Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

சென்னை

எட்டுவழிச்சாலைக்கு எதிராக கிளர்ந்தெழுந்த விவசாயிகள்; முதல்வருக்கு மூக்குடைப்பு!

எட்டுவழிச்சாலைக்கு எதிராக கிளர்ந்தெழுந்த விவசாயிகள்; முதல்வருக்கு மூக்குடைப்பு!

காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, சென்னை, சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, திருவண்ணாமலை, முக்கிய செய்திகள்
எட்டுவழிச்சாலை திட்டத்துக்கு 11 சதவீதம் பேர்தான் எதிர்ப்பு தெரிவிப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறி வந்த நிலையில், சேலத்தில் கிளர்ந்தெழுந்த விவசாயிகள் இத்திட்டத்துக்கு எதிராக ஆட்சேபனை மனு அளித்து, முதல்வருக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளனர்.   பாரத்மாலா பரியோஜனா:   சேலம் முதல் சென்னை வரை 'பாரத்மாலா பரியோஜனா' என்ற பெயரில், எட்டுவழிச்சாலை எனப்படும் பசுமைவழி விரைவுச்சாலைத் திட்டத்தை செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன. இந்த சாலை சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் ஊடாக அமைகிறது. இதற்காக மேற்சொன்ன மாவட்டங்களில் இருந்து மொத்தம் 2343 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்துக்காக கடந்த மே மாதம் நிலம் அளவீடு செய்யச் சென்ற வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு விவசாயிகள் கடும் தெரிவித்தனர்.  
எட்டு வழிச்சாலைக்கு எதிராக தற்கொலை போராட்டம்! விவசாயிகளின் பிரம்மாஸ்திரம்!!

எட்டு வழிச்சாலைக்கு எதிராக தற்கொலை போராட்டம்! விவசாயிகளின் பிரம்மாஸ்திரம்!!

காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, சென்னை, சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, திருவண்ணாமலை, முக்கிய செய்திகள்
  எட்டு வழிச்சாலைக்கு எதிராக தற்கொலை போராட்டத்திற்கும் தயாராகி விட்டதாக விவசாயிகள் போர்ப்பறை முழங்கியுள்ளது, இப்பிரச்னையை மீண்டும் விசுவரூபம் எடுக்க வைத்துள்ளது.   2343 ஹெக்டேர்   சேலம் முதல் சென்னை வரை எட்டு வழிச்சாலையாக பசுமைவழி விரைவுச்சாலை (பாரத்மாலா பரியோஜனா) அமைக்கும் பணிகளை பணிகளை மத்திய, மாநில அரசுகள் முடுக்கி விட்டுள்ளன. சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் ஊடாக சென்னை படப்பையில் முடிவடைகிறது இந்த சாலைத்திட்டம். இதற்காக மேற்சொன்னை ஐந்து மாவட்டங்களிலும் 2343 ஹெக்டேர் நிலங்களை கையகப்படுத்தும் பணிகளில் அந்தந்த மாவட்ட வருவாய்த்துறை இறங்கியுள்ளது.   ஒரே வாழ்வாதாரம்   இத்திட்டத்துக்காக கையகப்படுத்தப்படும் நிலங்களில் பெரும்பகுதி, அதாவது 90 விழுக்காடு நிலமானது ஏழை சிறு, குறு விவசாயிகள் உடையது. அவர்
சேலம் – சென்னை விமான இயக்க நேரம் திடீர் மாற்றம்!

சேலம் – சென்னை விமான இயக்க நேரம் திடீர் மாற்றம்!

சென்னை, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள், வர்த்தகம்
  பருவமழை மற்றும் பனிமூட்டம் காரணமாக சேலம் - சென்னை விமான சேவை நேரம் திடீரென்று மாற்றப்பட்டுள்ளது.   விமான போக்குவரத்து சேலம் காமலாபுரம் விமான நிலையத்தில் இருந்து கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு விமான சேவை துவக்கப்பட்டது. ஆனால், போதிய வரவேற்பு இல்லாததால், குறுகிய காலத்திலேயே விமான போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டது.   இந்நிலையில், சேலம் மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் உள்ள தொழில் அதிபர்கள் தரப்பில் இருந்து மீண்டும் விமான சேவை துவக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.   மீண்டும் விமான சேவை   இதையடுத்து, உடான் திட்டத்தின் கீழ், காமலாபுரம் விமான நிலையத்தில் இருந்து நடப்பு ஆண்டில் மீண்டும் விமான சேவை துவக்கப்பட்டது.   அதன்படி, ட்ரூஜெட் நிறுவனத்திற்குச் சொந்தமான ஒரு விமானம் மட்டும் இப்போதைக்கு இயக்கப்பட்டு வருகிறது.
சேலம்: பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வந்தாச்சு ‘ஒன் ஸ்டாப் செண்டர்!’; எல்லா பிரச்னைக்கும் இங்கே தீர்வு!! #OneStopCentre

சேலம்: பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வந்தாச்சு ‘ஒன் ஸ்டாப் செண்டர்!’; எல்லா பிரச்னைக்கும் இங்கே தீர்வு!! #OneStopCentre

காஞ்சிபுரம், கோயம்பத்தூர், சிறப்பு கட்டுரைகள், சென்னை, சேலம், தமிழ்நாடு, திருச்சி, மதுரை, முக்கிய செய்திகள்
  - சிறப்புச்செய்தி -   குடும்பப் பிரச்னை முதல் பாலியல் தொல்லைகள் வரை பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உடனடியாக அடைக்கலம் கொடுக்கவும், உளவியல் முதல் மருத்துவம் வரை அனைத்து உதவிகளை வழங்கவும் சமூகநலத்துறை சார்பில், 'ஒன் ஸ்டாப் செண்டர்' என்ற பிரத்யேக உதவி மையம் சேலத்தில் தொடங்கப்பட்டுள்ளது.   பெண்களை பாதுகாக்கும் சட்டம்   புகுந்த வீட்டில் கணவர் மற்றும் மாமனார், மாமியார், கணவருடன் பிறந்த சகோதர, சகோதரிகள் உள்ளிட்ட குடும்ப உறவுகளால் பாதிக்கப்படும் பெண்களைப் பாதுகாக்க இந்திய அரசு ஏற்கனவே குடும்ப வன்முறைகளில் இருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் - 2005ஐ அமல்படுத்தி உள்ளது. வரதட்சணை கொடுமைகள் குறித்த புகார்களை மட்டும் விசாரித்து வந்த இ.த.ச. பிரிவு 498ஏ-இல் இருந்து இந்த சட்டம் விரிவாக ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க உதவுகிறது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்ட
எட்டு வழிச்சாலை திட்டத்தில் திருட்டுத்தனம்!; நீதிமன்ற உத்தரவை மதிக்காத நெடுஞ்சாலைத்துறை!! #EightLaneRoad

எட்டு வழிச்சாலை திட்டத்தில் திருட்டுத்தனம்!; நீதிமன்ற உத்தரவை மதிக்காத நெடுஞ்சாலைத்துறை!! #EightLaneRoad

காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, சென்னை, சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, திருவண்ணாமலை, முக்கிய செய்திகள்
எட்டு வழிச்சாலைத் திட்டம் தொடர்பாக எந்தவித பூர்வாங்க பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் இடைக்கால தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில், திருட்டுத்தனமாக ஜருகுமலையில் மண் பரிசோதனை பணிகளில் மத்திய மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளது விவசாயிகளிடையே பெரும் கொதிப்பை ஏற்படுத்தி உள்ளது.   பாரத்மாலா பரியோஜனா   சேலம் முதல் சென்னை வரை புதிதாக பாரத்மாலா பரியோஜனா என்ற திட்டத்தின்கீழ், எட்டு வழிச்சாலை எனப்படும் பசுமைவழி விரைவுச்சாலை அமைக்கும் பணிகளில் மத்திய, மாநில அரசுகள் முனைப்பு காட்டி வருகின்றன. மொத்தம் 277.3 கிலோமீட்டர் தொலைவுக்கு அமைய உள்ள இந்த சாலைப்பணிகளுக்காக ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.   சேலம் மாவட்டம் அரியானூரில் தொடங்கி காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் இந்த சாலை முடிகிறது. இதற்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபு
எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு நிலம் எடுக்க இடைக்கால தடை!; உயர்நீதிமன்றம் உத்தரவு!! #EightLaneRoad #GreenFieldExpressWay

எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு நிலம் எடுக்க இடைக்கால தடை!; உயர்நீதிமன்றம் உத்தரவு!! #EightLaneRoad #GreenFieldExpressWay

காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, சென்னை, சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, திருவண்ணாமலை, முக்கிய செய்திகள்
எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த மேலும் இரண்டு வார காலத்திற்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று (செப்டம்பர் 14, 2018) உத்தரவிட்டுள்ளது.   எட்டுவழிச்சாலை   சேலம் - சென்னை இடையே பத்தாயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் எட்டுவழிச்சாலை எனப்படும் பசுமைவழி விரைவுச்சாலைத் திட்டத்தை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகள் முனைப்பு காட்டி வந்தன. இதற்காக மொத்தம் 2343 ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்த திட்டமிடப்பட்டு, மே மாதம் முதல் அதற்கான பணிகள் தொடங்கப்பட்டன.   சேலம் மாவட்டம் அரியானூரில் தொடங்கும் எட்டு வழிச்சாலை தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை வரை 277.3 கி.மீ. தூரம் வரை நீள்கிறது. இந்தத் திட்டத்துக்காக எடுக்கப்படும் நிலங்களில் 95 விழுக்காடு சிறு, குறு விவசாயிகளுக்குச் சொந்தமான விளை நிலங்கள் ஆகும். ஏற்காடு, கல்வராயன்
தயாநிதி மடியிலேயே கை வைத்த துரைமுருகன்!; திமுக பொதுக்குழுவில் சுவாரஸ்யம்!! #DMK #MKStalin

தயாநிதி மடியிலேயே கை வைத்த துரைமுருகன்!; திமுக பொதுக்குழுவில் சுவாரஸ்யம்!! #DMK #MKStalin

அரசியல், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  திமுக பொருளாளராக பதவியேற்ற துரைமுருகன், கட்சிக்காக ஓடியாடி நிதி திரட்ட வேண்டும் என்று தயாநிதி மாறன் யோசனைகூற, அதே அம்பை தயாநிதி மீதே ஏவிய துரைமுருகனால் பொதுக்குழுவில் பலத்த சிரிப்பலை எழுந்தது.   சென்னை அறிவாலயத்தில் திமுக பொதுக்குழு கூட்டம் இன்று நடந்தது.  திமுக தலைவராக மு.க.ஸ்டாலின், பொருளாளராக  தலைமை நிலைய செயலாளர் துரைமுருகன் ஆகியோர் இன்று பதவியேற்றுக் கொண்டனர். கட்சியின் முக்கிய தலைவர்கள், பிரமுகர்கள் வாழ்த்துரை வழங்கினர்.   முன்னாள் மத்திய அமைச்சரும், சன் குழும இயக்குநர்களுள் ஒருவருமான தயாநிதி மாறன் பேசுகையில், மு.க.ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோருக்கு வாழ்த்துச் சொன்னார். பிறகு, பொருளாளர் பதவியேற்றுள்ள துரைமுருகன், மு.க.ஸ்டாலின்போல ஓடியாடி கட்சிக்கு நிதி குவிக்க வேண்டும் என்று வேடிக்கையாக குறிப்பிட்டார். இதையடுத்து ஏற்புரையாற்றிய துரைமுருகன், அவர் தி
ஸ்டாலின் அடித்த சிக்ஸர்!; கன்னி உரையில் கனல் கக்கிய ‘தலைவர்’!! #DMK #MKStalin

ஸ்டாலின் அடித்த சிக்ஸர்!; கன்னி உரையில் கனல் கக்கிய ‘தலைவர்’!! #DMK #MKStalin

அரசியல், சென்னை, தமிழ்நாடு, திண்ணை, முக்கிய செய்திகள்
  திமுக தலைவராக பதவியேற்ற பின்னர் நிகழ்த்திய முதல் உரையிலேயே, 'பாஜகவுடன் நெருக்கம் காட்டுகிறதா திமுக?' என்ற யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்ததோடு, திராவிட இயக்கத்தின் அடிப்படை சித்தாந்தங்களைக்காக்க தொண்டர்களுக்கு அறைகூவல் விடுத்து, முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து, தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த கவனத்தையும் இன்று ஈர்த்து இருக்கிறார் மு.க.ஸ்டாலின். திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்குப் பின்னர் எல்லோரும் எதிர்பார்த்தது போலவே செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், இன்று (ஆகஸ்ட் 28, 2018) அக்கட்சியின் தலைவராக மகுடம் சூடினார். சென்னை அறிவாலயத்தில் இன்று நடந்த பொதுக்குழுவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்தார். இதுவரை ஸ்டாலின் வகித்து வந்த பொருளாளர் பதவிக்கு, தலைமை நிலையச் செயலாளரான துரைமுருகன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.   கருணாநிதி மறைந்ததால் ஏற்பட்ட அதிர்ச்சியில் ம
ரூ.6 கோடி ரயில் கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை நெருங்கியது சிபிசிஐடி! #TrainRobbery #Salem

ரூ.6 கோடி ரயில் கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை நெருங்கியது சிபிசிஐடி! #TrainRobbery #Salem

இந்தியா, குற்றம், சென்னை, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, சேலத்தில் இருந்து சென்னை சென்ற எக்மோர் எக்ஸ்பிரஸ் ரயிலில், வங்கிகளில் இருந்து கொண்டு செல்லப்பட்ட ரூ.5.78 கோடி ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளை அடித்த சம்பவத்தில் வடமாநிலத்தைச் சேர்ந்த முக்கிய குற்றவாளிகளை சிபிசிஐடி போலீசார் நெருங்கிவிட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. பொதுத்துறை வங்கிகளில் சேகரமாகும் பழைய மற்றும் கிழிந்த ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி குறிப்பிட்ட இடைவெளியில் திரும்பப் பெற்றுக்கொள்வது நடைமுறையில் இருந்து வருகிறது. அதன்படி, சேலம் மண்டலத்திற்கு உட்பட்ட சில பொதுத்துறை வங்கிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட ரூ.342.75 கோடி பழைய, கிழிந்த ரூபாய் நோட்டுகளை சேலத்தில் இருந்து சென்னை செல்லும் எக்மோர் எக்ஸ்பிரஸ் ரயிலில் கொண்டு செல்ல தீர்மானிக்கப்பட்டது.   இதைத் தொடர்ந்து கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி, ரூ.342.75 கோடியை 226 அட்டைப
நீதிமன்றம் தடை: ‘எட்டு வழிச்சாலை’ விவசாயிகள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!

நீதிமன்றம் தடை: ‘எட்டு வழிச்சாலை’ விவசாயிகள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!

சென்னை, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  எட்டு வழிச்சாலைத் திட்டத்துக்காக மறு உத்தரவு வரும் வரை நிலம் கையகப்படுத்த தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, சேலத்தில் நேற்று விவசாயிகள் இனிப்புகள் வழங்கியும், கேக் வெட்டியும் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். சேலத்தில் இருந்து சென்னைக்கு ஏற்கனவே சாலை மார்க்கமாக மூன்று வழித்தடங்கள் உள்ள நிலையில், புதிதாக பாரத்மாலா பரியோஜனா என்ற திட்டத்தின் பெயரில், எட்டு வழிச்சாலை எனப்படும் பசுமைவழி விரைவுச்சாலை அமைக்க மத்திய, மாநில அரசுகள் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தத் திட்டப்படி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களின் ஊடாக 277.3 கி.மீ. தொலைவுக்கு பசுமைவழி விரைவுச்சாலை அமைக்கப்படுகிறது. இதற்காக சேலம் ஏற்காடு, திருவண்ணாமலையில் உள்ள கவுத்திமலை, வேடியப்பன் மலை உள்ளிட்ட வனப்பகுதிகள் உள்பட மொத்தம் 2343 ஹெக்டேர் நி