Saturday, April 27மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

இந்தியா

பட்ஜெட் 2021-2022: பொதுத்துறை பங்குகளை விற்பதன் மூலம் 1.75 லட்சம் கோடி ரூபாய் திரட்ட முடிவு: நிர்மலா

பட்ஜெட் 2021-2022: பொதுத்துறை பங்குகளை விற்பதன் மூலம் 1.75 லட்சம் கோடி ரூபாய் திரட்ட முடிவு: நிர்மலா

இந்தியா, முக்கிய செய்திகள்
பொதுத்துறை பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் 1.75 லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிடப்பட்டு உள்ளதாக மத்திய பட்ஜெட் அறிக்கையின்போது நிதியமைச்சர்  நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.   கொரோனா பெருந்தொற்றால் ஒட்டுமொத்த துறைகளும் கிட்டத்தட்ட ஓராண்டாக பெரும் சரிவைச் சந்தித்திருந்த நிலையில், மத்திய அரசின் நடப்பு 2021-2022ம் நிதியாண்டுக்கான பட்ஜெட், திங்கள் கிழமை (பிப். 1) தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்யும் மூன்றாவது நிதி நிலை அறிக்கை இது. இந்த பட்ஜெட் தாக்கலுக்கு முன்பே, பெரும்பாலும் தனியார்மயம் ஊக்குவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அதற்கேப பங்கு விலக்கல் குறித்த அறிவிப்பும் வெளியானது. நிதி பற்றாக்குறையை சமாளிக்க பொதுத்துறை பங்குகளை ஐபிஓ எனப்படும் ஆரம்பநிலை பங்கு விற்ப
அமெரிக்க கோழிகளால் ஆபத்து! 4 கோடி பேருக்கு வேலை பறிபோகும்; எச்சரிக்கும் பண்ணையாளர்கள்!!

அமெரிக்க கோழிகளால் ஆபத்து! 4 கோடி பேருக்கு வேலை பறிபோகும்; எச்சரிக்கும் பண்ணையாளர்கள்!!

இந்தியா, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு கோழிகளை இறக்குமதி செய்யும் ஒப்பந்தத்தால், தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் காலம்காலமாக கோழிப்பண்ணைத் தொழிலை நம்பி இருக்கும் 4 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு பறிபோவதோடு, கடும் பொருளாதார இழப்பும் ஏற்படும் என்று கோழி பண்ணையாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. உலக வர்த்தக ஒப்பந்தத்தின்பேரில் இந்தியாவில் இதுவரை பாரம்பரியமாக நடைபெற்று வந்த பல தொழில்கள் பெரும் சரிவை நோக்கிச் சென்று வருகின்றன. பல குடிசைத்தொழில்கள் அழிந்தே விட்டன. மிட்டாய் முதல் நொறுக்குத்தீனி தயாரிப்பு வரை பன்னாட்டு நிறுவனங்களின் நாலுகால் பாய்ச்சலால், இந்தியா ஆகப்பெரும் சந்தையாக உருவெடுத்து வருகிறது. பன்னாட்டு நிறுவனங்களின் பார்வையில், இந்தியர்கள் வெறும் நுகர்வோர்களாக மட்டுமே பார்க்கப்பட்டு வருகிறோம்.   இந்நிலையில்தான், உலகளவில் முட்டை, கறிக்கோழ
நிச்சயமாக மோடி ஒரு பாசிசவாதிதான்! ஜாவேத் அக்தர் அதிரடி தாக்கு!!

நிச்சயமாக மோடி ஒரு பாசிசவாதிதான்! ஜாவேத் அக்தர் அதிரடி தாக்கு!!

அரசியல், இந்தியா, முக்கிய செய்திகள்
கலை, இலக்கியத் துறைகளில் இயங்கி வரும் படைப்பாளிகள் தொடக்கத்தில் இருந்தே நடுவண் பாஜக அரசையும், பிரதமர் நரேந்திர மோடியையும் கடுமையாக சாடி வருகின்றனர். பாலிவுட்டில் பாடலாசிரியர், திரைக்கதை ஆசிரியர் என பன்முகம் காட்டும் ஜாவித் ஆக்தர் மற்றும் அவருடைய சகாவும், பிரபல இயக்குநருமான மகேஷ் பட் ஆகியோர், மோடியை குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் போட்டுத் தாக்கி வருகின்றனர்.   இந்நிலையில், அவர்கள் இருவரும் அல் ஜஸீரா செய்தி சேனலுக்கு வியாழனன்று (பிப். 13) அளித்த நேர்காணலில், மோடி மீது மீண்டும் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர். ஜாவேத் அக்தர், 'சந்தேகமே இல்லாமல் மோடி ஒரு பாசிசவாதிதான்' என்று கடுமையாக விமர்சித்து இருந்தார். அந்த டிவி சானலின் நெறியாளர் ஜாவேத் ஆக்தரிடம், ''மோடி ஒரு பாசிசவாதி என்று ஜாவேத் கருதுகிறாரா?,'' என
ஊழலில் திளைக்கும் ‘டாப் – 3’ துறைகள்! ஆய்வில் புதிய தகவல்கள்!!

ஊழலில் திளைக்கும் ‘டாப் – 3’ துறைகள்! ஆய்வில் புதிய தகவல்கள்!!

இந்தியா, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
இந்தியாவில் ஊழலில் திளைக்கும் முதல் மூன்று துறைகள் என்னென்ன? எத்தனை பேர் அரசு சேவைகளைப் பெற லஞ்சம் கொடுக்கின்றனர் என்பது உள்ளிட்ட பல்வேறு பரபரப்பு தகவல்கள், டிரான்ஸ்பரன்ஸி இண்டர்நேஷனல் இந்தியா நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. உலகம் முழுவதும் லஞ்சம், ஊழலுக்கு எதிராக போராடி வரும் டிரான்ஸ்பரன்ஸி இண்டர்நேஷனல் இந்தியா (டிஐஐ) என்ற தன்னார்வ அமைப்பு, சர்வதேச அளவில் ஊழல் மலிந்த நாடுகளை ஆண்டுதோறும் பட்டியலிட்டு வருகிறது. அரசு மற்றும் சார்பு நிறுவன ஊழியர்கள் தங்களின் கடமையைச் செய்ய அல்லது கடமைகளைச் செய்யாமல் இருக்க கையூட்டு பெறுவதையே ஊழல் என வரையறுக்கிறது இந்திய தண்டனை சட்டம்.   ஊழல் தடுப்பு சட்டம்-2018ன் படி, லஞ்சம் கொடுப்பதும் குற்றம் என்கிறது. மேலும், அவ்வாறு லஞ்சம் கொடுப்பவருக்கும் அதிகபட்சம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும்
நிலவில் இறங்கியாச்சு…மலக்குழிக்குள் இருந்து மனிதர்களை மீட்பது எப்போது?

நிலவில் இறங்கியாச்சு…மலக்குழிக்குள் இருந்து மனிதர்களை மீட்பது எப்போது?

இந்தியா, சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
சந்திரயான் விண்கலம் நிலவில் கால் பதித்ததை கொண்டாடும் அதே இந்திய ஒன்றியத்தில்தான், இன்னும் மலக்குழிகளில் மனிதர்களை இறக்கி விடப்படும் அவலங்களும் தொடர்கின்றன என்ற கூக்குரல்களும் ஓங்கி ஒலிக்கத் தொடங்கி இருக்கின்றன.   இந்தியாவில், நடப்பு ஆண்டில் முதல் ஆறு மாதங்களில் மட்டும் தமிழ்நாடு உள்ளிட்ட எட்டு மாநிலங்களில் சாக்கடைக் குழிக்குள் இறங்கி சுத்தம் செய்யும் தொழிலாளர்கள் 50 பேர் விஷ வாயு தாக்கி பலியாகி உள்ளது தெரியவந்துள்ளது. உத்தரபிரதேசம், ஹரியானா, டெல்லி, பஞ்சாப், குஜராத், மஹராஷ்டிரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இந்த உயிர்பலிகள் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளது, தேசிய துப்புரவு தொழிலாளர்கள் ஆணையம் (National Commission of Safai Karamcharis - NCSK). உண்மையில், பலி எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம் என்றே நம்பப்படுகிறது.   ஏனெனில், கழிவுந
கால்களை கழுவியது கரிசனமா? காவி நாயகனின் நாடகமா?

கால்களை கழுவியது கரிசனமா? காவி நாயகனின் நாடகமா?

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
-சிறப்புக்கட்டுரை-   கடந்த ஞாயிறன்று (பிப். 24) பிரதமர் நரேந்திர மோடி தன் ட்விட்டர் பக்கத்தில் ஒரு காணொலி காட்சியை பதிவிட்டு இருந்தார். உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில், ஐந்து துப்புரவு தொழிலாளர்களின் கால்களை அவரே தண்ணீர் ஊற்றி கழுவிவிட்டு, வெள்ளைத்துணியால் துடைத்தும் விடுகிறார். அந்த காணொலியில் பதிவாகியிருக்கும் காட்சிகள் இவை. நரேந்திரமோடி, 'என் வாழ்நாளில் மறக்க முடியாத மகிழ்ச்சியைத் தருவது இந்த தருணம்தாம். தூய்மை இந்தியா இயக்கம் வெற்றி பெறுவது இவர்களால்தான். துப்புரவு தொழிலாளர்களுக்கு வணக்கம் செலுத்துகிறேன்,' என்று உணர்ச்சிகரமாக கருத்துகளை பதிவு செய்திருந்தார். மூன்றே நாளில், அந்த காணொலிக் காட்சியை 5.38 லட்சம் பேர் பார்த்துத் தள்ளிவிட்டனர். 24 ஆயிரம் பேர் அவருடைய பதிவை மறு ட்வீட் செய்துள்ளனர்.   தன்னை ஓர் ஏழைத்தாயின் மகன் என்றபோது அவருக்குக் கிடைத்த பாராட்டைவிட,
எகிறியது காஸ் சிலிண்டர் விலை! பட்ஜெட்டில் துண்டு!!

எகிறியது காஸ் சிலிண்டர் விலை! பட்ஜெட்டில் துண்டு!!

இந்தியா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  தசரா, தீபாவளி என பண்டிகைகள் வரிசைக்கட்டி நிற்கும் நிலையில் நடுத்தர வர்க்கத்தின் பட்ஜெட்டை பதம் பார்க்கும் வகையில் சமையல் காஸ் சிலிண்டர் விலை இந்த மாதம் 916.50 ரூபாயாக உயர்ந்தது.   வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடை கொண்ட சமையல் காஸ் சிலிண்டர்களின் விலை மாதத்திற்கு ஒருமுறை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, உற்பத்தி, உள்நாட்டில் சிலிண்டர்களுக்கான தேவை, உற்பத்தித்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்களின் சிண்டிகேட் கமிட்டி இதன் விலையை நிர்ணயம் செய்து வருகிறது.   வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு மத்திய அரசு 320 ரூபாய் வரை மானியத்தொகையை வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக அனுப்பி விடுகிறது. அதனால், முழு தொகையை காஸ் முகவர்களிடம் செலுத்தி, சிலிண்டரை பெற்று வருகின்றனர்.   கடந்த செப்டம்ப
இந்தியாவில் மொபைல் சந்தாதாரர்களில் 17% பேர் மட்டுமே பெண்கள்! ‘ஆண்களின் ராஜ்ஜியம் தொடர்கிறது’

இந்தியாவில் மொபைல் சந்தாதாரர்களில் 17% பேர் மட்டுமே பெண்கள்! ‘ஆண்களின் ராஜ்ஜியம் தொடர்கிறது’

இந்தியா, தகவல், முக்கிய செய்திகள்
இந்தியாவில் அதிகரித்து வரும் மொபைல் போன் பயன்பாடு என்பது கிட்டத்தட்ட ஒரு புரட்சிபோல உருவெடுத்து உள்ளது. ஆனாலும், மொபைல் போன் சிம் கார்டு பதிவுதாரர்களில் 17.4 சதவீதம் பேர் மட்டுமே பெண்கள் என்பது ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது.   நடப்பு ஆண்டில் 31.3.2018ம் தேதி வரையில், இந்தியாவில் 99 கோடி மொபைல் சந்தாதாரர்கள் இருப்பதும், அவர்களில் 17.24 கோடி பெண் சந்தாதாரர்கள் என்றும் இந்திய தொலைத்தொடர்புத்துறை ஆய்வு கூறுகிறது.   அதேநேரம், மொத்தம் உள்ள 79.58 ஆண் சந்தாதாரர்களில் 2.50 கோடி சந்தாதாரர்கள் பற்றிய விவரங்கள் அடையாளம் காணப்படவில்லை என்றும் கூறுகிறது.   மொபைல் சந்தாதாரர்களில் நிலவும் பாலின இடைவெளி குறித்து ஒவ்வொரு தொலைதொடர்பு வட்டத்திலும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பல்வேறு சுவாரஸ்ய தகவல்கள் கிடைத்தன.   மும்பையில், மொபைல் சந்தாதாரர்களில் 11.85 சதவீதம் பேர் பெண்க
பாஜக: எலி ஏன் 8 முழ வேட்டி கட்டிக்கிட்டு ஓடுது? #MannKiBaat #NarendraModi

பாஜக: எலி ஏன் 8 முழ வேட்டி கட்டிக்கிட்டு ஓடுது? #MannKiBaat #NarendraModi

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
உலகிலேயே பழமையான மொழியாக தமிழ் மொழி இருப்பதால் இந்தியாவே பெருமை கொள்கிறது என்று திடீரென்று தமிழின் மீது பாசமழை பொழிந்திருக்கிறார், பிரதமர் நரேந்திர மோடி. இதுதான் சமூக ஊடகங்களில் அண்மைய விவாதங்களில் இது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.   மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் நரேந்திர மோடி, வானொலியில் 'மனதில் இருந்து பேசுகிறேன்' (மன் கீ பாத்) உரையாற்றி வருகிறார். கடந்த 25.8.2018ம் தேதி நடந்த ஓர் உரையாடலில்தான் தமிழை வானளாவப் புகழ்ந்திருக்கிறார்.     இப்படி அவர் உயர்தனிச் செம்மொழியாம் தமிழைப் புகழ்வது முதல் முறையல்ல. நடப்பு ஆண்டில் பிப்ரவரி மாதம் டெல்லி டால்கோட்ராவில் நடந்த ஒரு விவாதத்தின்போதும்கூட, 'சமஸ்கிருதத்தைவிட அழகான தமிழ்மொழியை கற்காமல் விட்டது வருத்தம் அளிக்கிறது,' என்று கூறியிருக்கிறார்.     மேடைகளில் தமிழில் சில வ
பெட்ரோல், டீசலை தொடர்ந்து சமையல் காஸ் சிலிண்டர் விலையும் ரூ.30 உயர்வு!

பெட்ரோல், டீசலை தொடர்ந்து சமையல் காஸ் சிலிண்டர் விலையும் ரூ.30 உயர்வு!

இந்தியா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள், வர்த்தகம்
  பெட்ரோல், டீசல் விலைகளைத் தொடர்ந்து வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடை கொண்ட சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.30.50 அதிகரித்து, நடப்பு செப்டம்பர் மாதத்திற்கு ரூ. 858.50 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.   வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடை கொண்ட சமையல் காஸ் சிலிண்டர்களுக்கு மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது. மானியத்தொகையை வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கிற்கே நேரடியாக வரவு வைக்கப்படுவதால், காஸ் ஏஜன்சியிடம் இருந்து வாடிக்கையாளர்கள் முழு தொகையை செலுத்தி காஸ் சிலிண்டரை பெற்றுக்கொள்ள வேண்டும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம், சந்தை தேவை, உற்பத்தித்திறன் ஆகியவற்றைப் பொறுத்து மாதந்தோறும் சமையல் காஸ் சிலிண்டர் விலை நிர்ணயிக்கப்படுகிறது.   அதன்படி நடப்பு செப்டம்பர் மாதத்திற்கு வீட்டு உபயோக சமையல் சிலிண்டரின் விலை ரூ.858.50 ஆக நிர்ணயிக்கப்பட்ட