Sunday, October 26மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

முக்கிய செய்திகள்

நீட் தேர்வு-2019 முடிவுகள் வெளியீடு! தமிழக மாணவர்கள் அபாரம்!!

நீட் தேர்வு-2019 முடிவுகள் வெளியீடு! தமிழக மாணவர்கள் அபாரம்!!

கல்வி, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு முடிவுகள் நேற்று (ஜூன் 5, 2019) வெளியாகின. நாடு முழுவதும் 56.49 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் 48.57 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.   இளங்கலை மருத்துவப்படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகியவற்றில் சேர்ந்து பயில தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு எனப்படும் நீட் தேர்வில் வெற்றி பெறுவது கட்டாயம். நாடு முழுவதும் கடந்த மே 5ம் தேதி நீட் தேர்வு நடந்தது. ஃபானி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மட்டும் மே 20ம் தேதி தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வின் முடிவுகளை, தேசிய தேர்வு முகமை (என்டிஏ) நேற்று (ஜூன் 5, 2019) மாலை அதனுடைய அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்தியா முழுவதும் 14 லட்சத்து 10755 பேர் நீட் தேர்வு எழுதிய நிலையில், அவர்களில் 7 லட்சத்து 97042 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்...
சேலம்: இலங்கை அகதி முகாம் சிறுமியின் வாழ்வில் ஒளியேற்றிய ஆட்சியர் ரோகிணி!

சேலம்: இலங்கை அகதி முகாம் சிறுமியின் வாழ்வில் ஒளியேற்றிய ஆட்சியர் ரோகிணி!

சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள குறுக்குப்பட்டியில் இலங்கை அகதிகளுக்கான குடியிருப்பு உள்ளது. அந்த முகாமைச் சேர்ந்த மோதிலால், அடிப்படையில் ஒரு சிற்பி. கோயில்களில் கடவுள் சிலைகளை செதுக்கி வருகிறார். என்னதான் கலை நயத்துடன் சிலை வடித்தாலும், கிடைப்பது சொற்ப கூலிதான். இவருடைய மகள் வழி பேத்தி காவினியா (13); பேரன் ரனுஷன் (14). இருவரையும் மோதிலாலும் அவருடைய மனைவி பரமேஸ்வரியும்தான் பராமரித்து வருகின்றனர்.   இந்த குழந்தைகளின் அப்பா திருமுருகன், பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி. கிடைக்கின்ற கூலியை டாஸ்மாக்கிடம் கொடுத்துவிட, அதனால் மனைவி புவனேஸ்வரியுடன் அடிக்கடி தகராறு மூள, விரக்தி அடைந்த புவனேஸ்வரி குழந்தைகளை தவிக்கவிட்டு தீக்குளித்து இறந்து போனார். 2007ல் நடந்த இந்த சம்பவத்திற்கு பிறகு, குழந்தைகளை சிற்பி மோதிலால்தான் படிக்க வைத்து வருகிறார்.   சிறுமி காவினியா, தாரமங்கலத்தில் உள்ள...
”ராகதேவனுக்கு ஓவியங்களால் ஒரு காணிக்கை!” சேலம் ரசிகனின் வித்தியாச முயற்சி!!

”ராகதேவனுக்கு ஓவியங்களால் ஒரு காணிக்கை!” சேலம் ரசிகனின் வித்தியாச முயற்சி!!

சினிமா, சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
(ரசிகன் பக்கம்)     இளையராஜா...   இந்த ஒற்றைப்பெயர் தமிழகத்தின் பட்டித்தொட்டி எங்குமுள்ள திரையிசை ரசிகனை மீள் உருவாக்கம் செய்த மந்திரம் என்றால் மிகையாகாது. உலக சினிமா வரலாற்றிலேயே முதன்முதலில் கதாநாயக பிம்பத்தை உடைத்து, 'இசையமைப்பாளர் இளையராஜா' என்றாலே படம் பார்க்க போகலாம் என்ற நிலையை உருவாக்கிய பெருமை, ராகதேவனையே சேரும்.   மாட்டு வண்டி போகாத பாதையில் எல்லாம்கூட ராஜாவின் பாட்டு வண்டி போய்ச்சேர்ந்தது நிகழ்கால நிதர்சனம். 'வாங்கடா வந்தனம் பண்ணுங்கடா... வந்து இந்த வண்டிய தள்ளுங்கடா...' என்று அவருக்கு முன்பு இருந்த இசை ஜாம்பவான்களையும், அவருக்குப் பின்னால் வந்த இசைக்கலைஞர்களையும் 'ஓரம்போ... ஓரம்போ...' என்று ஓரங்கட்டிவிட்டு, உச்சாணிக்கொம்பில் வீற்றிருக்கும் ஒரே இசைக்கலைஞன் இளையராஜா.   அவருக்கு தமிழ்த்திரையுலகம் மட்டுமின்றி உலகெங்கும் ரசிக பட்டாளங்கள் இ...
சொந்த மண்ணில் எடப்பாடி வீழ்ந்தது ஏன்? காலை வாரிய பாமக, தேமுதிக! கைவிட்ட வெற்றி விநாயகர்!!

சொந்த மண்ணில் எடப்பாடி வீழ்ந்தது ஏன்? காலை வாரிய பாமக, தேமுதிக! கைவிட்ட வெற்றி விநாயகர்!!

அரசியல், சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஆளுங்கட்சியின் மீதான வெறுப்பு, பாஜகவுக்கு எதிரான மக்களின் மனநிலை மட்டுமின்றி, பெரிதும் நம்பிக்கொண்டிருந்த கூட்டணி கட்சிகளே சொந்த மண்ணில் எடப்பாடியை திட்டமிட்டு வீழ்த்தி இருப்பது தெரிய வந்துள்ளது.   பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி, தமிழக முதல்வராக அமர்த்தப்பட்டது ஒரு விபத்து என்றாலும், அதன் பிறகு அவரின் ஒட்டுமொத்த கவனமும் கொங்கு மண்டலத்தின் மீதே குவிந்து இருந்தது. மக்களவைக்கு மட்டுமல்ல; ஒருவேளை சட்டப்பேரவை தேர்தல் வந்தாலும் கொங்கு மண்டலத்தில் தனது செல்வாக்கை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் நோக்கிலேயே மாதத்தில் இருமுறையாவது அவர் தனது சொந்த மாவட்டமான சேலத்திற்கு வந்து விடுவார். நீரா பானம், அத்திக்கடவு அவினாசி திட்டங்கள் கொண்டு வந்ததும்கூட, அவர் சார்ந்த சமூகத்தினரின் வாக்குகளை குறிவைத்துதான். ஆனால், இந்த மக்களவை தேர்தலில் கொங்கு மண்டலத்தில் அதிமுகவின் க...
கிடப்பில் போடப்பட்ட ‘காக்கி கருப்பு ஆடுகள்’ வழக்கு? கள்ள மவுனம் சாதிக்கும் சேலம் காவல்துறை!

கிடப்பில் போடப்பட்ட ‘காக்கி கருப்பு ஆடுகள்’ வழக்கு? கள்ள மவுனம் சாதிக்கும் சேலம் காவல்துறை!

குற்றம், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஆத்தூரில், காவல் ஆய்வாளரின் மிரட்டலால் நிதி நிறுவன அதிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒட்டுமொத்த காக்கி துறைக்கும் அவப்பெயரை உண்டாக்கி இருக்கிறது. தேர்தல் வாக்கு எண்ணிக்கை பரபரப்பில் இந்த வழக்கை கிடப்பில் போட்டதால், நிதி நிறுவன அதிபரை பறிகொடுத்த குடும்பம் கடும் அதிருப்தியில் உள்ளது.   சேலம் மாவட்டம் ஆத்தூர் வினாயகபுரம் நேதாஜி நகரைச் சேர்ந்த திமுக பிரமுகர் பிரேம்குமார் (49), தன் தம்பி செந்தில்குமாருடன் சேர்ந்து சொந்த ஊரில் தனலட்சுமி ஃபைனான்ஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். மே 14ம் தேதி, திடீரென்று அவர் வீட்டில் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி விழுந்து கிடந்தார். என்னமோ ஏதோ என்று பதற்றம் அடைந்த மனைவியும், இரு மகன்களும் பிரேம்குமாரை தூக்கிச்சென்று தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மறுநாள் காலையில் (மே 15) சிகிச்சை பலனின்றி பிரேம்குமா...
மக்களவை தேர்தல்: சேலத்தில் திமுக வரலாற்று வெற்றி! எஸ்.ஆர். பார்த்திபன் எம்.பி. ஆனார்!!

மக்களவை தேர்தல்: சேலத்தில் திமுக வரலாற்று வெற்றி! எஸ்.ஆர். பார்த்திபன் எம்.பி. ஆனார்!!

அரசியல், சேலம், முக்கிய செய்திகள்
மக்களவை தேர்தலில், 39 ஆண்டுகளுக்குப் பிறகு சேலம் தொகுதியை வசப்படுத்தி, வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது, திமுக. அக்கட்சியின் வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் அமோக வெற்றி பெற்று, எம்.பி. ஆகியுள்ளார்.   தமிழகத்தில் மக்களவை தேர்தலில் சேலம் தொகுதியில் திமுக சார்பில் எஸ்.ஆர்.பார்த்திபன், ஆளும் அதிமுக தரப்பில் கே.ஆர்.எஸ். சரவணன் ஆகியோர் போட்டியிட்டனர். இவர்கள் மட்டுமின்றி, டிடிவி தினகரனின் அமமுக தரப்பில் எஸ்.கே.செல்வம், மக்கள் நீதி மய்யம் சார்பில் பிரபு மணிகண்டன், நாம் தமிழர் கட்சி சார்பில் ராசா அம்மையப்பன் உள்ளிட்ட 22 பேர் போட்டியிட்டனர். ஏற்கனவே கடந்த 2009, 2014 ஆகிய இரு மக்களவை தேர்தல்களிலும் சேலம் தொகுதியை அதிமுகவே கைப்பற்றி இருந்தது. அத்துடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டம் என்பதால், எப்படியும் இந்த தேர்தலிலும் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக வெற...
தர்மபுரி: காட்டுக்குள் வந்தால் கபளீகரம்! காதலர்களுடன் வரும் இளம்பெண்களுக்கு குறி! துப்பாக்கிக்கு இரையான சம்பவத்தில் திடுக்கிடும் தகவல்கள்

தர்மபுரி: காட்டுக்குள் வந்தால் கபளீகரம்! காதலர்களுடன் வரும் இளம்பெண்களுக்கு குறி! துப்பாக்கிக்கு இரையான சம்பவத்தில் திடுக்கிடும் தகவல்கள்

குற்றம், தமிழ்நாடு, தர்மபுரி, முக்கிய செய்திகள்
  ஒகேனக்கல் அருகே காட்டுப்பகுதிக்குள் காதலனுடன் ஒதுங்கிய இளம்பெண்ணை சீரழிக்க முயன்றபோது ஏற்பட்ட தகராறில் காதலனை கருணையே இல்லாமல் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் இருந்து நான்கு கி.மீ. தொலைவில் பண்ணப்பட்டி பிரிவு சாலையில் ஒரு காப்புக்காடு இருக்கிறது. இந்தக் காட்டுப்பகுதிக்குள் அந்நியர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டு உள்ளது. என்றாலும், ஒகேனக்கல்லுக்கு ஜோடியாக சுற்றுலா வரும் இளசுகள், இந்த காட்டுப்பகுதியில் ஒதுங்குவது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆளரவமற்ற பகுதி என்பதால், எது நடந்தாலும் வெளி உலகுக்குத் தெரியாது. இந்நிலையில், கடந்த மே 1ம் தேதியன்று, தொப்பூர் அருகே உள்ள ஜருகு குரும்பட்டியான் கொட்டாயைச் சேர்ந்த பாலு மகன் முனுசாமி (25), தனது அக்காள் மகள் ரஞ்சனி (வயது 16, பெயர் மாற்றப்பட்டுள்ளது) உடன் ஒ...
சேலம்: அவல நிலையில் அகதி முகாம்கள்! குடிநீர், கழிப்பறை, தெருவிளக்கு வசதியின்றி திண்டாடும் தொப்புள்கொடி உறவுகள்!!

சேலம்: அவல நிலையில் அகதி முகாம்கள்! குடிநீர், கழிப்பறை, தெருவிளக்கு வசதியின்றி திண்டாடும் தொப்புள்கொடி உறவுகள்!!

சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
-சிறப்புக்கட்டுரை-   ஈழத்தில் நடந்த உள்நாட்டுப் போரில், எல்லாவற்றையும் இழந்து, துயரங்களை மட்டுமே சுமந்து கொண்டு, தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்த ஈழத்தமிழர்கள், இங்கும் போதிய அடிப்படை வசதிகளின்றி நாலாந்தர குடிமக்களாக வாழ்ந்து (!) வருகின்றனர். இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், சிங்கள அரசுக்கும் ஏற்பட்ட மோதலில் தமிழர்கள் பலர் மனைவி, குழந்தைகளுடன் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்தனர். 1983-87, 1989-91, 1996-2003 என மூன்று கட்டங்களாக தமிழகத்திற்குள் தஞ்சம் புகுந்தவர்களைக் காட்டிலும், உள்நாட்டுப் போர் உச்சத்தில் இருந்த 2006-2010 காலக்கட்டத்தில் அதிகளவில் ஈழத்தமிழர்கள் அகதிகளாக தஞ்சம் புகுந்தனர்.   இவர்கள் தமிழகம் முழுவதும் உள்ள 110 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆரம்பத்தில் 3 லட்சம் ஈழ அகதிகள் வசித்து வந்த நிலையில், தற்போது 17 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 65 ...
ரவுடி கதிர்வேலை திட்டமிட்டு படுகொலை செய்த போலீஸ்! உண்மை கண்டறியும் குழு பாய்ச்சல்!!

ரவுடி கதிர்வேலை திட்டமிட்டு படுகொலை செய்த போலீஸ்! உண்மை கண்டறியும் குழு பாய்ச்சல்!!

குற்றம், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலத்தில் ரவுடி கதிர்வேலை திட்டமிட்டு படுகொலை செய்துவிட்டு, என்கவுண்டர் செய்ததாக காவல்துறையினர் நாடகம் ஆடுவதாக உண்மை கண்டறியும் குழுவினர் தெரிவித்துள்ளனர். சேலத்தை அடுத்த மேட்டுப்பட்டி தாதனூர் அருகே தேவாங்கர் காலனியைச் சேர்ந்த சேட்டு மகன் கதிர்வேல், கடந்த மே 2, 2019ம் தேதியன்று என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக மாவட்ட காவல்துறை தெரிவித்தது. ஒரு கொலை வழக்கில், காரிப்பட்டி காவல் ஆய்வாளர் சுப்ரமணியம், எஸ்.ஐ.க்கள் மாரி, பெரியசாமி ஆகியோர் அவரை பிடிக்க முயன்றபோது, கத்தியால் தாக்க முயன்றதாகவும், அதனால் அவரை என்கவுண்டரில் சுட்டுக்கொன்றதாகவும் சொன்னது காவல்துறை.     கதிர்வேல் மீது ஏற்கனவே மூன்று கொலை, ஒன்பது வழிப்பறி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இது ஒருபுறம் இருக்க, அவர் தானாகவே காவல்துறையில் சரணடைந்த நிலையில், திட்டமிட்டு அவர் கொல்லப்பட்டதாகவும் மாறுபட்ட...
‘அரங்கேற்றம்’ லலிதாக்கள் இன்னும் இருக்கிறார்கள்! – திரை விமர்சனம்

‘அரங்கேற்றம்’ லலிதாக்கள் இன்னும் இருக்கிறார்கள்! – திரை விமர்சனம்

சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
அடுத்தடுத்து 'வதவத' என்று பிள்ளைக்குட்டிகளை பெற்றுப் போட்டதைத் தவிர வேறு எந்த சாதனையும் செய்யாத தந்தை, கஞ்சிக்கே வக்கற்ற நிலையிலும் மனசு முழுக்க இலட்சம் கனவுகளை சுமந்து கொண்டு வாழும் தங்கைகள், தம்பிகளுக்காக தன்னையே தியாகம் செய்யும் லலிதாவின் வாழ்வில் ஏற்பட்ட துயரங்களையும், ஏமாற்றங்களையும் பட்டவர்த்தனமாக முகத்தில் அறைந்தாற்போல் பேசுகிறது அரங்கேற்றம்.   என்னதான் நாம் ஸ்விக்கி, ஸோமாட்டோ நாகரீகத்திற்குள் நுழைந்துவிட்டாலும், மூன்றாம் நபரின் அந்தரங்க செயல்பாடுகளை கூச்சமே இல்லாமல் முதுகுக்குப் பின்னால் கிசுகிசுப்பது இப்போதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அதனாலேயே நாம் அந்த நாலு பேரைக் கண்டு சில வேளைகளில் அஞ்சவும் வேண்டியதிருக்கிறது. கதைதான் என்றாலும், 46 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு பெண்ணை மையமாக வைத்து, காலவெளியை உடைத்துக்கொண்டு முழு கதையையும் திரையில் விவரிக்க மு...