Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

ஐஆர்எப்சி ஐபிஓ நாளை வெளியீடு; 178 கோடி பங்குகள் மூலம் 4633 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்க முடிவு!

இந்திய ரயில்வே
துறைக்குச் சொந்தமான
ஐஆர்எப்சி (IRFC) நிறுவனத்தின்
ஐபிஓ (IPO), நாளை (ஜன. 18, 2021)
பங்குச்சந்தைகளில்
வெளியிடப்படுகிறது.
பொதுத்துறைக்குச் சொந்தமான,
வங்கி அல்லாத நிதிச்சேவை
நிறுவனம் ஐபிஓ
வெளியிடுவதும், இதுதான்
வரலாற்றில் முதன்முறை.

 

ஐஆர்எப்சி:

 

இந்திய ரயில்வே
நிதி கழகம் எனப்படும்
இண்டியன் ரயில்வே
பைனான்சியல் கார்ப்பரேஷன்
(ஐஆர்எப்சி), ரயில்வே துறையின்
விரிவாக்கத்திற்குத் தேவையான
மூலதனத்தை திரட்டிக் கொடுப்பதில்
முக்கியப் பங்கு வகிக்கிறது.

 

ஐபிஓ வெளியீட்டின் மூலம்
4633 கோடி ரூபாய் முதலீட்டை
ஈர்க்கத் திட்டமிடப்பட்டு உள்ளது.
ஐபிஓவில் ஒரு பங்கின்
விலை 25 – 26 ஆக
நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
அதிகபட்ச விலையின்
அடிப்படையில் பங்குகள்
விற்பனை செய்யப்படும்.

 

178.2 கோடி பங்குகள்:

 

ஐஆர்எப்சி நிறுவனத்தின்
100 சதவீத பங்குகளும்,
அதாவது 938 கோடி பங்குகளும்
அரசு கட்டுப்பாட்டில் உள்ளன.
இதில், ஐபிஓ மூலமாக
178.2 கோடி பங்குகள் மட்டுமே
விற்பனை செய்யப்பட உள்ளன.
அதாவது, புதிய பங்குகள்
பிரிவில் 118.80 கோடி பங்குகளும்,
ஆஃபர் ஃபார் சேல் (ஓஎப்எஸ்)
பிரிவில் 59.40 கோடி பங்குகளும்
விற்பனை செய்யப்பட
உள்ளது.

 

மொத்தப் பங்குகளில்
50 சதவீதம் வரையிலான
பங்குகள் துறை சார்ந்த
முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்டு
உள்ளன. மீதமுள்ள பங்குகள்
சில்லரை முதலீட்டாளர்களுக்கு
விற்பனை செய்யப்படும்.
ஒரு ‘லாட்’ சைஸ் 575 பங்குகள்
ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளன.
இதன் மதிப்பு 14950 ரூபாய்.

கடந்த 2019ம் ஆண்டு
ரயில்வே துறைக்குச் சொந்தமான
ஐஆர்சிடிசி ஐபிஓ வெளியிட்டது.
அப்போது, இந்தப் பங்கு வெளியீடு
பெரும் வெற்றி அடைந்தது.
பங்குச்சந்தையில்
பட்டியலிடப்பட்டபோது
சில்லரை முதலீட்டாளர்களுக்கு
100 சதவீதம் வரை
லாபம் கிடைத்தது.

 

எதிர்பார்ப்பு:

 

விரைவில் ரயில்வே பட்ஜெட்
தாக்கல் செய்யப்பட உள்ள
நிலையில், ஐஆர்எப்சி பங்கு
வெளியீடும் சில்லரை
முதலீட்டாளர்களிடையே பெரும்
வரவேற்பைப் பெறும் என
எதிர்பார்ப்பு நிலவுகிறது.

 

– ஷேர்கிங்