Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: முதலீட்டாளர்கள்

பங்குச்சந்தையை பதம் பார்த்த கோவிட் 2.O: ஒரே நாளில் 8.70 லட்சம் கோடி ரூபாய் இழப்பு!!

பங்குச்சந்தையை பதம் பார்த்த கோவிட் 2.O: ஒரே நாளில் 8.70 லட்சம் கோடி ரூபாய் இழப்பு!!

முக்கிய செய்திகள், வர்த்தகம்
கொரோனா இரண்டாவது அலையின் தாக்கத்தால் திங்கள்கிழமை (ஏப். 12) இந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி அடைந்தன. இதனால் முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் 8.70 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் வேகமெடுத்துள்ளது. இந்தியாவில் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அதன் தாக்கம் பங்குச்சந்தைகளிலும் எதிரொலித்தது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி, திங்கள் கிழமை (ஏப். 12) காலை 14644.65 புள்ளிகளுடன் வர்த்தகத்தை தொடங்கியது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 14652.50 புள்ளிகளுக்குச் சென்றது. குறைந்தபட்சமாக 14283.55 புள்ளிகள் வரை சரிந்தது. தேசிய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள 50 பங்குகளில் வெறும் 4 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே முந்தைய வர்த்தக தினத்தை விட சற்று ஏற்றம் கண்டிருந்தன. 46 நிறுவ
கொரோனா இரண்டாவது அலை: ஒரே நாளில் 3 லட்சம் கோடி ரூபாய் வீழ்ச்சி கண்ட இந்திய பங்கு சந்தைகள்!

கொரோனா இரண்டாவது அலை: ஒரே நாளில் 3 லட்சம் கோடி ரூபாய் வீழ்ச்சி கண்ட இந்திய பங்கு சந்தைகள்!

முக்கிய செய்திகள், வர்த்தகம்
உலகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை பரவலின் தாக்கம் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் இன்று (மார்ச் 24) ஒரே நாளில் 3.20 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீட்டாளர்களுக்கு இழப்பை ஏற்படுத்தி உள்ளது.   பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு, புதன்கிழமை காலை முதலே கொரோனா இரண்டாவது அலையால் சந்தையில் தாக்கம் இருக்கலாம் என்ற தகவல் வேகமாக பரவியது.   இதனால் முன்னெச்சரிக்கையாக பலரும் போட்டிப்போட்டுக் கொண்டு கையிருப்பில் இருந்த பங்குகளை விற்கக் தொடங்கினர். அதாவது, நிமிடத்திற்கு 860 கோடி ரூபாய் என்ற கணக்கில் பங்குகளை விற்றுத் தள்ளினர்.   சில்லரை முதலீட்டாளர்களிடையே காணப்பட்ட அச்சம், மும்பையின் தலால் தெருவில் இருக்கும் அமைப்பு ரீதியான முதலீட்டாளர்களிடமும் காணப்பட்டது.   மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் இன்று ஒரே நாளில் 871.13 புள்
ஐஆர்எப்சி ஐபிஓ நாளை வெளியீடு; 178 கோடி பங்குகள் மூலம் 4633 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்க முடிவு!

ஐஆர்எப்சி ஐபிஓ நாளை வெளியீடு; 178 கோடி பங்குகள் மூலம் 4633 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்க முடிவு!

முக்கிய செய்திகள், வர்த்தகம்
இந்திய ரயில்வே துறைக்குச் சொந்தமான ஐஆர்எப்சி (IRFC) நிறுவனத்தின் ஐபிஓ (IPO), நாளை (ஜன. 18, 2021) பங்குச்சந்தைகளில் வெளியிடப்படுகிறது. பொதுத்துறைக்குச் சொந்தமான, வங்கி அல்லாத நிதிச்சேவை நிறுவனம் ஐபிஓ வெளியிடுவதும், இதுதான் வரலாற்றில் முதன்முறை.   ஐஆர்எப்சி:   இந்திய ரயில்வே நிதி கழகம் எனப்படும் இண்டியன் ரயில்வே பைனான்சியல் கார்ப்பரேஷன் (ஐஆர்எப்சி), ரயில்வே துறையின் விரிவாக்கத்திற்குத் தேவையான மூலதனத்தை திரட்டிக் கொடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.   ஐபிஓ வெளியீட்டின் மூலம் 4633 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்கத் திட்டமிடப்பட்டு உள்ளது. ஐபிஓவில் ஒரு பங்கின் விலை 25 - 26 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதிகபட்ச விலையின் அடிப்படையில் பங்குகள் விற்பனை செய்யப்படும்.   178.2 கோடி பங்குகள்:   ஐஆர்எப்சி நிறுவனத்தின் 1
10800 புள்ளிகளை நோக்கி நிப்டி! தொடரும் காளையின் ஆதிக்கம்!!

10800 புள்ளிகளை நோக்கி நிப்டி! தொடரும் காளையின் ஆதிக்கம்!!

முக்கிய செய்திகள், வர்த்தகம்
கடந்த வெள்ளியன்று தேசிய பங்குச்சந்தை (நிப்டி) 10607.35 புள்ளிகளில் முடிவடைந்துள்ள நிலையில், இன்று (ஜூலை 6) மேலும் 60 புள்ளிகள் வரை உயர்க்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. கொரோனா நோய்த் தொற்றுக்கு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பான செய்திகளும் முதலீட்டாளர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், நடப்பு வாரத்தில் 10800 முதல் 11000 புள்ளிகள் வரை நிப்டி இண்டெக்ஸ் உயர வாய்ப்புள்ளதாக பங்குத்தரகு நிறுவனங்கள் கூறுகின்றன.   தேசிய பங்குச்சந்தையான நிப்டி - 50, தொடர்ச்சியாக மூன்றாவது லாபகரமான வாரத்தை நிறைவு செய்திருந்தது. ஜூலை 3ம் தேதியன்று முடிவுற்ற மும்பை பங்குச்சந்தை பீஎஸ்இ மற்றும் எஸ் அன்டு பி சென்செக்ஸ் குறியீடு 2.4 சதவீதம் வரை உயர்ந்து இருந்தது. ''பொருளாதார தரவுகளை விட, சந்தைகளின் கள நிலவரங்களின் யதார்த்தங்கள் பெரும
ஏற்றத்தில் நிப்டி! 10300 புள்ளிகளை எட்டும்!!

ஏற்றத்தில் நிப்டி! 10300 புள்ளிகளை எட்டும்!!

முக்கிய செய்திகள், வர்த்தகம்
இந்திய பங்குச்சந்தைகளான சென்செக்ஸ் மற்றும் நிப்டி ஆகிய இரண்டிலுமே கடந்த வெள்ளியன்று (ஜூன் 19) ஏற்றத்துடன் வர்த்தகம் முடிந்திருப்பது, முதலீட்டாளர்களிடம் நம்பிக்கையை அதிகரித்திருக்கிறது. கடந்த சில வாரங்களாகவே சென்செக்ஸ், நிப்டி இரண்டு சந்தைகளிலுமே சராசரியாக 3 சதவீதம் வரை வர்த்தகம் உயர்ந்துள்ளன. கொரோனா வைரஸின் இரண்டாம் கட்ட அலை காரணமாக கடந்த வாரம் உலகம் முழுவதுமே பங்குச்சந்தைகள் சரிவுடன் தொடங்கின. இதுபோன்ற செய்திகளால் முதலீட்டாளர்களிடமும் அச்சம் தொற்றிக் கொள்கிறது. கடந்த வாரம், கொரோனா மற்றும் இந்தியா - சீனா நாடுகளிடையேயான பதற்றம் என இந்திய பங்குச்சந்தைகளை இரட்டை தாக்குதல் தாக்கியது. எனினும், சென்செக்ஸ் மற்றும் நிப்டி ஆகியவற்றில் கடந்த வாரத்தின் பிற்பகுதி தித்திப்புடன் வர்த்தகம் முடிந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.   இந
பங்குச்சந்தை: துள்ளிய கரடியை வீழ்த்திய காளை! கடந்த வார கடைசியில் நடந்தது என்ன?

பங்குச்சந்தை: துள்ளிய கரடியை வீழ்த்திய காளை! கடந்த வார கடைசியில் நடந்தது என்ன?

முக்கிய செய்திகள், வர்த்தகம்
இந்திய பங்குச்சந்தைகளில் கடந்த வாரத்தின் கடைசி வர்த்தக நாளில், முதல் இரண்டு மணி நேரத்திற்கு கரடி ஆட்டம் காட்டி வந்த நிலையில், இரண்டாவது சுற்றில் காளையின் ஆட்டம் தொடங்கியது. பங்குச்சந்தைகள் ஓரளவு சரிவிலிருந்து மீண்டதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.   கரடியின் ஆட்டம்!:   கடந்த வியாழனன்று (ஜூன் 11), மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 33538 புள்ளிகளுடன் முடிவடைந்தது. சந்தை ஆய்வாளர்கள் முன்பே எச்சரித்தது போலவே வாரத்தின் கடைசி வர்த்தக நாளான வெள்ளியன்று (ஜூன் 12), ஆரம்பத்திலேயே சென்செக்ஸ் 32436 புள்ளிகளில்தான் துவங்கியது. அதாவது முந்தைய நாள் முடிவைக் காட்டிலும் இது 1102 புள்ளிகள் வீழ்ச்சி ஆகும்.   வர்த்தகம் தொடங்கிய முதல் இரண்டு மணி நேரத்தில் பெரிய முன்னேற்றம் இல்லாததால் முதலீட்டாளர்கள் உற்சாகம் இழந்தனர். எனினும், நீண்ட க
பட்ஜெட் தாக்கம்: பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி; சென்செக்ஸ் 580 புள்ளிகள் சரிவு

பட்ஜெட் தாக்கம்: பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி; சென்செக்ஸ் 580 புள்ளிகள் சரிவு

இந்தியா, முக்கிய செய்திகள், வர்த்தகம்
மத்திய பட்ஜெட்டில் பங்குச்சந்தைக்கு சாதகமான அம்சங்கள் இல்லாததால், தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் (பிப்ரவரி 2, 2018) கடும் வீழ்ச்சி அடைந்தது. முதலீட்டாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். கடந்த ஒரு வாரமாகவே பங்குச்சந்தை தொடர்ந்து ஏற்றத்துடன் காணப்பட்டது. தேசிய பங்குச்சந்தை 11000 புள்ளிகளைக் கடந்தது. இந்நிலையில், மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் முதலீட்டாளர்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஆண்டுக்கு ரூ.250 கோடிக்கு மேல் வருமானம் பெறும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரி 25 சதவீதம் குறைக்கப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்களின் கவனம் கார்ப்பரேட் நிறுவன வருமானத்தின் மீது திரும்பி உள்ளது. இதன் தாக்கம் நேற்று பகலிலேயே பங்குச்சந்தையில் எதிரொலித்தது. நேற்று ஏற்றத்துடன் வர்த்தகம் தொடங்கிய நிலையில், பெரும் சரிவுடன் நேற்றைய வர்த்தகம் மு