சரிவிலிருந்து மீண்ட இந்திய பங்குச்சந்தை! நிப்டி 17503; சென்செக்ஸ் 58664 புள்ளிகளில் நிறைவு!!
கடந்த நான்கு நாள்களாக சரிவு கண்டிருந்த இந்தியப் பங்குச்சந்தைகள் செவ்வாய்க்கிழமை (நவ. 23) ஏற்றத்துடன் நிறைவு பெற்றுள்ளன.
ஐடி, உலோகம், எரிசக்தி
உள்ளிட்ட துறைகளில் ஏற்பட்ட
வீழ்ச்சி மற்றும் வெளிநாட்டு
முதலீட்டாளர்கள் லாப நோக்கத்தில்
பங்குகளை விற்க ஆரம்பித்தது
உள்ளிட்ட காரணங்களால்
கடந்த நான்கு நாள்களாக
இந்தியப் பங்குச்சந்தைகளில்
நிலையற்றத் தன்மை காணப்பட்டது.
வாரத்தின் முதல் நாளான
திங்களன்றும் (நவ. 22)
இந்திய பங்குச்சந்தைகள் பெரும்
வீழ்ச்சி கண்டிருந்த நிலையில்,
செவ்வாய்க்கிழமையும் லேசான
சரிவுடன் தொடங்கியது.
சிறிது நேரத்தில் சந்தைகள்
மெதுவாக ஏற்றம் காணத் தொடங்கின.
வர்த்தகத்தின் இறுதியில்
மும்பை பங்குச்சந்தையான
சென்செக்ஸ் 198.44 புள்ளிகள் (0.34%)
அதிகரித்து, 58664.33 புள்ளிகளில்
நிறைவு பெற்றது.
தேசிய பங்குச்சந்தையான
நிப்டி 86.80 புள்ளிகள் (0.50%)
அதிகரித்து, 17503.30