தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல்; ஏப். 6ல் வாக்குப்பதிவு; மே 2ல் வாக்கு எண்ணிக்கை!
தமிழகம், புதுவையில்
ஒரே கட்டமாக சட்டப்பேரவைத்
தேர்தல் நடக்கிறது. ஏப்ரல் 6ம் தேதி
வாக்குப்பதிவும், மே 2ம் தேதி
வாக்கு எண்ணிக்கையும்
நடத்தப்படும் என்று இந்திய
தேர்தல் ஆணையம்
அறிவித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவைக்கு
கடந்த 2016ம் ஆண்டு
ஏப். மாதம் தேர்தல் நடந்தது.
நடப்பு சட்டப்பேரவையின்
ஆயுள் காலம் வரும் மே 24, 2021ம்
தேதியுடன் முடிவடைகிறது.
இதையொட்டி, தமிழகத்தில்
திமுக, அதிமுக உள்ளிட்ட
முக்கிய கட்சிகள்
வழக்கத்தை விட
முன்கூட்டியே தேர்தல்
பரப்புரைகளை
தொடங்கி விட்டன.
தேர்தல் குறித்த அறிவிப்பு
எப்போது வேண்டுமானாலும்
வெளியாகலாம் என கடந்த
சில நாள்களாகவே எதிர்பார்ப்பு
நிலவி வந்தது. இந்நிலையில்,
இந்திய தலைமை தேர்தல் ஆணையர்
சுனில் அரோரா வெள்ளிக்கிழமை
(பிப். 26) மாலை டெல்லியில்
சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த
அறிவிப்பை வெளியிட்டார்.
தமிழகம், ப