சேலம்: வ.உ.சி. பூ மார்க்கெட் ஒப்பந்ததாரர்கள் கோஷ்டி மோதல்; தொங்கலில் விட்ட அமைச்சர்கள்!
சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட் ஒப்பந்ததாரர்களிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலால் மார்க்கெட் இரண்டாக உடைந்ததோடு, மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு அபாயமும் ஏற்பட்டுள்ளது.
வ.உ.சி. பூ மார்க்கெட்
சேலம் மாநகர மையப்பகுதியில் 100 ஆண்டுகள்பழமையான வ.உ.சி. பூ மார்க்கெட்இயங்கி வருகிறது.பழைய கட்டடத்தில்இயங்கி வந்த இந்த வளாகம்,ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ்,புதிதாக கட்டுவதற்காககடந்த 2020ம் ஆண்டு இடிக்கப்பட்டது.14.97 கோடி ரூபாய் பட்ஜெட்டில்நான்கு தளங்களுடன் புதிதாகவ.உ.சி. பூ மார்க்கெட் வளாகம்கட்டி முடிக்கப்பட்டது.கடந்த 2023 ஜூன் 11ம் தேதி,தமிழக முதல்வர் திறந்து வைத்தார்.இதில் மொத்தம் 240 கடைகள்கட்டப்பட்டு உள்ளன.
சேலம் மாநகராட்சி கட்டுப்பாட்டில்உள்ள வ.உ.சி. மார்க்கெட்டிற்குவரும் வியாபாரிகள், விவசாயிகளிடம்சுங்கம் மற்றும் கடை வாடகைவசூலிக்கும் உரிமத்திற்கானபொது ஏலம் கடந்த 2023 நவம்பர்மாதம் நடத்தப்பட்டது.சே...