Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

இந்தியா

பேடிஎம் ஐபிஓ வெளியீடு! 18000 கோடி ரூபாய் முதலீடு திரட்ட திட்டம்; முதல் நாளிலேயே அமர்க்களம்!

பேடிஎம் ஐபிஓ வெளியீடு! 18000 கோடி ரூபாய் முதலீடு திரட்ட திட்டம்; முதல் நாளிலேயே அமர்க்களம்!

இந்தியா, முக்கிய செய்திகள், வர்த்தகம்
முதலீட்டாளர்களிடையே பெரிதும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்பட்ட பேடிஎம் பொதுப்பங்கு (ஐபிஓ) வெளியீடு திங்கள்கிழமை (நவ. 8) தொடங்கியது. டிஜிட்டல் பேமென்ட் மற்றும் நிதிச்சேவை வர்த்தகத்தில் முன்னணியில் உள்ள ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான பேடிஎம், வணிக விரிவாக்கத்திற்காக பொதுப்பங்கு வெளியீட்டின் மூலம் 18300 கோடி ரூபாய் திரட்ட உத்தேசித்துள்ளது. இந்திய பங்குச்சந்தை வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் மிகப்பெரும் பொதுப்பங்கு வெளியீடாக பேடிஎம் ஐபிஓ கருதப்படுகிறது. கடைசியாக, கடந்த 2010ம் ஆண்டு கோல் இந்தியா ஐபிஓ மூலம் 15475 கோடி ரூபாய் திரட்டப்பட்டதே பெரிய ஐபிஓ ஆக இருந்தது. மோர்கன் ஸ்டேன்லி இண்டியா, கோல்டுமேன் சாக்ஸ் (இண்டியா) செக்யூரிட்டீஸ், ஆக்சிஸ் கேப்பிடல், ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ், ஜேபி மோர்கன் இண்டியா, சிட்டி குரூப் குளோபல் மார்க்கெட்ஸ் இண்டியா, ஹெச்டிஎப்சி
நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது! எம்பிபிஎஸ்., மாணவர் சேர்க்கை விரைவில் ஆரம்பம்!

நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது! எம்பிபிஎஸ்., மாணவர் சேர்க்கை விரைவில் ஆரம்பம்!

இந்தியா, தகவல், முக்கிய செய்திகள்
எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு, கடந்த செப். 12ம் தேதி நாடு முழுவதும் நடந்தது. இத்தேர்வை, இந்தியா முழுவதும் 16 லட்சம் மாணவர்கள் எழுதினர். தமிழ்நாட்டில் சுமார் 1.10 லட்சம் பேர் எழுதினர். இதன் தற்காலிக விடைகள் (ஆன்சர் கீ), அக். 15ம் தேதி வெளியிடப்பட்டது. இயற்பியல் பாடப்பகுதியில் இருந்து கேட்கப்பட்ட வினாக்கள் சற்று கடினமாக இருந்ததாக தேர்வர்கள் கூறினர்.   வழக்கமாக நீட் தேர்வு நடத்தப்பட்ட நாளில் இருந்து 30 நாள்களுக்குள் முடிவுகள் வெளியிடப்படும். ஆனால் இந்த ஆண்டு, நாக்பூரில் உள்ள ஒரு பயிற்சி மையத்தைச் சேர்ந்த 25 மாணவர்கள், நீட் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதனால் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. &nb
ஸ்டாக் மார்க்கெட்டில் இன்று பட்டியலிடப்படுகிறது சொமேட்டோ பங்குகள்! முதலீட்டாளர்கள் இடையே பலத்த எதிர்பார்ப்பு!!

ஸ்டாக் மார்க்கெட்டில் இன்று பட்டியலிடப்படுகிறது சொமேட்டோ பங்குகள்! முதலீட்டாளர்கள் இடையே பலத்த எதிர்பார்ப்பு!!

இந்தியா, முக்கிய செய்திகள், வர்த்தகம்
ஆன்லைன் உணவு விநியோகத்தில் முன்னணியில் உள்ள சொமேட்டோ நிறுவனத்தின் பொதுப்பங்குகள், இந்திய பங்குச்சந்தைகளில் இன்று (ஜூலை 23) பட்டியலிடப்படுகின்றன. இந்நிறுவனம், வியாபார விரிவாக்கத்திற்காக பொதுப்பங்குகள் வெளியீடு மூலம் 9375 கோடி ரூபாய் திரட்ட முடிவு செய்திருந்தது. இதையடுத்து, இந்திய பங்குச்சந்தைகளில் ஜூலை 14 - 16ம் தேதி வரை ஐபிஓ எனப்படும் பொதுப்பங்கு வெளியீட்டில் முதன்முதலில் களமிறங்கிறது. ஒரு பங்கின் விலை 74 - 76 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. அதிகபட்ச விலையின் அடிப்படையில் பங்குகள் விற்பனை செய்யப்பட்டன. கொரோனா ஊரடங்கு காலத்திலும் கடந்த நிதி ஆண்டு கணிசமாக லாபம் ஈட்டி இருந்தது. எனினும், அந்நிறுவனத்துக்கு கடன் சுமையும் இருந்து வருகிறது. இதனால் பொதுப்பங்கு எந்தளவுக்கு வெற்றி பெறும் என்ற தடுமாற்றமான நிலை ஆரம்பத்தில் இருந்தது. ஆனால், எதிர்பாராத வகையில் ச
சொமேட்டோ ஐபிஓ வெளியீடு!; பங்குகளை வாங்க முதலீட்டாளர்கள் ஆர்வம்!!

சொமேட்டோ ஐபிஓ வெளியீடு!; பங்குகளை வாங்க முதலீட்டாளர்கள் ஆர்வம்!!

இந்தியா, முக்கிய செய்திகள், வர்த்தகம்
சொமேட்டோ நிறுவன புதிய பங்குகளை வாங்குவதில் முதலீட்டாளர்களிடையே ஏற்பட்ட கடும் போட்டியால் முதல் நாளிலேயே எதிர்பார்த்த இலக்கை விட கூடுதல் பங்குகளுக்கு ஒதுக்கீடு கேட்டு விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. முன்னணி ஆன்லைன் உணவு வர்த்தக நிறுவனமான சொமேட்டோ, ஐபிஓ எனப்படும் புதிய பங்கு வெளியீட்டில் களமிறங்கியுள்ளது. இதன் பங்கு வெளியீடு புதன்கிழமை (ஜூலை 14) தொடங்கியது. இதன்மூலம் 9375 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்கத் திட்டமிட்டுள்ளது. நடப்பு ஆண்டில் கடந்த ஆறு மாதங்களில் வெளியான ஐபிஓக்களில் சொமேட்டோவின் பங்கு வெளியீடுதான் மிகப்பெரியதாக கருதப்படுகிறது. 71 கோடியே 92 லட்சத்து 33 ஆயிரத்து 522 பங்குகளை விற்க முடிவு செய்திருந்த நிலையில், முதல் நாளிலேயே 75 கோடியே 64 லட்சத்து 33 ஆயிரத்து 80 பங்குகளுக்கு முதலீட்டாளர்கள் விண்ணப்பித்து உள்ளனர். மொத்த பங்குகளில் இன்ஸ்டிடியூஷனல் அல்லாத முதலீ
‘நச்’ கேள்விகள்; ‘பன்ச்’ பதில்கள்!; டெல்லியில் தெறிக்கவிட்ட மு.க.ஸ்டாலின்!

‘நச்’ கேள்விகள்; ‘பன்ச்’ பதில்கள்!; டெல்லியில் தெறிக்கவிட்ட மு.க.ஸ்டாலின்!

அரசியல், இந்தியா, முக்கிய செய்திகள்
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்று 42 நாள்கள் ஆன நிலையில், பிரதமர் நரேந்திரமோடியை மரியாதை நிமித்தமாக டெல்லியில் வியாழனன்று (ஜூன் 17) நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறார். மாநிலத்தின் முதல்வராக பொறுப்பேற்கக் கூடியவர்கள் பெரும்பாலும் முப்பது நாள்களுக்குள்ளாகவே பிரதமருடனான சம்பிரதாயமான சந்திப்பை முடித்து விடுவார்கள். ஆனால் கொரோனா பெருந்தொற்றால் தமிழகமே ஆக்சிஜன் கிடைக்காமல் மூச்சுத்திணறிய வேளையில் பொறுப்பேற்றதால் இந்த சந்திப்புக்கு 42 நாள்கள் ஆகியிருக்கின்றன.   டெல்லி சென்ற ஸ்டாலினுக்கு திமுக எம்பிக்கள் அளித்த உற்சாக வரவேற்பு லோக்கல் மீடியாக்களையும், வடக்கத்திய அரசியல் தலைவர்களையும் கவனிக்க வைத்திருக்கிறது.   பிரதமரிடம் அதிமுக முன்னாள் முதல்வர் மற்றும் முக்கிய அமைச்சர்கள் மீதான ஊழல்கள் பற்றியும் ஸ்டாலின் புகார் புஸ்தகம் வாசிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனா
தங்க கடத்தலுக்கு ‘செக்!’; ‘ஹால்மார்க்’ கட்டாயத்தின் பரபரப்பு பின்னணி!!

தங்க கடத்தலுக்கு ‘செக்!’; ‘ஹால்மார்க்’ கட்டாயத்தின் பரபரப்பு பின்னணி!!

இந்தியா, முக்கிய செய்திகள், வர்த்தகம்
தங்க நகைகளுக்கு ஜூன் 16 முதல் ஹால்மார்க் முத்திரை கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. இந்தியாவில் அனைத்து இடங்களிலும் ஹால்மார்க் முத்திரை வழங்கும் மையம் இல்லை என ஜூவல்லரி நிறுவனங்களிடம் இருந்து கோரிக்கை எழவே முதல் கட்டமாக 256 மாவட்டங்களில் மட்டுமே ஹால்மார்க் முத்திரையை மத்திய அரசு கட்டாயமாக்கி இருக்கிறது.   இதுகுறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடும்போது, ஆகஸ்ட் மாதம் வரை எந்த அபராதமும் விதிக்கப்படாது என்று தெரிவித்துள்ளார். 256 மாவட்டங்களில் ஹால்மார்க் கட்டாயம் என்றாலும் ஆண்டுக்கு ரூ.40 லட்சத்துக்கு கீழ் விற்பனை இருக்கும் நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல வாட்ச், பேனா உள்ளிட்டவற்றுக்கும், குந்தன் உள்ளிட்ட சில ஆபரணங்களுக்கும் இதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள், ஹால்மார்க் முத்திரை
ஒரே நாளில் நிஜ நாயகன் ஆன ‘பாயிண்ட்ஸ்மேன்’ மயூர்!

ஒரே நாளில் நிஜ நாயகன் ஆன ‘பாயிண்ட்ஸ்மேன்’ மயூர்!

இந்தியா, முக்கிய செய்திகள்
நாயகர்கள் பிறப்பதில்லை. சூழ்நிலைகளும் நிகழ்வுகளுமே நிஜ நாயகர்களை உலகுக்கு அவ்வப்போது அடையாளம் காட்டி விடுகிறது. அப்படி, நாடு போற்றும் நாயகனாக ஆனவர்தான் 'பாயிண்ட்ஸ்மேன்' மயூர் ஷெல்கே. மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள மத்திய வாங்கனி ரயில் நிலையத்தில் பாயிண்ட்ஸ்மேன் ஆக பணியாற்றி வருகிறார், மயூர் சகாராம் ஷெல்கே என்ற இளைஞர். ஏப். 17ம் தேதி, இந்த ரயில் நிலையத்தில் 2வது நடைமேடையில் தாயுடன் 6 வயது சிறுவன் நடந்து சென்று கொண்டிருந்தான். திடீரென்று, சிறுவன் கால் இடறி, நடைமேடையில் இருந்து தண்டவாளத்தில் விழுந்துவிட்டான்.   பதறிப்போன தாய், மகனின் அழுகுரல் சத்தம் கேட்டு மேலும் பதற்றம் அடைகிறார். குழந்தையின் மரண ஓலம் வந்த திசையை அவரால் உணர முடியவில்லை. அப்போதுதான் அந்த தாய், பார்வைத்திறனற்ற மாற்றுத்திறனாளி என்பதே தெரியவருகிறது. தொலைவி
காஸ் சிலிண்டர் விலை ஒரே மாதத்தில் 3வது முறையாக உயர்வு; சேலத்தில் ரூ.828 ஆக நிர்ணயம்!

காஸ் சிலிண்டர் விலை ஒரே மாதத்தில் 3வது முறையாக உயர்வு; சேலத்தில் ரூ.828 ஆக நிர்ணயம்!

இந்தியா, முக்கிய செய்திகள், வர்த்தகம்
வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடை கொண்ட மானியமில்லா எல்பிஜி சிலிண்டர் விலை, நடப்பு மாதத்தில் மூன்றாவது முறையாக ஏற்றப்பட்டுள்ளது. இதனால் சேலத்தில், நடப்பு மாதத்தில் காஸ் சிலிண்டர் விலை 803ல் இருந்து 828 ரூபாயாக ஆக அதிகரித்துள்ளது.   சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, இந்தியாவில் காஸ் சிலிண்டருக்கான தேவை, உற்பத்தித்திறன் உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் மாதந்தோறும் காஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயம் செய்து வருகிறது.   அதன்படி, ஒவ்வொரு மாதமும் கடைசி நாளில், அதற்கு அடுத்த மாதத்திற்கான புதிய விலை நிர்ணயம் செய்யப்படுவது நடைமுறை. ஆனால் அண்மைக் காலமாக இந்தியாவில், ஒரே மாதத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட முறை காஸ் சிலிண்டர் விலையை மறு நிர்ணயம் செய்யும் நில
பட்ஜெட் 2021-2022: விவசாயிகளுக்கு 16.50 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு; விளைபொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை தொடரும்!

பட்ஜெட் 2021-2022: விவசாயிகளுக்கு 16.50 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு; விளைபொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை தொடரும்!

இந்தியா, முக்கிய செய்திகள்
நடப்பு ஆண்டில் நெல், கோதுமை, கரும்பு உள்ளிட்ட விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை உயர்த்தப்படும் என்றும், விவசாயிகளுக்கு 16.50 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாகவும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார். நடப்பு 2021-2022ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப். 1) தாக்கல் செய்தார். முன்னதாக அவர், குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்தை அவருடைய மாளிகையில் சந்தித்துப் பேசினார்.   நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் பட்ஜெட்டிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நாடு சுதந்திரம் அடைந்தது முதல் முதன்முறையாக காகிதம் இல்லா பட்ஜெட் அறிக்கையை நிர்மலா சீதாராமன் சமர்ப்பித்தார். இதன்மூலம் 140 கோடி ரூபாய் மிச்சம
பட்ஜெட் 2021-2022: பொதுத்துறை பங்குகளை விற்பதன் மூலம் 1.75 லட்சம் கோடி ரூபாய் திரட்ட முடிவு: நிர்மலா

பட்ஜெட் 2021-2022: பொதுத்துறை பங்குகளை விற்பதன் மூலம் 1.75 லட்சம் கோடி ரூபாய் திரட்ட முடிவு: நிர்மலா

இந்தியா, முக்கிய செய்திகள்
பொதுத்துறை பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் 1.75 லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிடப்பட்டு உள்ளதாக மத்திய பட்ஜெட் அறிக்கையின்போது நிதியமைச்சர்  நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.   கொரோனா பெருந்தொற்றால் ஒட்டுமொத்த துறைகளும் கிட்டத்தட்ட ஓராண்டாக பெரும் சரிவைச் சந்தித்திருந்த நிலையில், மத்திய அரசின் நடப்பு 2021-2022ம் நிதியாண்டுக்கான பட்ஜெட், திங்கள் கிழமை (பிப். 1) தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்யும் மூன்றாவது நிதி நிலை அறிக்கை இது. இந்த பட்ஜெட் தாக்கலுக்கு முன்பே, பெரும்பாலும் தனியார்மயம் ஊக்குவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அதற்கேப பங்கு விலக்கல் குறித்த அறிவிப்பும் வெளியானது. நிதி பற்றாக்குறையை சமாளிக்க பொதுத்துறை பங்குகளை ஐபிஓ எனப்படும் ஆரம்பநிலை பங்கு விற்ப