
”லஞ்சம், ஊழலை அம்பலப்படுத்துவது குற்றமல்ல!” தகவல் ஆணையம் அதிரடி!!
பணியிடங்களில் தலைவிரித்தாடும்
லஞ்சம், ஊழல் குறித்து
காவல்துறைக்கு புகார் அளிப்பது
குற்றம் ஆகாது என்றும்,
அதற்காக புகார் அளித்தவரை
தண்டிப்பது கூடாது என்றும்
தமிழ்நாடு தகவல் ஆணையம்
தடாலடியாக தீர்ப்பு
அளித்துள்ளது.
சேலம் சித்தனூரை
சேர்ந்தவர் வைத்தியநாதன் (54).
பெரியார் பல்கலையில்
பொருளாதார துறை
உதவி பேராசிரியராக
பணியாற்றி வருகிறார்.
கடந்த 2017ம் ஆண்டு
இப்பல்கலையின் துணை வேந்தராக
இருந்த சுவாமிநாதன் மீது
பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள்
எழுந்தன.
உதவி பேராசிரியர் / பேராசிரியர்
பணியிடங்கள் 30 லட்சம் முதல்
50 லட்சம் வரை கூவி கூவி
விற்பனை செய்தார் என்பதும்,
பதவி உயர்வு வழங்குவதற்காக
23 உதவி பேராசிரியர்களிடம்
தலா 3 லட்சம் வசூலித்தார் என்பதும்
அவர் மீதான புகார்களில்
முக்கியமானவை.
போலி அனுபவ சான்றிதழ்களை
சமர்ப்பித்தவர்கள்,
முழு கல்வித்தகுதியை எட்டாதவ