Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

நாளை நடக்க இருந்த கூட்டுறவு உதவியாளர் தேர்வு தள்ளிவைப்பு!

சேலத்தில், நாளை (நவ. 23)
நடக்க இருந்த கூட்டுறவு
வங்கி, கூட்டுறவு சங்க
உதவியாளர்
பணியிடங்களுக்கான
போட்டித்தேர்வுகள்
திடீரென்று தள்ளி
வைக்கப்பட்டு உள்ளது.

சேலம் மாவட்ட
மத்திய கூட்டுறவு
வங்கி மற்றும் கிளைகளில்
காலியாக உள்ள 89
உதவியாளர் பணியிடங்கள்
மற்றும் சேலம் மாவட்டத்தில்
உள்ள இதர கூட்டுறவு
வங்கிகள், சங்கங்களில்
காலியாக உள்ள 52
உதவியாளர் பணியிடங்களை
நிரப்புவதற்கு நாளை
(நவ. 23ம் தேதி) மற்றும்
நாளை மறுநாள் (நவ. 24)
போட்டித்தேர்வுகள் நடத்தப்படும்
என்று அறிவிக்கப்பட்டு
இருந்தது.

 

தேர்வு மையங்கள்
ஒதுக்கப்பட்டதோடு,
இதற்கான தேர்வுக்கூட
அனுமதி சீட்டுகளும்
மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய
இணையதளத்தின் மூலம்
வெளியிடப்பட்டு வந்தது.

 

இந்நிலையில், உயர்நீதிமன்ற
ஆணையின்படி
நவ. 23 மற்றும் 24 ஆகிய
தேதிகளில்

(நாளை மற்றும் நாளை மறுநாள் )

நடக்க இருந்த
இரு போட்டித்தேர்வுகளும்
தள்ளி வைக்கப்படுவதாகவும்,
தேர்வுக்கான தேதி பின்னர்
அறிவிக்கப்படும் என்றும்
சேலம் மண்டல கூட்டுறவு
இணைப்பதிவாளர்
ராஜேந்திர பிரசாத்
இன்று (நவ. 22) மாலை
தெரிவித்துள்ளார்.
இந்த திடீர் அறிவிப்பால்
தேர்வர்கள் ஏமாற்றம்
அடைந்துள்ளனர்.