Friday, April 26மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: போட்டித்தேர்வு

நாளை நடக்க இருந்த கூட்டுறவு உதவியாளர் தேர்வு தள்ளிவைப்பு!

நாளை நடக்க இருந்த கூட்டுறவு உதவியாளர் தேர்வு தள்ளிவைப்பு!

சேலம், தகவல், தமிழ்நாடு
சேலத்தில், நாளை (நவ. 23) நடக்க இருந்த கூட்டுறவு வங்கி, கூட்டுறவு சங்க உதவியாளர் பணியிடங்களுக்கான போட்டித்தேர்வுகள் திடீரென்று தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் கிளைகளில் காலியாக உள்ள 89 உதவியாளர் பணியிடங்கள் மற்றும் சேலம் மாவட்டத்தில் உள்ள இதர கூட்டுறவு வங்கிகள், சங்கங்களில் காலியாக உள்ள 52 உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு நாளை (நவ. 23ம் தேதி) மற்றும் நாளை மறுநாள் (நவ. 24) போட்டித்தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.   தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டதோடு, இதற்கான தேர்வுக்கூட அனுமதி சீட்டுகளும் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய இணையதளத்தின் மூலம் வெளியிடப்பட்டு வந்தது.   இந்நிலையில், உயர்நீதிமன்ற ஆணையின்படி நவ. 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் (நாளை மற்றும் நாளை மறுநாள் ) நடக்க இருந்த
சேலம்: கூட்டுறவு உதவியாளர் பணிக்கு தேர்வு; நவ. 23, 24ல் நடக்கிறது!

சேலம்: கூட்டுறவு உதவியாளர் பணிக்கு தேர்வு; நவ. 23, 24ல் நடக்கிறது!

சேலம், தகவல், தமிழ்நாடு
சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் இதர கூட்டுறவு அமைப்புகளில் காலியாக உள்ள உதவியாளர் பதவிக்கான போட்டித்தேர்வு நவ.23, 24 ஆகிய நாள்களில் நடக்கிறது.   சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகம் மற்றும் அதன் கிளைகளில் காலியாக உள்ள 89 உதவியாளர் பணியிடங்கள், போட்டித்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பு, கடந்த 28.8.2019ம் தேதி (அறிவிக்கை எண்: 02/2019) வெளியிடப்பட்டது. அதேபோல், மத்திய கூட்டுறவு வங்கி தவிர இதர நகர கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 52 உதவியாளர் பணியிடங்களும் மேற்சொன்ன தேர்வு முறைகள் மூலம் நிரப்பப்பட உள்ளன. இதுகுறித்த அறிவிப்பும் மேற்கண்ட தேதியில் (அறிவிக்கை எண்: 01/2019) வெளியிடப்பட்டது. இனசுழற்சி உள்ளிட்ட அனைத்து இடஒதுக்கீடு விதிமுறைகளின்படி இப்பணியிடங
1199 குரூப்-2 பணியிடங்களுக்கு ஆளெடுப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு; பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

1199 குரூப்-2 பணியிடங்களுக்கு ஆளெடுப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு; பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

சேலம், தகவல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  தமிழ்நாடு அரசுப்பணியாளர்கள் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி, பல்வேறு துறைகளில் காலியாக உள்ள தொகுதி-2 பிரிவின் கீழ் வரக்கூடிய 1199 பணியிடங்களை போட்டித்தேர்வு மூலம் நிரப்ப உத்தேசித்துள்ளது. இதற்கான அறிவிப்பை இன்று (ஆகஸ்ட் 10, 2018) வெளியிட்டுள்ளது.   அதிகபட்சமாக கூட்டுறவுத்துறையில் 599 முதுநிலை ஆய்வாளர் பணியிடங்களும், வேளாண்மைத் துறையில் 118 மேற்பார்வையாளர் / இளநிலை கண்காணிப்பாளர் பணியிடங்களும், உள்ளாட்சித் தணிக்கைத்துறையில் 97 உதவி ஆய்வாளர் பணியிடங்களும், பால் வளத்துறையில் 48 முதுநிலை ஆய்வாளர் பணியிடங்களும், தொழிலக கூட்டுறவு சங்கங்களில் 30 கூட்டுறவு அலுவலர் பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.   பட்டப்படிப்பு முடித்தவர்கள் இப்போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். முதல்நிலைத் தேர்வு (பிரிலிமினரி), முதன்மைத் தேர்வு (மெயின்), நேர்காணல் ஆகிய மூன்று படிநிலைகள் மூலம் இப்ப