நகர்ப்புறம்? நகர்ப்புரம்? எது சரி?; முதல்வர் விழாவில் தமிழுக்கு வந்த சோதனை!
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், டிச. 11ம் தேதி, சேலத்தில் நடந்த அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, 31 ஆயிரம் பயனாளிகளுக்கு பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அன்றைய தினமே, சேலம் மாவட்டத்தில் அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட உள்ள 1242 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களையும் அறிவித்து, மாங்கனி மாவட்ட மக்களை திக்குமுக்காடச் செய்தார்.
அதே விழாவில்,
மாநில அளவில் 300 கோடி ரூபாயில்
நமக்கு நாமே திட்டத்தையும்,
100 கோடி ரூபாயில் நகர்ப்புற
வேலைவாய்ப்புத் திட்டத்தையும்
தொடங்கி வைத்தார்.
தாரை தப்பட்டை,
நாட்டுப்புறக் கலைகள் என
முதல்வருக்கு மிக பிரம்மாண்டமான
வரவேற்பும் களைகட்டின.
நடந்த வரை எல்லாமே சிறப்புதான்
என்றாலும், விழா மேடையில்
வைக்கப்பட்டிருந்த நிகழ்ச்சி குறித்த
விளம்பர பலகையில் இடம் பெற்றிருந்த
பிழையான ஒரு சொல், தமிழார்வலர்களின்
மனதை நோகச்செய்தி...