Saturday, April 20மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது! எம்பிபிஎஸ்., மாணவர் சேர்க்கை விரைவில் ஆரம்பம்!

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட
இளநிலை மருத்துவப் படிப்புகளில்
சேர்வதற்கான நீட் எனப்படும்
தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு,
கடந்த செப். 12ம் தேதி நாடு
முழுவதும் நடந்தது. இத்தேர்வை,
இந்தியா முழுவதும் 16 லட்சம்
மாணவர்கள் எழுதினர்.
தமிழ்நாட்டில் சுமார்
1.10 லட்சம் பேர் எழுதினர்.

இதன் தற்காலிக விடைகள்
(ஆன்சர் கீ), அக். 15ம் தேதி
வெளியிடப்பட்டது.
இயற்பியல் பாடப்பகுதியில் இருந்து
கேட்கப்பட்ட வினாக்கள்
சற்று கடினமாக இருந்ததாக
தேர்வர்கள் கூறினர்.

 

வழக்கமாக நீட் தேர்வு
நடத்தப்பட்ட நாளில் இருந்து
30 நாள்களுக்குள் முடிவுகள்
வெளியிடப்படும். ஆனால்
இந்த ஆண்டு, நாக்பூரில் உள்ள
ஒரு பயிற்சி மையத்தைச் சேர்ந்த
25 மாணவர்கள், நீட் தேர்வில்
முறைகேட்டில் ஈடுபட்டதாக
புகார் எழுந்தது. இதனால்
குறிப்பிட்ட காலத்திற்குள்
முடிவுகளை வெளியிடுவதில்
தாமதம் ஏற்பட்டது.

 

இதற்கிடையே, நீட் தேர்வு
முடிவு வெளியீடு குறித்து
தொடரப்பட்ட வழக்கை விசாரித்த
உச்சநீதிமன்றம், தேர்வு முடிவை
வெளியிடுவதில் எந்த தடையும்
இல்லை என்றும், எப்போது
வேண்டுமானாலும் வெளியிடப்படலாம்
என்றும் அக். 28ம் தேதி
உத்தரவில் கூறியிருந்தது.
இதையடுத்து, தேர்வு முடிவுகள்
மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.

 

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட
நீட் தேர்வு முடிவுகளை,
திங்கள்கிழமை (நவ. 1)
மாலையில் தேசிய தேர்வு முகமை
(என்டிஏ) வெளியிட்டுள்ளது.
தேர்வு முடிவுகளை neet.nta.nic.in என்ற
இணையதளத்தில் பார்த்துத்
தெரிந்து கொள்ளலாம்.
இத்தேர்வு முடிவுகள் குறித்த
விவரங்கள் 90 நாள்கள் வரை
மேற்காணும் இணையதளத்தில்
பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும்.

 

ஸ்கோர் கார்டு விவரங்கள்
தேர்வர்களின் மின்னஞ்சலுக்கு
அனுப்பி வைக்கப்படும் என்று
தேசிய தேர்வு முகமை
தெரிவித்துள்ளது.

 

இதையடுத்து எம்பிபிஎஸ், பிடிஎஸ்
படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை
விரைவில் தொடங்கும் என
எதிர்பார்க்கப்படுகிறது.

 

நீட் தேர்வு முடிவுகளை
தெரிந்து கொள்வது எப்படி?

 

 

– பேனாக்காரன்