுறைகளை பெரியார் பல்கலையில் பின்பற்றப்படுவது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.   பெரியார் பல்கலை   சேலம் பெரியார் பல்கலை 28 துறைகளுடன், 101 கல்லூரிகள் இணைவுடன் இயங்கி வருகிறது. பல்கலையில், 150க்கும் மேற்பட்ட உதவி / இணை / பேராசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.   இப்பல்கலையில் 2014ம் ஆண்டு ஜூன் முதல் 2017 ஜூன் வரை மூன்று ஆண்டுகள் சுவாமிநாதன் என்பவர் துணைவேந்தராக பணியாற்றி வந்தார். அவர் பணியில் இருந்த காலக்கட்டத்தில் பெரியார் பல்கலை மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள உதவி பெறும் கல்லூரிகளில் 136 ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் நிரப்பப்பட்டன.   ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஒவ்வொருவரிடம் இருந்தும் 25 லட்சம் மு
நீதிமன்ற உத்தரவை காற்றில் பறக்கவிடும் பெரியார் பல்கலை.! #PeriyarUniversity #பெரியார்பல்கலை

நீதிமன்ற உத்தரவை காற்றில் பறக்கவிடும் பெரியார் பல்கலை.! #PeriyarUniversity #பெரியார்பல்கலை

கல்வி, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  உயர்நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தாமல் தொடர்ந்து காலம் தாழ்த்தி வருவதோடு, நீதிமன்ற அவமதிப்பிலும் ஈடுபட்டு வருவதாக பெரியார் பல்கலை மீது அதிருப்தி கிளம்பியுள்ளது.   நீதிமன்றம், காவல்துறை உத்தரவுகள் எல்லாம் எப்போதுமே விளிம்புநிலை மக்களை மட்டுமே கட்டுப்படுத்துகின்றன. அதிகார பலம், பொருளாதார பலம் கொண்டவர்கள் பெரும்பாலும் எவ்வித சட்டவிதிகளையும் முறையாக பின்பற்றுவதில்லை. அதற்கு சேலம் பெரியார் பல்கலைக்கழகமும் விதிவிலக்கு அல்ல. பெரியார் பல்கலையில் பொருளாதாரத்துறை உதவி பேராசிரியராக பணியாற்றி வருபவர் வைத்தியநாதன். பத்திரிகைளுக்கு பல்கலையைப் பற்றி தவறாக செய்திகள் கொடுத்ததாக அவரிடம் விளக்கம் கேட்டு, அப்போதிருந்த துணைவேந்தர் சுவாமிநாதன் குற்றச்சாட்டு குறிப்பாணை வழங்கினார். இந்தப் புகாரின்பேரில், அவர் ஏப்ரல் 4, 2017ம் தேதி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.   இச்சம்பவத்திற்குப்